‘அரவான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் வசந்தபாலன் இயக்கிவரும் படம் ‘காவியத்தலைவன்’. சித்தார்த், வேதிகா, பிருத்விராஜ், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தை வசந்தபாலன் பழம்பெரும் நடிகர் கிட்டப்பா-கே.பி.சுந்தரம்பாளின் காதல் கதையை மையமாக வைத்து எடுத்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், வசந்தபாலன் இதை மறுத்து வந்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 18-ந் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment