Friday 3 October 2014

அடுத்து நயன்தாராவை ஆசிரமத்திற்கு அழைக்கிறார் நித்தியானந்தா?

By: ram On: 21:31
  • Share The Gag

  • நடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். பின் பிரபு தேவா மீது கொண்ட காதலால் இந்து மதத்திற்கு மாறினார், பிறகு அந்த காதல் தோல்வியில் முடிந்த கதை தான் நமக்கே தெரியும்.

    தற்போது ஆன்மிகத்தில் மூழ்கியிருக்கும் நயன்தாரா, சமீபத்தில் கூட வட இந்திய கோவிலுக்கு சென்று வந்தார். இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ஏதோ ஒரு மன விரக்தியில் தான் இருந்து வருகிறார்.

    மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்கு வந்து மன அமைதி பெறுங்கள் என்று அழைத்துள்ளனர்.

    நீண்ட ஆயுள் பெற வேண்டுமா? இயற்கையான எளிய வழிகள்..!

    By: ram On: 21:12
  • Share The Gag
  • 1.சோற்றுக் கற்றாழை:

    இதற்கு மற்றொரு பெயர் குமரிக் கற்பகம் என்பதாகும். இந்தச் சோற்றுக் கற்றாழையின் மடலை உரித்து உள்ளே உள்ள சோற்றை மட்டும் எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் திரிகடுகம் சேர்த்து தினமும் காலையில் ஒரு துண்டு விழுங்கி வந்தால்  கண் பார்வை கூர்மை பெறும்.

    நரை, திரை நீங்கி இளமையான தோற்றம் உண்டாகும். திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த கலவையாகும்.

    2. மன வேதனை மாறி தெளிவு பெற:

    தினமும் காலையில் குளித்து முடித்த பின்னர் சிறிதளவு எள்ளை எடுத்து சாப்பிட்டு வந்தால் மன வேதனை, உடல் வேதனை நீங்கும்.

    எள்ளில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம் போன்ற சத்துப் பொருட்கள் இருக்கின்றன.

    துருக்கி நாட்டு போர் வீரர்கள் தாங்கள் போருக்குச் செல்லும் முன் எள்ளினை ஒரு பையில் போட்டு தங்களுடன் எடுத்துச் செல்வார்களாம். ஒரு வேளை தாங்கள் போரில் தோற்றுப் போய் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டால் சிறையில் இந்த எள்ளினை சாப்பிடுவார்களாம். இதன் மூலம் அவர்கள் மற்ற கைதிகளை விட வெகு நாட்கள் மன வேதனை, உடல் வேதனை இன்றி உயிருடன் இருந்திருக்கிறார்கள்.

    எள்ளின் பூவினை எடுத்துப் பல்லில் படாமல் விழுங்கினால் ஒரு பூவிற்கு ஒரு வருடம் வீதம் கண் நோய் வராது.

    தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பிற்கு எள் மிகவும் சிறந்த ஊட்டச் சத்தாகும்.

    3.அருகம்புல்:

    அருகம்புல்லை எடுத்து வந்து சாறு எடுத்து அதனுடன் 5 மிளகைத் தூள் செய்து அதனுடன் கலந்து இதைக்  காலையில் வெறும் வயிற்றில் 100 மி.லி அளவு குடித்து வந்தால் எந்த நோயும் அணுகாது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.

    சனிக்கிழமை முதல் ஆரம்பித்து இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை (ஒன்பது நாட்கள்) வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவ்வாறாகக் குடித்து வந்தால் ஒரு வருடத்திற்கு விண் கதிர்களால் நமக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாது. இந்த ஒன்பது நாட்களும் அசைவ உணவு, மது, மாமிசம், புகையிலை, பாக்கு, சிகரெட், போதைப் பொருட்களும், தாம்பத்யமும் கூடாது. மூலிகைச் சாறு குடித்த ஒன்றரை மணி நேரத்திற்கு வேறு உணவு சாப்பிடக் கூடாது.

    4. வேம்பு:

    நூறு ஆண்டுகள் ஆன வேப்ப மரத்தின் பட்டை, காய், இலை, பூ இவைகளைக் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி இடித்துச் சலித்து பதனம் செய்யவும். இதுவே ‘பராசக்தி காயகல்பம்’ எனப்படும்.

    இந்தப் பொடியை ஒரு குடுவையில் வைத்து, அதனுள் ஒரு வாழைப் பழத்தை வைத்து நாற்பது நாட்கள் கழித்து எடுத்தால் அது காயாக மாறி விடும். அதனை சாப்பிட்டால் தேகம் பலம் பெறுவதோடு நீண்ட ஆயுளும் பெறலாம்

    நிருபரின் உயிரை காப்பாற்றிய அஜித்!

    By: ram On: 20:31
  • Share The Gag

  • அஜித்தின் உதவி செய்யும் பண்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதே போல் சமீபத்தில் கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று அவரை மீண்டும் ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளது.

    மூத்த சினிமா நிருபர் ஒருவர் சென்ற மாதம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறினர்.

    ஆனால் அவர்கள் கேட்கும் பணம் அந்த நிருபரிடம் இல்லை, உடனே இந்த செய்தி எப்படியோ மானேஜர் வழியாக அஜித்திடம் சென்றுள்ளது.

    அஜித், அந்த நிருபரின் ஆபரேஷன் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல, அந்த நிருபரிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கக்கூடாது என்று சொல்லியதோடு, தன் உதவியாளரை அனுப்பி சில லட்சங்களை அட்வான்சாக அந்த மருத்துவமனையில் கட்டிவிட்டார். இதை அறிந்த நிருபர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.

    மோசடி விளம்பரங்களால் பணம் இழக்கும் பரிதாபம்: ‘டிவி’ பார்க்கும் பெண்களே… உஷார்!

    By: ram On: 20:13
  • Share The Gag
  • நாட்டில் பல்வேறு வகைகளில் மோசடிகள் நடந்து வருகின்றன. தற்போது டி.வி., சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘டெலி ஷாப்பிங்’ என்ற பெயரில் புதுவித மோசடி நடந்து வருகிறது. ‘டிவி’., சேனல்களில் அரை மணி நேரம் தனியார் விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, அவர்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.

    இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன் ‘இந்த நிகழ்ச்சிக்கும், டிவி., நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என ஒரு சில நொடிகள் காண்பித்து விட்டு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை குறித்து விளம்பரம் செய்கின்றனர் .அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் இவர்கள், கூறும் போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு விட்டால் போதும், தினமும் நமக்கு வரும் தொந்தரவிற்கு அளவே இல்லை.ஆண்கள் போன் செய்தால் பெண் குரலில் மயக்கும் தொனியில் ஆசை வார்த்தைகளில் பேசி பொருட்களை வாங்க செய்கின்றனர். பெண்கள் போன் செய்தால் ரூ. 2 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கினால், ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் ‘இலவசம்’ என ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.

    சிவகங்கை, திருப்பாச்சேத்தியை சேர்ந்த கீதா என்பவர், ஒரு டி.வி., சேனலில், 2,999 ரூபாய்க்கு, 9 சேலைகள் தருவதாக ஒளிபரப்பான விளம்பரத்தை பார்த்து விட்டு, அதில் கூறப்பட்ட நம்பருக்கு போன் செய்தார். பின்னர் அதை மறந்து விட்டார். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்தது தொல்லை. காலை முதல் ஒரு நம்பரில் இருந்து தொடர்ந்து ”சேலைகள் புதிய டிசைனில் உள்ளது; 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலைகள், ரூ2,999க்கு தருகிறோம்,” என போன் செய்து ஆசை காட்டியுள்ளனர்.’வேண்டாம்’ என மறுத்தாலும், விடாமல் தினமும் போன் செய்து ‘டார்ச்சர்’ செய்துள்ளனர். ஆண், பெண் என பல குரல்களில் மாறி மாறி பேசி ஆசை வார்த்தை கூற, வேறு வழியின்றி தனது முகவரியை கொடுத்துள்ளார். மறுநாளே, ‘உங்கள் முகவரிக்கு வி.பி.பி., மூலம் பார்சல் அனுப்பி உள்ளோம். தபால் அலுவலகத்தில் பணம் கட்டி பெற்றுக் கொள்ளுங்கள்,’ என போனில் கூறியுள்ளனர்.

    இதை நம்பி திருப்பாச்சேத்தி தபால் அலுவலகத்திற்கு சென்று பணம் செலுத்தி, பார்சலை வாங்கி வந்து பார்த்தால், சேலைக்கு பதில் கிழிந்த துணியும், சில இந்தி புத்தகங்களும் இருந்தன. இதை பார்த்ததும் நொந்து போய்விட்டார் கீதா. மறுபடியும் அந்த நம்பருக்கு போன் செய்து கேட்டால், ‘நாங்கள் சரியாகத்தான் அனுப்பினோம். தபால் அலுவலகத்தில் எடுத்திருப்பார்கள்,’ என கூலாக பதில் சொல்லியுள்ளனர்.தபால் அலுவலகத்தில் பணியாற்றுபவர் எனது சகோதரர் என சொல்லி விட்டு, கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக கீதா கூறியதும், ‘என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்,’ என சொல்லி போன் இணைப்பை துண்டித்து விட்டனர். இது போல சிவகங்கை மாவட்டத்தில் பல பெண்கள் ஏமாந்துள்ளனர்

    இசையமைப்பாளரானார் ஹிப்-ஆப் தமிழன்!

    By: ram On: 20:00
  • Share The Gag
  • தமிழ் மக்களுக்கு ராப், ஆல்பம் எல்லாம் புதியது. ஆனால் இதில் தமிழ் வார்த்தைகளை கோர்த்து அனைவருக்கும் புரியும் வகையில் பாடி கலக்கி கொண்டிருப்பவர் ஹிப்-ஆப் தமிழன் ஆதி.

    இவர் இதுவரை அனிருத்தின் இசையில் மட்டும் பாடி வந்தார். தற்போது தனியாக ஒரு படத்திற்கு இசையமைக்க ரெடியாகி விட்டார்.

    கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குனர் ரவி 'இன்று நேற்று நாளை' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடிக்க, ஆதி இசையமைக்கவுள்ளார்.

    பிரம்மாண்டமாக வெளியாகும் யாவும் வசப்பபடும்

    By: ram On: 19:47
  • Share The Gag
  • மண் என்ற திரைப்படத்திற்கு பிறகு ஈழத்து கலைஞன் புதியவன் ராசைய்யா இயக்கி வரும் திரைப்படம் யாவும் வசப்படும்.

    பிரித்தானியாவில் வசித்து வரும் புதியவன் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் 10ம் தேதி தமிழ்நாட்டில் திரையிடப்படவுள்ளது. முழுக்க முழுக்க லண்டனில் தயாராகி இருக்கும் இத்திரைப்படம் இலங்கை, இந்தியா, ஐரோப்பா நாடுகளில் வெளியாகவுள்ளது.

    தற்போது இப்படத்தில் நடித்தவர்களை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. நாயகனாக பாலா நடிக்க நாயகியாக தில்மிகா நடித்துள்ளார். இணைக் கதாநாயகனாக விஜித்தும், வில்லனாக பொபியும், கதாநாயகியின் அப்பாவாக ரமேஷீம் நடித்துள்ளனர்.

    நாம் குடிக்கும் ‘கேன் குடிநீர்’ சுத்தமானதுதானா? விரிவான அலசல்..உங்களுக்காக..!

    By: ram On: 19:36
  • Share The Gag
  • பெரு நகரங்களிலும் நகரங்களிலும் கேன் குடிநீர் வாங்காத வீடுகள், அலுவலகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நாம் நம்பி வாங்கும் கேன் குடிநீர் அவ்வளவும் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டவைதானா? இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, தரமணியில் இருக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பின் விஞ்ஞானிகள் இருவர் கைது செய்யப்பட்ட போது அம்பலமானது அநேக கேன் குடிநீர் நிறுவனங்களின் மோசடிகள்.

    குடிநீர் எப்படி சுத்திகரிக்கப்பட வேண்டும்?

    Ø காய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் (sand filter) இயந்திரத்துக்கு அனுப்பி தண்ணீரில் இருக்கும் மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும்.

    Ø நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மை குறைக்கப்பட வேண்டும்.

    Ø மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) முறையில் தண்ணீரில் இருக்கும் நுண் கிருமிகளை நீக்க வேண்டும்.

    Ø ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி எதிர் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கனிமங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

    Ø இந்தத் தண்ணீரை கொதிக்க வைத்து, அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) தொழில்நுட்பம் மூலம் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி வைரஸ், பாக்டீரியா கிருமிகள் நீக்கப்பட வேண்டும்.

    Ø ஒரு கேன் 20 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    போலி சுத்திகரிப்பு

    தண்ணீரைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் தங்களின் கேன் மீது நிறுவனத்தின் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு தொழில்நுட்ப விவரங்கள், தயாரான தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீரை வாங்கி, செலவு பிடிக்காத மேலோட்டமான சுத்திகரிப்பை செய்கின்றனர். எதுவுமே செய்யாமல் தண்ணீரை அப்படியே கேன்களில் நிரப்புவோரும் உண்டு. சிலர் தண்ணீரில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டு சுத்திகரிக்கிறார்கள். இது ஆபத்தானது.

    கோடையில் இது சீசன் தொழில்

    தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் 1,250 மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயிரம் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்திய தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டல அதிகாரிகள் கூறுகையில், “அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.

    இது சீசன் தொழில். கோடை தொடங்கிவிட்டால் போர்வெல் தோண்டி குடிசைத் தொழிலைப் போல செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்தி வருகிறோம்” என்கின்றனர். தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியர், “இதனால் மொத்த நிறுவனங்களுக்கும் சேர்த்து அவப் பெயர் ஏற்படுகிறது. தமிழகத்தில் சுமார் 500 நிறுவனங்கள் ‘ஐ.எஸ்.ஐ. 2002′ உரிமம் இல்லாமல் தொழில் செய்கின்றனர்” என்றார்.

    தீர்வுகள் என்ன?

    250 – 300 வரை டி.டி.எஸ். இருக்கும் நீர் குடிப்பதற்கு உகந்தது. நாம் குடிக்கும் நீரை நாமே பரிசோதனை செய்யலாம். பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் பரிசோதனைக் கருவி கிடைக்கிறது. இதை குடிநீரில் வைத்தால் டி.டி.எஸ். அளவு காட்டும். இதில் 100 முறை சோதனை செய்ய முடியும். சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள பி.டி.ஆர். பவுண்டேஷனில் சுமார் 350 ரூபாயில் சிறு கருவி கிடைக்கிறது.

    கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன.

    பாட்டில் குடிநீர் குறியீடு அறிந்துகொள்ளுங்கள்

    பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது அதன் லேபிளில் முக்கோண குறியீட்டுக்குள் 1 முதல் 7 வரை ஓர் எண்ணைக் குறிப்பிட்டிருப்பர். அதை கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணும் அந்த பாட்டில் எந்த வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.

    எண் 1 – பாலி எத்திலின் டெர்ப்தலேட், 2 – ஹை டென்சிட்டி பாலி எத்தனால், 3 – பாலிவினைல் குளோரைடு, 4 – லோ டென்சிட்டி பாலி எத்தனால், 5 – பாலி புரோபைலினால், 6 – பாலிஸ்டிரின் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதை குறிக்கிறது. 7 – ஓரளவு நீடித்த பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிக்கிறது. குடிநீர் பாட்டிலைப் பொறுத்தவரை முறையே 1, 2, 3 என எண் குறிப்பிடப்பட்ட பாட்டில்களை அந்த எண்ணிக்கையிலான நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!

    ’ஜீன்ஸ்’ பற்றி யேசுதாஸ் கருத்திற்கு இந்திய அளவில் கடும் கண்டனம்!

    By: ram On: 19:18
  • Share The Gag
  • தன் காந்த குரலால் பல கோடி ரசிகர்களை ஈர்த்தவர் யேசுதாஸ். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய கருத்து, அனைத்து பெண்களையும் மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

    இவர் ‘பெண்கள் ஜீன்ஸ் அணிவது நம் கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல’ என்று கூறியுள்ளார். இதை கண்ட பலர் தற்போது இவருக்கு எதிராக பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர்.

    சிறியதாக ஆரம்பித்த இப்பிரச்சனை தற்போது பேஸ்புக் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரண்டாகி உள்ளது.

    ‘கிட்னி. லிவர்.. ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free

    By: ram On: 18:00
  • Share The Gag
  • மக்களிடமிருந்து கற்றுக் கொண்டு பிறகு மக்களுக்கு சேவை செய்வது’ இதுவே மருத்துவத்தின் அடிப்படை.

    ஒருவர், மருத்துப் படிப்பை படிப்பதற்கு அவருக்கு மனித உடல் தேவை. அந்த உடலை டாடா, பிர்லா, அம்பானி பரம்பரையோ அல்லது அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களோ அவ்வளவு ஏன் தனியார் மருத்துக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த மருத்துவக் கல்லூரியின் முதலாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ தங்கள் உடலை பரிசோதனைக்கு தருவதில்லை. செத்தப் பிறகும் கூட கிடைக்காது.

    மருத்துவர்களே கூட அதற்குத் தயார் இல்லை.

    குறிப்பாக நோயாளிகளையும் நோய்களின் தன்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது தான் அதை கற்றுக் கொள்ள முடியும்..

    வசதியானவர்கள் இதுபோன்ற கத்துக்குட்டி மருத்துவர்களிடம் ஒருபோதும் வரமாட்டார்கள். எழை, எளிய மக்களே மருத்துவர்களின் பரிசோதனைக் களம்.
    அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் OP யிலும், உள் சிகிச்சைகளிலும் எளிய மக்களே பரிசோதனை எலிகள்.

    இப்படியாக எளிய மக்களின் உடல்களின் மீது மருத்துவம் படித்துவிட்டு வருகிற மருத்துவர்கள். பிறகு தங்களின் ‘சேவை’களை யார் அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே தான் செய்கிறார்கள். மருத்துவத்தின் ‘தரம்’ மனிதர்களின் பொருளாதார ‘தரத்தை’ வைத்துதான் முடிவாகிறது.

    அரசு மருத்துவமனையில்  பணி புரிகிற  மூத்த மருத்துவர், நோயாளிகளை நிமிர்ந்து கூட பார்க்காமல் மருந்து எழுதி கொடுத்து அனுப்பி விடுவார். நோயாளிகளின் சந்தேகங்ளுக்குக் கூட பதில் வராது. stethoscope அது தீண்டப்படாமல் டேபிளில் அநாதையாக கிடக்கும்.

    அவரே மாலை நேரத்தில்,  பிரபல தனியார் மருத்துவமனையிலோ அல்லது தனது கிளினிக்கிலோ, நோயாளிகளிடம் கருணையும் அன்பும் வழிய வழிய பேசுவார்.  குடும்ப உறுப்பினர்களைக் குறித்து நலம் விசாரிப்பார். stethoscope வைத்து சோதிப்பது மட்டுமல்ல, BP பரிசோதனையும் நடக்கும்.

    இன்றைய நிலையில் சாதாரண காய்ச்சல், இருமல் என்றாலே மிக சாதாரணமாக 300 ரூபாயை தாண்டி விடுகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுக்கும் காய்ச்சலும் இருமலும் தொற்றிக் கொள்ளும். எதிர்பாராத இந்த செலவை ஈடுகட்ட முடியாமல் திணறுகிறார்கள் குறைந்த வருமானம் உள்ள நடுத்ததர தொழிலாளர்கள் குடும்பமும்  கூலி வேலை செய்பவர்களும்.

    இதற்கே இப்படி என்றால்..? பிரச்சினைகள் பெரியதானால் அவர்களின் கதி அதோ கதி தான்.

    இது போன்ற எளியவர்களிடமே பல மருத்துவர்கள் சந்தையில் மாடு வாங்குபவர்களைபோல் கையில் துண்டுப் போட்டு ரகசியமாக கூட வியாபாரம் பேசுவதில்லை; பகிரங்கமாக பேசுகிறார்கள். மாட்டு வியாபாரிகளுக்கு இருக்கிற கூச்சம் கூட மருத்துவர்களிடம் இல்லை.

    ‘இவ்வளவு தான்.. இஷ்டமிருந்தா பாருங்க இல்ல கவர்மெண்ட ஆஸ்பிட்டலுக்கு போங்க..’ என்று அதிகாரத்தோடு விரட்டுகிறார்கள்.

    தன்னை அதிக விலையுள்ளவர்களாக காட்டிக் கொள்வதற்கு அவர்கள் செய்கிற விளம்பர யுக்தி, மகா மட்டரகமானது. பத்திரிகைகளில் தங்களைப் பற்றி செய்திகள் வரவைப்பதற்காக நடிகர், நடிகைகளைப்போல் PRO வைத்து செயல்படுகிற டாக்டர்களே அதிகம் இருக்கிறார்கள்.

    ஊடகக்காரர்களோடு அவர்கள் பழகுகிற விதமே பத்திரிகைகாரர்களுடன் நடிகர் நடிகைகள் பழகுவதைப்போல் தான் இருக்கும்.

    ‘மருத்துவம் ஒரு சேவை’ என்று அழகாக வசனம் பேசுவார்கள். ஆனால், அவர்கள் அதை ஒரு தொழிலாகக் கூட செய்வதில்லை. வியாபாரமாக தான் செய்கிறார்கள்.

    ஆமாம். நிறைய முதலீடு செய்து மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டு அதற்கு கூட்டம் சேர்ப்பதற்கு அவர்கள் படுகிறபாடு, சினிமா தியேட்டர் அதிபர்கள் தோற்றுப் போனார்கள்.

    குழந்தையின்மை அதாவது ‘மலடு’ நீக்கும் மருத்துவர்கள் கூட கவர்ச்சியாக ‘செக்ஸ்’ மருத்துவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு ஊடகங்களின் துணையோடு சில்லரை சேர்க்கிறார்கள்.

    சேலம் சிவராஜ் என்ன செய்கிறாரோ அதையே தான் ஆங்கில மருத்தவம் படித்த பல டாக்டர்களும் ‘அழகாக’ செய்கிறார்கள். இவர்கள் சேலம் சிவராஜின் ஹைடெக் வடிவம். அதனால் தான் ஷேர் மார்க்கெட் கட்டிடம் போல் பிரம்மாண்ட மருத்துவனை கட்ட முடிகிறது.

    குழந்தையின்மை ஒரு தனிநபரின் பிரச்சினையல்ல இன்னும் சரியாக சொன்னால் அது பிரச்சினையே அல்ல; அதை ஒரு பிரச்சினையாகப் பார்ப்பது பெண்களுக்கு எதிரான சமூக அமைப்பே.

    சமூகத்தின் இந்த சாபக்கேடை தனக்கான வர்த்தகமாக மாற்றிக் கொண்டார்கள் மருத்துவர்கள். குழந்தையின்மை என்பதை பெரிய அவமானகரமானப் பிரச்சினையாக இன்னும் பெரிதுப் படுத்தியதில் மலட்டுத்தன்மையைப் போக்கும் மகப்பேறு மருத்துவத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.

    மிக வறுமையான குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தையில்லை என்றால் அதற்கு தீர்வு காண்பதற்கு வாய்ப்பே இல்லை, இந்த மருத்துவத்தில்.
    பிரச்சினை மருத்துவமல்ல, அந்த மருத்துவம் எட்டாக்கனியானதற்குக் காரணம் பணம் தான். அந்தப் பெண்ணுக்குத் தீர்வு தற்கொலை தான்.

    ஆம், இந்த நவீன மருத்துவத்தில் குழந்தையின்மைக்கு தீர்வு கண்ட பெண்களின் எண்ணிக்கையை விட தற்கொலை மற்றும் கணவன் வீட்டால் விரட்டப்பட்ட பெண்களின் எண்ணிக்கையே அதிகம்.
    இதன் இன்னொரு மிக மோசமான வடிவம் தான் எளிய பெண்களுக்கு எதிரான வாடகைத் தாய் முறை. இது முழுக்க முழுக்க பணம் பண்ணுவதற்கான ஒரே திட்டம் தான்.

    இதுபோலவே தான் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை. இந்த முறையும் வறுமையில் இருப்பவர்களின் உறுப்புகளைக் கழட்டி வசதியானவர்களுக்குப் பொருத்துவது. பல விவசாயிகளின் நெசவாளர்களின் கிட்னி இப்படி தான் காணாமல் போனது.

    இந்தியாவின் தலைநகரம் டெல்லி. வர்த்தகத்திற்கான தலைநகரம் மும்பை. மருத்துவத்திற்கான தலைநகரம் சென்னை.
    இந்தப் ‘பெருமை’யை சென்னை பெற்றதற்கான முக்கிய காரணம். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தான்.

    ‘உறுப்பு வாங்கலியோ உறுப்பு.. கிட்னி, லிவர், இதயம் வேணுமா.. அணுகவும் சென்னையை..’
    இதுவும் அதுவே தான். அதாங்க வசதியானவர்களுகளிடம் பணம் வாங்கிக் கொண்டு…

    அதற்கு சாட்சி,
    உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான உறுப்புகள், அரசு மருத்துவமனையிலிருந்து மிகப் பெரிய தனியார் மருத்துவ மனைகளுக்குத் தான் போகிறதோ ஒழிய ஒரு போதும் தனியார் மருத்துவ மனைகளிலிருந்து அரசு மருத்துவ மனைகளுக்கு வருவதே இல்லை என்பதே.

    மருத்துவம் இப்படி மிகப் பெரிய வர்த்தகமாக மாறியதற்கு அடையாளம், நட்சத்திர ஓட்டல்களுக்கு சவால் விடும் மருத்துவ மனைகளே. இன்று நட்சத்திர ஓட்டல் நட்சத்திர மருத்துவமனை இரண்டும் தான் மிக நவீனமான பந்தாவான வர்த்தகம்.

    மருத்துவம் வியாபாரமாக ஏன் மாறியது?
    மருத்துவக் கல்வியே வியாபாரமாக இருக்கிறது.
    கல்வி ஏன் வியாபாரமானது?
    அது தனியார் துறைக்கு தாரை வார்க்கப்பட்டது.

    ஒரு மருத்துவர் முதலீடு செய்து மருத்துவமனையை கட்டுவதற்கு முன் தன் பெரிய முதலீட்டை தனது முதலாமாண்டு மருத்துவக் கல்வியின் போதே தொடங்கி விடுகிறார். ஆம், பல லட்சங்களைத் தாண்டி கோடிகளில் வந்து நிற்கிறது மருத்துவக் கல்வி.
    எம்.டி படிப்பெல்லாம் பல கோடிகளுக்குப் போவதாக செய்தி.

    ‘அந்தக் காலத்தில டாக்டர்கள் சேவை மனப்பான்மையோடு இருந்தார்கள். நோயாளிகளை கருணையோடு அணுகினார்கள். பல மருத்துவர்கள் பணம் இல்லாதவர்களுக்கு இலவசம் வைத்தியம் பார்த்தார்கள். ஆனால் இப்போது அப்படி பார்ப்பது அரிதாக இருக்கிறது’ என்கிற பழம்பெருமைகளை நாம் சகஜமாக கேட்க முடிகிறது அல்லவா?

    அந்தக் காலம் என்பது ஏதோ மந்திரங்கள் நிகழந்த காலமல்ல, அப்போது மருத்துவக் கல்லூரிகளை அரசு மட்டுமே நடத்தியக் காலம்.
    அதனால் அந்தக் காலத்து மருத்துவர்கள் மிகப் பெரும்பாலும் வர்த்தகத்தைத் தாண்டியவர்களாக இருந்தார்கள்.

    இந்தக் காலம் கார் கம்பெனி நடத்துபவர்கள், சாராயக் கடை நடத்தியவர்கள், வட்டிக் கடை நடத்துபவர்கள் மருத்துவக் கல்லூரிகள் நடத்துகிற காலம்.
    சாராயக் கடைகளையும் வட்டிக் கடைகளையும் எதற்காக நடத்தினார்களோ அதற்காகவே தான் அவர்கள் மருத்துவக் கல்வியையும் நடத்துகிறார்கள்.
    அவற்றை விட கல்லூரிகள் நடத்துவது அதிகம் லாபம் தருவது மட்டமல்ல, சமூகத்தில் மரியாதையும் கிடைக்கிறது.
    ஆக.
    ‘குழந்தை வேணுமா.. குழந்தை. ஒரே பிரசவத்துல நாலு குழந்தை போதுமா? இன்னும் ரெண்டு வேணுமா?.’

    ‘உறுப்பு வேணுமா? உறுப்பு..  கண்.. கிட்னி.. லிவர்.. ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free’
    ‘வாங்க … ஓடி வாங்க .. போனா கெடைக்காது..’

    ரஜினி ஸ்டைல் குறித்து அர்னால்ட் கருத்து!

    By: ram On: 17:35
  • Share The Gag
  • ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆனால் விழாவில் பாதியிலேயே இவர் பேசி விட்டு எழுந்து சென்றது, அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

    இது குறித்து விளக்கம் அளித்து சமீபத்தில் கடிதம் அனுப்பினார் அர்னால்ட். மேலும் இசை வெளியீட்டு விழாவில் இவருடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்.

    இதுநாள் வரை அவரை பற்றி பேசாத அர்னால்ட், சமீபத்தில் ஒரு பேட்டியில் ’ஐ இசை வெளியீட்டு விழா தன்னை மிகவும் கவர்ந்தது, மேலும் ரஜினி போன்ற ஜாம்பவானுடன் மேடையை பகிர்ந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி.

    ரஜினியின் எளிமை மற்றும் ஸ்டைல் என்னை வெகுவாக ஈர்த்தது’ என்று கூறியுள்ளார்.

    இது அழிவை நோக்கிய பயணம்!

    By: ram On: 17:00
  • Share The Gag
  • மதுவுக்கு ஏன் ‘மது’ என்று பெயர் வைத்தார்களோ?! ஒருவேளை ‘ம’கிழ்ச்சியில் தொடங்கி ‘து’ன்பத்தில் முடிவதால்கூட இருக்கலாம். என்னதான் ‘மது உடலுக்கு கேடு விளைவிக்கும்… உயிரைப் பறிக்கும்’ என்று மதுக்கடைகள் தொடங்கி… சினிமா தியேட்டர் வரை போகிற இடமெல்லாம் எச்சரிக்கை விடுத்தாலும், சிலர் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. மது என்ற விஷயம் குடிப்பவரை மட்டுமல்ல… அவரது குடும்பத்தையும் சேர்த்தே துன்பத்துக்கு ஆளாக்குகிறது. ‘சும்மா ஜாலிக்காக குடிக்கிறேன்’ என்று சொல்பவர்களில் தொடங்கி, ‘விளையாட்டா ஆரம்பிச்சேன். இப்போ விட முடியலை!’ என்று சொல்பவர்கள் வரை எல்லோரும் வாசிக்கவே இந்தக் கட்டுரை…

    ‘இது அழிவை நோக்கிய பயணம்’

    மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு எடுக்கும் சென்னை டி.டி.கே மருத்துவமனையின் குடிநோய் சிறப்பு மருத்துவர் அனிதா ராவ். அவரிடம் பேசினோம். ”தலைவலி, இருமல், காய்ச்சல் போன்று குடிப்பழக்கமும் ஒருவகை நோய். குடிப்பவர்களை இந்த சமூகம் குடிகாரர்களாகப் பார்க்கிறதே தவிர, நோயாளியாகப் பார்ப்பதில்லை. மதுவைக் குடித்து, அதற்கு அடிமையாவது ஒருவகை நோய். இந்த நோயானது குடிக்கும் எல்லோருக்குமே வருவது கிடையாது. இந்த நோய்க்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

    குடிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்த குடி நோயாளிகள் மருத்துவர்கள் உதவியுடன், குடியை முழுமையாக நிறுத்தி நிறைவான, சந்தோஷமான எதிர்காலத்தை நிச்சயம் உருவாக்கிக்கொள்ள முடியும். பொதுவாக குடிப்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதிகமாகக் குடிப்பவர்கள், எப்போதாவது குடிப்பவர்கள், குடிக்கு அடிமையானவர்கள். இவர்களில் அதிகமாக குடிப்பவர்களும், எப்போதாவது குடிப்பவர்களும் குடிநோயால் பாதிக்கப்படுவதில்லை. அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் குடிக்கும் பழக்கத்தை நினைத்தவுடன் விட்டுவிட முடியும். ஆனால் குடிக்கு அடிமையாகும் குடிநோயாளிகளால் அப்படிச் சுலபமாக குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட முடியாது. குடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். அது எந்தக் காரணமாக இருந்தாலும் குடிப்பழக்கம் என்பது அழிவை நோக்கியப் பயணம்!” என்று சொன்னார்.

    ‘ட்ரீட் கலாசாரத்துக்கு பலியான பெண்கள்’

    ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள் என்பதுதான் தமிழகத்தின் லேட்டஸ்ட் நிலவரம். இதுபற்றி பெண்கள் சிறப்பு குடி நோய் ஆலோசகரான ஷீபா வில்லியமிடம் பேசினோம். ”நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பெண்கள் இன்றைக்கு மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்படி ஆண்களைப்போல் அதிகமாகப் பெண்களும் இன்றைக்கு மதுவினை நாடிச்செல்ல மிக முக்கியக் காரணமாக அமைவது, ஆண் நபரின் தூண்டுதல் மற்றும் மரபுவழிப் பழக்கம் என்று சொல்கிறார்கள். ஆண்களைவிட மதுவுக்கு அடிமையாகும் பெண்களே அதிகப்படியான பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

    குடிக்கும் பெண்கள் எல்லாம் குடிநோய்க்கு அடிமையாவது கிடையாது. அப்படி அடிமையாகும் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து மீண்டுவருவது கிடையாது. பெண்களில் சிலர் சாதாரணமாகக் குடிக்கத் தொடங்கி குடிநோய்க்கு அடிமையானவர்கள்தான். சென்னையைப் பொறுத்தவரை கலாசார மாற்றமும் பெண்கள் குடிப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாகியிருக்கிறது. இங்கே குடித்தால்தான் ஸ்டேட்டஸ் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

    முன்பெல்லாம் ஏதாவது விழா என்றால் அங்கே பலவித சாப்பாடுகள் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு தொட்டதுக்கெல்லாம் ட்ரீட் என்ற கலாசாரம் உருவாகிவிட்டது. பார்ட்டி என்றாலே மது இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஐ.டி கம்பெனிகளில் பணிபுரிபவர்கள் எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்கிற வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு குடிக்கவே மாட்டேன் என்ற சுயகட்டுப்பாட்டுடன் செல்பவர்களைக்கூட அங்கிருக்கும் சூழல் மாற்றிவிடுகிறது.

    ‘எல்லாரும் குடிக்குறாங்க… நாம மட்டும் குடிக்காம இருந்தா.. அவங்க நம்மை என்ன நினைப்பாங்க?’ என்று தனக்குள்ளே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டு அதற்கான சரியான பதிலாகக் குடிப்பதையே இன்றைய இளையதலைமுறையில் அதிகமானோர் தேர்வு செய்கிறார்கள். சிலரோ, ‘ஒருமுறை குடித்துதான் பார்ப்போமே!’ என்று நினைத்து குடிக்கத் தொடங்கி… பிறகு அதுவே தொடர்கதையாகி விடுகிறது” என்றவர், குடிக்காமல் இருக்க சில டிப்ஸ்களைக் கொடுத்தார்.

    ”குடிக்கக் கூடாது என்ற உறுதியுடன் பார்ட்டிக்குப் போகிறவர்கள், போகும் முன்பே வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம். அங்கே உங்களை கிண்டல் அடிப்பார்கள். அதனால் நீங்களே குடிக்க நினைத்தாலும் உங்கள் வயிறு அதை ஏற்றுக்கொள்ளாது. நண்பர்களின் வற்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க, பார்ட்டிக்குச் சென்றவுடனே ஒரு கிளாஸ் டிரிங்க்ஸ் எடுத்து சும்மா கையில் வைத்துக்கொண்டு பார்ட்டியில் அங்கும் இங்கும் சுத்திக்கொண்டு இருந்தாலே போதும். அவர்களை யாரும் குடிக்கச் சொல்லி கேட்கவோ, கட்டாயப்படுத்தவோ மாட்டார்கள். குடிக்கவே மாட்டேன் என்று சொல்பவர்களைத்தான் குடிக்க வைக்க அதிகம் தூண்டுவார்கள்” என்கிறார்.

    விடுபட என்ன வழி?

    குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்ற சந்தேகத்துக்கும் அவரே பதில் சொன்னார். ”ஒரு குடிநோயாளியால் முழுமையாக குடிப்பதை நிறுத்த முடியுமே தவிர, குடிக்கும் அளவைக் குறைக்க முடியாது. அவர் குடிக்கக் காரணம் அவருடைய நோயே. இதற்கு மனைவியோ, பெற்றோரோ, நண்பர்களோ காரணமில்லை. வாக்குறுதி கொடுப்பதால் (சத்தியம் செய்வது) யாரும் குடியை நிறுத்திவிட முடியாது. அதெல்லாம் அதிகபட்சம் ஒரு மாதம் நீடிக்குமே தவிர, குடியை நிறுத்த சாத்தியம் சத்தியத்துக்கு இல்லை. சொல்லப்போனால் இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் அளவுக்கு அதிகமாகவே குடிக்க வாய்ப்பு உண்டு. இப்படி குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தன்நலன் மற்றும் குடும்ப நலனைக் கருத்தில்கொண்டு, குடியை நிறுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள சம்மதித்து முன்வர வேண்டியது அவசியம். எப்போதுமே ஒருவரால் அன்பு, அரவணைப்பு, மிரட்டல் அல்லது கண்டிப்பின் மூலமாகக் குடியை நிறுத்திவிட முடியாது. இவர்கள் குடிநோயிலிருந்து மீண்டுவர மருத்துவ மற்றும் மனோதத்துவ ரீதியான சிகிச்சை மிக முக்கியம்.

    போதையில் இல்லாத சமயமாகப் பார்த்து குடிநோயாளியிடம் பேசி அவரை சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்க வேண்டும். குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறவேண்டும். மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் கைநடுக்கம், தூக்கமின்மை, தாங்க முடியாத வயிற்று வலி போன்ற பிரச்னைகள் வரலாம். இதற்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், சிகிச்சைகளையும் குடிநோயாளிகளுக்கு முதல் வாரத்தில் அளிப்போம். பின்பு மூன்று வாரங்களுக்கு மனோரீதியான சிகிச்சைகள் அளிக்கப்படும். நான்கு வார காலம் இந்த சிகிச்சை தொடரும்.

    இந்த காலகட்டத்தில் நேரத்துக்கு உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை நோயாளிகளைத் தொடர்ந்து பின்பற்றச் செய்வோம். மேலும், இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை ஒன்றிணைத்து அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை ஒருவருக்கொருவர் குழுவாக அமர்ந்து பேச வைப்போம்.

    பெண் நோயாளிகளுக்கு கைவினைப் பொருட்கள் செய்யப் பயிற்சிகள் வழங்குவோம். அடுத்ததாக இங்கு பயிற்சி பெற்று குணமடைந்து சென்றவர்களை வரவழைத்து அவர்களது முந்தைய நிலை மற்றும் தற்போதைய நிலையை பகிர்ந்துகொள்ளச் செய்வோம். நோயாளியின் குடும்ப அங்கத்தினர்களுக்கும் இரண்டு வாரங்கள் கவுன்சிலிங் கொடுப்போம். சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றவர்களைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மாதம் ஒருமுறை வரவழைத்து ஆலோசனை வழங்குவோம். குடிநோய் குணப்படுத்தக்கூடிய நோய் என்பதை உணர்ந்தாலே போதும்!” என்று அக்கறையோடு சொல்லிமுடித்தார்.

    காசு கொடுத்துப் பிரச்னைகளையும், நோய்களையும் வாங்க வேண்டுமா… என்பதை பாட்டிலைத் திறக்கும் முன்பு யோசிங்க மக்களே!

    அதீத கவர்ச்சியால் தணிக்கை குழுவினரை கலங்கடித்த இனிப்பு நடிகை!

    By: ram On: 07:56
  • Share The Gag
  • எந்த சூழ்நிலையிலும் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று கொள்கை வைத்திருந்த ஸ்வீட் ஸ்டால் நடிகை இப்போது தனது கொள்கையைத் தளர்த்திக்கொண்டுள்ளாராம்.

    காரணம் தன்னுடைய சக போட்டி நடிகைகளின் தாராள கவர்ச்சிதான் அவரை கொஞ்சம் தாராளமாகவே இறங்கிவர வைத்திருக்கிறது.

    கடந்த ஆண்டு பேட்டி கொடுத்த இனிப்பு நடிகை, தென்னிந்திய படங்களில் மட்டுமல்ல இந்தி படங்களில் நடிக்கும்போதுகூட எனக்கென சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். கிளாமர் வேடங்களில் நடிக்க தயார். இறுக்கமான ஜீன்ஸ், பொருத்தமான குர்தாவில் பெண்களால் கவர்ச்சியாக இருக்க முடியும். ஆனால் கவர்ச்சி என்பதற்காக ஆடைகளை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் என்னை நடிக்க சொல்லி இயக்குனர் கேட்டாலும் அந்த காட்சியை மாற்றும்படி அவரிடம் கேட்டுக்கொள்வேன், என்று கூறியிருந்தார்.

    இப்போது அவரே கவர்ச்சிக்கு ரெடி என்ற அளவில் இறங்கிவந்திருக்கிறார். காரணம் தமிழ், தெலுங்கில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரவேண்டுமானால் ஆடைகளை கொஞ்சம் தியாகம் செய்துதான் ஆகவேண்டும் என்று நலம் விரும்பிகள் செய்த அட்வைஸ்தான் அவரை கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு மாற்றியுள்ளதாம்.

    தெலுங்கு படமொன்றில் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளாராம். இதைப் பார்த்த தணிக்கை குழுவினரே அதிர்ந்து போய்விட்டனராம்

    பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்….! அதிர்ச்சியில் உலகம் !!

    By: ram On: 07:44
  • Share The Gag
  • ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள்,மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கரன்சி வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.

    இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும்
    போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க
    காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.

    கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..!

    விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..!

    இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!
    மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!

    இதைகண்டுபிடித்து செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து
    வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும் பத்தி ரிக்கை.

    தமிழ்சினிமாவே அலறும் ‘யான்’ வழி தாக்குதல்? - ‘யான்’ - திரைவிமர்சனம்!

    By: ram On: 07:31
  • Share The Gag
  • கொண்டை ஊசி கிடைக்கலேன்னு கோணி ஊசிய சொருகிக் கொண்ட மாதிரி, கே.வி.ஆனந்த் ஸ்டைல் படத்தை ரவி.கே.சந்திரன் இயக்கியிருக்கிறார். இருவருமே ஒளிப்பதிவு மேதைகள்! நல்லவேளை… ஆனந்த் நிரூபித்துவிட்டார். சந்திரனுக்குதான் ‘கிரகணம்!’

    ஒரு சுவாரஸ்யமான படத்திற்கு கதையே தேவையில்லை. ஒரு அசுவாரஸ்யமான படத்திற்கு கதையிருந்தாலும் பிரயோஜனமில்லை. ஜீவாவின் ‘யான்’ எப்படி? நாலு வரிக்குள் கோர்த்து கோர்த்து சொல்வதற்கு ஒரு சுவாரஸ்யமான கதையோடுதான் இந்த படம் துவங்குகிறது. வெட்டியாக ஊர் சுற்றுகிற ஒரு இளைஞன் ஏடிஎம் வாசலில் ஒருத்தியை பார்க்கிறான். ‘ஃபிகர் சோக்காக்கீதே’ என்று நினைக்கும் போதே அந்த ஏரியாவில் ஒரு பிரபல டெரரிஸ்ட் ஒருவனை என்கவுன்ட்டரில் போட முயல்கிறது போலீஸ். கலவரத்தில் அவளை காப்பாற்றி இழுத்துச் செல்லும் அவன், அப்படியே அவள் அழகில் சொக்கி விழ, அடுத்தடுத்த நாட்களில் இருவரும் சந்திக்க வேண்டி வருகிறது. …காதல்!

    வேலையில்லா பட்டதாரிக்கு பெண் கொடுக்க, அப்பாவான நாசருக்கு தயக்கம். நடுவில் முறை மாமன் என்றொரு மாங்கா பீசும் கூடவே என்ட்ரியாகிறதா…. கோபித்துக் கொள்கிற ஹீரோ, அவள் ஞாபகமே நமக்கு வேணாம் என்ற முடிவோடு ஃபாரின் கிளம்புகிறார். பிஸ்கிஸ்தானோ கிஸ்கிஸ்தானோ… ஏதோ ஒரு கன்ட்ரி (ஃபுருட்) ஊர். ஏர்போர்ட்டில் இறங்கியவுடனே போதை பொருள் கடத்தியதாக இவனை பிடித்துக் கொள்கிறது போலீஸ். அந்த நாட்டு வழக்கப்படி முச்சந்தியில் வைத்து தலையை வெட்ட உத்தரவிடுகிறது நீதிமன்றம். கொடுமையான ஜெயில். கடுமையான மன உளைச்சல். எப்படி தப்பிக்கிறார் ஹீரோ என்பது க்ளைமாக்ஸ்.

    யோவ்… ‘யான்’ கதைய சொல்லுன்னா ‘மரியான்’ கதையவா சொல்றே? என்று கோபப்படும் கோ(ப)பெருந்தேவர்களும், தேவிகளும், தனுஷ்-பார்வதியை எரேஸ் பண்ணிவிட்டு மறுபடியும் யோசனையை சுழல விட்டால், மண்டைக்குள்ளேயே ‘யான்’ ஷோ ரெடி! இருந்தாலும் இந்த படத்தை மொராக்கோ என்ற நாட்டில் எடுத்திருக்கிறார்கள். ஊர் சுற்றிப்பார்க்க ஆசைப்படுகிறவர்களும், ராதா மகள் துளசியை சுற்றி சுற்றி பார்க்க ஆசைப்படுகிறவர்களும் தாராளமாக பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டாவது உள்ளே வரலாம். ஒளிப்பதிவாளர் புண்ணியத்தில் ரெண்டுமே ஃபுல் மீல்ஸ்!

    ‘டேய்… இன்னைக்கு ஒருத்தியை பார்த்தேண்டா’ என்று சம்பவத்தை ஒப்பன் பண்ணிவிட்டுவிட்டு, அதை விஷுவலாக ஜீவா சொல்கிற காட்சியிருக்கிறதே, அற்புதம்! ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் மெனக்கெட்டு மிரள வைத்த காட்சி அது. அதற்கப்புறம் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் அள்ளுவதற்கு? போகட்டும்… ஜீவா எப்படி? முதல் பாதி முழுக்க இளமையும் துடிப்புமாக பொளந்து கட்டுகிறார். டீஸன்ட்டான முறை பையனுடன், துளசி ஓட்டலில் பேசிக்கொண்டிருக்க, அங்கே திடீர் என்ட்ரி கொடுத்து ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்’ ரேஞ்சுக்கு கலாய்ப்பதை இளசுகள் கொண்டாடுவார்கள். வருங்கால மாமனாரை பார்க்கப் போகிற காட்சியில் கூட வாயில் சூயிங்கத்தை மென்று அதை நாசரின் போட்டோவுக்கு ஊட்டிவிடுகிற காட்சியெல்லாம் பெருசுங்க ஏரியாவை பொசுக்கி, இளசுங்க ஏரியாவை நொறுக்கி எடுக்கும்! செகன்ட் ஹாஃப் அபத்தமான திரைக்கதை என்றாலும், ஜீவாவின் நடிப்பும், கடின உழைப்பும் ஸ்கிரீனில் பரிபூரணமாக வெளிப்பட்டிருப்பதை சொல்லியே ஆக வேண்டும்.

    குடிக்க மாட்டேன். அப்பிடியே சாப்பிடுவேன் என்று சொல்லி சொல்லியே வளர்ந்திருப்பார் போலிருக்கிறது துளசி! தள தள துளசி மரமாய் வளர்ந்து மொத்த தியேட்டருக்கும் ஏ.சி. போடுகிறது அவரது எக்கு தப்பான லுக்! ரம்பா, மந்த்ரா, மீனா, ஜெயமாலினி, சில்க் என்று அஷ்ட தேவதைகளையும் அள்ளி பூசிக் கொண்ட மாதிரி அப்படியொரு கனமான கவர்ச்சி விளையாடுகிறது துளசியிடம். நடிப்பு…? அந்த கருமத்தை விடுங்க. அதை பார்க்கவா துளசி படத்துக்கு போகணும்?

    மும்பை போலீஸ் அதிகாரியாக ஜெயப்ரகாஷ். ஸ்கூல் வாத்தியார் கையில் ஏ.கே.47 கொடுத்த மாதிரி, இவரை வீதியில் இறக்கி சுட விட்டிருக்கிறார்கள். (சுடணும்னு முடிவு பண்ணியாச்சு. யாரு எங்க சுட்டா என்ன என்று நினைத்திருப்பார்கள் போல). நாசர் முன்னாள் மிலிடிரியாம். தம்பி… என்ன பண்றீங்க என்று ஜீவாவிடம் கேட்டு, அவரை கோபப்படுத்துவதை தவிர வேறொன்றும் அவருக்கு வேலையில்லை. தம்பி ராமய்யா வழக்கம்போல! சில காட்சிகள் வந்தாலும், ‘என்னை ஒருத்தரும் மறக்க முடியாதுல்ல?’ என்பதை போல ஒரு நடிப்பு.

    வெளிநாட்டுக்கு போகிற யாரும் ஏஜென்டுகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்பதுதான் இந்த படத்தின் ‘நாட்’ (ஆக இருக்கக்கூடும்) பொருத்தமான நபராக போஸ் வெங்கட்டையே நடிக்க வைத்திருக்கிறார்கள் அந்த ஏஜென்ட் கேரக்டரில் ! இவர் பாட்டுக்கு அந்த நாட்டுக்கு வந்து கோனார் தமிழ் உரையை சத்தம் போட்டு படிப்பதை போல எல்லாருடனும் தமிழிலேயே பேசுகிறார். ஜீவா மட்டுமென்ன? அவர் பாட்டுக்கு ஒரு கான்பிரன்ஸ் ஹாலில் நுழைந்து எல்லா வெளிநாட்டவர்களும் இருக்கிற இடத்தில் சாலமன் பாப்பையா போல தமிழ் சொற்பொழிவு நடத்துகிறார். இப்படி படத்தில் இணைக்கப்பட்டிருக்கும் காமெடி டிராக், அதுவரையான கவலைகளை விழுந்து விழுந்து மறக்கடிக்கிறது.

    நாளைக்கு உசிரோடு இருப்போமா என்று அச்சப்படுகிற ஒருவனுக்கு இந்தியா திரும்ப ஒரு வழி கிடைத்தால் பின்னங்கால் பிடறியில் பட ஓடி வர வேண்டியதுதானே? அதை விடுத்து சிவனே என்றிருக்கிற வில்லனின் ஏரியாவுக்கே போய் உதார் விட்டு உப்பு கண்டமாகிறார் ஜீவா. ‘உன்னயை அங்கேயே பொலி போட்ருனுக்கும்டீய்…’ என்று தியேட்டரில் கூக்குரலிடுகிறார்கள் ரசிகர்கள்.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட சாயலில் இருந்தாலும், படத்தோடு கேட்கும்போது தனி மயக்கம் ஏற்படுத்தாமலில்லை. குறிப்பாக கபிலன் வரிகளில் ‘ஆத்தங்கரை ஓரத்தில்…’ பாடல். பின்னணி இசையிலும் நிறைவு. படத்தில் ஒரு விசிட்டிங் கார்டு பறந்து போகிற காட்சி வருகிறது. பாகவதர் காலத்தில் கூட இவ்வளவு நீண்….ட பொறுமையை சோதிக்கிற காட்சி இருந்தததாக நினைவு இல்லை. எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். என்னாச்சு சார் உங்களுக்கு?

    வான் வழித் தாக்குதல் கேள்விப்பட்டிருக்கோம். இது தமிழ்சினிமாவே அலறும் ‘யான்’ வழி தாக்குதல்?!

    ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!! படித்து பாருங்க உங்களுக்கே புரியும் !!

    By: ram On: 02:04
  • Share The Gag
  • பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்டஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

    அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
    .

    ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

    இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம். அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.

    முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.

    அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

    பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.