Monday 25 November 2013

நெய் மைசூர் பாக் - சமையல்!

By: ram On: 23:51
  • Share The Gag



  • தேவையான பொருட்கள்:
    ========================

    கடலை மாவு - ஒரு கப்
    சர்க்கரை - இரண்டு கப்
    நெய் - ஒண்ணேகால் கப்
    முந்திரி பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
    அரை கப் - நீர்

    செய்முறை:
    ===========

    * கடலை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து  வறுத்து வைக்கவும்.

    *  சர்க்கரையை நீர் சேர்த்து கலந்து பாகு தயாரிக்கவும்.

    * பாகின் பதம் பார்க்க சிறிது  பாகை எடுத்து அதை குட்டி பந்து போல் உருட்ட முடிந்தால் அதுவே சரியான பதம்.

    * மெது மெதுவாக மாவை சேர்த்து கட்டி உருவாகாமல் கலக்கவும்.

    * ஒன்று சேர்ந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் எடுத்து வைத்து மீதம் உள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கவும்.

    * slow flame மில் வைத்து கிளறவும்.

    * தனியாக எடுத்து வைத்த நெய்யை ஒரு பாத்திரத்தில் முழுவதும் படுமாறு தடவவும்.

    * கிளறிய பாகை நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி சமமாக பரப்பி விடவும்.

    * நன்றாக ஆறியதும் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போடவும்.

    * சுவையான நெய் மைசூர் பாக் தயார்.


    குறிப்பு:
    =======

    சர்க்கரை பாகின் பதம் சரியாக வரவில்லை என்றாலோ,மாவு சரியாக இல்லைஎன்றாலோ சுவையும் பதமும் சரியாக வராது.முதன் முறையாக செய்கிறீர்கள் என்றால் மிகவும் சிறிய அளவில் செய்து பார்க்கவும்.

    சிறுபட்ஜெட்டில் படம் எடுக்கப்பபோவதாக இயக்குநர் செல்வராகவன் அறிவிப்பு!

    By: ram On: 23:31
  • Share The Gag
  •  




     பெரிய படங்களை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்த இயக்குநர்கள் பிரம்மாண்ட இயக்குனர்கள் என முத்திரையுடன் தொடர்ந்து பெரும் பொருட்செலவிலேயே படங்களை எடுப்பார்கள் ஆனால் செல்வராகவனோ இதில் மாறுபட்டு குறைந்த செலவில் படம் எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்

     இதுவரை செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படங்களில் மிக அதிக  பொருட் செலவில் உருவான படம்  தற்போது வெளியாகியுள்ள ‘இரண்டாம் உலகம்’.  அகும். இதற்கு முன்னதாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும் பெரும் பொருட்செலவில் படமாக்கியிருந்தார்,

    இந்நிலையில், ‘இரண்டாம் உலகம்’ படத்தைத் தொடர்ந்து சிறு பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக செல்வராகவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அடுத்ததாக ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கப் போகிறேன். ஆக்ஷன் என்றதும் பெரிய பட்ஜெட் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். சிறு பட்ஜெட்டிலேயே இந்த படத்தை எடுக்கப் போகிறேன் என்றார்.

    பாலிவுட் செல்கிறாரா அஜித்?

    By: ram On: 23:16
  • Share The Gag
  •  

    'பில்லா'வைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்' சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தீபாவளிக்கு ரிலீஸான இப்படம் 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

    அஜித் நடிக்கும் 'வீரம்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்போதே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    'ஆரம்பம்' படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து நடிக்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். 'துப்பாக்கி'. 'ரமணா' படங்களின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய்குமாருக்கு 'ஆரம்பம்' ரீமேக்கில் நடிக்க ஆசையாம்.

    இந்நிலையில், 'ஆரம்பம்' படம் பார்த்த ஷாருக்கான், இயக்குநர் விஷ்ணுவர்தனை மனம் திறந்து பாராட்டினாராம். ''படம் பிரமாதம். நீங்கள் விரும்பினால் இந்தியில் ரீமேக் செய்யுங்கள். நானே ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று ஷாரூக், விஷ்ணுவர்தனிடம் கூறி இருக்கிறார்.

    அதோடு, தமிழில் அஜித் நடித்த வேடத்தில் ஷாருக்கானும், ராணா நடித்த வேடத்தில் அஜித்தும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

    ஏற்கனவே, இந்தியில் ஷாரூக் நடித்த 'சாம்ராட் அசோகா' படத்தில் அஜித்தும் நடித்திருந்தார். இப்போது ஷாரூக்கும், அஜித்தும் இணைந்து நடித்தால் அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

    கோச்சடையான் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்!

    By: ram On: 23:01
  • Share The Gag
  •  
    ரஜினியின் 'கோச்சடையான்' ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக அமையும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதற்கு முன்னால் 'கோச்சடையான்' பற்றிய எக்ச்க்ளூசிவ் தகவல்கள் .

    * 'கோச்சடையான்' தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரம்மிக்க படைத்தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து.

    * படத்தின் முதல் பகுதியில் 'கோச்சடையான்' ஆதிக்கம் இருக்கும். ஆர்வ மிகுதியில் மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள, அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்குள் சென்று 'கோச்சடையான்' மீட்கும் காட்சியில் அனல் பறக்கும். எதிரிகளால் தந்தை 'கோச்சடையான்' கொல்லப்பட தளபதி பொறுப்புக்கு வரும் ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படத்தின் இரண்டாம் பகுதி.

    * 'கோச்சடையான்' ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே,  ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி. கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி. வில்லன் ஜாக்கி ஷெராப். ராஜகுரு நாசர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

    * ஷோபனாவுக்கும், ராணாவுக்கும் நடக்கும் போட்டி நடனம் அரங்கத்தை அதிர வைக்கும்.

    * படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    * ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. அதில் ஒன்று "எதிரிகள் இல்லை..." என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்தப் பாடல். வைரமுத்துவின் பாடலை தமிழ், தெலுங்கில் பாடியிருப்பவர் ரஜினி. இந்தி பதிப்பில் பாடியிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

    * தமிழ் தெலுங்கு இரண்டிற்குமே ரஜினி டப்பிங் பேசியிருக்கிறார்.

    * படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இன்டர்வெல் கிடையாது.

    * படத்தை 3டியிலும் வெளியிட இருக்கிறார்கள். இதற்கான பணிகள் சீனாவில் நடந்து வருவதால் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட படம் பொங்கலுக்கு வருகிறது.

    காதலுக்கு அழகு!

    By: ram On: 22:45
  • Share The Gag
  • பெண்களில் இரண்டு ரகம் உண்டு

    பெண்களை அலங்காரப் பிரியர்கள் என்று சொல்வதுண்டு. அலங்காரம் செய்து கொள்வதில் பெண்கள் அதிக நேரம் ஒதுக்குவார்கள் என்பதும் உண்மைதான்.

    தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களிடமும் இருக்கவே செய்கிறது.

    இதில் இரண்டு வகையான பெண்கள் இருக்கிறார்கள். தான் போட்டிருக்கும் அலங்காரம் வெளியே தெரியவேக் கூடாது என்று அழகு செய்து கொள்பவர்கள் ஒரு ரகம்.

    பளிச்சென அழகு தர வேண்டுமென்பதற்காக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம்.

    இதில் பளிச் ரகத்தினர் மிக எளிதாக ஆண்களுடன் பழகுபவர்களாக இருப்பார்கள்.

    மிகவும் மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஆண்களிடம் பழகுவதற்கு தயங்குபவர்களாக இருப்பார்கள்.

    இதில் முதல் ரகப் பெண்களிடம் ஆண்கள் உரிமையுடனும், சகஜமாகவும் பேசுவார்கள். பழகுவார்கள். உண்மைதான்.

    ஆனால் தனக்குப் பிடித்த பெண் என்று வரும்போது, கண்டிப்பாக மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவளைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்.

    அதிகமாக அழகுப்படுத்திக் கொள்ளும் பெண், சுதந்திர விரும்பியாகவும், மிகத் தைரியமானவளாகவும், போராடத் தயங்காதவளாகவும் இருப்பார்கள். இவை யாவும் பெண்ணுக்குத் தேவையான குணங்கள் என்ற போதிலும், இதனை பெரும்பாலும் ஆண்கள் விரும்புவதில்லை.

    அடுத்ததாக, அனைவரையும் கவரக் கூடிய அழகுடன் மிளிரும் இந்த பெண்ணுக்கு தான் தகுதியானவன் இல்லை என நினைத்தும் ஆண்கள் ஒதுங்கிவிடுவார்கள்.

    இயற்கையான அழகுடன் மிளிரும் பெண்ணைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறது. ஆனால் இயற்கை அழகைத்தானே ஆண்கள் விரும்புகிறார்கள் என்று தனது ஆடை, சிகை அலங்காரத்தில் அலட்சியமாக இருப்பதையும் ஆண்கள் விரும்ப மாட்டார்கள்.

    ஒரு ஆணை காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், முதலில் ஆடை, அலங்கார விஷயங்களில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    இந்த கட்டுரையைப் படித்ததும், ஓர் ஆணிற்காக நான் ஏன் மாற வேண்டும், ஆணின் இஷ்டப்படி எல்லாம் நான் என்னை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எல்லாம் காதலுக்கு பொருந்தாது.

    உங்கள் விருப்பங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, காதலரின் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் காதலுக்கு அழகு. பின் உங்கள் விருப்பத்திற்கு அவர் முழு சுதந்திரம் தருவார். அவருக்கு நீங்கள் முழு சுதந்திரம் தருவீர்கள். அப்போது காதல் என்பது நினைக்க நினைக்க இனிக்கும் அற்புத விஷயமாக இருக்கும்.

    உழைக்காமல் இருப் பவர்களால் உயர முடியாது - குட்டிக்கதைகள்!

    By: ram On: 22:32
  • Share The Gag
  • மகிழ்ச்சி என்பது விளைவு என நினைப்பதால்தான், நாம் திரும்பிப் பார்க்கும்போது அதிக நாட்கள் இன்பமாக இருந் ததுபோலத் தோன்றுவதில்லை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நிகழ்விலும் அடங்கியிருக்கிறது!

    அதிக மதிப்பெண்ணுக்காக இல்லாமல், படிப்பதே மகிழ்ச்சி தருவதாக ஆக வேண்டும்; சம்பளம் மட்டுமின்றி, பணிபுரிவதே ஆனந்தம் தருவதாக அமைய வேண்டும்! இரவு என்பது இல்லையெனில், விடியலில் பறவைகளின் இசை காதுகளில் விழ வாய்ப்பில்லை. நுணுக்கமான பணியைச் செய்து முடித்து, காலாற நடந்து, குளிர்ந்த காற்றைச் சுவாசித்து மகிழ... அதில் கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    இப்படிச் சின்னச் சின்ன நிகழ்வுகளிலும் அடங்கியிருக்கும் மகிழ்ச்சியைத் தவறவிடுபவர்கள், பெரிய இன்பம் வந்தாலும் அதை நுகரமுடியாமல் நுரைதள்ளிவிடுவார்கள். பசிக்காமல் சாப்பிட்டு, உழைக்காமல் ஓய்வெ டுத்து, கீழே விழ பயந்து, முயற்சி எடுக்க மறந்து, பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து, த்ரில் ஏற்படுத்தும் தருணங்களை இழந்தவர் கள், கடைசி கட்டத்தில் வருத்தப்படுவார்கள். 

    அடுத்தவர்களது அளவுகோல்களில் நமது மகிழ்ச்சியை அளப்பது அவசியமில்லை; அடுத்தவர்களுக்கு நிரூபிப்பதற்காக நாம் இன்புற்றிருக்க வேண்டிய தேவையும் இல்லை. மகிழ்ச்சியை மின்னலாக எண்ணி, அதை அசைபோட்டுத் திருப்தியடைவார்கள் சிலர். கடந்த காலம் மட்டுமே நிம்மதியானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்ததாக எண்ணிப் பழங்கதைகள் பேசித் திரிவார்கள் சிலர். மகிழ்ச்சி என்பது இறந்தகால ஏக்கமும் அல்ல; எதிர்காலக் கனவும் அல்ல. அது, நிகழ்கால நிதர்சனம்!

    மகிழ்ச்சி ஓர் உணர்வு! அதை நேர்வழியில் அடையும்போதுதான் நீடித்து நிற்கும். உழைக்காமல் கிடைக்கும் பணமும், தகுதியின்றிக் கிடைக்கும் புகழும் சிறு காற்றின் சலனத்துக்கே தாக்குப்பிடிக்காமல் தடுமாறி விழுந்துவிடும். 'எனில், குறுக்கு வழிகளே வாழ்வில் தேவையில்லையா?' என்று சிலர் கேட்கலாம். ஒரே யரு விதிவிலக்கு உண்டு. நம்மை வீழ்த்த எவரேனும் குறுக்கு வழியைக் கையாண்டால், அந்த வியூகத்தைத் தவிர்க்க, வேறு வழி இல்லாத பட்சத்தில் சில குறுக்குவழிகளையும் தந்திரங்களையும் கையாளலாம். அதனால்தான் மகா பாரதத்தில், சில சந்தர்ப்பங்களில் ஸ்ரீகிருஷ்ணரும் தந்திரங்களைக் கையாண்டார்.

    ஆனால், அவை அனைத்தும் போர் நியதிகளுக்கு உட்பட்டவையே! ரதத்தைப் பெருவிரலால் அழுத்தியதும், மெழுகாலான பீமனின் சிலையைச் செய்து திருதராஷ்டிரன் முன் நிறுத்தி யதும் அதனால்தான்!

    கிழக்கு நாடுகளில், குறுக்குவழியைக் குயுக்தியாக முறியடிப்பது குறித்து ஒரு கதை உண்டு. 

    படைபலம் மிகுந்த ஜாதுகார் எனும் மன்னனை வீழ்த்த விரும் பினான் ரத்னபுரியில் இருந்த சமத்கார் என்ற தந்திரசாலி. ஆனால், ரத்னபுரியின் படைத் தளபதியோ, ஒரு சாதாரண ஆசாமியான சமத்காரின் உதவி பெற்று ஜாதுகாரை வீழ்த்துவதா என நினைத்து வாளாவிருந்தான். சமத்கார் பலமுறை முயற்சித்தும், தன்னைச் சந்தித்துப் பேசக்கூட அனுமதி வழங்கவில்லை தளபதி.  இதனால் சமத்கார் எரிச்சலுற்றான்.

    அவன், தளபதியின் வலக்கரமாக திகழும் விமல்கீர்த்தி எனும் வீரனைச் சந்தித்து, ''உன் தளபதி புத்திசாலியாக இருக்கலாம். ஆனால், அவரால் ஜாது காரை ஒருபோதும் வீழ்த்தமுடியாது' என்றான். நிச்சயம் இந்தத் தகவல் தளபதியின் காதுக்குப் போகும் என்று சமத்காருக்குத் தெரியும். அதன்படியே நடந்தது. விமல்கீர்த்தி சொன்ன தகவலைக் கேட்டுக் கொதித்துப் போன தளபதி, சமத்காரை அவமானப்படுத்த வேண்டுமென முடிவு செய்தான்.

    மறுநாள், படைத்தலைவர்களைக் கொண்டு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தான். சமத்காரையும் வரவழைத் தான். அவனிடம், 'கடற்போரில் சக்தி வாய்ந்த படை ஆயுதம் எது?' என்று தளபதி கேட்க, ''அம்புகள்'' என்றான் சமத்கார்.

    ''உண்மைதான்! எங்களிடம் அம்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஜாதுகாருடன் மோத பத்தாயிரம் அம்புகளாவது தேவை. பத்து நாட்களுக்குள் அவற்றைச் செய்து தர உன்னால் முடியுமா?'' என்று கேட்டான் தளபதி.

    உடனே, ''பத்து நாட்கள் அதிகம்! மூன்றே நாட்களில் முடித்துத் தருகிறேன்'' என்றான் சமத்கார்.

    இதைக் கேட்ட தளபதி, ''நகைச்சுவையான உறுதிமொழிகளுக்குப் படைக்களத்தில் இடம் இல்லை'' என்று கோபமும் கேலியுமாகச் சொல்ல, ''உங்களிடம் விதூஷகம் செய்ய முடியுமா? மூன்றே நாட்களில் அம்புகளைத் தயார் செய்து தரவில்லையெனில், என்ன தண்டனை தந்தாலும் ஏற்கிறேன்'' என்றான் சமத்கார்.

    அதையடுத்து, 'சமத்காருக்கு அம்பு தயாரிக்கும் மூலப் பொருட்களைப் போதிய அளவுக்குத் தரவேண்டாம்; அம்பு செய்பவர்கள் தொழிலில் வேகம் காட்டவேண்டாம்' என்று ரகசிய ஆணையிட்டான் தளபதி.

    சமத்கார் கலங்கவில்லை. விமல்கீர்த் தியை அழைத்து, ''20 படகுகள் வேண்டும். அவற்றில் வைக்கோல் அடைத்து, கறுப்புத் துணியால் தைக்கப்பட்ட 50 மனித உரு வங்களைச் செய்து வைக்கவேண்டும். தவிர, ஒவ்வொரு படகுக்கும் 30 பேர் தேவை. இந்தத் திட்டம் தளபதிக்குத் தெரி யக்கூடாது'' என்று கேட்டுக்கொண்டான்.

    மூன்றாம் நாள், 20 படகுகளும் வலு வான கயிற்றால் கட்டப்பட்டு, ஜாதுகாரின் படை முகாமுக்குப் பக்கத்திலிருந்த நதிக் கரையின் உட்பகுதியில் வரிசையாக நிறுத் தப்பட்டன. கடுமையான மூடுபனியில், அவற்றில் என்ன இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்தப் படகுகள் மெள்ள நகர்ந்து, படைமுகாமுக்குத் தெரிகிற தூரத்தில் வந்ததும், ஒவ்வொரு படகிலுமிருந்த 30 பேரையும், போர்முரசு கொட்ட உத்தரவிட்டான் சமத்கார். உடனே அவர்கள், 'எதிரிகள் தங்கள் கப்பல்களில் வந்து தாக்கினால் என்ன செய் வது?'' என்று பதைபதைக்க, 'இந்த மூடு பனியில் அப்படியரு முட்டாள்தனத்தை ஜாதுகார் செய்ய முற்படமாட்டான்' என்றான் சமத்கார் உறுதியாக.

    போர்முழக்கத்தைக் கேட்டதும், தங்கள் முகாம் மீது பயங்கர தாக்குதலை எதிர் பார்த்த ஜாதுகார், கரையில் இருந்தபடியே படகுகளை நோக்கி அம்புகள் எய்து தாக்குதல் நடத்துமாறு தன் சிப்பாய்களுக்குக் கட்டளை இட்டான். அதேநேரம், தனது படகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக முகாமை நோக்கி முன்னேறும்படி பணித் தான் சமத்கார். போர் முழக்கத்துடன் மெள்ள அவனது படகுகள் முன்னேற, எதிர்த்திசையில் இருந்து அம்புமாரிப் பொழிந்துகொண்டு இருந்தது.

    நள்ளிரவில் பனி விலகத் தொடங்கியதும், கரைக்குத் திரும்பும்படி படகுகளுக்கு ஆணையிட்டான் சமத்கார். அவனது திட்டம் நிறைவேறியது. ஒவ்வொரு படகிலும் இருந்த வைக்கோல் மனிதர்களின் உடம்பில் ஆயிரக் கணக்கான அம்புகள்! மறுநாள், 20,000-க்கும் மேற்பட்ட அம்புகளைத் தளபதியிடம் கொடுத்தான் சமத்கார்.

    பின்னர் விமல்கீர்த்தி சமத்காரிடம், ''நேற்று கடுமை யான மூடுபனி இருக்கும் என்பதை எப்படி கணித்தாய்?'' என வியப்புடன் கேட்டான். ''பூகோளத்தையும் வானியலையும் அறியாதவன் தளபதியாக இருக்க முடியாது. நேற்று மூடுபனி கடுமையாக இருக்கும் என்பதை மூன்று நாட்களுக்கு முன்பே கணித்துவிட்டேன். உங்கள் தளபதி போதுமான ஒத்துழைப்பு தர மாட்டார் என்று எனக்குத் தெரியும். எனது முயற்சியில் நான் தோற்று அவமானப்படவேண்டும் என்பதே அவரது நோக்கம். எனவே, அவரது தந்திரத்தை வெல்ல, நானும் தந்திர முயற்சியைக் கையாண்டேன். போட்டி என்று வந்துவிட்டால், அடுத்தவர்களது தந்திரத்தைவிட, நமது தந்திரத்தைத் தூக்கிப்பிடிப்பது அவசியம்!'' என்றான் சமத்கார்.

    கடைசியில், தளபதி தனது முக்கிய ஆலோசகராக சமத்காரை நியமித்து, ஜாதுகாரை வீழ்த்தினான்.

    வேறு வழியில்லாத நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதமே தந்திரம். ஆனால், அதையே நம்பிக்கொண்டு, 'வினாத்தாள் வெளியாகிவிடும்' என்று எதிர்பார்க்கும் மாணவனைப்போல உழைக்காமல் இருப் பவர்களால் உயர முடியாது. சின்ன வயதிலிருந்தே உழைப் பின் இனிமையை நாம் சொல்லிக் கொடுக்க மறந்துவிட் டோம். நமது பாடத் திட்டத்தில் வியர்வைக்கு வெகு மதி இல்லாமல் போய்விட்டது. 'உடலுழைப்பு முக்கி யம் என்பதால், அது வகுப்பறையில் சொல்லித் தரப் படவேண்டும்' என மகாத்மா காந்தி வலியுறுத்திய உயர்நெறியை நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டோம்.

    மனனம் செய்வது மட்டுமே கல்வி என மாணவர்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். மரம் நட்டு வளர்க்கவோ, நீரூற்றி மகிழவோ, பாதை அமைத்துப் பழகவோ மாண வர்களுக்குச் சற்றும் இடம் தராத கல்வி முறையே இன்று அனுசரிக்கப்படுகிறது. கான்கிரீட் காடுகளாக வளர்ந்த பள்ளிக்கூடங்களின் இடுப்பில், இவற்றுக்கெல்லாம் இடமும் இல்லை. பல பள்ளிகளில் ஓடி விளையாடவே இடம் இல்லையே!

    தனித்து இயங்கும் வகையில் சுயச் சார்புடன் வளர் கிற குழந்தைகளே எதிர்காலத்தில் தாக்குப் பிடிக்க முடியும். எவர் தயவுமின்றி, தங்கள் வாழ்வை தாங் களே நிர்வகிக்கும் திறன் பெற்றவர்களால் மட்டுமே வாழ்வில் எப்போதும் இன்புற்றிருக்க முடியும். 

    கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்! மாணவர் சாதனை!

    By: ram On: 22:23
  • Share The Gag

  • நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய தேவையை மனதில் வைத்து எழுதியதுபோல, இளமை ததும்பும் திருக்குறளை, சாதனை முயற்சியாகப் பலரும், பலவிதங்களில் சோதித்துப் பார்த்து விட்டனர். 3 வயது சிறுவன் அனைத்து திருக்குறளையும் மனப்பாடமாகக் கூறுகிறான். அரிசியில் ஒரு திருக்குறளை எழுதுகிறார் என அடிக்கடி திருக்குறளை வைத்து சாதனை செய்யும் திறமைசாலிகள் ஆங்காங்கே உருவெடுத்த வண்ணமே உள்ளனர்.

    இதே திருக்குறளை, கோவை கற்பகம் மேலாண்மைக் கல்லூரி மாணவர் எம்.மணி, சற்று வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளார். மனதின் எண்ணங்களை கண்ணாடியாய் காட்டுவது திருக்குறள் என்றால், இவர் எழுதிய திருக்குறள்களோ, கண்ணாடி இருந்தால் மட்டுமே படிக்க முடியும்.

    இதென்ன புது முயற்சி என்று கேட்டால், 1330 குறள்களையும் தலைகீழாய், அதாவது கண்ணாடியின் பிம்பங்களாக வடித்துள்ளார் இந்த இளைஞர். இது சாதாரணமாகச் செய்துவிட முடியாத காரியம். ஒரு சிறிய உதாரணம், நமது பெயரை அல்லது ஒரு எழுத்தைத் தலைகீழாய் எழுத முடியுமா என்ற சோதனை செய்தால், பல காகிதங்கள் கிழிக்க வேண்டியிருக்கும்.

    ஒரு எழுத்து தலைகீழாய் அதாவது பிம்பமாக எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தாலே குழப்பம் வந்துவிடும். தட்டுத்தடுமாறி ஒரு எழுத்தை எழுதி முடித்தாலும் அது அலங்கோலமாக, குறிப்பிட்ட அளவில் அமைந்துவிடாது. ஆனால் இவரது இன்னொரு முயற்சி என்னவென்றால் ஒரு திருக்குறளுக்கான இடத்தை 5 சென்டிமீட்டர் (நீளம்) X அரை சென்டிமீட்டருக்குள் (அகலம்) அடக்கி விட்டார். ஒரு முழு சார்ட் காகிதத்தில் கால்பாகம் மீதமிருக்கையிலேயே, அத்தனை திருக்குறளையும் எழுதி முடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். 1330 குறள்களுக்கும் இவர் எடுத்துக்கொண்டது 10 மணி நேரம் மட்டுமே. இளமைத் திருக்குறளுக்கு தலைகீழாய் புது வடிவம் கொடுத்துள்ள மணியிடம் இதுகுறித்து பேசினோம்.

    ‘எனது சொந்த ஊர் சேலம் அடுத்த ஆத்தூர். தந்தை முத்துச்சாமி, தாயார் மலர்க்கொடி, கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுவயது முதலே வித்தியாசன முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்ளும் பழக்கம் வந்தது. திருக்குறள் வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் 10-ம் வகுப்பு படிக்கும்போது, அத்தனை குறள்களையும் நேராக எழுதினேன். பின்பு, தலைகீழாய் எழுத பயிற்சி எடுத்தேன். இப்போது, இப்படியும் வேகமாக எழுதக் கற்றுக்கொண்டேன்’ என்கிறார்.

    தனது தமிழ் ஆர்வத்தால் ஏற்பட்ட முயற்சி, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, இன்று இவருக்குக் கைகூடியிருக்கிறது. இதை சாதனைக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யவில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப் போவதாகக் கூறுகிறார்.

    தற்போது ஆத்திச்சூடியை இந்த முறையில் எழுதி வருகிறார். கிரிக்கெட் நாயகன் சச்சினின் வரலாறும், இவரது கையால் தலைகீழாக்கப்பட இருக்கிறதாம்.

    இவரது முயற்சியை ஊக்குவித்துவரும் துறை இயக்குநர் சந்திரசேகர் கூறியதாவது: சமீபத்தில் தேசிய கீதத்தை ஒருவர் தலைகீழாய் எழுதியது குறித்து நாளிதழில் செய்தி வந்தபோதுதான், மணியின் திறமை குறித்து நாங்கள் அறிந்தோம். கல்லூரி சார்பில், மேலும் ஊக்குவித்து, அடுத்த கட்டத்துக்கும் இதனைக் கொண்டு செல்வோம் என்றார்.

    தமிழ் எழுத்தை நேராக எழுதவே பலரும் படாதபாடுபடும் இந்தக் காலத்தில், தமிழை நேசித்து, அதனைப் புதுவிதமாய் சுவாசிக்கும் இவரது முயற்சி வரவேற்கப்பட வேண்டியது.

    மயிர் முளைச்சான்' தெரியுமா?

    By: ram On: 22:07
  • Share The Gag

  • இதைப் படித்தவுடனே சிலருக்கு ''என்ன தீயச்சொல் எல்லாம் பேசுகிறீர்கள்?'' எனக் கேட்க தோன்றும். இல்லை, இது தீயச்சொல் அல்ல. 'மயிர் முளைச்சான்' என்பது ஒருவகை பழமாகும்.

     இப்பழம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவைத் தாயிடமாகக் கொண்டுள்ள பழமாகும்.

    தென்கிழக்கு ஆசியாவில், இப்பழம் மிகவும் பெயர்ப்போனது. காய் பருவத்தில் பச்சை நிறத் தோலைக் கொண்டிருக்கும். பழுத்தப் பழத்தின் வெளிப்புறம் சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களிலான தோலைக் கொண்டு அமைந்திருக்கும். இப்பழத்தின் தோல் முழுக்க முழுக்க மயிரால் சூழப்பட்டது போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். உட்புறத்தில் வெண்ணிற சுளை இருக்கும்.

    இனிப்பான சுவையைக் கொண்ட இப்பழத்தை 'Rambutan' என்பார்கள். அச்சொல் மலாய் மொழியில் இருந்து தருவிக்கப்பட்ட ஒரு சொல்லாகும். மலாய் மொழியில் 'Rambutan' என்றால் 'மயிருடையவன்' எனப் பொருள்படும்.
     
     மலேசியாவில் வாழும் தோட்டப்புற தமிழர்கள் இன்னமும் இப்பழத்தை 'மயிர் முளைச்சான்' என்றழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னமும் சிலர், இச்சொல்லைத் தீயச்சொல் என்று கூறி புறந்தள்ளுவது உள்ளத்தை நோகடிக்க செய்கிறது.

    உங்களுக்கு எப்படி? 'மயிர் முளைச்சான்' என்றழைப்பதற்கு ஏதும் வருத்தங்கள் உள்ளதா? கருத்துகளை இடவும்.

    இப்பழத்தை குந்தளப் பழம் என்றும் அழைப்பார்கள். அதாவது 'குந்தளம்' என்றால் மகளிர் தலை மயிர் எனப் பொருள்படும்.

    பிறந்த குழந்தை ஏன் அழுகிறது உண்மையான காரணம் இதுதான்!

    By: ram On: 21:52
  • Share The Gag
  •  

    இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

    இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

    சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன?

    இதோ தெரிந்துகொள்ளுங்கள்.

    ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

     இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான்

     குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

    அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

    வள்ளுவர் வாக்கு!

    By: ram On: 20:21
  • Share The Gag
  • யானென தன்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
    உயர்ந்த உலகம் புகும்


    உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது' எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன் வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.


    விளக்கம்: வாழ்வியல் சுகங்கள் மீதும் இந்த உடல் மற்றும் உயிர் மீதும் அதீத ஆசைகளைக் கொண்டிருந்தால் அவற்றை விட்டு மீள முடியாது. இறப்பிற்கு பின்னும் ஆத்மா இந்த பூலோக ஆசைகள் மீதே சஞ்சரித்துக் கிடக்கும். பிறகு நிம்மதியான பிரபஞ்சத்தோடு கலக்க முடியாமல் மீண்டும் விட்டுப் போன இடத்தைத் தேடி ஆத்மா வந்தடையும். இது ஆத்மா சாந்தியடையும் நிலையினைக் கெடுத்துவிடும்.


    அவ்வாறு உடல், பொருள்கள் மீது எனது என்று பற்று வைக்காமல் நான் என்பது ஆத்மா தான். உடலும் பொருளும் நாம் வாழ உதவும் ஒரு கருவியே என்று மனதார நினைத்துக் கொண்டால், இறப்பிற்குப் பின்னும் ஆத்மா வாழ்ந்து வந்த பொருள்கள் மீது ஆர்வம் கொள்ளாது கற்ப்பனைக் கெட்டாத இந்த பரந்த பிரபஞ்சத்தில் சஞ்சாரித்து அதனுடன் கலந்துவிடும்.


    இந்த பக்குவம் ஒரே நாளில் வந்து விடாது. தினம் தினம் நாம் ஆத்மா என்பதை யார் ஒரு முறையேனும் தியானிக்கிறார்களோ அவர்களுக்கு மெல்ல மெல்ல கைகூடும். இன்பமும் துன்பமும் ஒன்றாகும். ஆத்மா சமநிலை அடையும். காலம் கடந்த பின் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நிம்மதியான மேலுலகம் அடைவார்கள்.


    இதையே வள்ளுவர் இரண்டடிகளில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.



    ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற்று வந்த சீடன் ஒருவனுக்கு தேகாபிமானம் மட்டும் குறையவே இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆசையும் கூடவே பயணித்தது.


    உயிர் மீது கொள்ளும் ஆசை உடலைக் காக்கச் சொல்லும். உடல் மீது கொள்ளும் ஆசை அதனைக்காக்கும் பொருட்டு பொருளீட்ட வைக்கும். பொருளீட்டத் துவங்கினால் அதற்கு எல்லையே இல்லாமல் போகும். விரும்பியதை அடைய முற்படுவதிலேயே பவகாரியங்களும் தோன்றிவிடுகிறது. இத்தகைய ஆசைகள் முடிவற்றவை. எனவே பற்றுதல் அற்று இரு என்று சீடனுக்கு எவ்வளவோ போதித்தும் அவன் கேட்கவில்லை. சரியான தருணம் வரும் போது அவனுக்கு உணர்த்தலாம் என்று குரு காத்திருந்தார்.


    ஒரு முறை குருவும் சீடர்களும் கடுமையான குளிர் பிரதேசத்திற்குச் சென்றார்கள். அங்கே வெட்ட வெளியில் சீடர்களை அமரவைத்தார் குரு. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகமாகிக் கொண்டே இருந்தது.


    எல்லோரும் அமைதியாக இருந்த நிலையில், தேகத்தின் மீது பற்றுதல் கொண்ட சீடன் கேட்டான் "குருவே, குளிர் இன்னும் அதிகமானால் என்ன செய்ய?"


    குரு கூறினார் "கைகளை தேய்த்து முகத்தில் ஒற்றிக்கொள்"


    "குருவே! குளிர் அதை விட அதிகம் என்றால்?"


    "ஒரு கம்பளி எடுத்து போர்த்திக் கொள்?"


    "கம்பளி போர்த்தியும் தாங்க முடியாத குளிர் என்றால்"


    "நெருப்பை மூட்டி கதகதப்பாய் இரு"


    "குருவே! நெருப்புக்கும் அடங்காத குளிர் என்றால்?"


    "உறைந்து போ!" என்றார் குரு.


    உணர்ந்து கொண்டான் சீடன். உடலைப் போர்த்தியிருந்த மொத்த ஆடைகளைகளையும் களைந்து பனியில் அமரலானான்.7D78Q8UZUG6X

    டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை ஹைகோர்ட்டில் வாய்ப்பு!

    By: ram On: 18:49
  • Share The Gag
  • nov 25 - vazhikatti madras-high-court

    தமிழகத்தின் தலைமையிடமான சென்னையில் செய்ல்பட்டு வரும் சென்னை ஹைகோர்ட்டில்ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

    பணிவாரியான காலியிடங்கள் விவரம்:

    மொத்த காலியிடங்கள் 268

    01. Personal Assistant to the Hon’ble Judge – 57

    02. Personal Assistant – 07

    03. Assistant – 37

    04. Computer Operator – 28

    05. Typist – 139

    வயதுவரம்பு: 22.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

    தேர்வு செய்யப்படும் முறை:


    01. Personal Asst பணிக்கு Written Examination, Skill test and Oral Test.

    02. Asst & Computer operator பணிக்கு Written Examination and Oral test.

    03. Typist பணிக்கு Written Examination & Skill test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    சம்பளம்:

    பணி 1 க்கு ரூ. 15,600 – 39,100 + Grade Pay ரூ. 5400

    பணி 2 க்கு ரூ. 9,300 – 34,800 + Grade Pay ரூ. 4,600

    பணி 3 க்கு ரூ. 5,200 – 20,200 + Grade Pay ரூ. 2600

    பணி 4 க்கு ரூ. 5,200 – 20,200 + Grade Pay ரூ. 2800

    பணி 5 க்கு ரூ. 5200 – 20,200 + Grade Pay ரூ. 2400

    தேர்வுக் கட்டணம்: ரூ.150

    விண்ணப்பிக்கும் முறை
    : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013

    வங்கிகள் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.12.2013

    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2014

    மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

    நீரில் மூழ்கினால் பறந்து போய் காப்பாற்றும் ரோபோ! வீடியோ!

    By: ram On: 18:10
  • Share The Gag



  •  முன்னெல்லாம் நாளுக்கு நாள் என்பது இப்போது மணிக்கு மணி மனிதனின் செய்யும் வேலைகள் அனைத்திலும் ரோபோட்டின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது அந்த வகையில் : நீரில் மூழ்கி, உயிருக்கு போராடும் நபர்களை பறந்து சென்று காப்பாற்றுவதற்காக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஒரு ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். பார்ஸ் என அழைக்கப்படும் இந்த புரோட்டோ டைப் ரோபோ, தண்ணீரிலும் செயல்படும் திறன் கொண்டது.

     ஈரான் நாட்டு ஆய்வு நிறுவனமான ஆர்.டி.எஸ்., என்ற ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீரில் மூழ்கி அதிகமானோர் இறக்கும் காஸ்பியன் கடல் பகுதியில் இந்த ரோபோ வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் 75 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கிக் கொண்டு 22 வினாடிகளில் இந்த ரோபோ கரையை அடைந்தது. அதே நேரத்தில், லைப்கார்டு மூலம் அங்கிருந்து கரைக்கு பாதிக்கப்பட்ட நபர் வர 91 வினாடிகள் வரை நீந்த வேண்டியிருந்தது. இந்த ரோபோவை மேலும் மேம்படுத்தி நீரில் மூழ்குபவர்களை மீட்பதற்கு மட்டுமல்லாமல் உளவு பார்க்கவும் இதை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    nov 25 - tec robot.mini

    இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..!

    By: ram On: 18:03
  • Share The Gag
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் மனிதர் 1945க்கு பிறகு வெறும் மர்ம்மாகி போனார் – இதற்கிடையில் அவரை பற்றி இந்திய அரசு வைத்திருக்கும் 20 கோப்புகளை மறைக்கும் ரகசியம் – உண்மையில் நடந்தது என்ன?

    nov 25 - nethaji

    இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இருபது கோப்புகளை இந்தியா வைத்திருக்கிறது. இதனை பொதுமக்களுக்கு ஏன் கூறவில்லை? இதன் கோப்புகளை பற்றி அரசு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் மவுனம் சாதிப்பது ஏன்? இதனை பற்றி ஜனாதிபதி மாளிகையின் வட்டாரத்தில் விசாரித்தால் இந்த கோப்புகள் வெளியானால் இந்தியாவின் நட்புறவு பல நாடுகளை பாதிக்கும் என சில குற்றச்சாட்டுகாளை முன் வைக்கின்றனர் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பற்றி.

    அதில் முதல் குற்றச்சாட்டு இந்தியாவுக்கு எதிராய் சதி செய்தார் நேதாஜி – ஜப்பான் இரண்டாம் உலகப்போரின் போது நார்த் ஈஸ்ட் ஃப்ரிரன்டியரில் பல இடங்களை போரிட்டு பிரிட்டிஷ் ஆர்மியிடம் இருந்து கைப்பற்றிய போது அதில் பலர் சுபாஷுடன் சேர்ந்து “இந்தியன் நேஷனல் ஆர்மி” என்ற தனி இயக்கத்தை சுபாஷ் ஜப்பானுடன் சேர்ந்து செய்தார் என்பது ஒன்று.

    இரண்டு -1941 ஆம் ஆண்டு சுபாஷை கைது செய்ய நினைத்த பிரிட்டிஷ் ஆர்மி படை அவரை வீட்டு காவலில் கொல்கத்தாவில் வைத்திருந்த போது அவர் அப்போது அங்கிருந்து வெளியாகி யாருக்கும் தெரியாமல் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு சென்று ஹிட்லரிடம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க உதவி கோரினார். இதன் பிறகு அங்கிருந்து டோக்யோவுக்கு சென்று ஜப்பான் அரசின ஆதரவோடு இந்தியன் நேஷனல் ஆர்மியை உருவாக்கியதாகவும், அங்கு பல பயிற்ச்சிக்கு பிறகு அங்கிருந்து போர்ப்படைகளை திரட்டி தரை மார்க்கமாக மியான்மார்(பர்மா) வழியாக வரும்போது நார்த் ஈஸ்ட்டில் ஒரு முக்கிய இடத்தை கைப்பற்றிய இடம் தான் தற்ப்போதய மணிப்பூர்.

    பின்பு அங்கிருந்தபடியே தன் இந்தியன் நேஷனல் ஆர்மியை வளப்படுத்திய சமயம் 1945 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ரகசியமாக கவுன்ட்டர் அட்டாக்கை கொடுத்த போது தான் நேதாஜி டைஹோக்கு விமான நிலையம் வழியாக தப்பித்தார் என்பதே கடைசி வரை உறுதியான தகவல். அதன் பிறகு எல்லாமே மர்ம்மா போச்சி.

    இந்நிலையில் சிலர் அவர் விமான விபத்தில் இறந்ததாகவும், சிலர் அவரி புத்த பிட்சுவாக இந்தியாவுக்கு ஊடுருவினார் என்றும் சிலர் சைபீரியாவில் அரசியல் கைதியாக இருந்தார் என்று பல தகவல்கள் வந்தாலும் உறுதியான தகவல் ஏதும் இன்று வரை இல்லை.

    இந்தியாவில் சுதந்திரம் அடைந்த பிறகு பல விசாரனை கமிஷன்கள் வைத்து அவரை பற்றி உளவு செய்தும் பார்த்தும் இன்று வரை சரியான தகவல்கள் ஏதும் இல்லை. இந்தியாவுக்கு எதிராய் ஹிட்லரிடம் கை கோர்த்த பல பயிற்ச்சி படங்கள் அந்த கோப்புகளில் உள்ளது என்றும் இந்தியாவிலும் ஹிட்லர் படை இருந்ததாகவும் பல விஷயங்கள் இன்று உலக நாடுகளுக்கு சலாம் போடும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை பாதிக்கபடும் என அந்த பைல்களை கிளாஸ்ஃபைடு ஆக்கி அதை ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் ஆட்களும் பாதுகாப்பாய் ரகசியம் காத்து வருகின்றனராம்.

    இணையதளத்தில் ரயில் டிக்கெட் – இனி ரொம்ப ஈசியாக்கும்!

    By: ram On: 17:36
  • Share The Gag
  • ஐ ஆர் சி டி சி – இந்தியன் ரயில்வேயில் டிக்கட் புக் பண்ணி சக்ஸசாய் வெளி வருவதென்பது எட்டாவது அதிசயம் என எல்லோரும் சொல்ல கேட்போம். இத்தனைக்கும் பல கோடி மெம்பர் உள்ள ஃபேஸ்புக் வேலை செய்யுது ஆனா சில கோடி பேர் மட்டுமே வந்து போற இந்தியன் ரயில்வே சைட் மட்டும் அடிக்கடி சங்கு சக்கரம் மாதிரி சுத்தி கடைசில பனால் ஆயி டைமும் வேஸ்ட் டிக்கட்டும் கிடைக்கலனு குறைபட்டதை அவங்க ஆராய்ந்த போது தான் தெரிந்தது அவர்களின் தவறு!

    nov 25 - ravi rail
    அதாவது டிக்கட் அலாகேட் பண்ணின பிறகு பேமென்ட்டுக்கு கடைசில தேர்ட் பார்ட்டி பேமென்ட் கேட் வே மூலம் ஒவ்வொரு வங்கிக்குள் சென்று பே மென்ட் பெற்று அந்த டோக்கனை ரயில்வேக்கு கொண்டு சேர்ப்பதில் தான் இந்த லேட் பிரச்சினை, அதிக அளவில் வரும் பேமென்ட் ரெக்வெஸ்ட் டோக்கன்ஸ் / சென்யூரிட்டி இஷ்யு மற்றும் எஸ் எ எல்லில் உள்ள குளறு படிகளால் தான் பல டிக்கட் கடைசியில் ஃபெயில் ஆகிறது என கண்டுபிடித்து “ஈ வாலட்” என்னும் ஒரு புதிய திட்டத்தை கண்டுபிடிக்க போறாங்கன்னு சொல்லிடகிடடிருந்தேன். அது என்ன?

    உங்களுக்கு பேன் கார்ட்டு இருந்தா ஈ வாலட்டில் ஒரு தொகையை வரவு வைத்து கொண்டு டிக்கட் வேணும் போது அந்த வாலட்டில் இருந்து பணத்தை செலுத்தலாம். இது இந்தியன் ரயில்வே போர்ட்டலுக்குள் இருப்பதால் உடனடியாக டிக்கட் அலாட் செய்து உங்களுக்கு வழக்கமாய் ஆகும் நேரத்தில் நான்கில் ஒரு பங்குதான் ஆகிறதாம் அதே மாதிரி கேன்சல் செய்தால் மறு நாள் உங்க அக்கவுன்ட்டில் பணம் வந்திரும். இதை 4000 பேர் டெஸ்ட் பண்ணியதில் ஒருவருக்கு கூட டிக்கட் ஃபெயில் ஆகலையாம். அப்புறம் என்ன! கலக்குங்க…….என்ன ஒன்னு நம்ம பணத்தை இங்க முடக்கனும், ஆனா அடிக்கடி ஊர் போறவங்களுக்கு இது டபுள் ஒகே.!

    ஸ்போர்ட்ஸை பார்த்தாலே போதும்-’பிட்னஸ்’ ஆகி விடலாம்! – ஆய்வு முடிவு!

    By: ram On: 17:17
  • Share The Gag
  • பொதுவாக ‘பிட்னஸ்’ என்பதை முழு நலம் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய முழு நலம் உடல் உறுதியினால் மட்டும் வருவதல்ல. வேலை செய்யும் திறமை, தசைகளின் வலிமை, தசைகளின் திறன், மூட்டுக்களின் இயக்கம், மன அமைதி இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுநலம் எனப் படுகிறது.இது போன்ற ‘பிட்னஸ்’ஆக வேண்டுமெனில் ஓட்டப்பந்தயம், நீசசல் போட்டி அல்லது பழுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டுமென்ற சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை பார்க்கும்போதே பார்ப்பவரின் இதயத்துடிப்பு விகிதம், சுவாசம், ரத்த ஓட்டம் மற்றும் வெளியேறும் வியர்வையின் அளவு உள்ளிட்டவைகள் அதிகரித்து அவர்களை ‘பிட்’ஆக்குகிறது என்று ஒரு ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது.

    nov 25 - health sports

    அண்மையில் இன்டர்நேஷனல் ஜர்னல் பிரான்டியர்ஸ் இன் அட்டானமிக் நியூரோசயின்சில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு தொடர்பான தகவல் அறிக்கையில்,”கடின உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை, ஒருவர் பார்க்கும்போது, அவரது தசை நரம்பின் இயங்கு நடவடிக்கை அதிகமாவதை முதலில் உறுதி செய்யப்பட்டது. நம் உடலில் அரிதாக ஏற்படும் உடலளவில் மற்றும் மன ரீதியான அளவில் ஏற்படும் மாறுபாட்டை கண்டறிவதற்கான சிறந்த கருவியாக தசை நரம்பின் இந்த அதீத செயல்பாடு காணப்பட்டது.

    இதற்கிடையில் கடினமான உடற்பயிற்சிகள் செய்யும் போது ஏற்படும் இதயத்துடிப்பு அதிகரிப்பு, வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரித்தல், ரத்த குழாய்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்கள், இந்த தசை நரம்புகளின் அதீத இயங்குதிறனால் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.

    இதையொட்டி நடந்த ஆய்விற்கு 9 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் உடலின் வெளிநரம்புகளில் கூரிய ஊசிகள் செலுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மின்னணு மாற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டது.

    முதலில், அவர்கள் சாதாரணமாக இருக்கும் நிலையில் மின்னணு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் 22 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ அவர்கள் முன் ஒளிபரப்பப்பட்டது. பின் அவர்களது ரத்த குழாய்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் மின்னணு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் பதிவான மின்னணு மாற்றங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ஏற்படும் மின்னணு மாற்றங்களை ஒத்த அளவில் இருந்தது கண்டறியப்பட்டது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்?

    By: ram On: 07:54
  • Share The Gag

  • கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?
    இதற்கு  ஒரு அருமையான விளக்கம் உள்ளது.


    பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.

    ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.

    நடுவிரல் - நம்மை குறிப்பது.

    மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.

    சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.


    முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.

    இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

    உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

    இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.

    இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.

    ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.



    கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா??

    ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது.

    நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடி!

    By: ram On: 07:28
  • Share The Gag
  • 12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

    11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க..

    10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க..

    9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.கனவுலகூட

    8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க ....

    6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க. அதிகமான அளவில்

    5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க..

    4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேணுனாலும் செய்வீங்க

    3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருக்காங்க இல்லியா ....

    2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க

    1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க...

    அப்படீனா நீங்க உண்மையாவே காதலக்றீங்க ...........

    பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்!

    By: ram On: 07:14
  • Share The Gag
  • பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன.

    1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank ) வந்தது போல இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில் சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக் செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில் அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். பின் பக்கம் பக்கமாகச் சிறுகச் சிறுக தகவல்கள் வாங்கப்படும். உங்கள் பெயர், ஊர், முகவரி, வங்கி அக்கவுண்ட் எண் , இன்டர்நெட் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேர்ட்,ஆகியவை பெறப்படும். இவற்றைப் பெற்றவுடன் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இன்டர்நெட் வழியாக நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் இன்னொரு அக்கவுண்ட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும். இது போல ட்ரான்ஸ்பர் செய்யப்படும் அக்கவுண்ட் உடனே அந்த வங்கியில் மூடப்படும். பெரும்பாலும் இவை பாதுகாப்பற்ற வங்கி அக்கவுண்ட் அல்லது வெளிநாட்டு வங்கி கிளை அக்கவுண்ட்டாக இருக்கும்.

    2. மேலே சொன்னது போன்ற வங்கிகளில் இருந்து, கீழ்க்கண்ட தகவல்களை உறுதிப்படுத்த நீங்கள் பலமுறை கடிதம் அனுப்பியும் முன்வரவில்லை. இதுவே இறுதி கடிதம். இன்னும் 48 மணி நேரத்தில் சரியான தகவல்களைத் தந்து அப்டேட் செய்யா விட்டால் உங்கள் அக்கவுண்ட் சேவை நிறுத்தப்படும் என நம் கழுத்தின் மீது அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற தோரணையில் கடிதம் வரும். நாம் நம் அவசர வேலைகளில் இது உண்மை என நம்பி தகவல்களை அளித்துவிடுவோம். எந்த வங்கியும் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. எனவே இது போல எந்த வங்கியின் பெயரில் மெயில் வந்தாலும் திறக்க வேண்டாம். ஆர்வத்தில் கூட இது என்னதான் பார்த்துவிடுவோமே என்று காரியத்தில் இறங்க வேண்டாம். பின் நம் பணத்திற்கு காரியம் செய்தவர்களாகிவிடுவோம்.

    3. இதே போல Security Alert / Net Bank Alert என சப்ஜெக்ட் தலைப்பிட்டு, வங்கியின் சர்வர் கிராஷ் ஆகி தற்போது சரிப்படுத்தப்பட்டதாகவும், உங்கள் அக்கவுண்ட் தகவல்களைச் சரி பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்திடுமாறு கடிதங்கள் வரும். இவையும் ஏமாற்றுபவையே.

    4. வங்கி முகவரியிட்டு எச்சரிக்கைக் கடிதம் போல தந்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். எங்கள் வங்கியிலிருந்து வந்தது போல மெயில்கள் வரும்; நம்ப வேண்டாம். உண்மையான லிங்க் இதுதான். நீங்கள் கிளிக் செய்து உங்கள் தகவல்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெயில் வரும். கிளிக் செய்தால் மீண்டும் அதே கதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உங்கள் பெர்சனல் தகவல்களை இழப்பீர்கள்.

    5. இமெயில் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பேர்களில், உங்களையும் சேர்த்து பல நாடுகளில் ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, உங்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வெளிநாட்டுக் கார் ஒன்று பரிசாகத் தரப்போவதாக உங்களுக்கு மெயில் வரும். இதில் என்ன அக்கவுண்ட் நம்பரா தரப்போகிறோம் என்று அந்த மெயில் கூறும் இமெயில் முகவரிக்குக் கடிதம் எழுதினால், உங்களைப் போல அதிர்ஷ்டசாலி உலகிலேயே இல்லை என்ற ரேஞ்சுக்கு பல மெயில் கடிதங்கள் தொடர்ந்து வரும். அந்தக் கடிதங்களில் சின்ன சின்ன தகவல்கள் (சொந்த வீடு, மாத வருமானம், முகவரி, கார், இரு சக்கர வாகனம், கடன், பேங்க் அக்கவுண்ட் போன்றவை) சேகரிக்கப்படும். இவற்றை வைத்து நீங்கள் எவ்வளவு பணம் வரை இழக்க இருப்பீர்கள் என முடிவு செய்திடுவார்கள். பின் ஒரு நாளில், பரிசுக் காரின் மதிப்பு ரூ.89 லட்சம் என்றும் அதனை அனுப்புவதற்கான பணம் நீங்கள் முதலில் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு தொகையை நெட் பேங்கிங் மூலம் செலுத்த கேட்டுக் கொள்வார்கள்.

    8. நிறுவனத்தின் பெயர், லோகோ போட்டு மெயில் வரும். எங்கள் நிறுவனத்திற்கு உங்கள் நாட்டின் அருகே உள்ள நாடுகளிலிருந்து பணம் தொடர்ந்து வரும். அதனை உங்கள் அக்கவுண்ட்டிற்கு அனுப்பச் சொல்கிறோம். நீங்கள் மொத்தமாக எங்கள் அக்கவுண்ட்டிற்கு மாற்ற வேண்டும். இந்த வேலைக்கு மாதச் சம்பளமும் மாற்றும் பணத்திற்கேற்ப கமிஷனும், அலுவலகச் செலவிற்குப் பணமும், எங்களின் ரீஜனல் மேனேஜர் என்ற பதவியும் தருவதாக மெயில் வரும். உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைக் கொடுத்தால் எந்த நாட்டு வங்கிக்கோ உங்கள் பணம் நீங்கள் அறியாமலேயே மாற்றப்பட்டுவிடும்.


             இது போன்ற ஏமாற்று வேலைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அத்தனையும் தெரிந்து பின் விழிப்பாய் இருப்பதைவிட, உழைப்பின்றி வரும் பணத்தை எதிர்பார்க்காமல், அடுத்தவர் பணத்திற்கு முறையின்றி ஆசைப்படாமல் “இருப்பது போதும்' என்று இருப்பது பாதுகாப்பல்லவா!

    ஒளவையார் பெருமை - வரலாறு!

    By: ram On: 03:18
  • Share The Gag

  • சிறப்பு

    தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு.

    ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

    தமிழ்ப்பாட்டி

    "தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.

    வரலாறு

    ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

    அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

    காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

    சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச்செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.

    வரலாற்று ஆய்வு

    ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:
    சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

    சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். "ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.

    கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

    அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.

    இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.

    நூல்களின் சிறப்பு

    மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

    சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

    "பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

    இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

    "ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.

    "கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

    ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.

    "மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

    "நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

    இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.


    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச் சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை ஒளவையார் பெற்றிருக்கிறார்.

    மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்!

    By: ram On: 03:07
  • Share The Gag
  • 1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

    கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

    2. நன்றாகத் தூங்குங்கள்

    நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

    3. நடங்கள்! ஓடுங்கள்!


    தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

    4. ஓய்வெடுங்கள்.

    பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

    5. சிரியுங்கள் மனம் விட்டு

    சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

    6. மனம்விட்டுப் பேசுங்கள்.

    மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

    7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்

    இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

    8. தெளிவாகச் செய்யுங்கள்

    எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

    9. விளையாடுங்கள்

    உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

    10. மற்றவர்களையும் கவனியுங்கள்

    நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள்.

    உயில் எழுதுவது எப்படி? How to write a will?

    By: ram On: 02:45
  • Share The Gag
  •  

    ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).

    உயில் என்பதே உறவுகளைச்சிதற விடாமல் பார்த்துக் கொள்ளும் கவசம்தான்.அதைச் சரியாகப் பயன் படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

    உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!

    இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!

    உயில் --- கட்டாயம் என்ன ?

    உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்ப-தால் எழுதிவிடுவது நல்லது.

    ‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.

    உயில் - எப்படி எழுதுவது?

    ‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.

    உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.

    உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’

    உதாரணமாக

    எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன்.

    கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.

    ‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்-களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.

    உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.

    உயில் அமல்படுத்து-நராக ஒருவரை நியமிப்-பது அவசி-யம். உயிலில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்-வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்-களை உயில் அமல்படுத்-துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.

    • நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.
    • உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.

    உயில்கள் பலவிதம்!

    குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.

    உயில் எப்போது செல்லாமல் போகும்?

    குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.

    சில டெக்னிக்கலான வார்த்தைகள்!
    Will உயில் (விருப்ப ஆவணம்)

    Testator உயில் எழுதியவர்

    Executor உயில் அமல்படுத்துநர்

    Codicil இணைப்புத் தாள்கள்

    Attested சரிபார்க்கப்பட்டது.

    Probate
    நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.

    Beneficiary, Legatee வாரிசு

    Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர்

    Succession Certificate வாரிசு சான்றிதழ்

    Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம்

    Muslim personal Act முஸ்லிம் தனிநபர் சட்டம்

    Guardian முஸ்லிம் தனிநபர் சட்டம்

    Witness சாட்சி

    ‘ஆன் லைன்’ உயில்

    உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.

    ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.

    உயில்களை வருமான வரியை மிச்சப் படுத்தும் ஒரு சாதனமாகவும் கையாளலாம்!
    ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.

    ஓருவர் தான் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றி எழுத முடியும்.

    பண மொழிகள்!

    By: ram On: 02:34
  • Share The Gag
  •  

    செல்வம் சேர்ப்பதற்கு அறிவு வேண்டும்; அப்படி சேர்க்கும் செல்வத்தைக் கட்டிகாக்க துணிவு வேண்டும். அறிவு இருக்கிற அளவுக்குப் பலரிடம் துணிவு இருப்பதில்லை. (அதனால் தான் இந்தியா இன்னும் ஏழை நாடாக இருக்கிறது)

    வாங்குபவனுக்கு நூறு கண்கள் தேவை. விற்பவனுக்கு ஒரு கண் போதும்.

    கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகம் விரும்புபவனே ஏழை.

    தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம், முடிவில் தேவையுள்ள பொருட்களை விற்கும் நிலைக்குக் கொண்டுவந்துவிடும்.

    எல்லோரும் பணத்தை வெறுக்கிறார்கள். அடுத்தவருடைய பணத்தை மட்டும்!!!
    ஒருமுறை சம்பாதித்த பணம் இருமுறை சேமித்ததற்குச் சமம்.

    முதுமைக்காலத்தில் எவ்வளவு தேவைப்படும் என்று இளமைக்குத் தெரிந்தால் அது அடிக்கடி பணப்பையை மூடிக்கொள்ளும்.

    பணத்தை உங்களுக்கு அடிமையாக்குங்கள். இல்லையேல் அது உங்களை அடிமைப்படுத்திவிடும். இதனால் உங்களது ரத்த உறவுகள் சிதைந்துவிடும் (மொத்த தமிழ்நாட்டுக் குடும்பங்களிலும் இந்த சிதைவுதான் நடக்கிறது.)

    காலத்தை வீணாக்குவதே மோசமான செலவு!