Tuesday 12 August 2014

'மூவ் யுவர் பாடி' இனி இந்த பாடல்தான் பட்டித்தொட்டி எங்கும் கேட்கும்..!

By: ram On: 22:27
  • Share The Gag

  • பிரபலங்கள் இணைந்து நடித்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் பாட்டு பாடினால் சொல்லவா வேண்டும், யுவனும், இளையராஜாவும் இணைந்தாலே பாடல்கள் பட்டாசு தெறிக்கும்.

    மேலும் இதில் தனுஷும் இணைகிறார் என்றால் டபுள் சந்தோஷம் தான். நாம் முன்பே சொல்லியது போல் தனுஷ் பாடல் எழுதி, யுவன் இசையில் இளையராஜா பாடிய பாடல் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 14ம் தேதி வை ராஜா வை படத்தில் இடம்பெற்ற இந்த ஒரு பாடல் மட்டும் ரசிகர்களுக்காக வெளிவரவுள்ளது. இந்த பாடல் மூவ் யுவர் பாடி என்ற வார்த்தைகளால் ஆரம்பிக்குமாம்.

    டிஆர்பி கிங் விஜய்யா? அஜித்தா? ரிசல்ட் இதோ!

    By: ram On: 21:54
  • Share The Gag

  • விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் தியேட்டர்களுக்கு வந்தால் திருவிழா தான். ஆனால் இங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலே ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

    சில வாரங்களுக்கு முன் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் விஜய்க்கு பேவரட் நடிகர் விருதும், மற்றொரு தொலைகாட்சியில் வீரம் படத்தையும் ஒளிபரப்ப, ரசிகர்கள் இதையே டுவிட்டரில் ட்ரண்ட் ஆக்கினார்கள்.

    தற்போது அதற்கான ரிசல்ட் வெளிவந்துள்ளது, இதில் சென்னை நகர டி.ஆர்.பி நிலவரப்படி விருது விழா டி.ஆர்.பிக்கு 10 புள்ளிகளும், வீரம் படத்திற்கு 11 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன.

    தமிழ்நாடு அளவில் விருது விழா டி.ஆர்.பிக்கு 10 புள்ளிகளும், வீரம் படத்திற்கு 9 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன.

    எப்படி பார்த்தாலும் தலதளபதி சமம் என்று இதன் மூலம் மீண்டும் நிருபித்துள்ளனர்.

    காவியத்தலைவனின் இரகசியம் அம்பலமானது..! எவ்வளவு நாள்தான் மூடி மறைக்க முடியும்..!

    By: ram On: 19:47
  • Share The Gag

  • ‘அரவான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் வசந்தபாலன் இயக்கிவரும் படம் ‘காவியத்தலைவன்’. சித்தார்த், வேதிகா, பிருத்விராஜ், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் இப்படத்தை வசந்தபாலன் பழம்பெரும் நடிகர் கிட்டப்பா-கே.பி.சுந்தரம்பாளின் காதல் கதையை மையமாக வைத்து எடுத்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், வசந்தபாலன் இதை மறுத்து வந்தார்.

    இந்நிலையில், இப்படத்தில் வேதிகாவின் கதாபாத்திரம் கே.பி.சுந்தரம்பாளை மையப்படுத்தி தான் எடுக்கப்பட்டுள்ளது என்பதை வசந்தபாலன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், நாசரின் கதாபாத்திரமும் தமிழ் திரையரங்குகளின் தந்தை என போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வேதிகா இப்படத்தில் கானகோகிலம் வடிவாம்பாள் என்ற பெயரில் நடிக்கிறார் என்றும் வசந்தபாலன் கூறியுள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.  வரும் ஆகஸ்ட் 18-ந் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    கமலுக்கு 'அவ்வை சண்முகி' படம் கொடுத்து, ஆஸ்கரை வென்று என்ன பயன்..?

    By: ram On: 18:42
  • Share The Gag

  • ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர், நகைச்சுவைக் கலைஞர் ராபின் வில்லியம்ஸின் மரணம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

    63 வயதான ராபின் வில்லியம்ஸ் உடல் தெற்கு கலிஃபோர்னியாவின் டிபூரனில் உள்ள இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டது.

    இது மரணமா.. தற்கொலையா என்பதில் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ராபின் மர்ம சாவு.. தற்கொலையா?

    திங்கள் கிழமை முற்பகல் 11:55 மணிக்கு அளவில் அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது ஒருவர் சுயநினைவற்ற மற்றும் மூச்சு இல்லாமல் வீட்டில் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அவசர குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சென்ற குழு அவர் வில்லியம்ஸ் என்று கண்டுபிடித்தது. பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று மதியம் 12:02 மணிக்கு டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

    ராபின் வில்லியம் சமீப காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக, அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    சமீப காலமாக மன அழுத்த பாதிப்புக்கு உள்ளான ராபின் வில்லியம்ஸ், கடந்த 1997-ல் வெளிவந்த 'குட் வில் ஹான்டிங்' படத்தின் நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றவர். அப்படத்தில் ராபின் வில்லியம்ஸ் மனக் கோளாறுகளுக்கு சிகிச்சை தரும் நிபுணராக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    "என் கணவர் - சிறந்த நண்பரை இன்று காலை இழந்துவிட்டேன். இந்த உலகம் அன்புக்குரிய கலைஞரையும், அன்பான மனிதரையும் இழந்துவிட்டது. என் இதயம் நொறுங்கிவிட்டது" என்று ராபின் வில்லியம்ஸ்சின் மனைவி சூசன் ஷைனிடர் தெரிவித்துள்ளார்.

    ராபின் வில்லியம்ஸின் மிஸஸ் டவுட்பயர்தான், நடிகர் கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி' படத்துக்கு மூலம். அதேபோல முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (வசூல்ராஜா எம்பிபிஎஸ்) படத்தின் மூலம் ராபின் வில்லியம்ஸின் 'பேட்ச் ஆடம்ஸ்'தான்.

    சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த 'நைட் அட் தி மியூஸியம்', 'ஜூமான்ஜி', 'ரோபோட்ஸ்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ராபின் வில்லியம்ஸ்.

    அவரை விட்டு தள்ளி நில்லுங்கப்பா…! உங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார்..!

    By: ram On: 17:41
  • Share The Gag

  • உங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஏதோ ஒரு டிவி நிகழ்ச்சியின் டைட்டிலுக்காக போட்டி போடுவதைப் போல இன்றைய சில முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர் ஆரம்பமான இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ? என்ற பேச்சு தற்போதைக்கு கொஞ்சம் அடங்கியுள்ளது. எப்போது அதைப் பற்றி மீண்டும் கத்தி பேச ஆரம்பிப்பார்களோ தெரியாது. தற்காலிகமாக அந்த பேச்சு அடங்கியுள்ளது அவ்வளவுதான்.

    அஞ்சான் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட சூர்யாவை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் வானளாவ புகழ்ந்த விஷயமெல்லாம் நடந்தது. எங்கே சூர்யாவும் அந்த டைட்டிலுக்கு ஆசைப்படுகிறாரோ என்று பார்த்தால் அவருக்கு அப்படியெல்லாம் ஆசை இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். ஆக, சுற்றியுள்ளவர்கள் போடும் கோஷம்தான் அது, என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் சூர்யா.

    “சூப்பர் ஸ்டார் என்பது ஒரே டைட்டில்தான், ஆனால் அது என்னிடம் இல்லை. நான் ரஜினிகாந்த் படங்களைப் பார்த்து வளர்ந்தவன், அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேறொருவர் எடுத்துச் செல்வதை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது, ஆனால் கண்டிப்பாக நான் கிடையாது. என்னுடைய படங்களை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களுடன் ஒப்பிடவே கூடாது. அவர்கள் வேறு உயரத்தில் இருப்பவர்கள். அதே போல, விஜய், அஜித் இருவருமே 50 படங்களுக்கு மேல் நடித்தவர்கள், நான் தற்போதுதான் 30 படங்களைத் தொட்டிருக்கிறேன். எனக்கு விஜய்யுடன் நல்ல நட்பு உண்டு. அவர் என்னுடைய அகரம் விளம்பரப் படத்தில் கூட நடித்திருக்கிறார். என்னுடைய படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு மெசேஜ் கூட அனுப்பியுள்ளார்,” என சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய தன்னிலை விளக்கம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் அளித்திருக்கிறார் சூர்யா.

    அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யான்னு சொல்றவங்கள்லாம் அவரை விட்டு தள்ளி நில்லுங்கப்பா…அவர் குழப்பமில்லாம இருக்காரு.

    லைக்கோ, லைக் இல்லையோ? ‘பாதுகாப்பு கொடுங்க…’ கேட்காத விஜய், கொடுக்காத போலீஸ்!

    By: ram On: 16:58
  • Share The Gag

  • லைக்கோ, லைக் இல்லையோ? கடந்த ஒரு மாதமாகவே நாளிதழ்களையும் இணையங்களையும் இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறது லைக்கா விவகாரம். தெரியாமல் இதில் சிக்கிக் கொண்ட விஜய், இதிலிருந்து எப்படி விடுபடுவதென தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இயக்குனரையும் அவர் சொல்லும் கதையையும் மட்டுமே நம்பும் ஹீரோக்கள், அந்த இயக்குனர் சொல்லும் நிறுவனத்திற்காக நடிக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் பின்னணியில் இப்படியொரு பகீர் இருக்கிறதென்றால் அதற்கு பாவம்… விஜய்தான் என்ன செய்வார்? இப்படியெல்லாம் அவரது ரசிகர்கள் வருந்தினாலும், ஏதோ தேச துரோகியை போல விஜய்யை சித்தரிப்பதை நடுநிலையாளர்களால் கூட பொறுத்துக் கொள்ள முடியாதுதான். போகட்டும்…

    தற்போதைய நிலவரம் என்ன? அவரது நீலாங்கரை வீட்டை மாணவர்கள் முற்றுகையிடப் போவதாக அறிவித்தார்கள் அல்லவா? அந்த இக்கட்டான நேரத்தில் கூட விஜய் சார்பாக காவல் துறையில் பாதுகாப்பு கோரப்படவில்லையாம். அங்கேயும் விருந்தாளிதான் தானாக மூக்கை நுழைத்திருக்கிறார். காவல் துறைக்கு போனது லைக்காவின் சென்னை கிளைதான். அங்கிருக்கும் அதிகாரிகள் காவல் துறையை அணுகி, நாங்கள் தயாரிக்கும் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். எனவே அவரது வீட்டிற்கு பாதுகாப்பு தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்களாம்.

    இதையடுத்துதான் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தற்போது அவர்களும் இல்லை. ஏன்? ஒரே ஒரு நாள் மட்டும் குவிக்கப்பட்டிருந்த போலீஸ் இப்போது முற்றிலும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. அதற்கான காரணம்தான் ஒருவருக்கும் புரியவில்லை.

    இதன் பின்னால் சொல்ல முடியாத சூட்சுமம் ஏதும் இருக்குமோ?

    மாஸ் படத்தில் 3 ஆவிகள்; வெங்கட்பிரபுவின் அசத்தலான கதை திருப்புமுனை

    By: ram On: 07:43
  • Share The Gag

  • வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உருவாகி வருகிறது மாஸ். சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை இசிஆரில் நடந்து வருகிறது.

    இதுவொரு ஹாரர் த்ரில்லர். இந்தப் படத்தில் மூன்று பேர் ஆவிகளாக வருவதாக செய்தி கசிந்துள்ளது. கருணாஸ், ஸ்ரீமன் மற்றும் டேனியல் ஆகியோர் இந்தப் படத்தில் ஆவியாக வருகிறார்கள்.

    அவர்கள் ஒருசிலரின் கண்களுக்கு மட்டுமே தெரிவார்கள். அதனை மையப்படுத்தி காமெடி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பட யூனிட் செய்தி கசியவிட்டுள்ளது. யுவன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    ஆங்காங்கே இறையும் ஐ பணம் – சொல்ல முடியா சங்கடத்தில் ஷங்கர்..?

    By: ram On: 07:00
  • Share The Gag

  • ஐ படத்தின் இறுதி கட்ட வேலைகள் மெல்……ல்ல நடந்து வருகிறது. படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடி என்கிறார்கள். பிச்சுக்கோ பீராஞ்சுக்கோ என்றுதான் பணம் புரட்டி படப்பிடிப்பு நடந்து வருவதாக கேள்வி. இந்த நேரத்தில் பிரசாத் லேப்பில் போடப்பட்ட செட் ஒன்று எமி ஜாக்சனுக்கு சரிவர சம்பளம் தரப்படாததால் அப்படியே வெயில் மழையில் கிடந்து படப்பிடிப்பை தொடராமலிருப்பதாகவும் காதை கடிக்கிறார்கள்.

    இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவிலும் ‘ஜிகிர்தண்டா’ படத்தின் விநியோக உரிமையை செம விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம் அப்படத்தின் தயாரிப்பாளர். அதுவும் மிகப்பெரிய ஏரியா ஒன்றை! வசூல்? அதிருக்கட்டும்… அப்படியே ஹாலிவுட் படம் ஒன்றையும் ஏகப்பட்ட விலைக்கு வாங்கியிருக்கிறாராம் தமிழில் ரிலீஸ் செய்வதற்காக. எல்லா பணத்தையும் இப்படி கண்டபடி இறைக்காமல், ஐ யில் போட்டிருந்தால் அடுத்தகட்ட வேலையை பார்க்கலாமே என்று கவலைப்படுகிறாராம் படத்தின் இயக்குனர் ஷங்கர்.

    படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டுவிடலாம் என்று கொக்கிப்பிடி போட்ட ஷங்கருக்கு, நானே ரிலீஸ் பண்றேன் என்று கூறி அந்த முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம் தயாரிப்பாளர்.