Saturday 4 October 2014

வளரும் கலைஞர்களுக்கு மரியாதை செய்த கமல்

By: ram On: 18:06
  • Share The Gag
  • வி.ஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் “அவம்”. இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் “உலகநாயகன்” கமல்ஹாசன் அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார்.

    இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிபடுத்தும் வகையில் பாடவேண்டியதிருந்தது.

    அதனால் உலக நாயகனின் குரல் இதற்கு வலிமை சேர்க்கும் என்று அறிந்த இயக்குனர், தன் கோரிக்கையை அவரிடம் வைக்க, கமலும் மிக அழகாக இப்பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.

    சோப்பு, டூத் பேஸ்ட்களை பயண்படுத்தும் ஆண்களுக்கு ஆபத்து!

    By: ram On: 11:44
  • Share The Gag


  • மனிதர்களின் வாழ்வில் தினந்தோறும் தவிற்கமுடியாத உபயோகப்பொருட்கள் சிலவைகள் இருக்கின்றன. அதில் நச்சுப்பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுவதால் தற்போது பல பொருட்களில் ஆபத்துகளை விளைவிக்கும் என்று ஆய்வில் கூறப்படுகிறது. அந்தவகையில் தற்போது ஆண்கள் உபயோகப்படுத்தும் சோப்பு, சன்ஸ்கிரீன் லோசன், டூத்பேஸ்ட்களில் உள்ள ரசாயனங்களினால் ஆண்களின் விந்தணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது. அந்த சோப்பு போட்டு குளிங்க. பெண்களின் மனம் கவரலாம். இந்த பேஸ்ட் போட்டு பல்துலக்குங்க. பெண்கள் உங்களின் அருகில் வருவார்கள். உங்களுக்கு ஐ லவ் யூ சொல்வார்கள் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பொருட்களை வாங்க வைக்கின்றனர். ஆனால் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதைப் போல அவற்றினை வாங்கி உபயோகிக்கும் ஆண்கள் மலடாகும் சூழல் ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். காரணம் அவைகளில் உள்ள நச்சுத்தன்மையுள்ள ரசாயனங்கள்தான் என்கின்றனர்.

    மனிதர்கள் அன்றாட வாழ்வில் பல பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில் சோப்புகள், பற்பசைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக, சோப்பு, பற்பசை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் கலக்கப்படும் நச்சு ரசாயன பொருட்களால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் என தெரிய வந்துள்ளது.

    இந்த ரசாயன நச்சு பொருட்கள் ஆண்களின் விந்தணு வீரியத்தை குறைத்து குழந்தை பேறு ஏற்படாமல் தடுக்கிறது. இது பலவிதமான ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் மாசுபாடு, மனஅழுத்தம், போதை வஸ்துக்கள், புகைப்பழக்கம் போன்றவைகளினால்தான் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் கூறிவந்த நிலையில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களே ஆண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.

    விந்தணு உற்பத்தியை தடை செய்யும் நச்சு ரசாயனங்கள் சோப்பு, டூத்பேஸ்டுகளில் உபயோகப்படுத்தப்படுவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    மீண்டும் சிம்ஹாவை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

    By: ram On: 11:05
  • Share The Gag
  • 'பீட்சா', 'ஜிகர்தண்டா' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மூன்றாவது படம் இயக்கத் தயாராகிவிட்டார்.

    இப்படத்துக்கு 'இறைவி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்படுகிறது. 'ஜிகர்தண்டா' படத்தில் அதகளம் செய்த பாபி சிம்ஹாவும், கருணாகரனும் இப்படத்தில் நடிக்கின்றனர்.


    சி.வி.குமாரின்  திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 'ஜிகர்தண்டா' ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு ஆரி இப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

    டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஊனமுற்ற பெண்கள் அதிலும் கழிவறை வசதியில்லாத பெண்கள் மாதவிடாய் காலத்தில் என்ன செய்வார்கள் ?

    By: ram On: 10:53
  • Share The Gag
  • தெருவோரம் குடியிருப்பவர்கள் நாப்கின் வாங்க வசதியுள்ளவர்களா, இல்லையெனில் அவர்கள் அந்த நாட்களில் என்ன செய்கிறார்கள்?

    மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாப்கின் மாற்றுவது எவ்வளவு சிரமம்? கீதா இளங்கோவனின் ’’மாதவிடாய்’’ ஆவணப்படம் பார்க்கும் வரை இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை…என்னைப் பொறுத்தவரை, மாதவிடாய் என்பது மிகச் சாதாரண ஒரு உடல் நிகழ்வு… அதனால் அதைப்பற்றி பேச ஒன்றுமே இல்லை என்றுதான் எண்ணம் இருந்தது… மாதவிடாய் ஆவணப் படத்தை பார்த்த பிறகு அந்த எண்ணம் மாறியிருக்கிறது… மாதவிடாய் என்பது என்ன, அதுபற்றிய மூடநம்பிக்கைகள், அந்த நாட்களில் பெண்கள் என்னென்ன சிரமங்களை எதிர்க்கொள்கிறார்கள் என அனைத்துத் தரப்பு பெண்களின் உணர்வுகளையும் இந்தப் படம் பதிவு செய்கிறது…

    மாதவிடாய் பற்றி வீட்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க? என்ற கேள்விக்கு ஒரு பள்ளி மாணவியின் பதில்…. ‘’அடக்கமா இருக்கணும், வெளியபோய் விளையாடக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க’’…..

    ’’வீட்ல டாய்லெட் இல்லை, ஒவ்வொரு தடவையும் முள்ளுக்காடு வழியா போயிட்டு வரணும்.. கையெல்லாம் முள்ளுக்குத்தும்’’ ஒரு ஊனமுற்ற பெண்ணின் மாதவிடாய் நாட்கள் இப்படி நகர்கிறது…

    ’’நாப்கின் எல்லாம் வைக்கிறது இல்லை, துணியும் இல்லை.. குளிக்க, கழுவ தண்ணியும் இல்லை.. எல்லாம் பாவாடயில தான்’’- தெருவில் வாழும் ஒரு பெண்ணின் வார்த்தைகள் இது…

    தவிர… கழிப்பறை, தண்ணீர் வசதியில்லாத பள்ளிகள், பெண்களைப் பற்றி யோசிக்காமல் கட்டப்படும் பொதுக் கழிப்பறைகள், நாப்கின்கள் சுகாதாரமான முறையில் அகற்றப்பட வழியில்லாதது, இதுபற்றிய தெளிவான சட்டங்களோ, விதிமுறைகளோ இல்லாத அரசு, இந்தப் பிரச்னையை எப்படி சரிசெய்யலாம் எல்லாமே படத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது….

    படத்தில் மாதவிடாய்னா என்ன? என்கிற கேள்விக்கு, மாணவிகள் வெட்கப்படுகிறார்கள்.. அல்லது விழிக்கிறார்கள்….. தன் உடலில் நடக்கும் மாற்றத்தை கூட அறியாமல் இருப்பது எவ்வளவு துயரம்? இன்று மாநகரங்களில் பத்து வயது கடந்தவுடன் குழந்தைகளுக்கு அம்மாக்கள் மாதவிடாய் பற்றி லேசாக சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.. அதுவும், ’’இப்படி வந்தா, உடனே அம்மாவுக்கு சொல்லணும், டீச்சர்கிட்ட சொல்லணும்.. நாப்கின் வைக்கணும்’’ என்கிற அளவில்தான்… நகர்ப்புற, கிராமப் பகுதிகளில் இதுவும் இல்லை… யாருமே மாதவிடாய் என்றால் என்ன என்பது பற்றி சொல்லித் தருவதில்லை.. பெரும்பாலும் அம்மாக்களுக்கே அதுபற்றி ஒன்றும் தெரியவில்லை…

    கொஞ்சம் பிளாஷ்பேக் ஓட்டிப்பார்த்தால்… நான் படித்தது ஆண், பெண் இருவரும் படிக்கும் பள்ளி… எட்டாவது தாண்டியதுமே, சக மாணவிகள் வயதுக்கு வருவது அடிக்கடி நடக்கும்.. ஏற்கனவே வயதுக்கு வந்தவர்கள் சிரிக்க, வயதுக்கு வராத பெண்களுக்கு ஒன்றும் புரியாது…. இதுபற்றி பாடத்திட்டத்தில் இருந்தாலும் ஆசிரியர்கள் சொல்லித் தந்ததில்லை…

    ஒருநாள் ஒரு பெண் கழிப்பறை பயன்படுத்தி விட்டு வெளியே வர, அங்கு தேங்கியிருந்த இரத்தம் பார்த்து அதிர்ந்து விட்டேன்… உடன் வந்த பெண், சிறுநீரில் இரத்தம் கலந்து போவது ஒருவித நோய் என்று எனக்கு விளக்கம் வேறு சொன்னாள்..

    வீட்டில் அக்கா வயதுக்கு வந்தபோது, மூலையில் உட்கார வைக்கப்பட்ட பத்து நாட்களும் அழுது கொண்டே இருந்தாள்… அம்மாவும் உடன் அழுதார்.. அக்கா பயத்தில் அழ, அம்மா ’’அக்காவுக்கு இன்னும் நகை எதுவும் செய்யவில்லை, அதுக்குள்ள வயசுக்கு வரணுமா’’ என்று சொல்லி, சொல்லி அழுதார்…

    ஒன்பதாவது படிக்கும்போது, நான் வயதுக்கு வந்தபோது எனக்கும் அப்படித்தான் எதோ நோய் வந்து விட்டது என பயமாகி விட்டது… அம்மா அழுவார்கள் என்று சொல்லி, இரண்டு வாரங்கள் அம்மாவிடம் சொல்லவே இல்லை… தயங்கித் தயங்கி சொன்னபோது தலையில் அடித்து மூலையில் உட்கார வைத்தார்கள்… இந்தமுறை அம்மாவின் அழுகை அதிகமாக இருந்தது.. இரண்டு வயசுக்கு வந்த பொண்ணுங்க வீட்ல இருக்கும்போது அழாம வேற என்ன செய்யிறதாம்?

    தாமதமான அல்லது, முறையற்ற மாதவிலக்கு மருத்துவ ரீதியான குறைபாடு என்பதெல்லாம் எனக்கோ, குடும்பத்திற்கோ தெரியாது… ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு தாமதமானால் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதிலே சொல்ல முடியாது…. கருப்பட்டி, எள் என எதேதோ தருவார்… சில நேரங்களில் கல்லூரியில் இருந்து வீடு திரும்புவதற்கே எரிச்சலாக இருக்கும்… ‘’இன்னும் ஏன் வரலை?’’ என்று அம்மா கேட்கும்போது முட்டிக் கொண்டு செத்துப்போய் விடலாமா? எனத் தோன்றிய நாட்களும் உண்டு…

    மாதவிலக்கு நாட்களில் நாங்கள் துணிதான் பயன்படுத்துவோம்… அதுவும் ஒவ்வொரு மாதமும் புதிதாக துணி தரமாட்டார்கள்.. பயன்படுத்தியதை துவைத்து, காயவைத்து பயன்படுத்த வேண்டும்.. அதையும் வெயிலில் உலர வைக்கக் கூடாது… வீட்டின் ஆண்கள் பார்க்கும் வகையில் கயிறில் போடக்கூடாது.. அதன் மேல் பல்லி உட்காரக் கூடாது.. கிருஷ்ணப் பருந்து அந்த துணியின் மேலாக (அது எங்கியோ வானத்தில் தான்) பறந்து செல்லக் கூடாது…. அந்த நாட்களில் வெறும் பாயில் தான் படுக்க வேண்டும்.. வீட்டில் யாரையும் தொடக்கூடாது.. அடுக்களைக்குள் செல்லவே கூடாது… அந்த நாட்களில் போடுவதற்கென்றே கண்றாவியாக நாலு டிரஸ்… கல்லூரி காலத்தில் பார்ட்டைம் வேலைக்குப் போனபோது, சம்பளம் வாங்கினால் நாப்கின் வாங்கலாம் என்பதே ஆகப்பெரிய ஆறுதலாக இருந்தது….

    இப்போது இந்த மனத்தடைகள் எல்லாம் எனக்கு இல்லை… சுற்றுலா செல்லும்போது மாதவிலக்கு நாட்களில் ஒரு தயக்கமும் இல்லாமல் கோயிலுக்கும் செல்கிறேன்… ஆனாலும் இதுபற்றி நண்பர்களிடம் கூட பேச முடிந்ததில்லை… கடுமையான வயிற்று வலி, உடல் நடுக்கம், வாந்தி என முதல்நாளின் சில மணி நேரங்கள் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை.. அலுவலகத்தில் இப்படி மாட்டிக் கொள்ளும்போது தலைவலி, த்ரீ அவர்ஸ் பெர்மிஷன் என தயங்கித் தயங்கித் தான் கேட்க முடிகிறது…. வித்தியாசமாக பார்ப்பார்களோ என்கிற அச்சம் இருக்கவே செய்கிறது…

    அதுவும் ஆடையை கவனித்து, கவனித்து பதட்டத்தில் வேலையில் கவனம் செலுத்த முடிந்ததே இல்லை… நாப்கின் மாற்ற கழிவறை செல்ல வேண்டுமெனில் கைப்பையோடு செல்ல வேண்டும்…. இல்லையெனில் போதைப் பொருளை கடத்திச் செல்வது போல் நாப்கினை மறைத்து எடுத்துச் செல்ல வேண்டும்… நாப்கின் கையில் எடுத்துப் போக இன்னும் தயக்கம் இருக்கவே செய்கிறது…. ஆவணப் படத்தில் ஒரு பெண் சொல்வது போல… ‘’ஆண்கள் ஷேவிங் க்ரீம், ரேஸர் எல்லாம் இயல்பா வாங்குறாங்க… ஆனா நாப்கின் கேட்டா பேப்பர்ல சுத்தி, கறுப்பு கலர் கவர்ல குடுப்பாங்க’’..

    உண்மைதான் இயல்பான ஒரு உடல் நிகழ்விற்கு எவ்வளவு குற்ற உணர்வு? உண்மையில் மனதளவில் நான்கூட என்னுடலை ஏற்றுக்கொள்ளவில்லை, அல்லது புரிந்து கொள்ளவில்லை என்பதை இந்த நேரத்தில் நான் உணர்ந்து கொள்கிறேன்… ‘’மாதவிடாய்’’ ஆண்களுக்கான படம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. பெண்களே உணர தவறிப்போன தன் உடலைப்பற்றிய படமும் என நான் புரிந்து கொள்கிறேன்.. என்னை யோசிக்க வைத்ததற்காய், இதுபற்றி இங்கே தயக்கமின்றி பகிர வைத்ததற்காய் கீதா இளங்கோவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்….

    ஆவணப்படம் : மாதவிடாய்
    இயக்கம் : கீதா இளங்கோவன்
    தயாரிப்பு : இளங்கோவன்

    அனைவரும் படித்து, புரிந்து, பகிர வேண்டிய பதிவு

    பாவம் பாஸ் ஹூரோயின்ஸ்!

    By: ram On: 10:27
  • Share The Gag


  • நடிகர்களுக்காக குரல் கொடுக்க கோடானுகோடி ரசிகர்கள் இருக் காங்க... ஆனா தமிழ் சினிமாவில் ஹீரோயினைப் படுத்துற பாடு இருக்கே, அதை நாமதானே பாஸ் பேசணும்!

      முழு நிர்வாணமா நடுராத்திரியில ஊரைச் சுத்தி வரணும்கிறதுல தொடங்கி, பூக்குழி இறங்குற வரைக்கும் நடிகைகளை மட்டும்தான் சோதனை எலியாக்குறீங்களே... ஏன் பாஸ் இப்படி?

      ஹீரோ ஒரே நேரத்துல ரெண்டு ஹீரோயினுக்கு நூல் விட்டுக்கிட்டே இருக்கார்னா, கடைசியில் யாராவது ஒரு ஹீரோயின், ஹீரோவை அண்ணான்னு கூப்பிட்டாகணும்கிறதுதான் சினிமா விதி!

      போலீஸ்காரருக்கோ, ராணுவ வீரருக்கு மனைவி யாகவோ ஒரு பெண், மஞ்சள் குங்குமத்தோட ரொம்ப பக்திமார்க்கமா காட்டப்பட்டால், அடுத்த சீன்லயே அவரோட கண வரைப் போட்டுத் தள்ளிட்டு குங்குமத்தை அழிச்சுட்டு அலையவிடப் போறாங்கனு அர்த்தம். ஏன் இந்தக் கொல வெறி?

      அதென்ன பாஸ், ஹீரோயின் மட்டும்தான் எப்போ பார்த்தாலும் தற்கொலை முயற்சி பண்ற மாதிரியே காட்டுறீங்க? அது மட்டுமா, ஊர்ல இருக் கிற அம்புட்டு பயலும் அவனவன் வேலையைப் பார்க்கிறப்போ ஹீரோதான் கரெக்டா கிணத்துல குதிச்சு ஹீரோயினைக் காப்பாத் துறார். சுத்திமுத்தி யாருமே இல்லைனா ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுற மாதிரி உதட்டோட உதடா தண்ணியை உறிஞ்சுறதுல தீவிரமா இறங் கிடுறார். ஹீரோயின் வாய் என்ன பம்ப்புசெட்டா சார்?

      அதென்னங்க ஓடிப் போய் கல்யாணம் பண்றதுனா ஹீரோயின் மட்டும்தான் சூட்கேஸைத் தூக்கிட்டு வர்றாங்க... ஹீரோ ஹாயா வந்து பிக்அப் பண்ணிட்டுப் போறார்!

      ஹீரோயின் ராங்கி பண்றதும் ஹீரோ அவளை அடக்குறதும் அப்புறமா காதல் முளைக்கிறதும்... ஹீரோயினை நக்கலடித்து சீண்டி, தீண்டி, விரட்டி, உருட்டி நக்கல் பண்ற மாதிரி ஒரு பாட்டு வைக்கலைனா சாமி குத்தம் ஆயிடும் போல!

      மாஸ் ஹீரோ படம்னா, ஹீரோயின் நிலைமை அந்தோ பரிதாபம்தான். தொடக்கக் காட்சிகளில் ஹீரோயினை வம்பி ழுத்து அக்மார்க் பொறுக்கித்தனம் பண்ற ஹீரோவைத்தான் இவர் கட்டாயம் லவ் பண்ணியாகணும். வேற சாய்ஸே இல்ல!

      டூயட் பாட்டிலும்கூட ஓரவஞ்சனை. பனிப்பிரதேசத்துல மைனஸ் டிகிரியில் எடுக்குற டூயட் காட்சியில ஹீரோ மட்டும் ஸ்வெட்டர் கிளவுஸ்னு எக்கச்சக்கமா டிரெஸ் பண்ணியிருப்பார். ஹீரோயின் மட்டும் டூ பீஸ்ல பரதநாட்டியம் ஆடணும். அந்தக் குளிர்ல ஸ்வெட்டர் இல்லைனா பரதநாட்டியம் என்ன, குச்சிப்புடி, கதக்களி, தக்காளினு அம்புட்டு டான்சும் தன்னால வருமே டவுசருங்களா!

      அந்த வயது முதிர்ந்த ஹீரோவுக்காக டூயட்டையே சிங்கிள்யட்டாக(!) மாற்றி யிருப்பார்கள். அந்த ஹீரோ சும்மா சும்மா நடந்துகிட்டும் க்ளோசப்ல உதட்டை சுழிச்சுக்கிட்டு மட்டும் இருப்பார். அந்த ஹீரோயின் அவரை சுற்றிச்சுற்றி அலுக்காமல் ஆடிக்கொண்டேயிருப்பார். என்ன கொடுமை சார்!

      நல்லவேளை, முனியாண்டி விலாஸ் முட்டைபரோட்டா போடுற தோசைக்கல் மாதிரி, தொப்புள்ல பம்பரம் விடுறது, ஆம்லேட் போடுறதுனு பயன்படுத்திக்கிட்டிருந்த ஹீரோயின் தொப்புளை இப்போதான் கொஞ்சகாலம் நிம்மதியா விட்டிருக்காங்க!

    மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன ? ஓர் உருக்கமான பதிவு !!

    By: ram On: 08:46
  • Share The Gag
  • நீண்ட காலமாக குழந்தையில்லாத ஒரு தம்பதி, என் நண்பர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வந்தார்கள்.அவர்களுக்கு பலவிதமான பரிசோதனைகள் செய்யபட்டு, பரிசோதனை முடிவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. (இப்போது நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில்லை; பரிசோதனை முடிவுகளுக்குத்தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்).சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்ணிற்கு உடலில் சில மாறுதல்கள் தெரிந்தன. கர்ப்பபை தொடர்பான சில தொந்தரவுகள் ஏற்பட்டன. ஸ்கேன் எடுக்குமாறு பரிந்துரைத்தார் மருத்துவர்.

    கர்ப்பப்பையில் ஒரு கட்டி வேகமாக வளருவதாகவும், அதன் வேகம் புற்றுநோய் செல்களுக்கு இணையாக இருப்பதாகவும் ஸ்கேன் அறிக்கையின் வழியாக மருத்துவர் முடிவு செய்தார். அந்த கட்டியின் வேகமான வளர்ச்சி, அடுத்த கட்ட பரிசோதனைகளுக்கு செல்வதற்குக் கூட நேரம் தரவில்லை என்றும், பெண்ணை காப்பாற்றுவதற்காக கர்பப்பையை நீக்கி விடலாம் என்று பரிந்துரைத்தார் மருத்துவர். கர்ப்பை நீக்கப்பட்ட பிறகு தனக்கு குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற அதிர்ச்சியை தன் மனைவிக்காக ஏற்றுக் கொண்ட கணவர் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். அறுவை சிகிச்சை உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என் நண்பரும்,நானும் ஸ்கேன் அறிக்கைகளையும்,விசித்திரமான நோயாளிகள் பற்றியும் விவாத்திக் கொள்வோம்.

    கர்ப்பபை அகற்றும் அறுவை சிகிச்சை அந்த பெண்ணிற்கு முடிந்தது. அவர் உயிர் பிழைத்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் அறுத்தெறியப்பட்ட உள்ளுறுப்புகளைப் பார்ப்பதற்காக வழக்கம் போல நாங்கள் அறைக்குள் செல்கிறோம். அறுத்து குப்பையில் வீசப்பட்ட கர்ப்பையின் ஒரு பகுதியில் ஒட்டி கொண்டிருந்தது கட்டி அல்ல; அறுபது நாட்கள் வளர்ந்த கரு. அந்த சிசுவின் விரல்கள் அரிசி ஓவியம் போல நேர்த்தியாக இருந்தது. அறுவை சிகிச்சை உதவியாளர்கள் மருத்துவரிடம் தகவல் சொன்னார்கள். ஒரு நிமிடம். ஒரே ஒரு நிமிடம் அதிர்ந்தார். அவருக்குள் இருந்த மனித தன்மை வெளிப்பட்டது. அடுத்த நிமிடம் தொழில் முறை மருத்துவரானார். அதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மருத்துவமனை பணியாளர்கள் அவர்கள் தொழில் தர்மத்தைக் கட்டி காத்தார்கள்… சம்பளத்தோடு.

    கருவிலே வேரறுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு வாழும் வாய்ப்பை மறுத்தது யார்? ஸ்கேன் அறிக்கையா? அதை உறுதி செய்து கொள்ளாத மருத்துவரா? வணிகமயமான மருத்துவமா?

    அந்த சிசு என்னோடு இரண்டு வருடங்கள் இருந்தது. அதை ஒரு கண்ணாடி குடுவையில் என்னோடு வைத்திருந்தேன். முழு வளர்ச்சி அடையாத அந்தச் சிசுவின் கைகள் ஆங்கில மருத்துவத்தை விட்டு என் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியது.

    கருவிகளின் கற்பனையில், காகிதங்களின் முடிவுகளில் இப்படி வாழ்கையை இழந்தவர் பலர். கருவிகள் நமக்கு முதலாளிகள் அல்ல. கருவிகள் நமக்கு உதவி செய்வதற்குத்தான். முடிவுகளை எப்போதும் அவை அறிவிப்பதில்லை. அறிவின் வழியாக முடிவுகளை அடைவதுதான் அறிவியல்….

    (மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?- அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்- நூலில் இருந்து)

    100 கிராம் எக்ஸ்ட்ரா மூளையுடன் ஒரு ஹீரோ கம் இயக்குனர்!

    By: ram On: 08:28
  • Share The Gag
  • சாமியார்களே ‘சைடு’ பிசினஸ்சாக சினிமாவில் இன்வெஸ்ட் பண்ணுகிற காலம் இது. மெய்ஞானிக்கு இருக்கிற ஆசை ஒரு விஞ்ஞானிக்கு இருக்காதா? அண்ட சராசரங்களையும் ஆராய்ச்சி செய்து வரும் ‘நாசா’வில் விஞ்ஞானியாக இருந்த பார்த்திக்கும் கோடம்பாக்கத்தின் மீது திடீர் ஆசை! அதற்காக நாலு ஃபைட், ரெண்டு டான்ஸ், ஒரு கட்டாய சென்ட்டிமென்ட், ஒரு கிண்ணம் அழுகாச்சி என்று ரெகுலர் ரூட்டில் நொண்டியடிக்காமல் தனது எண்ணத்தில் உதித்த கதையை எழுத்தாக வடிப்பதற்கே ஏகப்பட்ட முயற்சிகள் எடுத்துக் கொண்டாராம்.

    ஒரு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானி காதலில் விழுகிறார். அந்த காதலும் கல்யாணமுமே அவரது ஆராய்ச்சிக்கு இடைஞ்சலாக இருக்கிறது. ஆராய்ச்சி வென்றதா, அல்லது அவரது ஆராய்ச்சியை காதல் கொன்றதா? இதுதான் படத்தின் மையக்கதையாம்.

    சென்னை ஐஐடி யின் உள்ளே நுழைவதற்கே 100 கிராம் மூளை எக்ஸ்ட்ராவாக வேண்டும். அங்கு படித்து டாக்டர் பட்டமும் வாங்கியிருக்கிறார் பார்த்தி. சுமார் ஒரு குயர் பேப்பரில் இண்டு இடுக்கெல்லாம் எழுதுகிற அளவுக்கு கல்வியிலும் ஆராய்ச்சியிலும் பயோ-டேட்டா வைத்திருக்கிறார். அப்படியிருந்தும் லடாக்கிலும் குலுமணாலியும் யாரோ ஒரு அசைவ அழகியை கட்டிப்பிடித்து ஆட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் அறிவியல் கழகம் வேண்டுமானால் கவலைப்படட்டும். ஆனால் ரசிகர்களுக்கு ‘ஹையா ஜாலி’தான்!

    ஏனென்றால் நமக்கு காட்டப்பட்ட விஷுவல் அப்படி. சற்றே சீரியஸ் முகத்துடன் கதாநாயகியை லவ்வுகிறார். டான்சும் முறைப்படி கற்றிருப்பதால் லெக் ஸ்லிப் இல்லாமல் டான்ஸ் ஆடுகிறார். ஆவேசப்படுகிறார். அழுகிறார். துடிக்கிறார்… கொஞ்சம் அச்சமாகக் கூட இருக்கிறது அவரது சவால்களை கேட்டால். ‘நல்ல படம் வரல… நல்ல படம் வரலன்னு சொல்றீங்க. அதுக்காகதான் இத்தனை வருஷம் மெனக்கெட்டு ஒரு நல்ல படம் கொடுத்திருக்கேன். இதை உலக மக்கள்ட்ட சொல்லுங்க. எல்லாரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கட்டும்…’ என்கிறார் படபடவென்று!

    பார்த்தி கொஞ்சம் விபரமான ஆள்தான். சினிமாவையும் அதன் வியாபாரத்தையும் கூட ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார் போல. தான் புதுமுகம் என்பதால் தன்னை சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரையும் அறிந்த முகமாக நடிக்க வைத்திருக்கிறார். விவேக், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், தேவதர்ஷினி, சஞ்சனா சிங் என்று வாரியிறைக்கப்பட்ட நட்சத்திரங்கள் படம் முழுக்க! முக்கியமாக பார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மீராஜாஸ்மின்.

    பூமியல்லாத கோள்களில் மனித உயிரினங்கள் இருக்கிறதா என்பதுதான் பார்த்தியின் ‘நாசா’ கால ஆராய்ச்சியாக இருந்திருக்கிறது. ஒருவேளை அப்படி இருக்கும் பட்சத்தில், விஞ்ஞானி படத்தை அங்கேயும் ஓட்டுவாரோ என்னவோ?

    கம்பிகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

    By: ram On: 08:11
  • Share The Gag
  • கட்டுமானத்தின் வலுவான தூண்களுள் ஒன்றாக விளங்குபவை கம்பிகள். கான்கிரீட் கலவைகளுடன் கலந்து கட்டிடத்தை கம்பீரமாக எழுந்து நிற்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கட்டிடத்தின் ஆயுளை அதிகரிப்பதிலும் கம்பிகளின் பயன்பாடு முதன்மையானதாக இருக்கிறது.

    தரம் முக்கியம்

    ஆகவே கம்பிகளை வாங்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக கம்பிகளை வாங்க அவசரம் காட்டக்கூடாது. அவை தரமற்ற கம்பிகளாக கூட இருக்கலாம். பொதுவாக டி.எம்.டி. கம்பிகள் தான் கட்டுமானத்தில் முதன்மையாக பயன்படுத்தப்படுகின்றன. அவை துருபிடிக்காத வகையில் தயார் செய்யப்படுகின்றன.

    வளையும் தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன. எவ்வளவு வளைத்தாலும் எளிதில் உடையாது. அந்த அளவுக்கு வலிமை பொருந்தியதாக இருக்கின்றன. சாதாரண முறுக்கு கம்பிகளை விட பலம் பொருந்தியவையாகவும் விளங்குகின்றன. ஆகையால் டி.எம்.டி. கம்பிகளை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவது நல்லது.

    ரெடிமேடு கம்பிகள்

    ஏனெனில் சாதாரண கம்பிகள் தரமில்லாதவையாக தயாரிக்கப்பட்டு இருந்தால் அது கட்டிடத்தின் உறுதித்தன்மையை குறைக்கும். சில ஆண்டுகளிலேயே கட்டுமானம் வலிமையை இழந்து விடும். எனவே டி.எம்.டி. கம்பிகளை பயன்படுத்துவதே கட்டிடத்துக்கு நன்மை பயக்குவதாக அமையும். டி.எம்.டி. கம்பிகளை வாங்கும்போதும் அதன் உண்மை தன்மையை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனெனில் டி.எம்.டி. கம்பிகளில் போலிகள் புகுந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் உஷாராக இருக்க வேண்டும். அவை குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பு தானா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தற்போது கம்பிகள் ரெடிமேடாக கிடைக்கின்றன. இக்கம்பிகள் நீண்ட கம்பி          களாக அல்லாமல் வெவ்வேறு அளவுகளில் துண்டுகளாக வெட்டப்பட்டு வளைத்து வைக்கப்படு
    கின்றன.

    குறிப்பாக கட்டுமான பணிக்கு தேவையான அளவுகளில் இவை கிடைக்கின்றன. வழக்கமாக கம்பி களை வாங்கி துண்டுகளாக வெட்டி பயன்படுத்தும்போது சிறு, சிறு துண்டுகள் வீணாகின்றன. இவை கட்டுமானத்துக்கு பயன்படுத்த முடியாமல் போவதால் பணம் விரயமாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ரெடிமேடு கம்பிகளை பயன்படுத்தும்போது அந்த பிரச்சினை எழுவதில்லை.

    கட்டப்படும் அறைகளின் அளவு, உயரத்துக்கு ஏற்ப கம்பிகள் ரெடிமேடாக வெட்டி வைக்கப்படுகின்றன. அவற்றில் தேவையான அளவுகளை தேர்ந்தெடுத்து கட்டுமான பணிக்கு பயன்படுத்தலாம். இதன்மூலம் கம்பிகளை வெட்டி, வளைத்து பயன்படுத்துவதற்கு ஆகும் நேரம் குறைகிறது. கம்பிகளை துண்டுகளாக வெட்டும்போது ஏற்படும் இழப்பும் தவிர்க்கப்படுகிறது.

    உறுதிபடுத்த வேண்டும்

    கட்டுமான பணியையும் விரைவாக முடிக்க ஏதுவாக அமைந்திருப்பதால் இக்கம்பிகளுக்கு மவுசு கூடி வருகிறது. இக்கம்பிகளை வாங்கும்போது திட்டமிட்டு செயல்பட வேண்டும். பீம்கள் அமைப்பதற்கு கம்பிகளின் அளவு வேறாக இருக்கும். மற்ற பயன்பாட்டுக்கும் கம்பிகளின் அளவு வித்தியாசப்     படும். ஆகையால் எந்த பகுதிக்கு எந்த தடிமன் கொண்ட கம்பியை பயன்படுத்த போகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்ப கம்பிகளை வாங்க வேண்டும்.

    அதற்கு கட்டிட வரைபடத்தில் அறையின் அளவை குறிப்பிடும்போது தேவைப்படும் கம்பிகளின் நீளம், தடிமனையும் குறிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கம்பிகளை வாங்குவதற்கு எளிதாக இருக்கும். தேவை இல்லாமல் அதிக எண்ணிக்கையில் வாங்குவதும் தவிர்க்கப்படும். இந்த ரெடிமேடு கம்பிகளை வாங்கும்போது அதன் தரத்தையும் பரிசோதிக்க வேண்டும். அவை தரமானவை தானா? என்பதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்

    உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா? கண்டுபிடிப்பது எப்படி?

    By: ram On: 01:59
  • Share The Gag
  • இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASSTrial Room உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய வும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும்.

    அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செ ய்து பார்க்கவும். உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்ச யமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளவும்.வீடியோ கேமராவிற்குறிய பைபர் ஆப்டிக் கேபிளின் அலைவரிசை செல்போனின் அலைவரிசையுடன் இடையூறு செய்யும்போது உங் களால் கால் செய்ய முடியாது.

    இருவழி கண்ணாடி என் பது நம்மால் கண்ணா டிக்கு பின்புறம் இருப்ப வரை பார்க்க முடியாது ஆனால் அவரால் நம் மை பார்க்க முடி யும்.நீங்கள் ஹோட்டல் அறையிலோ அல்லது குளியளறையிலோ கண்ணாடி இருப்பதை கண்டால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் கண் களால் வித்தியாசத்தை உணர முடியாது.

    உங்கள் விரல் நகத்தைக் கொ ண்டு கண்ணாடியைத் தொடவு ம். உங்கள் நகத்திற்கும் கண் ணாடியில் தெரியும் உருவத்திற் குமிடையில் இடைவெளி இரு க்குமெனில் அது சாதாரண ஒரு வழி கண்ணாடி. ஏனெனில் சாதா ரண கண்ணாடியின் பின்பக்கம் சில்வர் பொருத் தப்பட்டிருக்கும்.
    இருவழி கண்ணாடியில் சில்வர் பின்புறமிருக்காது. ஆகவே இடை வெளி இல்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள் உங்களை கண் ணாடியின் பின்புறமிருந்து யாரேனும் பார்க்கவும் செய்யலாம்

    நீங்கள் குடிப்பது நல்ல தண்ணீரா ? குடிநீரில் இருக்கிறது குழப்பங்கள்

    By: ram On: 01:17
  • Share The Gag
  • குடிப்பதற்கான நல்ல தண்ணீர் எது?

    குடிநீருக்கு என சிறப்பு இயல்புகள் உள்ளனவா என்றால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.நாம் குடிக்கும் தண்ணீரில் இரண்டுவித இயல்புகளை பரிசோதனை செய்ய வேண்டும். தண்ணீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு 40 முதல் 60க்குள் இருந்தால் நல்ல தண்ணீர். 51 என இருந்தால், சர்வதேச தரத்திற்கு இணையான குடிநீர் என்று அர்த்தம். 250 வரை இருந்தால் பரவாயில்லை. குடிக்கலாம் என்று சொல்வர். மற்றொன்று ?ஹட்ரஜனின் அளவு (பொட்டன்ஷியல்). 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அமிலமும், காரமும் அதிகமில்லாத நடுநிலை. 6.5க்கு கீழே இருந்தால் அமிலத்தன்மை உடையது. இத்தகைய தண்ணீரை தொடர்ந்து குடித்தால் அல்சர், வயிற்றுப் புண் ஏற்படும்.

    8.5க்கு மேல் இருந்தால் தண்ணீர் காரத்தன்மை உடையது. இதைத் தொடர்ந்து குடித்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.’போர்வெல்’ தண்ணீரில் ‘ப்ளூரைடு’ அதிகமாக இருந்தால், தொடர்ந்து குடிக்கும் போது, பற்கள் மஞ்சளாகும். இரும்பு அதிகமாக இருந்தால் ரத்தஓட்டம் பிரச்னையாகும்.’போர்வெல்’ தண்ணீரை ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ முறையில் சுத்திகரிக்கும் போது, 100 லிட்டர் தண்ணீரில் 30 லிட்டர் நல்ல தண்ணீர் கிடைக்கும். மீதியுள்ள 70 லிட்டர் தண்ணீர் கூடுதல் உப்புடன் பூமிக்குத் தான் செல்லும். இதனால் அப்பகுதியில் உள்ள தண்ணீரில் உப்பின் தன்மை தொடர்ந்து அதிகரிக்கத் தான் செய்யும்.கடைகளில் கிடைக்கும் ‘மினரல் வாட்டரில்’, தண்ணீரில் கரையும் திடப்பொருட்களின் அளவு வெறும் 26 தான். குறைந்தது 46 ஆக இருந்தால் தான், நல்லது. அதேபோல் பி.எச்., அளவும் ஆறுக்கு கீழே உள்ளது. இதனால் வயிறு, குடல்புண் ஏற்படலாம்.

    எந்தத் தண்ணீரைத் தான் நம்பி குடிப்பது?

    இயற்கை கொடுத்த மழைநீரை ரோட்டில் வீணாக்கி விட்டு, காசு கொடுத்து கண்ட தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம். மழைநீரை ஐந்து வழிகளில் பிடிக்கலாம். மழை பெய்யும் போது திறந்த வெளியில் குடத்தை வைத்து பிடித்தால் அது சுத்தமான மழைநீர். அதில் கரையக்கூடிய திடப்பொருளின் அளவு 46, பி.எச்., அளவு மிகச்சரியாக 7 ஆக இருக்கும். இதுதான் அமிலம், காரமில்லாத நடுநிலைமை. இதுதான் குடிப்பதற்கு உகந்த தண்ணீர் என்று இயற்கை, நமக்கு மழைநீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டாவது முறை, மொட்டைமாடியில் வழியில் மழைநீரை குழாய் மூலம் கீழ்நிலைத் தொட்டி, பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரிப்பது. இதில் தொட்டியின் பாதியளவு கூழாங்கற்கள், அடுப்புக்கரி, மணல், தேங்காய் சிரட்டை எரித்த கரியை நிரப்ப வேண்டும். மீதிப்பகுதியில் மழைநீர் சேகரமாகும். சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை கீழ்ப்பகுதியில் உள்ள திருகுகுழாய் மூலம் பாத்திரங்களில் சேகரிக்கலாம். ஏற்கனவே கட்டியுள்ள வீடுகளில், மிகச் சிக்கனமாக இம்முறையில் மழைநீரை சேகரிக்கலாம்.

    அடுத்தது வீட்டின் பிறபகுதிகள், நடைபாதையில் சேகரமாகும் மழைநீரை தக்கவைக்க, மழைநீர் சேகரிப்பு பள்ளத்தை தோண்ட வேண்டும். இதில் பாதியளவு ஜல்லிகற்களை கொட்டி, மேற்பகுதியை மூடி காற்று வெளியேற சிறுகுழாயை செருக வேண்டும். மழைநீர் இப்பள்ளத்தில் நிறைந்து, பூமியை நோக்கிச் செல்லும். மழைநீர் நிலத்தடிக்குள் செல்லாத நிலையில் தான், கட்டடங்களில் விரிசல் ஏற்படுகிறது. வீட்டில் விரிசல் இருப்பதற்கு, நிலத்தடி நீர் சேகரிப்பு அவசியம். அதுமட்டுமின்றி, மண் அரிப்பையும் தடுப்பதோடு, ‘போர்வெல்’ நீரின் உப்புத்தன்மையை குறைக்கிறது.

    எப்படி பரிசோதிப்பது ?

    தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் அளவை, ‘டி.டி.எஸ்.,’ மீட்டர் மூலம், ஒருசில வினாடிகளில் கண்டறியலாம். இந்த கருவியின் விலை ஆயிரம் ரூபாய். ஹட்ரஜன் பொட்டன்ஷியல் கண்டறிய ஒரு ‘லிட்மஸ்’ காகிதம் போதும். குடிநீரை காகிதத்தை நனைத்த 30 வினாடிகளில் மஞ்சள், பச்சை இரண்டு நிறத்திற்கு நடுவில் இருந்தால், அளவு சரியாக இருக்கிறது என்று அர்த்தம். நூறு காகிதம் அடங்கிய ‘லிட்மஸ்’ புத்தகம் விலை 100 ரூபாய்.

    ஒரு வீட்டுக்கு 10 செ.மீ., மழை

    நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பத்திற்கு ஓராண்டிற்கு குடிக்க, சமைப்பதற்கு 11ஆயிரம் லிட்டர் மழைநீர் தேவை. மதுரையில் சராசரி மழைஅளவு 86 செ.மீ., ஆயிரம் சதுரடி மொட்டைமாடி இருந்தால், மொத்தம் 10 செ.மீ., மழையே போதும். ஒருமுறை மழை பெய்தால் குறைந்தது 10 மி.மீ., என்று வைத்துக் கொண்டாலும் ஆயிரம் லிட்டர் கிடைத்து விடும். இதில் நேரடியாக வெயில் படாமல் இருந்தால் ஆறுமாதங்கள் வரை பாதுகாக்கலாம். அதன்பின்னும் தண்ணீர் இருந்தால், ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் ‘கெமிக்கல் ப்ளீச்’ கலந்தால் போதும். மீண்டும் குடிக்க பயன்படுத்தலாம். 500 சதுர அடி மொட்டை மாடி இருந்தால் 20 செ.மீ., மழை தான் தேவை. ஒவ்வொரு வீட்டிலும் மிக எளிமையாக மழைநீரை சேமிக்கலாம். குடிதண்ணீருக்காக அரசையோ, தனியாரையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை.

    போதையில் உளறிய ஸ்ரீ திவ்யா! வியப்பில் ஆழ்த்தினார்...!

    By: ram On: 00:52
  • Share The Gag
  • ஸ்ரீ திவ்யா தான் தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ஜீவா.

    இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் படக்குழுவினர்களான விஷ்ணு, ஸ்ரீ தேவி, சுசீந்திரன், விஷால் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    இதில் தொகுப்பாளர் ஒரு போட்டி ஒன்றை ஸ்ரீ திவ்யாவிற்கு வைத்தார். இதில் தண்ணியடித்து உளறுவது போல் அந்த போட்டி இருந்தது.

    ஆரம்பத்தில் மிகவும் வெட்கப்பட்ட ஸ்ரீ திவ்யா, நிகழ்ச்சி போக, போக நிஜமாகவே தண்ணியடித்தது போல் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.