Wednesday 5 November 2014

என்னை அறிந்தால் பாடல் வெளியீட்டுக்கு அஜித் தரிசனம் ?

By: ram On: 22:01
  • Share The Gag
  • தல ரசிகர்கள் கடந்த வாரம் முழுவதும் செம்ம குஷியில் மிதந்தனர்.

    என்னை அறிந்தால் படத்தின் விதவிதமான போஸ்டர் மற்றும் நீண்ட நாள் பிறகு வெளியான படத்தின் தலைப்பு என்று போன வாரம் படத்தை பற்றி முக்கியமான விஷயங்களை என்ன அறிந்தால் டீம் வெளியிட்டனர்.

    இந்நிலையில் படத்தை வேகமாக முடித்து கிறிஸ்துமஸ் அல்லது ஜனவரி 9ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு கடுமையாக உழைத்து வருகிறது படக்குழு.என்னை அறிந்தால் படத்தின் டீசர் நவம்பர் 25ம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. படத்தின் பாடல் வெளியிடு டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு விழாவாக நடத்தலாமா என்று கௌதம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் யோசித்து வருகிறது .

    ஆனால் பாடல் வெளியிடுக்கு தல தரிசனம் கொடுக்க மாட்டார் என்றவுடன் பல யோசனைக்கு பிறகு ஏதாவது ஒரு எஃப்.எம். ஸ்டேஷனில் வைத்து விடலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

    நீண்ட வருடங்களுக்கு பிறகு கௌதம் மற்றும் ஹாரிஸ் கூட்டணியில் பாடல் உருவாகியுள்ளதால் மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

    தனுஷ் கலக்கும் டங்கமாரி

    By: ram On: 20:05
  • Share The Gag
  • தனுஷ் நடித்திருக்கும் அனேகன் படம் கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது .

    அனேகன் படத்தில் ஒரு கேரக்டர் வட சென்னை சுற்றி உள்ளதால் இப்படத்தில் மெர்சலாயிட்டேன் பாடல் மாதிரி ஒரு பாடல் உள்ளதாம்.

    இப்பாடலில் பக்கா லோக்கல் வார்த்தைகள் சேர்க்கபட்டுள்ளது. உதாரணத்துக்கு டங்கமாரி என்று தொடங்கும் அந்த பாடலில் சோமாரி, கேப்மாரி, மொள்ளமாரி என்ற பக்கா லோக்கல் வார்த்தைகள் உள்ளது.

    தனுஷ் இந்த பாடலில் செம்ம குத்து டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார்.

    அஜித்தை பற்றி மறுக்க முடியாத உண்மையை சொன்ன விவேக்

    By: ram On: 19:17
  • Share The Gag
  • நடிகர் விவேக் அஜித்தின் நெருங்கிய நண்பர் மட்டுமில்லாமல் அவருடன் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    தற்போது கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் விவேக், கௌதம் - அஜித்துடன் பணிபுரியும் அனுபவங்களை ரசிகர்களுக்கு அடிக்கடி தெரிவிப்பார்.

    அந்த வகையில் அஜித் போல் சால்ட் ன் பெப்பர் லுக்கில் தற்போது பவனி வருகிறார் விவேக் நேற்று இதை பற்றியும் மற்றும் அஜித்தை பற்றி சொல்லுங்கள் என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு "7 வருடம் கழித்து இணைகிறேன் அஜீத்துடன். பொய்மை கபடம் இல்லா அற்புத மனிதர்! சால்ட் பெப்பர் லுக் விடுங்கள் என்று சொன்னவர் அவர் தான் என்றார்.

    ஹாப்பி நியூ இயர் படத்தை கழுவி ஊத்திய அமிதாப் பச்சன் மனைவி

    By: ram On: 17:30
  • Share The Gag
  • கடந்த தீபவளியன்று உலகம் முழுவதும் வெளியான ஷாருக்கானின் ஹாப்பி நியூ இயர் திரைப்படம் வசூலை குவித்து வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தை பற்றி பிரபல நடிகர் அமிதாப் பச்சன் மனைவி ஜெய பச்சன் ஹாப்பி நியூ இயர் ஒரு கேவலமான படம் என்று கூறியுள்ளார்.

    சமீபத்தில் இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜெயா பச்சன், சமீபத்திய சினிமாக்களில் இலக்கியங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளன என கூறினார். தொடர்ந்து ஹேப்பி நியூ இயர் படம் பற்றி பேசிய அவர், சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகவும் முட்டாள்தனமான படம் என்றால் அது ஹேப்பி நியூ இயர் படம் தான்.

    ஒரு பெரிய நடிகர், கேமிரா முன்னால் ரொம்பவே முட்டாளாக நடந்து கொண்டுள்ளார். இன்றைய சினிமாக்கள் இப்படி சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

    சினிமா எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இதனால் தான் எந்த படத்தில் நான் நடிப்பதில்லை என தன் மனதில் பட்டதை பொது மேடையிலே கூறினார்.

    வை ராஜா வை படத்தில் தனுஷ்!

    By: ram On: 08:54
  • Share The Gag
  • ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வை ராஜா வை’. யுவன் இசையில் சமீபத்தில் தனுஷ் பாடல் எழுத அப்பாடலை இளையராஜா பாடியிருக்கிறார்.  

    டாப்ஸி , டேனியல் பாலாஜி, மனோபாலா ஆகியோர் நடிக்கும் 'வை ராஜா வை' படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

    '' ’வை ராஜா வை’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட தனுஷூக்கு நன்றி . இந்தக் காட்சியைப் படமாக்கும் போது கண்டிப்பாக உற்சாகமாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

    'டேம் 999' படத்துக்கு பதிலடி கொடுக்குமாம் லிங்கா படம்..!

    By: ram On: 08:14
  • Share The Gag
  • ரஜினியின் ‘லிங்கா’ பட டிரெய்லர் இரு தினங்களுக்கு முன் வெளியானது. உடனடியாக இதனை டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப்களில் ரசிகர்கள் பரப்பினர். 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் பத்து லட்சம் பேர் இதனை பார்த்தனர். மேலும் இது பரவி வருகிறது.

    டிரெய்லரில் ரஜினி இளமையாகவும் ஸ்டைலாகவும் கலக்கியதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பட்டு வேட்டி, சட்டையில் மக்களை பார்த்து கும்பிடுவது போன்றும் அனுஷ்காவுடன் ஸ்டைலாக நடனம் ஆடுவது போன்றும் வில்லன்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்றும் ஆற்று பாலத்தின் மேல் கம்பீரமாக நிற்பது போன்றும் தோன்றும் டிரெய்லரில் ரஜினி இருந்தார்.

    ஒவ்வொரு காட்சியும் ரசிக்கதக்கவையாக இருந்தன என்று ரசிகர்கள் தெரிவித்தனர். ‘லிங்கா’ படத்தை டிசம்பர் 12–ந்தேதி ரஜினி பிறந்த நாளில் திரையிட திட்டமிட்டனர். ஆனால் டப்பிங் ரீ-ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் அதற்குள் முடியுமா? என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது. பணிகள் முடியாவிட்டால் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்படலாம் என தெரிகிறது.

    படத்தில் பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இதை படமாக்குவதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் வெளிநாடு சென்றுள்ளனர். 'லிங்கா' படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தையும் இப்போதைய காலகட்டத்தையும் உள்ளடக்கிய கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளது.

    சுதந்திரத்துக்கு முந்தைய ரஜினி வேட்டி சட்டையிலும் இப்போதைய ரஜினி மாடர்ன் டிரெஸ்ஸிலும் வருகின்றனர். இதில் நாயகிகளாக சோனாக்சி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். காமெடி வேடத்தில் சந்தானம் வருகிறார்.

    பெரியாறு அணையைபோல் ஏரி தகராறை மையமாக வைத்து இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள இயக்குனரால் எடுக்கப்பட்டு சர்ச்சைகளை கிளப்பிய 'டேம் 999' படத்துக்கு பதிலடி கொடுப்பதுபோல் இந்த படத்தின் கதை இருக்கும் என்றும் பேச்சு நிலவுகிறது.

    நிர்வாண போஸ் கொடுக்கும் உலக அழகி தங்கை

    By: ram On: 08:02
  • Share The Gag
  • பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா.

    தமிழன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

    இவருக்கு உடன்பிறந்த தங்கைகள் இல்லாவிட்டாலும் பரிணிதி சோப்ரா, மீரா சோப்ரா (நிலா) என இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

    இந்நிலையில் மற்றொரு தங்கையான மன்னாரா ஸ்சித் படம் இந்தி திரையுலகில் அறிமுகமாகிறார்.

    இம்மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் புரமோஷனுக்காக மன்னாரா நிர்வாண போஸ் படங்கள் தந்து பரபரப்பை வெளியிட்டார்.

    மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு!

    By: ram On: 01:03
  • Share The Gag
  • மனிதர்களுக்கு பல சிக்கலை ஏற்படுத்துவது மலச்சிக்கல் நோயே. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக மூலநோய் இருக்கும். வயிற்று தொந்தரவுகள் இருந்தால் மனதில் தெம்பு இருக்காது. பணிகள் செய்ய சுறுசுறுப்பு இருக்காது. ஏராளமான குறைகளை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு மிக சாதாரண மருந்து உள்ளது. முருங்கை கீரை பொரியலை சற்று அதிகமாக எடுத்து கொண்டாலே போதும். இரவு உணவு சாப்பிடும்போது, சோறு பாதி, முருங்கை கீரை பாதியாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே இருக்காது. எவ்வித தொந்தரவும் இல்லாமல் இலகுவாக மலம் வெளியேறும்.

    வெளி மூலம்:


    முருங்கை இலையும், முத்து என்னும் சிற்றாமணக்கு இலையும் சம அளவில் பொடியாக அரிந்து விளக்கெண்ணெய் விட்டு லேசாக வதக்கி மூலத்தின் மேல் வைத்துக்கட்டினால் வெளி மூலம், மூளை மூலம், சதை மூலம் போன்ற அனைத்து மூலங்களும் சுருங்கி குணமாகும். மூலம், பௌத்திரம் (பகந்தரம்) நோய் குணமாக முருங்கை கீரை 2 பங்கு, ஊமர்த்தன் இலை 1 பங்கு ஆகியவற்றை பொடியாக அரிந்து வேப்ப எண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயின் மேல் வைத்துக்கட்டினால் கிருமி, பௌத்திரம், நச்சு தண்ணீர் வடியும் பௌத்திரம், நீண்ட நாள்கள் உள்ள மூலம், பௌத்திரம் தொந்தரவுகள் குணமாகும்.

    வாந்தி உண்டாக்க:

    சித்தர்களின் கூற்றுப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறை இயல்பாக பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்தல், வாந்தி எடுக்க மருந்து சாப்பிடுதல், பித்த வாந்தி எடுத்தல் மனித ஆரோக்கிய விதிமுறை ஆகும். இந்த காரத்திற்காகவும், வேறெதேனும் விஷத்தை குடித்த பிறகு அதை வாந்தி மூலம் வெளியே எடுக்க வேண்டும் என்றால், காட்டு முருங்கை இலைச்சாற்றை 36 கிராம் வாயில் ஊற்றி வாந்தி எடுக்க செய்ய வேண்டும். முருங்கை இலை சாற்றை வாயில் ஊற்றினாலே வாந்தி வந்திவிடும்.

    புராதன சின்னமாகிறது திருமால்கோனேரி மலை! ஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள்!

    By: ram On: 01:03
  • Share The Gag

  •  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமால்கோனேரி மலை புராதன சின்னமாக தொல்லியல் துறையால் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மதுரையை சுற்றியுள்ள மலைகளில் பாரம்பரிய சின்னங்கள், கல்வெட்டுக்கள், சமணர்களின் வாழ்வு நிலை, ஓவியங்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளன. இம்மலைகளை கண்டறிந்து தொல்லியல் துறை புராதன சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம் திருமால்கோனேரி மலை தொல்லியல் துறையால் விரைவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த மலையில் 5ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், தமிழீ எழுத்துக்கள் (அப்போதைய தமிழ் எழுத்து வடிவம்), 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணர்களின் மந்திரமாக இருந்த ஸ்வஸ்திக் சின்னம், சமணர் படுக்கைகள், விளக்குத்தூண் என பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தமிழீ எழுத்துகளில் சமண படுக்கைகளை செய்து கொடுத்தவரின் பெயர் ‘எரு காட்டுஊர் கோன் கொன்றி பாளிய்’ என எழுதப்பட்டுள்ளதை காணமுடிகிறது.விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகிழ்ச்சி நிலையில் கைகோர்த்து ஒரு காலை மடித்து உட்கார்ந்திருக்கும் சிற்பம் குடவரை சிற்பமாக காண கிடைக்கிறது.

    இம்மலை தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட தகுதியுள்ளது என மதுரை மண்டல அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழக அரசிற்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது:
    தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பாரம்பரிய சின்னங்களிலேயே சிறப்பு வாய்ந்தது திருமால்கோனேரி மலை. இங்கு கி.மு.க்கு முற்பட்ட ஓவியங்களும், கி.பி.யில் வரையப்பட்ட ஓவியங்களும் ஒருங்கே அமைந்துள்ளன.

     இங்கு மட்டும்தான் சமண படுக்கையின் மேல் சமணர்களின் சின்னமான ஸ்வஸ்திக் உள்ளது. தமிழகத்தில் உள்ள சமணர் படுக்கைகளில் வேறு எங்கும் இச்சின்னம் இல்லை. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வாணிப வழித்தடமாக இருந்ததற்கான சான்றும் உள்ளது. அந்த காலத்தில் குன்றத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

    குடவரை கோயிலை ஒட்டி 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ள பாகம்பிரியாள் சமேத மலைகொழுந்தீஸ்வரர் கோயில் சுவர் முழுவதும் பழமையான தமிழ் எழுத்துக்கள், வட்டெழுத்துக்களை காணலாம். இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் வருகிறது. அதனால் மலை முழுவதையும் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இயலாத நிலை உள்ளது. கோயிலை தவிர்த்து மலை, பாரம்பரிய சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து சுற்றுலாத் துறையுடன் இணைந்து மேம்பாட்டு பணிகள் விரைவில் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.