
விளம்பரத்திற்காக சில அமைப்பினர் குரல் கொடுக்கிறார்கள் என்று சில தினங்களுக்கு முன் சென்னை வந்த கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லிராஜாவும் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்த விஜய் ரசிகர்கள், ‘நாளைய பொழுது நல்லா விடியுமா ?’ என்றே கவலைப்பட ஆரம்பித்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் அருமருந்தாக வந்து சேர்ந்திருக்கிறது ஒரு தகவல். அது…?
கத்தி திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜெயா தொலைக்காட்சி வாங்கியிருக்கிறதாம். காவல்காரனிடமே கல்லா பெட்டியை ஒப்படைத்தாயிற்று? இனி பயமின்றி பயணத்தை தொடரலாம்!
ஆமா… ஏதோ மனு கினுன்னு சொன்னீங்களே…? அட போங்கப்பா. அது ச்சும்மா தமாஷுக்கு!
0 comments:
Post a Comment