Tuesday 7 October 2014

யான் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை !

By: ram On: 23:30
  • Share The Gag
  • சில தினங்களுக்கு முன் வெளியான யான் திரைப்படம் முதல் காட்சிக்குப் பிறகு படத்தின் ரிசல்ட் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

    இப்படத்தின் இயக்குனர் ரவி.கே .சந்திரன் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பதாலும், ரவி கே சந்திரன் இயக்கிய முதல் படம் என்பதாலும், யான் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யான் வெளியான அன்று அரதப்பழசான கதை, அவுட்டேட்டட் திரைக்கதை காரணமாக யான் படத்தை ரசிகர்கள் அறவே விரும்பவில்லை.

    ரசிகர்களின் விமர்சனத்தைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர், யான் படத்தில் ரசிகர்களை அதிகமாக நெளிய வைக்கும் சில காட்சிகளை வெட்டிவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார். குறிப்பாக, துளசியின் விசிட்டிங் கார்டை ஜீவா கீழே தவறவிட்டு, அதை அவர் எடுக்க முயலும் காட்சியை அடியோடு வெட்டிவிட வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்.

    அதற்கு யான் படத்தின் இயக்குநரான ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் அந்தக்காட்சியை நீக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். அந்தக் காட்சியில் காமெடி சூப்பராக வந்திருக்கிறது என்பது இயக்குநர் தரப்பு நியாயம். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையில் ஏற்பட்ட இந்தப் பிரச்சனையினால் தியேட்டரில் ஓட வேண்டிய யான் திரைப்படம் தியேட்டரைவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இரு தரப்புக்கும் இடையில், இன்னும் சமரசம் ஏற்படவில்லை.

    இதற்கிடையில், ''இவங்க பிரச்சனையினால் என் படத்தை காலி பண்ணிட்டாங்களே..'' என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் ஜீவா

    உணர்வுகள்… சில உண்மைகள்!

    By: ram On: 23:00
  • Share The Gag
  • ஒரு மின்னல் தோன்றி மறைவது போலக் கோபம்… செல்லத்துக்கு! ஏன், எதற்கு என்று யோசிப்பதற்குள் மூக்கு சிவக்கும் கோபம் வெவ்வேறு  வண்ணங்களுக்கு மாறி விடும். ‘ஸாரி’ சொல்லி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த நிமிடங்களுக்குப் பிறகுதான் அது ஆற்றுப்படும். குழந்தைகள்  எதிர்கொள்ளும் மனம் சார்ந்த அழுத்தங்கள்தான் அவர்களின் கோபத்துக்கான முக்கியக் காரணம்.

    ‘‘உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு கலை. குழந்தை பிறந்தது முதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பழக்கத்தை இயல்பாகவே கொண்டிருக்கிறது.  நம் வாழ்க்கை முறையிலோ உணர்வுகளை அடக்குவதற்கு மட்டுமே சொல்லித்தரப்படுகிறது. இந்தத் தவறான அணுகுமுறைதான் குழந்தைக்கு மன  அழுத்தச் சூழலை உருவாக்குகிறது. உணர்வுகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம் இது போன்ற பிரச்னைகளிலிருந்து குழந்தைகளை மீட்க  முடியும்’’ என்கிறார் உளவியல் நிபுணர் தேவிப்ரியா.

    ‘‘மனித உணர்வுகளை ‘நவரசம்’ என்கிறோம். முதன்மை நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என மூன்று வகைகளாக உணர்வுகளைப்  பிரிக்கலாம். அன்பு, மகிழ்ச்சி, கோபம், ஆச்சரியம், துக்கம், வெறுப்பு, இரக்கம், வெட்கம், நளினம் ஆகிய ஒன்பதும் இவற்றில் அடக்கம். குழந்தைகளின்  உணர்வுகளைப் புரிந்துகொள்ள கற்றுத் தருவது முதல் படி. தன் உணர்வுகளைப் புரிந்து கொண்ட குழந்தைகளுக்குத்தான் மற்றவர்களின் உணர்வுகளும்  புரியும். அவற்றைக் கையாளவும் அவர்களுக்குக் கற்றுத்தர முடியும். எமோஷனல் இன்டலிஜென்ஸ் திறன் உடையவர்களே,ஆளுமைத் திறனில் சிகரம்  தொடுவார்கள்.

    குழந்தையின் அனைத்து வெற்றிகளுக்குப் பின்னால் இருந்தும் ஆட்சி புரியப் போவது இந்த உணர்வுகளே.  காலம் காலமாக நம் வாழ்க்கை முறையில்  தவறான நம்பிக்கைகளும் நடைமுறைகளும் புகுத்தப்பட்டிருக்கின்றன.

    உதாரணமாக…

    ‘வெட்கம் பெண்களுக்கு மட்டுமே சொந்தமானது… ஆண் அழக்கூடாது… பெண் எவ்வளவு வேண்டுமானாலும் அழலாம்’ என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் தவறானது. அழுகை இருவருக்கும் பொதுவானது. இயலாமை, கோபம், ஏமாற்றம் போன்ற சந்தர்ப்பங்களில் அழுகை  ஒரு வடிகால். அது தடுக்கப்படும் போது அந்த உணர்வு மனதில் படிந்து, அழுத்தத்தை உருவாக்குகிறது. ஆணின் அழுகை தடுக்கப்படும்போது அது  வேறு ஓர் இடத்தில் தாக்கத்தை உருவாக்குகிறது.

    உணர்வுகளைப் பற்றிய புரிதல், கையாளுதலைப் பற்றி பலர் எந்தக் கவலையும் படுவதில்லை. அதனால்தான் ஆறாம் வகுப்புக் குழந்தை  தற்கொலைக்கு முயற்சிக்கிறது. அடிப்பது, உடைப்பது, இழிவுபடுத்துவது, அடம் பிடிப்பது, திருடுவது, தனக்குப் பிடித்ததை மட்டுமே செய்வது,  மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் நடப்பது ஆகியவற்றுக்கு இதுவே காரணம். குழந்தை, மற்றவர்களின் உணர்வுகளை சமாளிக்கப்  பழகும்போது, தன் முனைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் அளவு உயரும். வெற்றியை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக்  கொண்டு அடுத்த அடிகளை முன் வைக்கும்.

    மேலைநாடுகளில் உணர்வுகளைப் பற்றிய பாடம் பள்ளியிலேயே கற்பிக்கப்படுகிறது. 6 வயதில் இருந்தே குழந்தைக்கு தன் உணர்வு களைப் பற்றியும்  அவற்றைக் கையாளவும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உணர்வுகள் தனியாக மட்டும் அல்ல… இணைந்தும் வெளிப்படும். எதிர்பார்த்த  ஒரு விஷயம் நடக்காமல் போகும் போது எதிர்பார்ப்பு மற்றும் வருத்தம் ஆகிய இரு உணர்வுகளை மனம் கடக்கிறது. மற்றவர்களை தன் நிலையில்  வைத்து சிந்திக்கும் பக்குவத்தை எட்டிவிட்டால் எந்த இழப்பும் குழந்தையை பெரிய அளவில் பாதிக்காது. எதிர்பாராமல் சந்திக்கும் சிக்கல்களை  நினைத்து தன்னை வருத்திக் கொள்ளாது. பிரச்னைகளை சமாளிக்கும் திறன் மேம்படும். மனதை தெளிவாக அணுகுவதன் மூலம் புதிய விஷயங்களை  ஏற்றுக் கொள்வது, சிந்தனைக்கான தேடலை உருவாக்குவது என மகிழ்ச்சியாக வாழ்வை திட்டமிடத் தயாராகிவிடும்.

    குழந்தை ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்கிறது என்பதில்தான் வாழ்க்கையே அர்த்தப்படுகிறது. ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று பயப்படும்  குழந்தைகளையும் பார்க்கிறோம். ‘பர்சப்சன்’ இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புரிதலற்ற உணர்வுகளே எதிர்மறை எண்ணங்களுக்கும் செயல்களுக்கும்  வழிவகுக்கும். உணர்வு சார்ந்த பிரச்னைகளை மற்றவர்களது வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து புரிய வைக்கலாம். குழந்தை சந்திக்கும் பல்வேறு  அனுபவங்களை எடுத்துக்காட்டாக முன் நிறுத்தும்போது புரிதல் எளிதாகும். உணர்வுகள் குறித்த புரிதலை உருவாக்க ‘எமோஷனல் லேடர்’ ஒன்றை  வடிவமைத்திருக்கிறோம்.

    உணர்வுகள் சார்ந்து வெளிப்படும் நிகழ்வுகளை விளையாட்டுப் போல குழந்தைக்குப் புரிய வைப்பதே எமோஷனல் லேடரின் நோக்கம். அது போல  ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். நடிப்பு, விளையாட்டு மூலமாகவும் உணர்வுகளின் தாக்கத்தை கற்பிக்க முடியும். ‘சொன்னதைக் கேட்க வேண்டும்,  படிக்க வேண்டும், நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும்’ என்பதையே பெற்றோர் குழந்தையிடம் எதிர் பார்க்கிறார்கள்.  குழந்தைக்கோ தன்  சந்தோஷத்தை, தன்தேவையை வெளிப்படுத்த இந்த எதிர்பார்ப்புகளுக்குள் எந்த வாய்ப்பும் இல்லை.  குழந்தை, தனக்கான சந்தோஷங்களைத் தேடி பெற்றோர் போட்டு வைத்திருக்கும் எல்லைக்கோடு களைத் தாண்ட ஆரம்பிக்கும் போது அலர்ட் ஆகிறார்கள் பெற்றோர். ஒரு மதிப்பெண் குறைந்தாலும்  என்னமோ ஏதோ என பயந்து போய், பாடம் புகட்டத் தொடங்குகிறார்கள்.

    தான் நினைத்த எதுவுமே நடக்காத போதும், தன் உணர்வுகளை யாருமே புரிந்து கொள்வதில்லை என்ற முடிவுக்கு வரும் போதும் குழந்தை,  எதிர்மறையான நடவடிக்கைகளை தனக்கான ஆயுதமாக எடுக்கிறது. மழை, வானவில், புயல், வேகக் காற்று, வெயில் என பல்வேறு அழகுகள்  உணர்ச்சி வடிவத்தில் அந்த மொட்டுக்குள் பதுங்கியிருக்கின்றன. எந்தச் சூழலில் எது வெளியில் வரும். வந்தால் எப்படி எதிர்கொள்வது, கடந்து  செல்வது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் குழந்தைப் பருவம் மட்டுமல்ல… வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும்  சந்தோஷம் எனும் தேனில் நனைத்து சுவைத்தபடியே பயணம் செய்யலாம். இதைத்தான் ஒவ்வொரு குழந்தையும் நம்மிடம் எதிர்பார்க்கிறது’’

    இயக்குனர் சுசீந்தரனின் அடுத்த படத்தில் இரண்டு இளம் ஹீரோக்கள் !

    By: ram On: 22:04
  • Share The Gag
  • ஜீவா படத்தின் வெற்றி களைப்பில் ஓய்வெடுக்காமல் அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார் இயக்குனர் சுசீந்திரன். வழக்கு எண் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ஸ்ரீயையும், சமீபத்தில் வெளிவந்த பொறியாளன் படத்தில் நடித்த ஹரிஷையும் வைத்து தன் அடுத்த படத்தை தொடங்க உள்ளார் சுசீந்தரன். ஹீரோயினாக சம்ஸ்கிருதி செனாய் நடிக்கிறார்.

    இப்படத்தின் கதை இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான ஈகோதான். தென் சென்னையில் நடக்கும் இக்கதையின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. ஒரு மாதம், ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் சுசீந்திரன். ஸ்ரீயும், ஹரீசும் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

    வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?

    By: ram On: 21:09
  • Share The Gag
  • காற்றுக் குழாயை திறந்து சுவாசம் சீராக இருக்கிறதா என்று பார்க்கலாம். சுவாச மீட்பும் மார்பை அழுத்தம் செயலையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

    அவர் சீராக சுவாசித்துக் கொண்டிருந்தால் குணமடைவதற்குத் தோதான நிலையில் அவரைச் சாய்த்துப் படுக்க வைக்கவும்.

    நாடித் துடிப்பு, சுவாசம் இரண்டையும் தொடர்ந்து கவனிக்கவும். எத்தனை நேரம் வலிப்பு நீடிக்கிறது என்று குறித்து வைத்துக் கொள்ளவும்.

    கவனம்

    நிலைமை மோசமாக இருந்தால் மட்டுமே அவரை வேறொரு பகுதிக்கு அழைத்துச் செல்லலாம்.
    அவரது வாயில் எதையும் திணிக்கக் கூடாது.
    பலவந்தப்படுத்தி அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.

    எச்சரிக்கை

    கீழ்க்கண்ட முறையில் ஏதாவத நடந்தால் உடனடியாக ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
    பத்து நிமிடங்களுக்கு மேலாக அவர் பேச்சு மூச்சின்றி இருந்தால்
    ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு தொடர்ந்தால்.
    வலிப்பு வந்ததன் காரணத்தை அவர் உணராது போனால்.

    மயக்கம்

    மூளைக்குப் போய்ச் சேர வேண்டிய ரத்தம் போதிய அளவு போகாமல் போனால் மயக்கம் ஏற்படுகிறது. குறுகிய காலம் மட்டுமே இது ஏற்படும்.
    மயக்கத்தால் பெரிய ஆபத்து இல்லை என்று சொல்லிவிட முடியாது. எதற்காக மயக்கம் ஏற்பட்டது என்பதை உணர முடியாத பட்சத்தில் உடனடி மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

    எப்படிச் சமாளிக்கலாம்?

    1. பின்புறமாக சாய வைக்கலாம். கால்களை உயர்த்தி விடுவது நல்லது.

    2. காற்றுக் குழாயை சரிபார்க்கவும், வாந்தி வருகிறதா என்று கவனிக்கவும்.

    3. சுவாசம், இருமல் போன்றவை இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என்றால் சிறிசிஸி-ஐத் தொடங்கவும். தகுந்த உதவி வரும் வரை அல்லது பாதிக்கப்பட்டவரின் நிலைமை சீராகும் வரை சிறிசிஸி -ஐத் தொடரவும்.

    4. தலை மட்டத்தை விட உயரமாக காலை உயர்த்தவும். இப்படிச் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும். இறுக்கமான உடைகளைத் தளர்த்துங்கள். ஒரு நிமிடம் அவகாசம் கொடுத்துப் பாருங்கள். விழித்துக் கொள்ளவில்லை என்றால் அவசர சிகிச்சைப் பிரிவை நாடவும்.

    அதீத ரத்தப் போக்கு

    பாதிக்கப்பட்டவரின் ரத்தப்போக்கை நிறுத்த முயற்சி செய்தவற்கு முன்னால் உங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்வது நல்லது. முடிந்தால், கையுறை அணிந்து கொள்ளுங்கள். கிருமிகள் தொற்றிக்கொள்வதைத் தவிர்க்கலாம். ஏதேனும் பாகங்கள் பிதுங்கி வெளியில் வந்து விட்டால் அவற்றை மீண்டும் உள்ளே தள்ள முயற்சிக்க வேண்டாம். கட்டு மட்டும் போட்டு வைக்கவும்.
    தவிரவும், கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.

    1. கீழே படுக்க வைக்கவும், உடலைவிடத் தலையைச் சற்றுத் தாழ்த்தி வைப்பது நல்லது. கால்களையும் கால்களையும் உயர்த்தி வைக்கவும். இப்படிச் செய்தால் ரத்தம் மூளைக்குள் வேகமாகப் பாய்ந்தோடுவதைத் தடுக்கலாம். எந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகுகிறதோ அந்த இடத்தைக் கொஞ்சம் உயர்த்தியது போல் தூக்கி வைத்தால் நல்லது.

    2. கையுறை அணிந்து கொண்ட பின், காயத்திலுள்ள அழுக்குகளை நீக்கலாம், உள்ளேகுத்திக் கிடக்கும் பொருளை பலவந்தமாக இழுக்க முயலக்கூடாது. காயத்தை சுத்தப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.

    3. ரத்தம் வரும் இடத்தை அழுத்திப் பிடிக்க வேண்டும். கட்டுப்போட்டு நிறுத்தலாம். அல்லது கையுறை அணிந்த கையால் அழுத்திப் பிடிக்கலாம்.
    4. ரத்தப்போக்கு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்க வேண்டும்.

    5. கட்டுப்போட்ட பின்னும் ரத்தப் போக்கு தொடர்ந்தால் கட்டைப் பிரிக்க முயற்சிக்க வேண்டாம்.

    6. ரத்தப் போக்கு நிற்காத பட்சத்தில் குருதிக் குழாயை (ணீக்ஷீtமீக்ஷீவீமீs & ஸ்மீவீஸீs) அழுத்திப் பிடிக்கலாம். முழுங்கைக்கும் அக்குளுக்கும் இடைப்பட்ட பகுதியில் கைக்கு உண்டான குருதிக் குழாய் உள்ளது. காலுக்கான குருதிக் குழாய் முட்டிக்கும் இடுப்புக்கும் மத்தியில் உள்ளது. இவற்றை அழுத்திப் பிடிக்கலாம்.

    7. ரத்தப் போக்கு நின்று விட்டதே என்பதற்காக போட்டு வைத்திருந்த கட்டைப் பிரிப்பத சரியல்ல. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

    தீபிகா படுகோனே சென்னை பொண்ணா?

    By: ram On: 20:47
  • Share The Gag
  • பல லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாலிவுட்டின் முன்னணி நாயகி தீபிகா படுகோனே. இவரின் நடிப்பில் தீபாவளி அன்று வெளிவரயிருக்கும் திரைப்படம் ஹேப்பி நியூ இயர்.

    இப்படத்தில் ஷாருக்கான், அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் புரொமோஷன் வேலைகளுக்காக சமீபத்தில் படக்குழு சென்னை வந்திருந்தனர்.

    அப்போது விழா குறித்து பேசிய தீபிகா படுகோனே, என்னுடைய சிறுவயதில் கொஞ்சகாலம் சென்னையில் வசித்ததை இப்போது நினைவுகூர்கிறேன். சென்னை மக்களின் அன்பும், கனிவும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

    கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் விழாவை அடுத்து மீண்டும் இம்முறை சென்னைக்கு வருவதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

    சிறுமியின் உயிரை பறித்த தொலைக்காட்சி பெட்டி !!

    By: ram On: 20:16
  • Share The Gag
  • கனடாவில் கல்கரியில் 6 வயது சிறுமியின் மேல் தொலைக்காட்சி பெட்டி கவிழ்ந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக பலியானார்.

    கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் கல்கரி மாகாணத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே பரிதாபமாக பலியானார்.

    கடந்த 19ம் திகதி மாலை 7 மணிக்கு முன்பாக இச்சம்பவம் நடந்துள்ளது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே சிறுமி இறந்து விட்டாள்.

    பெற்றோர்கள் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் சேவையின் ஆதரவில் உள்ளனர், தொலைக்காட்சி விழுந்து காயப்படுதல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    2013ம் ஆண்டில் வெளிவந்த குழந்தை மருத்துவ பத்திரிகையொன்றின் அறிக்கை படி, அமெரிக்காவில் கடந்த 20 வருட காலப் பகுதியில் 200,000 வரையிலான பிள்ளைகள் தொலைக்காட்சி விழுந்து காயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    பின்வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் படி குடும்பங்களிற்கு கனடா பொது சுகாதார பகுதி பரிந்துரைக்கின்றது.

    - பிள்ளைகளை எப்போதும் கண்காணிக்க வேண்டும். தளபாடங்களில் ஏறுவது தள்ளுவது தவறு என கூறவேண்டும்.

    - புத்தக அலுமாரி, அலுமாரிகள், தொலைக்காட்சி ஸ்ரான்ட்ஸ் போன்றனவற்றை நிலையான பரந்த அடித்தளத்தில் வைக்கவும், கால்கள் சில்லுகள் உள்ள மாடல்கள் கவிழக்கூடியவை.

    - தளபாடங்களை கோண பிரேசர்கள், பாதுகாப்பு பட்டைகள் போன்றவற்றுடன் இணைத்து வைக்கவும் முடிந்தால் பாதுகாப்பாக ஆணி அடித்து வைக்கவும்.

    - நிலையான தளபாடத்தில் மிகவும் பின்னால் தொலைபேசியை வைக்கவும். தொலைபேசியின் அளவையம் பாரத்தையும் தாங்க கூடிய அதற்கென தயாரிக்கப்பட்ட தளபாடத்தில் தொலைக்காட்சியை வைக்கவும்.

    - பிள்ளைகளை ஈர்க்கும் பொருட்களான விளையாட்டு பொருட்கள், மரங்கள், ரிமோட் கொன்ரோல் போன்றவற்றை தொலைக்காட்சிக்கு மேல் அல்லது தொலைக்காட்சி வைக்கப் பட்டிருக்கும் தளபாடத்தில் வைப்பதை தவிர்க்கவும்.

    -மின்சார வயர்களை தளபாடத்திற்கு பின்னால் பிள்ளைகள் அடைய முடியாத வகையில் வைக்கவும்.

    கவுண்டருக்கே வந்த சோதனை- வருமா? வரதா..?

    By: ram On: 20:02
  • Share The Gag
  • சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த நம்ம கவுண்டரு நீண்ட இடைவேளைக்கு பிறகு 49 ஒ என்ற படத்தில் நடிக்க ஒப்பு கொண்டார். அவர் இந்த படத்தில் நடிக்க முதல் காரணமே படத்தின் கதை தான் .

    கிராமப்புற விவசாயத்தை முன்னிறுத்தியும் மற்றும் தன் கேரக்டர் ஒரு விவசாயி வேடம் என்பதால் தான் இப்படத்தில் நடிக்க ஒத்து கொண்டார். அதுவும் இல்லாமல் இப்படத்தை தன் படம் போல் பாவித்து எப்போ ரிலீஸ் ஆகும் என்று நாள் கணக்கில் காத்து கிடந்தது மிச்சம்,படம் வெளிவந்த பாடு இல்லை.

    இதில் இப்படத்தின் தயாரிப்பாளர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தை சமீபத்தில் வாங்கி வெளியிட்டார் ஆனால் படம் படு தோல்வி. தயாரிப்பளருக்கு இதனால் 2 கோடி நஷ்டம் வேறு , அதனால் 49 ஒ படத்தை பற்றி அவர் யோசிக்கவே இல்லையாம். இதை அறிந்த நம்ம கவுண்டரு தயாரிப்பாளரை அணுகி "ஏம்பா வவுத்துவலி ராயன் வானவராயன் படத்தை லாம் ரிலீஸ் பண்ற நம்ம படம் எப்போ பா ரிலீஸ் என்று கேட்டு விட்டாராம்.

    தமிழக அறிவாளிகளுக்கு ஒரு சவால்..!!!

    By: ram On: 18:46
  • Share The Gag
  • எதிர்வரும் காலத்திற்கான ஒரு அவசியமான தகவல் நண்பர்களே..படித்துவிட்டு பகிருங்கள்..!!

    இதுவும் ஒரு புரட்சியே!
    இயற்கை புரட்சி!

    நம் கையில் பழத்தை வைத்துகொண்டு (இயற்கை எரிவாயு), ஏன் அடுத்த நாட்டிடம் ஏன் கையேந்த வேண்டும்(கச்சா எண்ணை)

    ஒரு லிட்டர் பெட்ரோல் விலை: (Rs)75.00 ரூபாய்: இயற்கை எறிவாயு (எத்தனால்) தயாரித்தால் -1 லிட்டர் 13.00ரூபாய்

    எரிபொருளின் விலை குறைவதால் – சரக்கு போக்குவரத்து எளிதாகும் – மலிவாகும். எனவே, தரை வழியாக கொண்டு வரப்படும், காய்கறி,மளிகை சாமான்கள், பால் – அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறையும்.எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து செலவு குறையும்.டாலரின் மதிப்பு ரூபாய் விட குறையும்!!!

    ஒரு கிலோ சர்க்கரைக்கு பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம்.

    உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும் இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. பெட்ரோலுடன் 24 சதவீதம் எத்தனால் கலந்து ஓட்டலாம். இதற்கு வாகனத்தில் எந்த மாற்றமும் செய்யவேண்டியதில்லை. இதேபோல் எத்தனால் 85 சதவிதமும், பெட்ரோல் 15 சதவீதமும் கலந்து பயன்படுத்தலாம்.

    எத்தனால் செய்யும் முறை!!

    எத்தனால் என்பது – விவசாயப் பொருட்களிலிருந்து
    தயாரிக்கப்படும் – எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய,ஆக்சிஜனை உள்ளடக்கிய,ஒரு நிறமற்ற திரவம். (CH3CH2OH )

    இதை பஸ், கார் போன்ற வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம். வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை
    பயன்படுத்தும் போது, கார்பன் வெளியேறி, சுற்றுப்புறசூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது.

    ஆனால் எதனாலை எரிபொருளாக பயன்படுத்தும்போது,கரும் புகை வெளிப்பாடு குறைந்து,ஆக்சிஜன் அதிக அளவில் வெளியேறி, சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது.

    உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வரும்பிரேசில் நாடு பெட்ரோல் மற்றும் டீசலுடன் 85 % எத்தனாலை கலந்து பயன்படுத்துவதை கட்டாயமாக்கி இருக்கிறது.பிரேசிலில்1980க்குப் பிறகு வடிவமைக்கப்பட்டஅனைத்து எஞ்ஜின்களும் 85 % எத்தனாலை கலந்துபயன்படுத்த தகுதியுள்ளவாறு தான் வடிவமைக்கப்
    பட்டிருக்கின்றன.

    நம்ம கடிச்சி துப்புற கரும்பு சக்கையிலருந்தும், அப்பறம் சோளத்தை எடுத்துட்டு தூக்கிப்போடற கதிரு கச்சையிலிருந்தும் இந்த பெட்ரோல் எரி பொருள் தயாரிக்கலாம்

    கரும்பின் கழிவுப்பொருளாகக் கருதப்படும் கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்கவும்,

    அந்த எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசல் போன்றஎரிபொருட்களுடன் கலந்து வாகனங்களுக்கு பயன்படுத்தவும் துவங்கினால் -உற்பத்தியாகும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும்.

    இவ்வளவு நாட்களாக கழிவுப் பொருளாக கருதப்பட்டகரும்புச்சக்கை இதன் மூலம் நல்ல விலை போகும் என்பதால் – சர்க்கரை விலை கணிசமாக குறையும்.

    கரும்பு உற்பத்தியாகும் நிலங்களின் அளவு அதிகரிக்கும்.இன்னும் அதிக அளவு விவசாயத் தொழிலாளர்களுக்கு
    வேலை கிடைக்கும்.

    ஒரு கேலன் என்பது மூன்றரை லிட்டருக்குச் சமம். ஒரு கேலன் எத்தனால் தயாரிக்க 40 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவாகிறது
    இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால்,

    பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் – 25 கிலோ; கழிவு (தீவனம்) – 330 கிலோ.
    தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது.

    உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

    கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது…

    மெட்ராஸ் படத்துக்கு கிடைத்த இன்னொரு கெளரவம் ! ஏக குஷியில் கார்த்தி

    By: ram On: 18:27
  • Share The Gag
  • கார்த்தியின் சினிமா மார்க்கெட்டை மீண்டும் தலை நிமிர்த்திய படம் என்றால் அது சமீபத்தில் வெளியான மெட்ராஸ் தான். இப்படம் எனக்கு மீண்டும் திருப்பமுனையாக இருக்கப்போகிறது என்று படம் வெளிவருவதற்கு முன்பே கூறியிருந்தார் கார்த்தி.

    அவர் வாய்க்கு சக்கரை போடும் படியாகவே படம் அமைந்தது. இதனால் ஏககுஷியில் இருக்கும் நம்ம கார்த்திக்கு மீண்டும் பெருமை படும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    அதாவது சென்னை மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக செதுக்கி காட்டிய இப்படத்துக்கு மதுரையில் செயல்பட்டு வரும் எவிடென்ஸ் என்ற அமைப்பு சமூக மாற்றத்துக்கான படைப்பாக கருதி என்ற விருதை அறிவித்துள்ளது.

    இதை அறிந்த மெட்ராஸ் படக்குழு சந்தோஷத்தில் தத்தளிக்கிறது.

    வெப்பத்தை தடுக்கும் ‘டைல்ஸ்’ - அறிய வேண்டிய தகவல்..!

    By: ram On: 18:10
  • Share The Gag
  • கோடைகாலம் என்றாலே வெப்பத்தின் பிடியில் தவிக்க வேண்டிய சூழல் தவிர்க்க முடியாததாகிறது. பகல் வேளைகளில் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதை தடுக்க மின் சாதனங்கள் இயங்கினாலும் கூட பல வீடுகள் எதாவது ஒரு வழியில் வெப்ப சூழலை உமிழும்படியாகவே அமைந்திருக்கும்.

    வெப்ப தாக்கம்

    ஆகையால் வீட்டை அழகிய டிசைனுடன் வடிவமைத்து கட்டுவதற்கு மட்டும் ஆர்வம் காட்டக்கூடாது. அது அனைத்து வகையான பருவகால நிலைகளுக்கும் தாக்குப்பிடித்து கம்பீரமாக வெளிப்புறத்தில் எழுந்து நிற்கும் வகையில் கட்டப்படுவது போலவே உள்புறமும் அமைக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக கோடைகால வெப்ப பாதிப்புகள் வீட்டு உள் அறைகளை ஆக்கிரமிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அது வீட்டில் இருப்பவர்களை தவிப்புக்குள்ளாக்க வைத்துவிடும். வீட்டுக்குள் அலங்கார வடிவிலோ, வேறு வகையான முறைகளிலோ மாற்றங்களை செய்ய முயற்சிகள் எடுத்தாலும் வெப்ப தாக்கத்தை தடுக்கும் வகையில் அவை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    வெப்பத்தை தடுக்கும் டைல்ஸ்கள்

    வீட்டுக்குள் நுழையும் அனலின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதை விட அவை உட்புகாதவாறு தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பெரும்பாலும் வீட்டின் மேற்கூரைகள் வழியாகவே வெப்பம் அதிகமாக உமிழப்படும். அவ்வாறு வெப்பம் ஊடுருவதை தடுத்தாலே அறைக்குள் மிதமான சூழலை ஏற்படுத்த முடியும். அதனால் தான் மேற்கூரை தளத்தை வெப்பம் உள்வாங்காதவாறு அமைப்பதற்கு அதிக சிரமம் எடுத்துக்கொள்கிறார்கள்.

    சமீபகாலமாக மேற்கூரை தளம் அமைப்பதிலும் புதுமைகள் புகுந்து இருக்கிறது. அங்கு தள செங்கல்கள் பதிக்கப்படுவதற்கு பதிலாக டைல்ஸ்களை அமைக்கும் முறை பரவலாக பரவி வருகிறது. இத்தகைய டைல்ஸ்கள் அறைக்குள் அதிக அளவில் அக்னி கலந்த வெப்ப சூழல் உள்நுழைவதை தடுத்து நிறுத்துவதில் பங்கெடுக்கின்றன.

    பசுமை கட்டுமான பொருள்

    இவற்றுள் பல டைல்ஸ் ரகங்கள் பசுமை கட்டுமான பொருட்கள் தயாரிப்பு முறையை பின்பற்றியும் வடிவமைக்கப்படுகின்றன. இயற்கை கனிமங்களான மெக்னீசியம், சிலிக்கா, பிளை ஆஷ், நார் பொருட்களை கொண்டும் சில டைல்ஸ் ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை பசுமை பொருட்களை கொண்டவையின் கலவையாக இருப்பதால் அறைக்குள் அதிகமாக வெப்பம் உள்நுழைவதை தடுத்து நிறுத்துகிறது.

    அதனால் அறைக்குள் வெப்பக்காலத்தில் அதிக அனல் பரவாமல் குளுமையான சூழல் அதிகரிக்க வழிவகுக்கிறது. இத்தகைய டைல்ஸ்களை மேல்தளத்தில் வழக்கமான தள செங்கல்களை போலவே எளிதில் பதிக்கலாம். வெள்ளை நிறத்தில் காணப்படும் இவை பார்ப்பதற்கும் பளிச்சென்று அழகாக காட்சி தருகின்றன. இவற்றை பதிப்பதற்கும் அதிக செலவு ஆகாது. அதிக காலமும் தேவைப்படாது. விரைவாகவே பதிக்கலாம்.

    தண்ணீர் உட்புகாது

    பசுமை கட்டுமான தரத்தில் வடிவமைக்கப்படும் இவை நீண்ட நாள் உழைக்கும் திறன் பெற்றவையாகவும் உள்ளன. வெப்பம் உள்நுழைவதை தடுப்பது போலவே தண்ணீர் உட்புகுவதையும் தடுக்கின்றன. இதனால் மேற்கூரைக்கு வலிமை சேர்க்கும் கான்கிரீட் கம்பிகள் துருபிடிக்காமல் பாதுகாக்கப்படுகிறது. தீ தடுப்பு தன்மை பெற்றவையாகவும் விளங்குகின்றன.

    அதன் மூலம் கட்டிடத்தின் ஆயுள் அதிகரிக்கிறது. கோடை காலத்தில் அனலின் பாதிப்பில் இருந்து மீளுவதற்கு ஏற்ற வகையில் அறைக்குள் வெப்பத்தன்மையை 75 சதவீதத்துக்கும் மேலாக உள் நுழையாமல் தடுக்கும் ஆற்றல் பெற்ற இத்தகைய டைல்ஸ்களுக்கு வரவேற்பு அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது.

    பிளாஸ்டிக்கை விட பன்மடங்கு சுற்று சூழலை கெடுக்கும் தெர்மோக்கோல் !!! ஒரு விழிப்புணர்வு பார்வை…!!!

    By: ram On: 17:49
  • Share The Gag
  • இன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE-ஐ பற்றி பார்ப்போம்… இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது.

    இதுவும் ஒரு பாலிமர் தான்…பிளாஸ்டிக்-ன் அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..இந்த தெர்மொகோல்-ஐ நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை… PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோல்-ல் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்)மிக அதிகமாக பயன்படுகிறது.

    இதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.

    முக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..
    நமது வீட்டு சாக்கடை,,தெரு சாக்கடை,,பாதாள கழிவுநீர் குழாய் அடைப்பு போன்றவைகளில் இவை அடைத்துக்கொண்டு தரும் துன்பங்கள் கணக்கில் அடங்கா.

    மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால்…இவை பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும். பிளாஸ்டிக் போல இதுவும் மக்காத தன்மை உள்ளது.பிளாஸ்டிக்-ஆவது சிலபல நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு …. மக்கும் தன்மையே கிடையாது…

    ஒரு நாளைக்கு இவை உற்பத்தி செய்யப்படுபவை பல ஆயிரம் கிலோக்கள்…இவை அனைத்தும் பூமிக்கு கேடு…

    வெளி நாடுகளில் இவை அழிக்கபடுவதில்லை…இந்த விஷயத்தில்
    அவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால்…இவற்றை சேகரித்து மறு சுழற்சியாக செய்கிறார்கள்…இவற்றை COLLECT செய்யவே தனியாக துறை இருக்கின்றது. முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சி
    செய்யப்பட்டவையே…

    இவற்றை நாம் எப்படி பாதுகாப்பாக அழிக்கலாம்.???

    1.முடிந்த அளவுக்கு இவற்றை மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்வோம்.

    2.கைவினை பொருட்கள் செய்யதெரிந்தவர்கள்…இவற்றை பயன் படுத்தி பொம்மைகள்,மற்றும் இதர
    பயன் தரும் பொருட்கள் செய்து…பணம் ஈட்டலாம்…

    3.பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்…

    4.முடிந்தவரை இவற்றை பொது இடங்களில் தூக்கி எரியாமல்…
    வீட்டிலேயே எங்கேயாவது பரண் மேல் போட்டு வைக்கலாம்…(தீ பிடிக்கும் அபாயம் உள்ளது)

    5.மறு சுழற்சிக்கு இவற்றை COLLECT பண்ணுமாறு மற்ற தொழில் நிறுவனங்களையோ,,
    அரசாங்கத்துக்கோ கோரிக்கை விடுக்கலாம்.

    6.இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

    7.இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல் ) கொண்ட வாயுக்கள்
    வெளியேறும்.ஓசோன் படலத்தை வீணாக்கிவிடும்.

    8.முக்கியமாக குழந்தைகள் இதை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

    9.நாமே ஒரு புனல் போன்று தகரத்தில் செய்து அதில் கரி கொண்டு நிரப்பி
    அதனுள் இதை எரிய விடலாம்…(கரி விஷ வாயுக்களை உறியும் தன்மை உடையதால்)
    (பார்க்க படம்.)

    10.மேலதிக விவரங்களுக்கு இந்த லிங்க்-களுக்கு சென்று பார்க்கவும்…

    http://en.wikipedia.org/wiki/Polystyrene

    http://www.answers.com/topic/polystyrene

    http://www.youtube.com/watch?v=hvHuX32_–g

    http://www.polystyrenepackaging.co.za/polystyrenerecycling.htm

    பொதுவாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் இந்த தெர்மொகோல் இல்லாத இடமே இல்லை எனலாம். பிளாஸ்டிக் போன்று இதன் அபாயம் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. பிளாடிக் ஆவது அதன் மேல் எந்த எடை பொருட்கள் இருந்தாலும் … பூமியில் படிந்து மக்க ஆரம்பிக்கும்…ஆனால் இந்த தெர்மொகோல் பூமியில் ஒரு போர்வை போல்,,,படர்ந்து நம் இயற்க்கை அன்னையை அழித்துக்கொண்டிருக்கிறது...இதை படிக்கும் அன்பர்கள்…சற்றே சிந்தித்து…இவற்றின் தீமைகளை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்…

    கத்தி ட்ரெய்லர் ரிலீஸ் தேதி உறுதியானது..முழு தகவல் இங்கே..!

    By: ram On: 17:03
  • Share The Gag
  • கத்தி திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இப்படத்தை எப்படியாவது தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விஜய் மற்றும் படக்குழு தீவிர வேலைகளில் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ஆவலோடு எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள். சரி ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல் படி படத்தின் ட்ரெய்லர் சென்சாருக்கு வரும் வெள்ளிகிழமை அனுப்பப்பட்டு சனிக்கிழமை வெளியாகும் என்று நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

    'டிரைலரில் ஸ்கிரீன் சாட்’ எடுக்கப்பட்டு விஜய் ஜெயிலில் சமைப்பது போன்ற ஸ்டில் ஒன்று இரண்டு நாட்களாக இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

    அனேகமாக இந்தக் காட்சியும் அந்த டிரைலரில் இடம் பெறலாம் என்கிறார்கள். அதோடு பாடல் காட்சிகள், சதீஷ் சம்பந்தப்பட்ட காமெடிக் காட்சிகள், வில்லனின் என்ட்ரி போன்றவையும் இந்த டிரைலரில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது, நாளுக்கு நாள் ‘கத்தி’ பற்றிய எதிர்பார்ப்பில் நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘இளையதளபதி’ ரசிகர்கள்.

    தேசிய விருது குறித்து தைரியமாக கருத்து தெரிவித்த சத்யராஜ்!

    By: ram On: 07:29
  • Share The Gag
  • தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். இவர் சமீப காலமால பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுகுறித்து பூஜை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரே மனம் திறந்துள்ளார்.

    இதில் பேசிய அவர் ‘ 'தலைவா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ராஜா ராணி' மற்றும் 'சிகரம் தொடு' போன்ற படங்களில் எனது கேரக்டர்களுக்கு அதிக பாராட்டு கிடைத்தது. அந்த விதத்தில் பூஜை படமும் அப்படி ஒரு படமாக தான் எனக்கு அமையும் என நம்புகிறேன்.

    'அவன் இவன்' படத்துல விஷால் கண்ணை அப்படி வைச்சுக்கிட்டு நடித்தது எவ்வளவு கஷ்டம் என்று எல்லாருக்கும் தெரியும். அந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளில் எல்லாம் அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்திருப்பார். 'அவன் இவன்' படத்திற்காக விஷாலுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.

    தேசிய விருது கிடைத்தால், கமல் சாருக்கு கிடைத்தது நமக்கும் கிடைச்சிருக்கு என்று சந்தோஷப்பட்டு கொள்ளலாம். கிடைக்கவில்லை என்றால் சிவாஜி சாருக்கே கிடைக்கவில்லை, நமக்கு எங்கே கிடைக்கப்போகிறது. நடிப்புக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்த சிவாஜிக்கே தேசிய விருது கிடைக்கவில்லை, என்று கூறி மனதிற்கு தைரியம் சொல்லி கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.