Sunday 15 September 2013

எண்ணெய் வயல் முதல் ஏடிஎம் வரை உளவு பார்க்கும் அமெரிக்காவின் ‘பறக்கும் பன்றி’ ‘மவுன நாய்க்குட்டி’

By: ram On: 18:45
  • Share The Gag

  •  வெளிநாடுகளின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, ரகசிய தகவல்களை சேகரிக்கவில்லை என்று அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் கொடுத்தாலும், அதன் உளவு அமைப்பு, பிரேசில் நாட்டின் எரிவாயு கம்பெனிகளின் கம்ப்யூட்டர்களில் இருந்த ரகசிய ஆவணங்களை ‘திருடியிருப்பது’ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 
       அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, வெளிநாடுகளுடன் ‘சைபர்’ போர் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. 

    பல ரகசிய ஆவணங்களை, அந்தந்த அரசுகளின் சீக்ரட் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ‘திருடுகிறது’ என்று எட்வர்ட் ஸ்னோடென் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.  அமெரிக்க உளவு ஏஜன்சியின் முன்னாள் அதிகாரியான இவர் இப்படி ரகசிய தகவல்களை வெளியிட்டதால், அவரை நாட்டை விட்டு துரத்தியது மட்டுமின்றி, அவரை கைது செய்ய துடித்தது அமெரிக்கா. ஆனால், அவர் பல நாடுகளில் அலைந்து கடைசியாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். 

      அவர் இப்போது மீண்டும் ஒரு ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார். பிரேசில் நாட்டின் எண்ணெய் வளங்களை சாமர்த்தியமாக சுரண்டும் வகையில், கம்பெனிகள் ஏலம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை அந்த நாட்டு அரசின் ரகசிய கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, அமெரிக்கா எடுத்து விட்டதாக ஸ்னோடென் கூறியிருந்தார். 

      லண்டனை சேர்ந்த குளோப் டிவியில் கடந்த ஞாயிறன்று,  கார்டியன் பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டு இந்த ரகசிய தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரேசில் பிரதமர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரின் அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பாக பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஆகியவற்றின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி,  ஏலம் தொடர்பான  ஆவணங்களை அமெரிக்க ஏஜென்சி ‘திருடி’யிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

     ஏன் நடக்கிறது:  பிரேசில் நாடு, அமெரிக்காவுக்கு பிடிக்காத  நாடு. எண்ணெய் வளம் மிக்க நாடு. இதன் லிப்ரா எண்ணெய் வயலில் 1200 கோடி பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் 2 ஆண்டுக்கான  எல்லா எண்ணெய் தேவைகளுக்கும் இது போதுமானது. இதுபோல, பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஏலம் விடப்பட உள்ளது. அதை தனக்கு வேண்டியவர்கள் கையில் பெற்றுத்தருவதே அமெரிக்க உளவு  அமைப்பின் எண்ணம். இதனால் தான் முக்கிய ஆவணங்களை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி  எடுத்துள்ளது என்று புகார் எழுந்துள்ளது. 

    பிரேசிலின் மொத்த எண்ணெய் வளம் 10 ஆயிரம் கோடி பேரல்கள். மேலும் புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தன் வசம் கொண்டு வருவதே அமெரிக்காவின் நோக்கம் என்று பிரேசில் குற்றம்சாட்டுகிறது. அதற்காக, தன் உளவு வேலை மூலம், பிரேசிலில் ஏலம் எடுக்க சிலரை தயார் செய்கிறது  என்றும் அது சந்தேகிக்கிறது. 

    இது தொடர்பாக பிரேசில் பிரதமர் லுலா கூறுகையில், அமெரிக்கா  மறைமுக ‘சைபர் போர்’ துவங்கியுள்ளது. பிரேசில் மட்டுமின்றி, சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் இப்படி ‘சைபர்’ போரை துவங்கி உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. எந்த ஒரு ஆவணங்களும் ரகசியமானவை என்று கூற முடியாத நிலை உள்ளது. இதை உடனே கூட்டாக எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். 

    பறக்கும் பன்றி:  


    அமெரிக்க உளவு  அமைப்பு மட்டும் இந்த வேலையில் இறங்கவில்லை. அதற்கு முழு துணை நிற்பது, பிரிட்டனின் ஜிசிஎச்கியூ என்ற உளவு அமைப்பு. அமெக்காவின் இந்த சைபர் உளவு வேலையில் இப்போது இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றுக்கு பெயர் பறக்கும் பன்றி. இன்னொன்றின் பெயர் மவுன நாய்க்குட்டி. இந்த திட்டங்களில் ஈடுபட சில தனியார் நிறுவனங்களையும் அமெரிக்க உளவு அமைப்பு நியமித்துள்ளது. 

    இந்த தனியார் நிறுவனங்களுக்கு ‘சைபர்’ தில்லுமுல்லுகளில் இறங்க முழு அதிகாரம் அளித்துள்ளது. எந்த நாட்டின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளில் ஊடுருவி தகவல்களை எடுக்க வேண்டும், எந்த தகவல்கள் வேண்டும் என்று அமெரிக்க அமைப்பு சொல்லி விடும். அவற்றை இந்த தனியார் நிறுவனங்கள் சேகரித்து தரும். 

      இந்த இரு திட்டங்கள் மூலம், 212 நாடுகளின் 10,000 வங்கிகளின் ரகசிய ஆவணங்களை சேகரிப்பது முக்கிய நடவடிக்கை. ஏடிஎம்களில் பணம் எடுக்கும் தகவல்கள் போன்றவையும் இதில் அடங்கும். இந்த நாடுகளில் இந்தியாவும் உண்டு. தனிநபர் ஏடிஎம் கணக்கு வழக்குகளும் கூட இந்த ரகசிய நடவடிக்கை மூலம் அமெரிக்க உளவு அமைப்புக்கு போகிறது என்கிறார் கிரீன்வால்டு. 

    ஏன் செய்கிறது அமெரிக்கா? 

    * அமெரிக்காவுக்கு ‘எண்ணெய் பசி’ உண்டு. அதனால், பல நாட்டு  எண்ணெய் வளங்களை தன் வசம் வைக்கவே அதில் உளவு வேலை பார்க்கிறது. 
    * அடுத்து, நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளின் இமெயில்கள், ரகசிய கணக்குகள். அதிலும் உளவு பார்க்கிறது. 
    * இன்னொரு பக்கம், நிதி நடவடிக்கைகளை முடக்கும் உளவு வேலை. பங்கு சந்தை, நிதி நடவடிக்கைகள் தொடர்பான எல்லாவற்றையும் கண்காணிக்கிறது. 
    * ஏடிஎம்களில் பணம் புழக்கம் போன்றவற்றையும் அமெரிக்க உளவு ஏஜென்சி கண்காணிக்கிறது. 
    * எண்ணெய் வளம், நிதி வளம் எல்லாவற்றிலும் தன் ‘கை’ இருந்தால் எந்த நாடும் தைரியமாக எதிர்க்காது  என்பதற்காகவே இப்படி ‘சைபர்’ போரில் இறங்கியிருக்கிறது  என்பது ஸ்னோடென் குற்றச்சாட்டு. 
    * பிரேசிலில் உளவு பார்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், அமெரிக்கா மவுனம் சாதிக்கிறது. ஐநா தலையிடுமா என்பதே இப்போதைய கேள்வி.

    நண்பனாகும் தகுதி...................குட்டிக்கதைகள்

    By: ram On: 18:37
  • Share The Gag



  • சுண்டெலி ஒன்று .....தவளை ஒன்றுடன் ஒட்டிக் கொண்டிருந்தது.தவளையோ பெரும்பாலும் தண்ணீரிலேயே வசித்து வந்தது.....அது ஒரு நாள் சுண்டெலிக்கு ...தான் நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக்கூறி ...சுண்டெலியின் காலை தன் காலுடன் ஒன்று சேர்த்து கயிற்றால் கட்டிக் கொண்டது.


    அப்போது மேலே பறந்த பருந்து ஒன்று இவற்றைப் பார்த்து கொத்த வந்தது.


    உடனே தவளை ...சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது.தண்ணீரில் சுண்டெலி மூழ்கி மூச்சு திணறி இறந்தது...அதன் உடல் மேலே மிதந்தது...ஆனால் கால்கள் இன்னமும் தவளையுடன் சேர்த்து
    கட்டப்பட்டிருந்தது....


    அந்த சமயம்...தண்ணீரில் செத்த சுண்டெலி மிதந்ததைப் பார்த்த பருந்து கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது.

     
    அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.பருந்து தவளையையும் கொன்று தின்றது.

     
    நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன்..அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும்.இல்லையேல் தவளைக்கு ஆன கதியே!
     

    கோச்சடையானில் 2 நாளுக்கு ரூ.3 கோடி வாங்கிய தீபிகா படுகோனே...!

    By: ram On: 18:31
  • Share The Gag

  • ரஜினியின், கோச்சடையான் படத்தில் இரண்டே இரண்டு நாள் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, தனது அப்பா ரஜினியை வைத்து இயக்குநராக அவதரித்துள்ள படம் கோச்சடையான். 3டி அனிமேஷனாக மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களான அவதார், டின் டின் பட பாணியில் தயாராகியுள்ளது இப்படம். சமீபத்தில் இப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு நாளில் சுமார் 2 மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்து மகிழ்ந்துள்ளனர். ரஜினி இந்தபடத்தில் முற்றிலும் வித்தியாசமாக தோன்றுகிறார், அதுவும் இ‌ளமையாக காட்சியளிக்கிறார். 

    இதற்கிடையே இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படு‌கோனே நடித்துள்ளார். படத்தில் இவருக்கு ‌கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ.3 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தனைக்கும் இவர் நடித்தது என்னவோ வெறும் இரண்டு நாட்கள் தானாம். இருந்தும் அவர் இவ்வளவு சம்பளம் பெற்று இருக்கிறார். 
    மாதகணக்கில் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் நடிகைகள் பலரே கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் பெறுகின்றனர். அதிலும் தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் அனுஷ்கா, சமந்தா, நயன்தாரா போன்ற நடிகைகளே ரூ.1 முதல் ரூ.1.5 கோடி தான் சம்பளம் பெறுகின்றனர். அப்படி இருக்கையில் இரண்டு நாளுக்கு, தீபிகாவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்து இருப்பது நம்மூர் நடிகைகளை வாயடைக்க செய்துள்ளது.

    வாயேஜர் விண்கலம் சாதனை : ஒலியை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியது!

    By: ram On: 18:17
  • Share The Gag





  • சூரிய மண்டலத்தை கடந்து சென்றுள்ள முதல் விண்கலமான அமெரிக்காவின் வாயேஜர் 1 முதன்முறையாக சில விநாடிகள் நீடிக்கும் ஒலியை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வாயேஜர்  1 என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. அதற்கு துணை விண்கலமாக 16 நாட்களுக்குப் பிறகு வாயேஜர்  2 விண்கலத்தையும் அனுப்பியது. ரூ.6500 கோடி செலவில் இந்த திட்டத்தை நாசா செயல்படுத்தியது. 36 ஆண்டுகள் பயணம் செய்த வாயேஜர்1 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சூரிய மண்டலத்தை கடந்து இன்டர்ஸ்டேல்லர் மண்டலத்தை அடைந்தது. சூரியனில் இருந்து ஏறக்குறைய 1900 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கிறது. 


    மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலங்களால் சூரிய மண்டலத்தை தாண்டி பயணம் செய்ய முடியுமா என்ற கேள்வி நீண்ட காலமாக அறிவியல் உலகத்தில் இருந்து வந்தது. ஆனால், புளுடோனியத்தால் தயாரிக்கப்பட்ட வாயேஜர்  1 விண்கலம் முதல் முதலாக சூரிய மண்டலத்தை தாண்டி சென்றுள்ளது. இது அறிவியல் உலகில் மிகப்பெரிய நினைத்து பார்க்க முடியாத சாதனையாக கருதப்படுகிறது.



    வாயேஜர் விண்கலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள பிளாஸ்மா பகுதியில் பயணம் செய்து, இன்டர்ஸ்டெல்லர் மண்டலத்தை அடைந்துள்ளது. அங்கிருந்து வாயேஜர் 1 அனுப்பும் சிக்னல்கள் பூமியை வந்தடைய 17 மணி நேரம் ஆகிறது. இத்தனைக்கும் சிக்னல்கள் ஒலியின் வேகத்தில் பயணம் செய்கின்றன. ரேடியோ சிக்னல்களையும் ஒலி சிக்னல்களையும் அங்கிருந்து தொடர்ந்து அனுப்பி வருகிறது.

    அக்னி -5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; அணு ஆயுதம் ஏந்தி இலக்கை தாக்கியது!

    By: ram On: 17:44
  • Share The Gag


  • இந்தியா தயாரித்த அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் வீலர் தீவு பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை சீனாவை மிரட்டும் அளவிற்கு பலம் படைத்ததாகும். 


    இது போன்ற அக்னி 5 சோதனை கடந்த 2 ஆண்டுகளில் இன்று 2வது முறையாகும். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற 5 நாடுகளில் மட்டுமே இது போன்ற அணு ஆயுதம் சுமந்து தாக்கு ஏவுகணையை கொண்டுள்ள நாட்டில், இந்தியாவும் 6 வது நாடாக இடம் பிடிக்கிறது. 




    இதுவரை குறைந்த தூரம் மட்டுமே செல்லக்கூடிய அக்னி தற்போது 5 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது அக்னி-5. இந்தியாவும் நீண்ட தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதம் தன்வசம் வைத்திருக்கிறது என்பது பாதுகாப்பு துறையில் ஒரு கூடுதல் மைல்கல் . இது 50 டன் எடை கொண்டது. தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் வெடிபொருட்களை தூக்கி செல்லும் திறன் படைத்தது, 17 மீட்டர் உயரம் கொண்டது. இன்றைய அக்னி-5 சோதனை உலக அளவில் இந்தியாவை நிமிரச்செய்துள்ளது என்பது மிகை அல்ல. 

    "கர்வம் கூடாது"...................குட்டிக்கதைகள்

    By: ram On: 17:32
  • Share The Gag



  • ரமேஷ் புத்திசாலி மாணவன்...

    அதனால் அவனுக்கு கர்வம் உண்டு...யாருடனும் நட்பு வைத்துக்கொள்ளமாட்டான்..எல்லோரும் அவனை விட அறிவில் மட்டமானவர்கள் என எண்ணம்.

    மற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரமேஷை ஏதாவது ஒரு பந்தயத்தில் தோற்கடித்து ...வல்லவனுக்கு வல்லவன் பூமியில் உண்டு என நிரூபிக்க வேண்டும் என எண்ணினர்

    அப்போது ...அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்த வினோத் என்ற மாணவன் அந்தப் பணியை ஏற்றான்.

    அவன் ரமேஷிடம் சென்று 'ரமேஷ் நீ புத்திசாலி ..அதேபோல நானும் உன்னைவிட புத்திசாலி தான்' என்றான்.

    கோபமடைந்த ரமேஷ் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ..'நான் ஒரு கேள்வி கேட்பேன் .உனக்கு விடை தெரியவில்லை எனில் நீ எனக்கு பத்து ரூபாய் தரவேண்டும்.நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் நூறு ரூபாய் தருகிறேன்'என்றான்.ஆனால் அந்த கேள்விக்கு உனக்கு விடை தெரியவில்லை என்றால் கூட நீ பத்து ரூபாய் கொடுத்தால் போதும்' என்றான்.

    பின் ரமேஷ் கேட்டான்'பூமிக்கும் ..சந்திரனுக்கும் இடையே எவ்வளவு தூரம்'.

    வினோதிற்கு பதில் தெரியாததால் பத்து ரூபாயை ரமேஷிற்கு கொடுத்தான்.இப்போது வினோத் கேள்வி கேட்கவேண்டும்.

    வினோத் கேட்டான்..

    'மலை ஏறும்போது மூன்று கால்களுடன் ஏறி..இறங்கும்போது நான்கு கால்களுடன் இறங்கியது யார்'.

    ரமேஷிற்கு விடை தெரியவில்லை.அதனால் ஒப்புக் கொண்டபடி நூறுரூபாயை வினோதிற்கு கொடுத்துவிட்டு ..விடையை நீயே சொல்' என்றான்.

    'எனக்கும் தெரியாது'என்ற வினோத் பத்து ரூபாயை நீட்டினான்.அப்போது தான் கூறிய வார்த்தைகளை வைத்தே வினோத் தன்னை வென்றதை உணர்ந்து ரமேஷ் தலை குனிந்தான்.

    அவன் கர்வம் மறைந்து அனைவருடனும் நட்பாக பழக ஆரம்பித்தான்.

    நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே?

    By: ram On: 17:19
  • Share The Gag


  • நிஜத்தில் கெட்டவனாக வாழ்ந்து நிழலில் நல்லவர்களாக வாழ்வதும் நிஜத்தில் நல்லவனாக வாழ்ந்து, நிழலில் கெட்டவர்களாக நடிப்பதும் சினிமாவின் இன்னொரு பக்கம்….இதுவரை ஏற்ற அனைத்து வேட்ன்களுமே நெகடிவ் தான் என்றாலும் ஜீவன் அப்படியொன்றும் கெட்டவனில்லையாம் …ஆம்..சுமார் இரண்டரை வருடங்களாக திரை வட்டாரத்தில் இருந்து விலகி இருந்த ஜீவன் திடீர் அவதாரம் எடுத்திருக்கிறார்.இதையடுத்து கண் இல் பட்ட அவரிடம் “என்ன..நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே ? என்று கேட்டோம்.


    sep 15 jeevan-actor



    அதற்கு பதிலளித்த ஜீவன்”கிருஷ்ணா லீலை முடிந்து ரிலீஸுக்கு தயாரானது சில காரணங்களால் தடை பட்டு போனது அது ரிலீஸாகி இருந்தால் இந்த இடைவெளி தெரியாமல் போயிருக்கும் .அதோடு நான் கலையுலகில் பயணித்த காலம் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம் ஆனால் நடித்த படங்கள் குறைவுதான் அதனால் இந்த இடைவெளி எனக்கு பெரிதாக தெரியவில்லை.இதையெல்லாம் விட சமீபத்தில் தான் என் அப்பா இறந்தார்.எங்களுக்கு இருக்கிற வியாபாரங்களை ஒழுங்கு படுத்த வேண்டிய பொறுப்பில் நான் இறங்கியதால் இந்த இடைவெளி.வெளிநாட்டில் இருந்து சென்னை வந்ததும் செல்வா சார் ஒரு கதை சொன்னார் நான் எதிர் பார்த்த திருப்தி அதில் இருந்தது அதோடு ஏற்கனவே நானும் அவரும் நான் அவனில்லை பார்ட்,பார்ட் ,தோட்டா என மூன்று படங்களில் இணைந்தோம் வெற்றிபெற்றோம் இது நான்காவது முறை.தயாரிப்பாளர் விஷ்வாஸ் சுந்தர் பெரிய தயாரிப்பாளர் அதனால் மீண்டும் வருவேன்


    அது சரி.. நீங்கள் நல்லவனா? கெட்டவனா ?ரெடிமேட் ஆடைகளை போல் கெட்டவன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறீர்களே?


    திருட்டு பயலே படத்தில் நான் மட்டும்மல்ல…சோனியாஅகர்வால்,மாளவிகா,அப்பாஸ்,என எல்லோருக்குமே நெகடிவ் ரோல் தான் கிளைமாக்ஸில் நல்லவர்களாக மாறுவது மாதிரி முடித்திருந்தார் சுசிகணேசன்.அது மாதிரி காக்க காக்க படத்தில் ,முழு வில்லன்.நான் அவணில்லை யில் கெட்டவன் மாதிரியான நல்லவன் பாத்திரம் …


    .தோட்டாவில் கெட்டவன் ஒருவன் நல்ல போலீஸ்காரனை உருவாக்க முடியும் என கதாபாத்திரம்.சில கதாபாத்திரங்கள் என்னை முன்னிலைப் படுத்தியதால் அப்படியொரு வில்லன் தோற்றம் எனக்கு.அதுவும் என்னை லைம்லைடில் வைத்திருப்பதால் எனக்கு சந்தோசமே.இனி வேட்டை ஆரம்பித்து விட்டேன் நல்ல கதைகளையும் ,கதாபாத்திரங்களையும் வேட்டையாடி என்னை நான் நிலை நிறுத்தி கொள்வேன் …முதலில் செல்வா இயக்கும் படத்திற்கு நல்ல டைட்டிலை வேட்டையாடி கொண்டிருக்கிறோம் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது…என்கிறார் ஜீவன்.

    டி-சர்ட் அணிந்து அலுவலகம் வரத் தடை!: கர்நாடக அரசு அதிரடி!!

    By: ram On: 17:11
  • Share The Gag


  • அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பாக கர்நாடக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்.அதில் “புதிய பணி நியமனம் பெற்றுள்ள ஊழியர்கள் அணியும் உடை அலுவலக கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அரசு அலுவலகங்களின் கவுரவத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அலுவலக நேரத்தில் ஆடை கட்டுப்பாட்டு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது.



    sep 15 Karnataka State Secretariat

     


    அதாவது ஆண் ஊழியர்கள் சட்டை, முழு பேண்ட், பைஜாமா மற்றும் குர்தா மட்டுமே அணிய வேண்டும். டி-சார்ட் அணியக்கூடாது. அதேபோல் பெண் ஊழியர்கள் சேலை, சுடிதார் ஆகியவற்றை மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் பாவாடை, டி-சார்ட் மற்றும் பேண்ட் ஆகியவற்றை அணிந்து அலுவலகங்களுக்கு வரக்கூடாது.அரசு வாகன டிரைவர்கள் மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீருடையை கட்டாயம் அணிய வேண்டும். அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.”என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


    Karnataka govt to enforce dress code for its employees.
     
    *********************************************** 


     Now a dress code for Karnataka government employees–pant and shirt/pyjama/kurta for men and saree or “chudidar” for women. The state government has announced enforcement of a dress code for its officials and staff after some were found to wear clothes “that did not bring any repute” to the offices. 

    அழகை பராமரிக்க இயற்கை வழிகள்!

    By: ram On: 07:28
  • Share The Gag
  • அழகை பராமரிக்க இயற்கை வழிகள்

     
    இயற்கையான அழகுக்கு ஏங்காதவர்கள் யாரேனும் உண்டா? எப்போதும் அழகாகத் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உண்டு. அதற்காக பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அதே நேரத்தில், வேதிப்பொருள் குறைவாக உள்ள அல்லது வேதிப்பொருட்களே இல்லாத அழகு சாதனப் பொருட்களையே விரும்புகிறோம்.

    வேதிப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது மட்டுமல்ல. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அவை சருமத்திற்கு, கூந்தலுக்கு மற்றும் உடலுக்கு கேடுகள் விளைவிப்பவை என்றும் அனைவரும் நன்றாக அறிவோம்.

    எனவே, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தி வரும் இயற்கையான பொருட்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உடலை அழகாகப் பராமரிப்பதற்காக, சில அழகுக் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

    இவற்றைச் செய்து வந்தால் உடல் மற்றும் முகம் இயற்கை வழியிலேயே அழகு பெறுவதுடன், மனதுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியை அளிக்கும். எனவே இவற்றை உடலை இயற்கை வழியில் மேலும் மெருகேற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு என்று எடுத்துக் கொண்டு பின்பற்றிப் பாருங்களேன்!

    சிட்ரஸ் ஃபேஸ் மாஸ்க் :

    சுருக்கமில்லாத சருமத்துடன் எப்போதும் இளமையாகத் தோன்றுவதையே அனைவரும் விரும்புவோம். எலுமிச்சைச் சாறு, தேன், சாத்துக்குடிச் சாறு மற்றும் தயிர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொண்டு, சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். தயிருக்கு இயற்கையிலேயே, ப்ளீச் செய்யும் குணம் உண்டு என்பதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளும் இக்கலவையைப் பயன்படுத்தினால் காணாமல் போகும்.

    முட்டையின் வெள்ளைக் கரு :

    முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை மென்மையாக தோற்றமளிப்பதற்கு மற்றுமொரு அழகுக்கலவையும் உண்டு. முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக ஒரு கரண்டியினால் கலக்க வேண்டும்.

    அதன்பின் அந்த கலவையை கண்கள், தாடைகள், நெற்றி, கன்னம் போன்ற பகுதிகளில் பூச வேண்டும். பின் அவை நன்றாக காய்ந்த பிறகு கழுவித் துடைத்துவிட வேண்டும். இவ்வாறு தவறாது செய்து வந்தால், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஆகியவை மெல்ல மறைவதைக் காண முடியும். சுருக்கங்கள் மறைவதனால், இளமையான தோற்றமும் கிடைக்கும்

    வெள்ளரிக்காய் :

    வெள்ளரிக் காய்களை வட்ட வடிவிலான துண்டுகளாக வெட்டி, அவற்றைக் கண்கள் மீது சிறிது நேரம் வைத்து வந்தால், அது கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்களைப் நீங்கும். மேலும் இத்தகைய வெள்ளரிக்காயைக் கொண்டு சிறந்த ஃபேஷியல் மாஸ்க் செய்யலாம். அதற்கு சிறிய வெள்ளரிக்காயை, ஓட்ஸ் உடன் மிக்ஸியில் போட்டு அரைத்து, தயிருடன் கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்

    பழங்கள் மற்றும் காய்கறிகள் :

    செர்ரி, தக்காளி, உருளைக் கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும். இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனால் பக்க விளைவுகள் ஏதுமின்றி முகம் எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.

    திராட்சை :

    திராட்சைப் பழங்கள் ஒரு அற்புதமான க்ளின்சர்களாகச் செயல்படும். எனவே அவற்றை எடுத்து சாதாரணமாக முகத்தில் அழுத்தித் தேய்த்தாலே போதும். முகம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும். முகத்தில் பருக்களும், சிறு கட்டிகளும் நிறைந்து அவஸ்தைப்படுவோருக்கு பயன் தரும் சிறப்பான மாஸ்க்.

    எலுமிச்சை சாறுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இக் கலவையை முகத்தில் பிரச்சினை உள்ள பகுதிகளில் தடவி ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்வதால், முகத்தில் உள்ள பருக்களும் சிறு கட்டிகளும் நீங்கும்.

    மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் :

    பளிச்சிடும் நிறத்தில் சருமம் பிரகாசிக்க மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் உதவும். அதற்கு சிறிது மஞ்சள் தூள், பாதாம் எண்ணெய், கடலை மாவு, பால், சந்தனப் பவுடர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இக்கலவையை தினமும் முகத்தில் பூசிவந்தால், முகம் மாசு மருவின்றிப் பொலிவுடன் திகழும்.

    ஈஸ்ட்டுடன் கூடிய தயிர் மாஸ்க் :

    எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தின் விளைவாக முகத்தில் பரு மற்றும் தோல் தடித்தல் உண்டாகும். மேலும் சருமத் திலுள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக எண்ணெய் சுரக்கும். ஈஸ்ட்டுடன் சிறிது தயிரை கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் வழி வதைக் குறைத்து பருக்கள் தோன்றுவதையும் குறைக்கும்.

    தேயிலைத்தூள் பை :

    கொதிக்கும் நீரில் தேயிலைத்தூள் பைகளை 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் நன்றாகக் குளிர வைத்து, நீரில் அலசிய கூந்தலில் இந்த நீரைத் தடவ வேண்டும். இதனால் தலைமுடிக்கு கூடுதல் பளபளப்பைத் தரும் திறன் தேயிலைக்கு உண்டு. மேலும் இந்த முறை தலைமுடியிலுள்ள சிக்குகளை நீக்கி எளிதாகப் பராமரிக்கவும், தலைமுடியை மென்மையாக்கவும் இது உதவுகிறது.

    சோள மாவு மற்றும் வாழைப்பழம் :

    சோள மாவும், வாழைப் பழங்களும் நம் வீடுகளில் எப்போதும் இருக்கும். இரண்டையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொண்டு, பாதங்களில் தடவி, பின்பு பாதங்களை 30 வினாடிகளுக்கு மசாஜ் செய்தாலே போதும். உடனடியாகவே பாதங்கள் மென்மை யாவதை உணர முடியும்.

    சோளமாவு ஒரு சிறந்த எக்ஸ்ஃ பொலியேட்டராக செயலாற்றி, பாதங்களிலுள்ள சருமத்தின் கடினத்தன்மையைப் போக்கும். மேலும் இதில் உள்ள வாழைப்பழமானது பாதங்களை மென்மையாக்கும்.

    மாய்ஸ்சுரைசர் :

    கைகளை வறட்சியின்றி வைப்பதற்கு வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே மாய்ஸ் சுரைசரைத் தயாரிக்கலாம். அதற்கு முட்டையின் மஞ்சள் கரு, தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை, எலுமிச்சை ஆகிய வற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

    ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும் போது இதனைப் பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பாத்திரங்கள் துலக்கியிருந்தாலும், துணிகள் துவைத்திருந்தாலும், கைகள் வறண்டு போகாமல் மென்மையாகவே இருக்கும்.

    ஆரஞ்சு ஸ்டிக் :

    ஆரஞ்சு ஸ்டிக் ஒன்றை கொண்டு நகங்களைச் சுத்தம் செய்து நகங்களின் முனையைத் தேய்த்து மழுங்கச் செய்யலாம். சுத்தமான சோப்புத் தண்ணீரில் கைகளை 5 நிமிட நேரம் நனைக்கவும். பின்பு ஆலிவ் எண்ணெய் கொண்டு தினந்தோறும் விரல் நுனிகளை மசாஜ் செய்தால். உங்கள் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

    அழகான உதடுகளை பெற :

    உதடுகள் வறண்டு போகும் தன்மை உடையவையாக இருந்தால், பாதாம் எண்ணெய் தடவி வரவும். குளிர் காலங்களில் உதடுகள் வெடிக்கின்றனவா? ஆமெனில் சிறிது தேனைத் தடவலாம். இயற்கையான அழகுடன் உதடுகளைப் பெற வேண்டுமென விரும்பினால், உணவில் நிறைய பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
     

    கம்பு அடை!

    By: ram On: 07:09
  • Share The Gag
  • கம்பு அடை


    தேவையானப் பொருள்கள்:
    கம்பு மாவு-ஒரு கப்
    சின்ன வெங்காயம்-7
    பச்சை மிளகாய்-1
    பெருஞ்சீரகப் பொடி-சிறிது
    கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
    கறிவேப்பிலை-ஒரு கொத்து
    உப்பு-தேவைக்கு
    நல்லெண்ணெய்-தேவையான அளவு

    செய்முறை:


    * வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி,பெருஞ்சீரகப் பொடி,உப்பு இவற்றைப் போட்டு பிசைந்துகொண்டு அதில் கம்புமாவை சேர்த்து நன்றாகப் பிசையவும்.

    * பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் சப்பாத்தி மாவு பதத்தைவிட கொஞ்சம் இறுக்கமாகப் பிசைந்துகொள்ளவும்.

    * கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு மாவு முழுவதும் தடவி ஒரு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.

    * கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.

    * ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவும்.

    * இதற்கு எல்லா வகையான சட்னியும் பொருத்தமாக இருக்கும். 

    மனதில் உறுதி வேண்டும்.........குட்டிக்கதை

    By: ram On: 07:04
  • Share The Gag


  •  
    அது ஒரு சிறு கிராமம்...அந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்னை வந்தது...மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கிணறு வெட்ட தீர்மானித்தனர்.ஒரு இடத்தை தீர்மானித்து ...அந்த இடத்தில் இருபது அடி ஆழம் தோண்டினர்.ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை..


    இடம் சரியில்லை என நினைத்து வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு முப்பது அடி வெட்டினர்.அங்கும் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.


    அந்த இடமும் சரியில்லை என மூன்றாவதாக ஒரு இடத்தை கண்டுபிடித்து அங்கு ஐம்பது அடி வெட்டினர்.தண்ணீர் இல்லை.


    மூன்று இடங்களிலும் சேர்த்து அவர்கள் நூறடிக்கு மேல் தோண்டியுள்ளனர்.


    அவர்கள் தங்கள் முயற்சியை ஒரே இடத்தில் பொறுமையுடன் மேற்கொண்டிருந்தால் முதலில் வெட்டிய இடத்திலேயே தண்ணீர் கிடைத்திருக்கும்.


    மனதில் உறுதியுடன் செய்யும் காரியத்தில் ஈடுபடவேண்டும்....அப்போது தான் வெற்றி கிடைக்கும்.


    எடுத்த காரியத்தில் கவனம் செலுத்தி மனதை ஒருமுகபடுத்தினால் வெற்றி நிச்சயம்.

    ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?

    By: ram On: 07:00
  • Share The Gag





  • கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர்.



     தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 



    8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது "ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.