Wednesday 13 November 2013

பாரதிராஜா - வாழ்க்கை வரலாறு (Biography)

By: ram On: 23:09
  • Share The Gag
  • “இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று  மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர். அவரது ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அற்புதப் படைப்புகளாக இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. ‘பாக்கியராஜ்’, ‘ராதிகா’, ‘கார்த்திக்’, ‘ராதா’, ‘ரேவதி’, ‘நெப்போலியன்’, ‘ரஞ்சிதா’ போன்ற பல நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். கிராமம் மற்றும் கிராமத்து மண் சார்ந்த மனிதர்களும், அழுத்தமான நடிப்பும், இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகள்.

     Bharathiraja

    திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் உயரிய விருதுதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும், ஆறு முறை “தேசிய விருதுகள்”, மூன்று முறை “தமிழ் நாடு மாநில விருதுகள்” மற்றும் “ஃபிலிம்ஃபேர் விருது”, “கலைமாமணி விருது” என மேலும் பல விருகளை வென்றுள்ளார். “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, தமிழ் திரையுலகின் “திருப்பு முனை” என வர்ணிக்கப்பட்ட பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

    பிறப்பு: ஜூலை 17, 1941

    இடம்: அல்லி நகரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

    பணி: இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்

    நாட்டுரிமை: இந்தியன்




    பிறப்பு 

    ‘சின்னசாமி’ என்ற இயற்பெயர் கொண்ட பாரதிராஜா அவர்கள், 1941  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டதிலுள்ள “அல்லி நகரம்” என்ற இடத்தில் ‘பெரிய மாயத்தேவர்’ என்பவருக்கும், ‘கருத்தம்மாவிற்கும்’ ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள், என ஆறு பேர் இவருடன் பிறந்தவர்கள்.

    ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


    பள்ளிப்படிப்பைத் தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த அவர், பள்ளியில் படிக்கும்போதே இலக்கியங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். பிறகு, நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் தன்னுடைய கவனத்தினை செலுத்திய அவர் ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற நாடகக் கதைகளை எழுதி, அதை அவ்வப்போது திருவிழாக்காலங்களில் மேடைகளிலும் அரங்கேற்றியுள்ளார்.

    திரைப்படத்துறையில் அவரின் பயணம்


    ஆரம்பக் காலத்தில் சுகாதார ஆய்வாளராக சிறிது காலம் பணிபுரிந்து வந்த அவர், பின்னர் சினிமாத் துறையின் மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தால் சென்னைக்குப் பயணமானார். சென்னையில் ‘மேடை நாடகம்’, ‘வானொலி நிகழ்வுகள்’, ‘பெட்ரோல் பங்க் வேலை’ என பணிபுரிந்துக்கொண்டே சினிமாத் திரையில் நுழைய முயற்சிகள் மேற்க்கொண்ட அவர், இறுதியில் இயக்குனர் ‘பி. புல்லையாவிடம்’ உதவியாளராகத் திரைப்படத்துறையில் கால்பதித்தார். பின்னர் பிரபலக் கன்னட இயக்குனர் ‘புட்டண்ணா கனகலிடம்’ சேர்ந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

    குறுகிய காலத்திலேயே தன்னுடைய முதல் படமான ‘16 வயதினிலே’ திரைப்படத்தை 1977 ஆம் ஆண்டு இயக்கினார். இதில் ‘கமல்ஹாசன்’, ‘ஸ்ரீதேவி’, ‘ரஜினிகாந்த்’ போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். கிராமத்துச் சூழலை மையமாகக் கொண்டு அமைந்த இக்கதையில், கமலஹாசன்’ அவர்கள், ‘சப்பாணி’ என்னும் பெயரில் ‘வெள்ளந்தியான’ குணச்சித்திரப் பாத்திரத்தில் மிக அற்புதமாகத் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

    இதற்கு முன் எத்தனையோ திரைப்படங்கள் கிராமத்துக் கதைகளில் வந்திருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிராமத்துச் சூழலை திரையில் கண்முன் காட்டியது அப்படம். இத்திரைப்படம் முழுவதுமே இயற்கையான வெளிப்புறச் சூழலிலேயே எடுக்கப்பட்டதால், தமிழ் திரைப்படத்துறையில் பெரும் மாற்றத்தினையே கொண்டுவந்தது. தன்னுடைய ஆளுமையை முதல் படத்திலேயே நிரூபித்துக் காட்டிய அவர், தொடர்ந்து ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற வெற்றிப்படங்களைத் தந்து “இயக்குனர் இமயம்” என அனைவராலும் போற்றப்பட்டார்.

    அவர் இயக்கியத் திரைப்படங்கள்


    ‘பதினாறு வயதினிலே’ (1977), ‘சிகப்பு ரோஜாக்கள்’ (1978), ‘கிழக்கே போகும் ரயில்’ (1978), ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979), ‘நிழல்கள்’ (1980), ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981), ‘புதுமைப் பெண்’ (1983), ‘மண் வாசனை’ (1983), ‘ஒரு கைதியின் டைரி’ (1984), ‘முதல் மரியாதை’ (1985), ‘கடலோரக் கவிதைகள்’ (1986), ‘வேதம் புதிது’ (1987), ‘ஆராதனா’ (1987), ‘கொடி பறக்குது’ (1989), ‘புது நெல்லு புது நாத்து’ (1991), ‘நாடோடி தென்றல்’ (1992), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), ‘கருத்தம்மா’ (1995) போன்ற திரைப்படங்கள் அவரின் புகழ்பெற்றப் படைப்புகளாகும்.

    இல்லற வாழ்க்கை

    ‘சந்திர லீலாவதி’ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பாரதிராஜா அவர்களுக்கு, ‘மனோஜ்’ என்றொரு மகனும், ‘ஜனனி’ என்றொரு மகளும் பிறந்தனர்.

    விருதுகளும், மரியாதைகளும்

    •2004 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.

    •1982-ல் ‘சீதாகொகா சிகே’, 1986-ல் ‘முதல் மரியாதை’, 1988-ல் ‘வேதம் புதிது’, 1995-ல் ‘கருத்தம்மா’, 1996-ல் ‘அந்தி மந்தாரை’, 2001-ல் ‘கடல் பூக்கள்’ போன்ற திரைப்படங்களுக்காக “தேசிய விருதை” வென்றுள்ளார்.

    •1978 – ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர்’ விருது.

    •1977-ல் ‘16 வயதினிலே’, 1979-ல் ‘புதிய வார்ப்புகள்’, 1981-ல் ‘அலைகள் ஓய்வதில்லை’, 2003-ல் ‘ஈர நிலம்’ போன்ற திரைப்படங்களுக்காக “தமிழக அரசின் மாநில விருது”.

    •தமிழக அரசின் “கலைமாமணி” விருது.

    •1981 – ‘சீதாகொகா சிலுகா’ திரைப்படத்திற்காக ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து “நந்தி விருது”.

    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், சுமார் நாற்பதிற்கும் மேற்பட்டத் திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதை வேர்களை வெளிச்சமிட்டுக் காட்டிய கலைஞன். தன்னுடைய அற்புதப் படைப்புகளினால் தமிழ் சினிமாவை புதிய திசைக்குச் செலுத்தி, தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

    கடலில் திடீரென முளைத்த தீவு!

    By: ram On: 21:56
  • Share The Gag
  • அண்மையில் பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக பலுச்சிஸ்தானின் கரை ஓரமாக ஒரு தீவு முளைத்தது. இது சிறிய தீவுதான். இத்தீவின் தோற்றம் குறித்து நிபுணர்கள் வெவ்வேறான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


    கடலில் தீவு முளைப்பது அதிசயமல்ல. குறிப்பாக,  பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலிலிருந்து முளைத்தவையே. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் எரிமலைகள் உண்டு. அவை படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கடலுக்கு மேலே வந்து தீவுகளாகி விடும்.

    கடலடி எரிமலைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தால் அவை எப்போது கடலுக்கு மேலே தலை காட்டும் என்பதை முன்கூட்டி அறிந்து கொண்டு விடலாம். கடலடி எரிமலைகளால் தோன்றும் தீவுகள் பொதுவில் நிரந்தரமாக நீடிப்பவை. ஆனால் பூகம்பத்தால் ஏற்படுகின்ற தீவு  எதிர்பாராத வகையில் திடீரென்று தோன்றுவதாகும். பலுச்சிஸ்தான் மாகாணத்தில்  செப்டம்பர் 24 ஆம் தேதியன்று அவாரன் என்னுமிடத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் ஏற்பட்ட அரை மணி நேரத்தில் புதிய தீவு முளைத்தது.

    பலுச்சிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.7 ஆகும். இந்த  பூகம்பத்தின் விளைவாக சுமார் 400 பேர் உயிரிழந்தனர்.

    பாகிஸ்தானின் இப்பகுதி பூகம்ப ஆபத்துப் பிராந்தியமாகும். அதாவது அவ்வப்போது பூகம்பம் நிகழும் பகுதியாகும். 1935 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் குவெட்டா நகரம் கிட்டத்தட்ட அழிந்தது. சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களும் இந்தியத் துணைக் கண்டமும் இந்தியச் சில்லு  எனப்படும்  பெரும் பாறைப் பாளம் மீது அமைந்துள்ளது. இது வடக்கு நோக்கி மெல்ல நகர்ந்து மத்திய ஆசியா, ரஷ்யா ஆகியவை அமைந்துள்ள யுரேசிய சில்லுவை நெருக்குகிறது.

    பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக் காவின் கிழக்கு கரை ஓரமாக இருந்த இந்திய சில்லு மெதுவாக நகர்ந்து வந்து யுரேசிய சில்லு மீது மோதி அதைத் தள்ள முற்பட்டதால் தான் அங்கு நிலம் புடைத்துக் கொண்டு இமயமலை தோன்றியது. பூமியின் பல கண்டங்களை யும், கடல்களை யும் தாங்கி நிற் கும் பல்வேறு சில்லுகள் வெவ் வேறு திசைகளில் இன்னமும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன. சில்லுகள் என்பவை பூமியில் மிக ஆழத்தில் அமைந்துள்ளன.  சில்லுகள் இவ்விதம் நகருவதால் தான் அவற்றின் சந்திப்புகளில் பூகம்பங்கள் நிகழ்கின்றன. சில்லுகளின் நகர்வு  எனப்படும். யுரேசிய சில்லுவை இந்திய சில்லு முட்டித் தள்ளுகிற அதே நேரத்தில் மேற்கே இந்திய சில்லுவை ஒட்டி அமைந்துள்ள அராபிய சில்லுவும்  நகருகிறது.

    பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டதற்கு சில்லுப் பெயர்ச்சி தான் காரணம். சில்லுப் பெயர்ச்சியின் போது நிலத்துக்கு அடியில் உள்ள பிரும்மாண்ட பாறைப் பாளங்கள் இடம் பெயரும்.

    கடலடிப் பாறைகளுக்கு அடியில் மணல், உறைந்த நிலையிலான மீதேன் வாயு முதலியவை இருக்கலாம். சில்லுப் பெயர்ச்சியின் விளைவாகப் பாறைகள் நகரும் போது வெப்பம் தோன்றும். அப்போது உறைந்த நிலையிலான மீதேன் கட்டிகள்  வாயுவாக மாற வாய்ப்புள்ளது. வாயு எப்போதும் நிறைய இடத்தை அடைத்துக் கொள்ள முற்படும். அந்த நிலையில் வாயு, மணல, கடலடிப் படிவுகள் என எல்லாம் மேல் நோக்கித் தள்ளப்படும்.  மேற்படி தீவு இவ்விதமாகத் தோன்றி யிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கரை ஓரமாக அமைந்த குவாடார் நகருக்குத் தெற்கே கடலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அத் தீவு தோன் றியது. அதைக் கண்டு கரையோரமாக வாழும் மக்கள் அதிசயித்துப் போனார்கள்.

    பலரும் பின்னர் படகுகள் மூலம் அத்தீவுக்குச் சென்றனர். அத்தீவில் சில இடங்கள் மணற்பாங்காக இருந்தன. ஒரு சில இடங்களில் சேறு இருந்தது. வேறு சில இடங்களில் பாறைகள் இருந்தன.  ஆங்காங்கு த்ரையில் வெடிப்புகள் இருந்தன. அவற்றின் வழியே புஸ் என்ற சத்தத்துடன் மீதேன் வாயு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தீக்குச்சியைப் பற்ற வைத்த போது அந்த வாயு எரிய ஆரம்பித்தது. தீயை எளிதில் அணைக்க முடியவில்லை.

    குவாடாருக்குத் தெற்கே தீவு தோன்றிய அதே நேரத்தில் கிழக்கே மிகவும் தள்ளி ஓர்மாரா என்னும் இடத்துக்கு அருகே இரு சிறிய தீவுகள் தோன்றின. ஆனால் இவை சேறு எரிமலை வகையைச் சேர்ந்தவை. இந்தத் தீவுகள்அதிக நாட்கள் நீடித்து இராது என்றும் நாளாவட்டத்தில் கடலில் மூழ்கி மறைந்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    சேறு எரிமலையின் பெயர் தான் எரிமலையே தவிர, அதிலிருந்து  நெருப்பு வெளிப்படாது. சாதாரண எரிமலையின் வாயில் நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருக்கும் என்றால் சேறு எரிமலையின் வாய்க்குள் சேறு காணப்படும். சேற்றில் மீதேன் வாயுக் கொப்புளங்கள் காணப்படும். பாகிஸ்தானின் தென் பகுதியில் கடலையொட்டிய நிலப் பகுதியில் பல சேற்று எரிமலைகள் உள்ளன.

    சேற்று எரிமலைகள் வேறு வகையிலும் வித்தியாச மானவை. ஒரு சில சேற்று எரிமலைகளே குன்று போல உயர்ந்து காணப்படும். சேற்று எரிமலைகளில் பெரும்பாலானவை சேறு தேங்கிய குட்டை போன்று இருக்கும். சேற்று எரிமலைகள் அனைத்திலும் உள்ள சேறு பூமிக்குள் மிக ஆழத்திலிருந்து வருவதாகும். அபூர்வமாக சில சேற்று எரிமலைகளில் தான் தொடர்ந்து பூமிக்குள்ளிருந்து சேறு வந்து கொண்டிருக்கும். மற்ற சேற்று எரி மலைகளில் எப்போதாவது தான் உள்ளிருந்து சேறு வெளிப்படும்.

    பலுசிஸ்தான் மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் தீவுகள் தோன்றுவது புதிது அல்ல. 1945 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இப்போதைய தீவு நான்காவதாகும். முந்தைய தீவுகள் எப்போதோ மறைந்து விட்டன. பூமியில் அவ்விதம் காந்த துருவங்கள் மாறினால் பூமியில் உயிரினத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கதை கிளப்புபவர்கள் உண்டு. ஆனால் காந்த துருவ மாற்றத்தால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பூமியின் மய்யத்தில்  இரும்பு- நிக்கல் உலோகக் குழம்பு உள்ளது. இதில் சுழல்கள் உண்டு. இதுவே பூமிக்குக் காந்தப்புலத்தை அளிப்பதாகக் கருதப் படுகிறது. பூமியைச் சுற்றி அமைந்த காந்தப்புலமானது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் தரைக்கு வந்து சேராமல் தடுக்கின்றன.இதன் பலனாக பூமியில் உயிரினம் காக்கப்படுகிறது

    கணிணி கிராஷ் என்ன காரணம்!

    By: ram On: 21:17
  • Share The Gag
  • பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் :

    Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

    1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start Settings Control Panel System Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.

    2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக் கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.

    3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

    4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளே யின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start Settings Control Panel Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

    5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

    6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக் கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.

    7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர் பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரி யைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப் பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

    8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப் பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப் பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

    9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.

    அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:

    By: ram On: 20:50
  • Share The Gag
  • ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்
    ஜாதிபத்திரி - Mace - மெக்
    இஞ்சி - Ginger - ஜின்ஜர்
    சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்
    பூண்டு - Garlic - கார்லிக்
    வெங்காயம் - Onion - ஆனியன்
    புளி - Tamarind - டாமரிண்ட்
    மிளகாய் - Chillies - சில்லிஸ்
    மிளகு - Pepper - பெப்பர்
    காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies
    பச்சை மிளகாய் - Green chillies
    குடை மிளகாய் - Capsicum
    கல் உப்பு - Salt - ஸால்ட்
    தூள் உப்பு - Table salt
    வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ
    சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்
    கற்கண்டு - Sugar Candy
    ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்
    பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
    முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
    கிஸ்மிஸ் - Dry Grapes
    லவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்
    கசகசா - Poppy - பாப்பி
    உளுந்து - Black Gram - பிளாக் கிராம்
    கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்
    பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்
    பாசிப்பருப்பு - Moong Dal
    கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்
    உழுத்தம் பருப்பு - Urid Dhal
    துவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்
    கம்பு - Millet - மில்லட்
    கேழ்வரகு - Ragi - ராகி
    கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்
    கோதுமை - Wheat - வீட்
    கோதுமை ரவை - Cracked Wheat
    சோளம் - Corn
    சோளப்பொறி - Popcorn
    எள்ளு - Sesame seeds / Gingelly seeds
    நெல் - Paddy - பாடி
    அரிசி - Rice - ரய்ஸ்
    அவல் - Rice flakes
    பச்சை அரிசி - Raw Rice
    புளுங்கல் அரிசி - Par boiled rice
    கடலை மா - Gram Flour
    மக்காச்சோளம் - Maize - மெய்ஸ்
    வாற்கோதுமை - Barley - பார்லி
    பச்சை பட்டாணி - Green peas
    சேமியா - Vermicelli
    சவ்வரிசி - Sago
    ரவை - Semolina
    கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
    கடுகு - Mustard - முஸ்டார்ட்
    சீரகம் - Cumin - குமின்
    வெந்தயம் - Fenugreek
    சோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds
    பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா
    மஞ்சள் - Turmeric - டர்மரிக்
    ஓமம் - Ajwain / Ajowan
    தனியா - Coriander - கோரியண்டர்
    கொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்
    கறிவேப்பிலை - Curry Leaves
    கஸ்தூரி - Musk - மஸ்க்
    குங்குமப்பூ - Saffron - சஃப்ரான்
    பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்
    கற்பூரம் - Camphor - கேம்ஃபர்
    மருதாணி - Henna - ஹென்னா
    துளசி - Tulsi
    எலுமிச்சை துளசி - Basil
    எண்ணெய் - Oil - ஆயில்
    கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்
    தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்
    நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்
    வேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்
    பாமாயில் - Palm Oil
    ஆலிவ் ஆயில் - Olive Oil
    பால் - Milk - மில்க்
    பால்கட்டி - Cheese - ச்சீஸ்
    நெய் - Ghee - கீ
    வெண்ணெய் - Butter - பட்டர்
    தயிர் - Curd/Yoghurt - க்கார்ட்
    மோர் - Butter Milk - பட்டர் மில்க்
    கீரை - Spinach - ஸ்பீனச்
    அவரை - Beans - பீன்ஸ்
    கர்பூரவள்ளி - Oregano
    நார்த்தங்காய் - Citron - சிட்ரான்
    திருநீர்பச்சை - Ocimum-basilicum
    சீத்தாப்பழம் - Custard-apple
    மாதுளை - Pomegranate
    பரங்கிக்காய்/பூசனிக்காய் - Pumpkin
    கருங்காலி மரம் - Cutch-tree
    அதிமதுரம்-Liquorice
    அருகம்புல் - Bermuda Grass
    வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
    புதினா இலை - Mint leaves
    வெற்றிலை - Betel leaves
    நொச்சி இலை - Vitexnegundo (Chaste Tree)
    அத்தி - Fig
    கீழாநெல்லி - Phyllanthus nururi
    தாழை மரம் - Pandanus Odoratissimus,Fragrant Screwpine
    தூதுவளை - Purple-fruited pea eggplant
    துத்திக்கீரை - Abutilon indicum
    பிரமத்தண்டு - Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
    கோவைக்காய் - Coccinia grandis
    முடக்கத்தான் கீரை - Cardiospermum halicacabum
    குப்பைமேனி - Acalypha indica; linn; Euphor biaceae
    நத்தைச்சூரி - Rubiaceae,Spermacoce hispida; Linn;
    சோற்றுக்கற்றாழை - Aloe Vera
    நாவல் பழம் - Naval fruit (Syzygium jambolana)
    பேய் மிரட்டி செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae
    தேள்கொடுக்கு செடி - Heliotropium
    நிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica
    நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
    சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) - Peucedanum grande; Umbelliferae
    சிறு குறிஞ்சான் - Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
    அரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia
    அகத்திக்கீரை - Sesbania grandiflora
    செண்பகப் பூ - Sonchafa (champa)
    சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
    செம்பருத்தி - Hibiscus(Shoe Flower)
    கரும்பு - Sugar cane
    நீர்முள்ளி - Long leaved Barleria (Hygrophila auriculata)
    அன்னாசிப் பூ - Star Anise
    பூவரசு - Portia tree (Thespesia populnea)
    ஊசிப்பாலை - Oxystelma Secamone
    அமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry
    கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
    கொய்யாப் பழம் - Guava
    மரவள்ளிக் கிழங்கு - Tapioca
    சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato
    சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு - Yam
    விளாம் பழம் - Wood apple
    முள்ளங்கி - Radish / parsnip
    புடலங்காய் - Snake gourd
    பாகற்காய் - Bitter gourd
    வெண்டைக்காய் - Ladies Finger/ Okra
    வேர்கடலை/நிலக்கடலை - Peanut
    வாழைக்காய் - Ash Plantain
    வாழைப்பழம் - Banana
    ஊறுகாய் - Pickle
    உருளைக் கிழங்கு - Potato
    தேங்காய் - Coconut
    இளந்தேங்காய் - Tender Coconut
    இளநீர் - Tender Coconut water
    பதநீர்/பயினி - Neera /Palmyra juice
    கள்ளு - Palm wine/Palm Toddy
    சுண்ணாம்பு - Lime
    ஆப்பச் சோடா - Baking Soda
    தீப்பெட்டி - Match Box
    ஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick

    க்ரிஷ் 3: மாபெரும் சாதனையும் மறக்க முடியாத உறுத்தல்களும்!

    By: ram On: 20:33
  • Share The Gag
  • ‘க்ரிஷ் 3... தீபாவளிக்கு வெளியான ஒரே பாலிவுட் படம். தமிழகத்திலும் கணிசமான திரையரங்கு களில் வெளியாகியிருக்கிறது. பொதுவாக ஷாருக்கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களின் படங்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றாலும் மூன்று முன்னணி நாயகர்களின் தமிழ்ப் படங்கள் வெளியாகும் நேரத்தில் ஒரு இந்திப் படத்துக்கு இத்தனை திரையரங்குகள் கிடைத்திருப்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. படம் வெளியான ஏழாவது நாளில் (நவ.7) இந்தியாவில் மட்டும் 200 கோடியை வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்டது.

                                 

    இதற்கு முன் இந்தியாவில் மட்டும் 200 கோடி வசூல் செய்த பாலிவுட் படங்கள் இரண்டுதான். ஒன்று ஷாருக் கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மற்றொன்று ஆமிர் கானின் ‘3 இடியட்ஸ்’. ஆனால் ‘க்ரிஷ் 3’ இவ்விரு படங்களைவிட மிகக் குறைந்த நாட்களில் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறது.

    முதல் இரண்டு பாகங்களைப் பார்க்காமல் ‘க்ரிஷ் 3’ பார்த்தால் புரியுமா என்று அச்சப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு இந்தி தெரியுமென்றால் போதும். ‘க்ரிஷ் 3’ தொடங்கும் முன் க்ரிஷ்ஷின் முன்கதை ஒரு காட்சித் தொகுப்பாக விரிய, ’இதுவரை’ என்ன என்பதை அமிதாப் பச்சன் சொல்லிவிடுகிறார். (இந்தி புரியாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது விக்கிபீடியா).

    ரோஹித் மெஹ்ரா (ஹ்ரிதிக் ரோஷன்) தான் கண்டுபிடித்த கருவியில் சூரிய ஒளியைக் கடத்தி அதன் மூலம் இறந்துவிட்ட உயிரினங்களை உயிர்த்தெழச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவரது மகன் க்ருஷ்ணா (ஹ்ரித்திக் ரோஷன்) அடிக்கடி க்ரிஷ்ஷாக மாறி ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றச் சென்றுவிடுவதால் அவனுக்கு நிலையான வேலை இல்லை, க்ருஷ்ணாவின் காதல் மனைவி ப்ரியா (ப்ரியங்கா சோப்ரா) ஆஜ் தக் சேனலில் செய்தி வாசிப்பாளர்.

    மறுபுறம் கால் (விவேக் ஓபராய்) தன் அறிவியல் திறனை அமானுஷ்ய சக்திகளையும் அழிவு நோக்கத்துடன் பயன்படுத்துகிறான். தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்த கயாவும் (கங்கனா ரணவத்) அவனுக்குத் துணையாக இருக்கிறாள். மனிதர்களைத் தாக்கும் விஷக்கிருமியை மும்பையில் பரப்புகிறான் கால். இதன் மூலம் அவனுக்குப் பல கோடி லாபம் கிடைக்கும். இந்தக் கிருமியால் மும்பையில் நூற்றுக்கணக்கானோர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். கால் பரப்பும் விஷக் கிருமி தன் குடும்பத்தை மட்டும் தாக்காததைக் கண்டு அதற்கான முறிமருந்து க்ருஷ்ணாவின் ரத்தத்தில் இருப்பதை அறிந்துகொள்கிறார் ரோஹித். தன்னிடம் கிடைக்கும் முறிமருந்தை வைத்து மும்பை நகரைக் காப்பாற்றுகிறான் க்ரிஷ்.

    ப்ரியாவைக் கடத்தி காலிடம் ஒப்படைத்துவிட்டு அவளது இடத்தில் கயா வருகிறாள். அதுவரை மனிதத்தன்மை, அன்பு ஆகியவற்றை அறிந்திராதவள் க்ருஷ்ணாவிடம் காதல்வயப் படுகிறாள். தன் விஷக்கிருமியை முறியடித்த ரோஹித்தையும் கடத்துகிறான் கால். ஆனால் க்ரிஷ் கயாவின் உதவியோடு கால் இருக்கும் இடத்தை அடைகிறான் (க்ரிஷ்ஷாகத்தான்). தன் மனைவியை மீட்பவன் தந்தையை மீட்பதற்குள் கால் அவனைக் கொன்றுவிட்டு மும்பை சென்றுவிடுகிறான்.

    இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சியை ரோஹித் மேற்கொள்கிறார். ஆனால் க்ருஷ்ணாவுக்கு உயிர்கொடுத்து அவர் இறந்துவிடுகிறார். மும்பைக்குப் பறந்து சென்று நெடிய சண்டை போட்டு காலை அழித்து மும்பையை மீண்டும் காப்பாற்றுகிறான் க்ரிஷ் என்கிற க்ருஷ்ணா

    எவ்வளவுதான் காதில் பூக்கடையையே கவிழ்த்தாலும் தீமையை நன்மை வெல்லும் கதைக்கு இந்தியர்களிடம் எப்போதுமே மவுசு உண்டு. க்ரிஷ் 3-ன் வெற்றி மூலம் அது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    ஃபாண்டஸி வகைப் படங்களில் தர்க்க ரீதியாக எதையும் அலச வேண்டியதில்லைதான். ஆனால் தர்க்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களையும் ஈர்க்கும் வகையில் மிகையதார்த்தக் காட்சிகளை உருவாக்க முடியும். என்ன அதற்குக் கொஞ்சம் மெனக்கெடல் தேவை. க்ரிஷ் 3க்கு இருக்கும் மற்ற சாதகங்களை வைத்து இதுபோன்ற மெனக்கெடல்கள் தேவையில்லை என்று படக் குழுவினர் முடிவெடுத்துவிட்டார்களோ?

    சரி, இவற்றையெல்லாம் மறந்துவிட்டு இதை ஒரு சூப்பர் ஹீரோ படமாக மட்டும் ரசிக்கலாம் என்றால் அதுவும் ஓரளவுக்குத்தான் முடிகிறது. சூப்பர் ஹீரோ ஒரு சாதாரண மனிதராகவும் இருப்பதால் சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளுக்கும் தீனி போட நினைத்திருக்கிறார்கள். மனைவி கர்ப்பம் தரித்த சந்தோஷத்தில் ஆடிப்பாடுவது, பேரன் பிறக்கப்போவதை அறிந்த தாத்தா ஆனந்தக் கண்ணீர் வடிப்பது, க்ரிஷ் யாரென்றே தெரியாத மக்கள் அவனுக்கு சிலை வைத்து ஆடிப்பாடுவது, குடியைக் கெடுக்க வந்த பெண் காதல் வயப்படுவது, பாலைவனம் ஒன்றில் அரைகுறை ஆடையுடன் ஆடும் பாடல் என 1970களிலிருந்து பார்த்துப் பார்த்துச் சலித்த பாலிவுட் க்ளீஷேக்கள் திரையை நிறைக்கின்றன.

    தொப்பையுடன் கண்ணாடி போட்டுக்கொண்டு வரும் அப்பாவி அப்பா ரோஹித் பாத்திரத்தில்தான் ஹ்ரித்திக் ரோஷனுக்கு நடிக்க வாய்ப்பு இருக்கிறது. நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு ஆணழகனாகத் தோன்றும் க்ருஷ்ணாவாகவும் க்ரிஷ் உடையிலும் ஹ்ரித்திக்கின் அழகை ரசிக்க முடிகிறது. நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

    வில்லனிடம் சிக்கிக்கொண்டு நாயகனால் காப்பாற்றப்பட ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்காக ப்ரியங்கா சோப்ரா இந்தப் படத்தில் இருக்கிறார். கங்கனா ரணவத் நடிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். விவேக் ஓபராய் கொடிய வில்லனாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவரது முகத்தை என்னவெல்லாமோ செய்திருக்கிறார்கள். படத்தில் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரது அசலான குழந்தை முகம் நினைவில் வந்து உறுத்துகிறது. சலீம் சுலைமானின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றது.


    உலகத் தரமான படமாக்கல், தொழிநுட்பம், கவலையை மறந்து ரசிக்க வைக்கும் சாகசக் காட்சிகள், இவையெல்லாம் தரும் பொழுதுபோக்கு ஆகியவற்றை மட்டும்தான் எதிர்பார்க்க வேண்டும் என்றால் க்ரிஷ் 3-ன் இமாலய வசூலை தாராளமாகக் கொண்டாடலாம். பெருமை கொள்ளலாம்.

    ஆனால் இந்தக் கதைக்களம், பட்ஜெட், தொழில்நுட்ப சாத்தியங்கள், கலைஞர்களின் திறமை மற்றும் உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு இன்னும் பன்மடங்கு சிறப்பாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதற்கான ஒரு சிறு முயற்சிகூட லாபத்தை பாதிக்கும் என்ற சிந்தனையே க்ரிஷ் 3 குழுவினரிடம் மேலோங்கி இருந்திருப்பதாகத் தெரிகிறது. அதுவே இந்தப் படத்தின் வெற்றியை உறுத்தலுடன் கடந்துசெல்ல வைக்கிறது..

    மீண்டும் விஜய்யுடன் - ஏ.ஆர்.முருகதாஸ்!

    By: ram On: 20:20
  • Share The Gag
  •  

    மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

    விஜய், காஜல் அகர்வால், வித்யூத் ஜாம்வால், சத்யன் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் 'துப்பாக்கி'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, தாணு தயாரித்திருந்தார்.

    நவம்பர் 13, 2012ல் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. விஜய்யின் வித்தியாசமான லுக், பரபரப்பான திரைக்கதை, பாடல்கள் என அனைத்து விதத்திலும் மக்களை கவர்ந்தது.

    'துப்பாக்கி' படம் வெளியான ஒரு வருடம் ஆனதையொட்டி, ட்விட்டர் தளத்தில் இந்தியளவில் #ThuppakkiDay, #VijayFansThankARMurugadossForThuppakki என்ற 2 ஹாஷ்டேக்குகள் டிரெண்ட்டாகி வருகிறது.

    'துப்பாக்கி' வெளியாகி ஒருவருடம் ஆகியிருக்கும் இந்நாளில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “ இந்த சந்தோஷமான தருணத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

    மீண்டும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைய இருப்பது குறித்து செய்திகள் வெளிவந்தாலும், அதிகாரப்பூர்வமாக எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. ஏ.ஆர்.முருகதாஸின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

    விஜய்யுடன் சமந்தா, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்க இருக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஓய்வு பெறும் சச்சினுக்கு ‘ஆட்டோகிராப் நினைவுப்பரிசு’ வழங்கும் மகாராஷ்டிர அமைச்சர்கள்!

    By: ram On: 20:12
  • Share The Gag
  •  ஓய்வு பெறும் சச்சினுக்கு ‘ஆட்டோகிராப் நினைவுப்பரிசு’ வழங்கும் மகாராஷ்டிர அமைச்சர்கள்

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை கவுரவித்து, வித்தியாசமான நினைவுப்பரிசு வழங்க மகாராஷ்டிர மாநில அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். அதாவது, சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடிக்கும் ரசிகர்களின் மத்தியில், அமைச்சர்கள் தங்கள் ஆட்டோகிராப் அடங்கிய அழகிய நினைவுப்பரிசை வழங்க உள்ளனர்.

    முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 40 உறுப்பினர்களும் தங்கள் கையெழுத்து பிரதிகளை விரைவாக அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தங்கள் கையெழுத்து எப்படி இடம்பெறவேண்டும் என்பதையும் அவர்கள் தெரிவிக்கலாம். இந்த கையெழுத்து பிரதிகளுடன் கூடிய தனிச்சிறப்பு மிக்க நினைவுப்பரிசு ஜே.ஜே. ஓவியப்பள்ளியில் வடிவமைக்கப்படுகிறது.

    இந்த நினைவுப்பரிசு தயாரானதும் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தி சச்சினிடம் அதனை வழங்க உள்ளனர். 4 மணி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளனர்.

    சச்சினின் அலுவலகத்துடன் இணைந்து விழா நடைபெறும் தேதி மற்றும் நேரத்தை முடிவு செய்யும்படி விளையாட்டுத்துறை துணை இயக்குனர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

    ஓட்டுனரின் மூடுக்கு தகுந்தாற்போல் நிறம் மாறும் கார்! வீடியோ!

    By: ram On: 19:55
  • Share The Gag
  • நீங்கள் ஒட்டிச செல்லும் கார் உங்களது விருப்பத்திற்கேற்ப திடீரென நிறம் மாறினால் எப்படி இருக்கும். இதை மனதில் கொண்டு ஒரே காரின் நிறத்தை பாவனையாளர்கள் விரும்பியவாறு மாற்றக் கூடிய நூதன கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


    இந்த காரை இங்கிலாந்தின் Peugeot RCZ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள Peugeotநிறுவன பொறியியலாளர்கள் வழங்கியுள்ளார்கள்.


    இதன் டெக்னாலஜி மூலம் ஓட்டுனரின் உடல் வெப்பநிலை அறியப்பட்டு காரின் நிறம் மாறும் உயர்ந்த தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இயக்கும் ஸ்டியரிங் மூலம் கார் சக்கரங்களிலும், இந்த தொழிநுட்பம் மூலம் ஓட்டுனரின் எண்ணம் பிரதிபலிக்கும் வகையில் அதனுடன் வெப்பதோடு உணர்வும் இணைக்கப்பட்டுள்ளது.


    இதுபோன்ற கார் தயாரிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்பதுடன்,இது தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் எனவும் Peugeotநிறுவன மேலாளர் தெரிவித்துள்ளார்.


    ஏலத்துக்கு வரும் ‘ஆரஞ்சு வைரம்’ அரிய தகவல்கள் +வீடியோ!

    By: ram On: 17:24
  • Share The Gag
  • உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு ‘ஆரஞ்சு வைரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே ஒரு சுற்று சுற்றிவந்து, நிபுணர்களின் சான்றுடன் மீண்டும் ஜெனிவாவை வந்தடைந்துள்ளது.

    இங்குள்ள கிரிஸ்டீஸ் ஏல நிறுவனம் இந்த வைரத்தை இன்று ஏலம் விடுகிறது.இது 17 மில்லியன் – 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 125 கோடி ரூபாய்) வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







    இதற்கிடையில் இந்த வைரத்தின் வரலாறு பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?


    இவைரம் ..ந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.

    இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

    வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் “வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்ற பழமொழியும் வந்தது.

    வைரம் எப்படி உருவாகிறது?


    பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.

    வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

    இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

    வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது ?


    வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

    வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும்.
    இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

    வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?


    இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.

    வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

    ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.

    இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது ?

    இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

    பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன ?
    முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.

    வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?


    வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.
    பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.

    வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ?

    வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.

    இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

    கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

    இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?


    தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் உள்ளதாக்க கூஇப்பாட்ட இந்த வைரம்தான் ஏலத்திற்கு வருகிறது.

    10 வகுப்பு + Fireman Training + Driving License வைத்திருபோருக்கு ONGC நிறுவனத்தில் பணி!

    By: ram On: 16:54
  • Share The Gag
  •  

    Dehradun செயல்பட்டு வரும் Oil and Natural Gas Corporation limited (ONGC) நிறுவனத்தில் காலியாக உள்ள Asst Technician and Jr. Fireman பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



    மொத்த காலியிடங்கள்: 13

    பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

    பணி: 01. Assistant Technician (Electronics) A2 Level – 08

    வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதி: Electronics/ Telecom/ E&T Engineering பிரிவில் 3 வருட முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

    பணி: 02. Jr Fireman W1 Level – 05

    வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் Fireman Training மற்றும் Driving License வைத்திருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் written test, personal interview, physical standard test, physical efficiency test மற்றும் driving test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.100.

    மேலும் விண்ணப்பிக்கும் முறை, இதர சலுகைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2013

    இறந்தார்… ஆனால் இறக்கவில்லை!

    By: ram On: 08:11
  • Share The Gag
  • இறந்தார்… ஆனால் இறக்கவில்லை! உலகம் முழுதும் நடந்த உண்மைச் சம்பவங்கள்!!!

    நேற்றைக்கு நடிகை கனகாவை இறந்ததாக செய்தி வாசித்தார்கள் இல்லையா? இப்படி உலகம் முழுக்க யாருக்கெல்லாம் செய்தி வாசித்து இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

    * குத்தூசி ஒரு சிலை சிதிலமடைந்து கடந்ததைப்பற்றி எழுதுகிறபொழுது காலஞ்சென்ற மாணிக்கவேல் நாயக்கர் என்று எழுதி விட்டார். அவருக்கு இதழ் வெளியான காலையில் ஒரு அழைப்பு, “நான்தான் காலஞ்சென்ற மாணிக்கவேல் நாயக்கர் பேசுகிறேன்” என்று.

    * அமெரிக்காவின் எழுத்துலக பிதாமகர் என புகழப்படும் மார்க் ட்வைன் உயிரோடு இருக்கும் பொழுதே அவர் இறந்து விட்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட, “கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட இறுதி அஞ்சலி” என நையாண்டி செய்தார் அவர்.

    * உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரசல் ஜப்பானிய பத்திரிகைக்கு பேட்டி தரமாட்டேன் என்று மறுக்க, மனிதருக்கு இரங்கல் அஞ்சலி எழுதிவிட்டார்கள்.

    * பாடகி மடோனா இறந்துவிட்டதாக பிபிசி யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோ வெளியானது. பின்னர் பார்த்தால் அது அவர்களின் சேகரிப்பில் இருந்தது என்பது தெரிந்தது. ஒருவர் சாவதற்கு முன்னமே முன்யோசனையாக வீடியோ தயார் பண்ணி வைத்து இருக்கிறார்கள். இதைப்பற்றி எதுவுமே வாயை திறக்கவில்லை பிபிசி.

    * ரூட்யார்ட் கிப்ளிங் உயிரோடு இருக்கும்பொழுதே இறந்து விட்டதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட… அவர், “நான் இறந்து விட்டேன்; உங்களின் சந்தாதாரர் பட்டியலில் இருந்து என்னை நீக்கி விடுங்கள்!” என்று கடிதம் எழுதினார்.

    * பிடல் கேஸ்ட்ரோ, போப் ஜான் பால் இருவரும் உயிரோடு இருக்கும்பொழுதே இறந்ததாக சிஎன்என் அறிவித்தது. அதிலும் பிடல் கேஸ்ட்ரோவின் மரணத்தை ரீகனின் மரணத்தோடு சேர்த்து வெளியிட்டது. உண்மையில் இருவரும் இறக்கவில்லை. கேஸ்ட்ரோவை தடகள வீரர், சினிமா நட்சத்திரம் என்று வேறு எழுதிவிட்டார்கள்.

    * ஜெயப்ரகாஷ் நாராயண் இறந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவித்து, பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. உளவுத்துறை தலைவர் மருத்துவமனையில் ஜெபியைப் போல இருந்த இன்னொருவரை பார்த்துவிட்டு வந்து கொடுத்த தகவலால் வந்த வினை!

    * கொலரிட்ஜ் எனும் கவிஞர் இறந்துவிட்டதாக வந்த செய்தியை ஒருவர் வாசித்துக்கொண்டு இருந்தார். “அவர் ஒரு மாபெரும் கவிஞர்; சிறப்பாக அவரின் ரீமொர்ஸ் நாடகம் வெற்றி பெற்ற பின் அவர் தூக்கில் தொங்கியது விந்தையானது!” என்று அவர் வாசிக்க, கொலரிட்ஜ், “அதை விட விந்தையானது, அவர் உங்கள் முன் நிற்பது!” என்றார். இவரின் டி ஷர்ட்டை திருடிப்போன திருடன் அதை அணிந்து கொண்டு தூக்கில் தொங்கி விட்டான். அந்த சட்டையில் இவரின் பெயர் பொறித்திருந்ததில் வந்த சிக்கல் அது.

    ஆல்பிரெட் நோபலின் தம்பி லுடிவிக் வெடிவிபத்தில் இறந்துபோக, ‘மரணத்தின் வியாபாரி மரணம்!’ என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க, அப்பொழுது மனம் வருந்தி நோபல் பரிசை உருவாக்கினார் ஆல்பிரெட் நோபல்!

    கணிதத்திற்கு நோபல் பரிசு இல்லாத காரணம் !

    By: ram On: 07:54
  • Share The Gag

  • ஆல்ஃபிரட் நோபல் விரும்பிய பெண், மிடாஸ் லெஃப்பர்
    என்ற கணித மேதையைத் திருமணம் செய்து கொண்டு
    போய் விட்டாள். மனம் கசந்து போனார் நோபல்.


          அதனால்தான் நோபல் பரிசை உருவாக்க வேண்டும்
    என்று உயில் எழுதி வைத்த போது,அதில் கணிதத்தை சேர்க்கவில்லை என்கிறார்கள்.


          முதல் நோபல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது.




    யூடியூப்பை சிறப்பாக பயன்படுத்த சில வழிகள்!

    By: ram On: 07:45
  • Share The Gag
  • வீடியோ பகிர்வு சேவையான யுடியூப் தளத்திற்கு அறிமுகமே தேவையில்லை.யூடியூப்பை பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கவும்,நகைச்சுவை வீடடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் நீங்கள் பயன்படுத்தி வரலாம்.பிரப்லமான செய்தி கிளிப்களை பார்க்க, திரைப்பட டிரைலர்களை காண என மேலும் பலவழிகளில் யூடியூப்பை பயன்படுத்தலாம்.

    யூடியூப் சார்ந்த பல்வேறு சேவைகளும் இருக்கின்றன. யூடியுப்பிலே கூட பலவேறு வசதிகள் இருக்கின்றன.யூடியூப்பில் உள்ள எல்லா வசதிகளையும் எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இப்படி பரவலாக அறியப்படாத ஆனால் பயனுள்ள யூடியூப் வசதிகள் சிலவற்றை பார்க்கலாம்.

    யூடியூப்பில் பாட்டு கேட்பது சுலபமானது. பிடித்த பாடலை வீடியோவோடு பார்த்து ரசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.ஆனால் யூடியூப்பில் பாடல கேட்பதில் உள்ள ஒரே சங்கடம் ஒவ்வொரு பாடல் முடிந்த பிறகும் அடுத்த பாடலை தேர்வு செய்து கொன்டிருக்க வேண்டும். இசைவானில் மிதக்க விரும்பும் போது இப்படி ஒவ்வொரு பாடலாக தேர்வு செய்ய வேண்டியிருப்பது அந்த அனுபவத்தையே பாழாக்கி விடும்.

    இதற்கு மாறாக விருப்பமான பாடல்கள் அடுத்தடுத்து ஒலிபரப்பாக கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.சுகமாக தான இருக்கும் இல்லையா? இப்படி யூடியூப்பிலேயே பாடல்களை வரிசையாக கேட்டு மகிழலாம்.இதற்கான பிலேலிஸ்டை உருவாக்கி கொள்ளும் வசதியை யூடியூப் டிஸ்கோ  http://www.youtube.com/disco  தருகிறது.இந்த சேவையில் உங்களுக்கு பிடித்தமான பாடகர் அல்லது பாடலை சமர்பித்தால அதனடிப்படையில் பிலேலிஸ்ட்டை உருவாக்கி தருகிறது. அதில் உள்ள பாடல்களை ஆனந்தமாக கேட்டு ரசிக்கலாம். பாப் பிரியர்கள் என்றால் இந்த சேவை பரிந்துரைக்கும் பிரப்லமான பாடல்கள் அல்லது பிரபலமான பாடகர்கள் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

    இதே போல யூடியூப்பில் உள்ள மற்றொரு பயனுள்ள வசதி யூடியூப் லைவ்.http://www.youtube.com/live இது நேரடி ஒளிபரப்புக்கான சேவை. இதன் மூலம் தற்போது இணையத்தில் காணகிடைக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தேடாமலே தேடி பார்த்து ரசிக்கலாம். அமெரிக்க அதிபர் மாளிகை ஒளிபர‌ப்பு, விளையாடு நிகழ்ச்சிகள் என் பலவற்றை பார்க்க முடியும்.குறிப்பிட்ட நேரத்தில் நேரடி ஒளிபர்ப்பு நிகழ்ச்சிகள் எவை என்பதை இதன் முகப்பு பக்கத்திலேயே பார்த்து தெரிந்து கொள்லலாம்.அவற்றில் உங்களை கவரும் சேவைக்கு உறுப்பினாராகும் வசதியும் இருக்கிற‌து.இந்திய நிழச்சிகளில் துவங்கி பிரபலமான அல்ஜசிரா டிவி  உட்பட உலக‌ம் ம்ழுவதும் உள்ள பல நிகழ்ச்சிகளை பார்கலாம். இத்த்னை நேரடி ஒளிபரப்புகளா என வியந்டு போவீர்கள்.

    அது மட்டுமா இந்த வசதியை வீடியோ உரையாடலுக்கான கூகுல் ஹாங்க் அவுட வசதியுடன் இணைத்து கொள்ளலாம். அப்போது ஹாங்க் அவுட்டில் பங்கேற்காதவர்கள் கூட இதை நேரடி ஒளிபர‌ப்பாக பார்க்க முடியும்.

    நீங்கள் எடுக்கும் வீடியோக்களையும் யூடியூப்பில் பதிவேற்றலாம். அந்த வீடியோ நேரத்தியாக இருக்க வேண்டும் என்றால் அது அழகாக எடிட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.இதற்கான வசதியும் யூடியூப்பில் இருக்கிறது. யூடியூப் வீடியோ எடிட்டர் http://www.youtube.com/editor   மூலம் உங்கள் வீடியோக்களை அழகாக எடிட் செய்து பலரும் பார்த்து ரசிக்க செய்யலாம்.பல காட்சிகளை சேர்ப்ப‌து,பின்னணி இசை சேர்ப்பது, எடிட் செய்வது, உப‌ தலைப்புகள் கொடுப்பது என பல‌விதங்களில் வீடியோக்களை மெருகேற்ற‌லாம்.எதையும் தரவிறக்கம் செய்யாமல் உங்கள் பிரவுசரிலேயே இவற்றை மேற்கொள்ளலாம்.

    யூடியுப் வழங்கும் மற்றொரு பயனுள்ள சேவை வீடியோக்களின் தரவிறக்க வேகத்தை அறிந்து கொள்வது. சில நேரங்களில் வீடியோ கோப்புகள் கிளிக் செய்தவுடன் தரவிறக்கம் ஆகாமல் தாமதாமாகலாம். இது போன்ற நேரங்களில் என்ன யூடியூப் மை ஸ்பீடு   http://www.youtube.com/my_speed    பக்கத்திற்கு சென்றால் என்ன பிரச்ச்னை என்று தெரிந்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் வீடியோ தரவிறக்கம் ஆகும் வேகம் தொடர்பான விவரங்கள் இதன் மூல தெரிந்து கொண்டு செயல்படலாம்.உங்கள் இணைய வேகம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள இணைய வேகம் ஆகிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

    தூக்கமின்மையும் அதற்கான தீர்வும்!

    By: ram On: 07:29
  • Share The Gag
  •  ‘மெத்தைய வாங்கினேன்
      தூக்கத்தை வாங்கலை’

    என்ற பாடல் நம் காதுகளில் அடிக்கடி ஒலிக்கிறது. இதற்கு அர்த்தம்தான் என்ன? தூக்கமின்மைக்கு என்ன காரணம். தூக்கத்தின் அளவு மனிதனுக்கு அவரவர் வயதிற்கேற்ப மாறுபடுகிறது. பிறந்த குழந்தைக்கு 16 மணியிலிருந்து 20 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது.வயது வந்தவர்களுக்கு 7 மணி முதல் 9 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. வயதானவர்களுக்கு 5 மணி முதல் 6 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது.

    பொதுவாக இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு என்கிறார்கள் மருத்துவர்கள் .அதிலும் சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால் கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும். ஆனால் 30 வயதுக்கு மேல்தான் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது.

    உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும்.

    தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை துவங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம்.மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது.

    குழந்தைகளுக்கு சிறு வயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம், குழந்தைகள் பயங்கரமான கனவுகளால் விழிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு கனவு பற்றி சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மரபு ரீதியான இரவு நேர பய உணர்வும் தூக்கத்தின் எதிரியே. தூக்கத்தில் எழுந்து நடப்பது, தானாகப் பேசுவது போன்ற குறைபாடுகளும் குழந்தைகளிடம் காணப்படலாம். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகள் நிம்மதியான தூக்கம் பெற முடியும். பாதுகாப்பு முறை: தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே இரவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

    தூக்கம் பிரச்னை உள்ளவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். காபியில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித் தால் நன்றாக தூக்கம் வரும். தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இன்றி இருத்தல், மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தவிர்த்தல், மனக்கவலைகளை ஓரம் கட்டுதல் வேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகள் செய்வதைத் தவிர்க்கவும்.

    இரவில் ஒரு டம்ளர் பால் அருந்தவும். இரவில் மது அருந்தும் பழக்கத்தை கைவிடவும். மூளையைத் தூண்டும் மருந்துகளைத் தவிர்க்கவும். புகை பிடிப்பதும் நல்லதல்ல. பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொள்ளவும். மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சியும், சத்தான உணவுகளும் இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.