
எங்கேயும் எப்போதும் மற்றும் இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன், தற்போது ஜெய்-ஆண்டரியாவைக் கொண்டு வலியவன் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார், இந்த படத்துக்காக தற்போது டில்லியில் முகாமிட்டிருக்கிறார். அங்குள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இறுதிகட்ட காட்சிகள் படமாகிறதாம். இதுபற்றி அவர் கூறுகையில், படத்தின் கதைக்கும், காட்சிக்கும் தேவையான லொகேசன்களை தேடிப்பிடித்து படமாக்கி வருகிறேன்.
அந்தவகையில் டில்லியில் இதுவரை யாரும் படமாக்காத சில அனுமதி கிடைக்காத பகுதிகளிலும் அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்துகிறேன் என்று கூறும் சரவணன், இந்த வலியவன் வலுவான கதையில் உருவாகிறது. முக்கியமாக சமூகத்துக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்ல வருகிறது என்கிறார்.
0 comments:
Post a Comment