Tuesday 19 November 2013

'தூம் 4'ல் நடிப்பாரா அஜித்?

By: ram On: 23:07
  • Share The Gag
  •   
    பாலிவுட்டில் 'தூம்1', 'தூம்2'  படங்கள் மாஸ் ஹிட் ஆனதால், 'தூம்3' படம் உருவானது.

    'தூம் 3' படம் ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது. அமீர்கான், அபிஷேக்பச்சன், காத்ரீனா கைஃப், உதய் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், 'தூம் 4' படம் எடுத்தால் அதில் அஜித் நடித்தால் நடிப்பார்  என்று சொல்லப்படுகிறது.

    'மங்காத்தா', 'ஆரம்பம்' படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் அஜித்.

    கார், பைக் ரேஸில் அஜித்தை அடித்துக்கொள்ள ஆளில்லை  என்பதால் 'தூம்4' படத்தில் நடிக்க அஜித் மிகப் பொருத்தமாக இருப்பார் .

    மேலும், 'ஆரம்பம்' பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த சமயத்தில் அஜித் பாலிவுட்டில் நடிப்பது சரியாக இருக்கும் என்கிறார்கள்.

    அஜித் பாலிவுட்டில் நடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ஐ என் எஸ் விக்ரமாதித்யா – கொஞ்சம் நதி மூலம் + ரிஷி மூலம்!

    By: ram On: 20:54
  • Share The Gag


  •  ஐ என் எஸ் விக்ரமாதித்யா - என்னும் மாபெரும் விமான தாங்கி போர்க்கப்பலை இந்தியா பத்தாண்டுகளுக்கு முன் வாங்கியது நினைவிருக்கலாம். ஆனால் அது இன்னும் சில நாட்களில் இந்தியக்கடல் எல்லைக்குள் வந்து சேரும். இது ஒரு 9 வருட சமாச்சாரம். இது முதலில் புதுக்கப்பல் அல்ல இது ஒரு 26 வருட கப்பல். இதை ரஷியா கட்டியது 1987 ஆம் ஆண்டு. பின்பு இதை 9 வருஷத்திலே மூட்டை கட்டி விட்டனர் ரஷிய மிலிட்டிரி. ஏன் இதனை இயக்கும் செலவு அப்போதைய ர்ஷிய பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போட்டதன் காரணம் தான், பின்பு இது கடலோர குப்பையாய் இருந்த இதை பல ஆண்டு பேசி ஒரு வழியாய் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வாங்கப்பட்டது.


    அதாவது டீல் எப்படி – கப்பல் இலவசம். அதை 800 மில்லியன் பராமரிப்பு செலவை இந்தியா ரஷியாவுக்கு கொடுக்க வேண்டும். அது போக 1 பில்லியன் – 100 கோடி டாலர்கள் புது விமானமும் ரேடார்கள் மற்றூம் ரன்வே பராமரிப்புக்காக ஒதுக்கபட்டு 3 வருடத்துக்குள் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கபட்ட இந்த கப்பல் பல பிரச்சினைகளை சந்தித்தது.2008 ஆம் ஆண்டு ரிட்டையர் ஆக வேண்டிய ஐ என் எஸ் விராட் இந்த டிலே பிரச்சினையால் 2012 வரை உழைக்க கட்டளையிடப்பட்டது.

    1960ல் இருந்து இந்தியாவில் விமானம் தாங்கிய கப்பல் கொண்ட இந்திய ரானுவம் 2008 முதல் இன்று வரை விமானம் தாங்கிய கப்பல் இல்லாமல் இருந்த ரிஸ்க் காலம் இது தான். விராட் குற்றூயிரும் கொலையுருமாய் பட்டி பார்த்து அதை 2012 வரை வைத்து கடந்த ஒரு வருட கால இந்திய நேவியின் ரிஸ்க் இன்னும் யாருக்கு எடுத்துரைக்கவே இல்லை. இது இந்தியாவுக்கு பெரிய ரிஸ்க் ஆகும். பிரச்சினை என்ன? பரமாரிப்புக்காக 800 மில்லியன் டாலர் என ஒத்து கொண்ட இந்தியா வருடா வருடம் டிலே என்பதால் பட்ஜெட் எகிறி கொண்டு போனது.

    கேபிள் வேலை மட்டும் டபுள் ஆகியது. கடைசியில் இந்தியா 2009 ஆம் ஆண்டு இன்னும் 120 கோடி டாலர் தருகிறேன் என்று கூறி பணிந்த காரணம் ரஷியா 2008 ஆம் ஆண்டு இந்த பிராஜக்ட்டை ஸ்கிராப் செய்வதாய் மிரட்டியது. இதனால் சி ஏ ஜி எனப்படும் இந்தியன் அரசாங்க ஆடிட்டர்ஸ் ஒரு பழைய கப்பலுக்கு ஏன் 235 கோடி டாலர் என கேட்டு இதற்க்கு புதுசு வாங்கியிருக்கலாம் என கூறிய போது இந்திய ரானுவ செகர்ட்டிரியோ நான் வேண்டுமானல் உடனே 200 கோடி செக் தருகிறேன் ஒரு கப்பலை வாங்கி காட்டுங்கள் என கூறி இந்த பிரச்சினைக்கு முற்றூபுள்ளி வைத்தாலும் 2010 ஆம் ஆண்டு தொடங்கிய சோதனை போன வாரம் தான் டெலிவரி கொடுக்கும் கட்டத்துக்கு வந்தது – இல்லை வைக்கப்பட்டது. 340 கோடி டாலர் தான் இதன் கடைசி விலை என 2008ல் மிரட்டிய ரஷியாவை மாற்றீயது 2010 ஆம் ர்ஷிய பிரதமரின் வருகை ஒரு வழியாய் 235 கோடி டாலருக்கு முடிவு செய்தமைக்கு முக்கிய காரணம் பிஜேபியின் சி ஏ ஜியின் அழுத்தம் தான்.

    இந்த டிலே ஏன் என்று ஆராய்ந்த போது 2010ல் இதிலும் ஒரு பெரிய ஊழல் இந்தியா செய்கிறது என அலர்ட் செய்த ரஷிய அட்மிரல் கோர்கோஷெவ். இதனால் இதன் பிராஜக்ட் இயக்குனராய் இருந்த சுக்ஜிந்தர் சிங் இதன் பொறூப்புகளில் இருந்து விடுவிக்கபட்டார். அப்படி இப்படின்னு பல டிரையல் முடிச்சு 16 நவம்பர் இதனை கமிஷன் செய்த போது சிறப்பு விருந்திரனாய் இந்திய ராணுவ அமைச்சர் அந்தோனி இந்தியா சார்பில் சென்றார். இந்திய மற்றும் ரஷிய ராணுவ அதிகாரிகள் மூலம் இந்தியாவுக்கு 320 நாட் வேகத்தில் வரும் இந்த கப்பலில் மொத்தம் நீலம் கால் கிலோமீட்டருக்கு மேல் அதாவது 283..5 மீட்டர் அகலம் 59.8 மீட்டர் 1400 முதல் 2000 பேர் இருக்கும் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம். இதில் 34 விமானங்கள் – மிக் 29 மற்றூம் ஹெலிகாப்டர்களும் அடக்கம். இதில் இந்தியாவின் துருவ்ம கூட அடக்கம்.

    இது இந்திய ராணுவத்துக்கு பெரிய மேட்டர் இதன் ரேஞ் 13,000 கிலோமீட்டர்கள். ஒரு வழியாய் இந்தியாவின் எலக்ஷனுக்கு முன்னாடி வரலைனா காங்கிரஸ் டவுசர் அவுந்திரும்னு அவசர கதியில வரும் கப்பலை . இதற்க்கு நடுவே முந்தா நாள் நேட்டோ விமானம் வெகு அருகில் கண்காணிக்க வட்டமடித்து நிறைய புகைப்படங்களை எடுத்தது. அது போக விமானத்தின் அக்வுஸ்டிக் ஒலியை கண்காணிக்க விமானம் அருகே ஒரு டுரோனையும் இறக்கிய புகைப்படத்தை ராணுவம் வெளியே சொல்லுமா இதன் பிரத்யோகப்படங்கள் உங்களுக்கே. நேட்டோவுக்கு போட்டோ ஆதாரத்துடன் அனுப்பிய கேள்விக்கு இன்னும் மவுனம் மட்டுமே பதிலாக தந்துள்ளது. வாஜ்பாய் என்னும் மாமனிதரின் 10 வருட கனவு இன்னும் சில நாட்களில் இந்தியாவில் காணலாம்.

    எச்சரிக்கை! கணவன் மனைவி பிரச்சனை!

    By: ram On: 20:48
  • Share The Gag
  • கணவனுக்கும்
    மனைவிக்கும்
    குழந்தைக்கு பேர்
    வைப்பதில் தகராறு,
    அவங்க அவங்க
    அப்பா பேரை தான்
    வைக்கணும் என்று.

    எதிர்த்த வீட்டுக்காரர்
    வந்து யோசனை சொன்னார்,

    உங்க அப்பா பேர்
    சீனுவாசன்
    உங்க கணவர்
    அப்பா பேரு கிருஷ்ணன்
    ரெண்டையும்
    சேர்த்து சீனிவாச
    கோபால கிருஷ்ணன்
    ன்னு வையுங்க என்றார்.

    அதிர்ந்த மனைவி கேட்டார்,
    அது சீனிவாசகிருஷ்ணன் தானே?
    சரி இடையிலே கோபால்
    எங்கிருந்து வந்தார் ??

    எதிர் வீட்டுக்காரர்
    சொன்னார்
    ஹி ஹி அது எங்க
    அப்பாவோட பெயர்
    சும்மா இருக்கட்டுமே என்றார்..

    கணவன்
    மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால்
    இப்படி தான் ஆட்கள்
    பூந்துதுடுவாங்க ...

    சுக பிரசவத்திற்கு உதவும் நவீன கருவி! -அர்ஜென்டினா கார் மெக்கானிக் அசத்தல்!

    By: ram On: 20:10
  • Share The Gag
  •  

    இப்போதெல்லாம் ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள்.இந்நிலையில் அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். என்பவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது என்பது விசேஷ் தகவல்.

    அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. ஆனால் பந்தயத்திற்காக ஜோர்ஜ் பாட்டிலின் உள்ளே பிளாஸ்டிக் பையை நுழைத்தபின் ஊதிப் பெரிதாக்கியதில் கார்க் பிளாஸ்டிக் பைக்குள் மாட்டிக் கொண்டு, இழுத்ததும் அழகாக வெளியில் வந்துவிட்டது.அன்று இரவு தூக்கத்திலிருந்து திடுமென விழித்த ஜோர்ஜ் தனது மனைவியிடம் சம்பவத்தை விவரித்த பின் குழந்தையை இந்த பிளாஸ்டிக் பை முறையில் வெளியில் எடுப்பது எளிதான பிரசவ முறையாக இருக்கும் என்று கூறினார்.அடுத்தநாள் காலையில் ஜோர்ஜ், அவரது நண்பருடன் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து புதிய கருவியை பற்றி கூறினார். அந்த மருத்துவர் ஜோர்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்துபார்க்க உதவினார்.

    இதையடுத்து அந்த மருத்துவர் யூடியூப் இணையதளத்தில் சோதனையை வெளியிட்டு பின் ஜோர்ஜை 2008ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் மரியோ மரியால்டி யை சந்தித்து பேசவைத்தார். காப்பி குடிக்கும் நேரத்தில் 10 நமிடங்கள் தன்னை சந்திக்க அனுமதி அளித்த டாக்டர் மரியோ கண்டுபிடிப்பை பார்த்து 2 மணிநேரம் ஜோர்ஜ் உடன் பேசினார்.

    இதுகுறித்து டாக்டர் மரியோ கூறும்போது,”மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது. இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால் தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

    சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்யமுடியும்.ஓடன் கருவி என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜோர்ஜ் ஓ‘டன் என்ற 59 வயது கார் மெக்கானிக் கண்டுபிடித்தது. இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும். இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது. இதன்மூலம் சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும். இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும்.

    இதன் மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது.இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகமான பிரசவம் நடந்துள்ளது. இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் குறையும். இந்த முறையை இந்தியா சீனா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம் பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்களினால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை காப்பாற்ற முடியும். ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள். இதைத் தயாரிக்க 50 டாலர்கள் ஆகிறது. இந்த கருவியை கனடாவை சேர்ந்த கிரான்ட் சேலஞ்சஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பென்டன் டிக்கின்சன் கம்பெனியுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது. ஏழை நாடுகளில் இந்த கருவி அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்”என்று அவர் தெரிவித்தார்.

    சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் அரசியல்?-தேர்தல் ஆணையத்திடம் புகார்!

    By: ram On: 19:55
  • Share The Gag


  • இந்திய கிரிகெட் சாதனையாளரான சச்சின் கடந்த சனிக்கிழமை அன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதே தினத்தில் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்காக பாரத ரத்னா விருதின் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிகிறது.மேலும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதால், பல்வேறு கட்சிகள் தங்களது தலைவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஜெய பாசிஸ் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

    இவர் அனுப்பிய புகார் கடிதத்தில் , “காங்கிரஸ் கட்சியால் சச்சின் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இவருக்கு தற்போது பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சினை பொறுத்தவரை அவருக்கு பல மாநிலங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. தற்போது தேர்தல் நடக்கவிருக்கும் ராஜஸ்தான், டில்லி, மிசோராம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்திலும் ரசிகர்கள் உண்டு. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் சச்சினுக்கு விருது வழங்கி கவவுரவத்திருப்பது சில ரசிகர்கள் மனதில் சற்று மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. எனவே விருது அறிவித்தது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.” என்று தெரிவித்துள்ளார்

    RTI activist moves EC against Sachin Tendulkar getting Bharat Ratna

     *******************************************************

     An RTI activist Debashish Bhattacharya has written to the Election Commission of India (ECI) stating that granting of Bharat Ratna to Sachin Tendulkar is a violation of model code of conduct.

    Quick draw in game 8 of FIDE World Championship!

    By: ram On: 19:47
  • Share The Gag
  •  

    The eighth game of the FIDE World Championship Match, sponsored by Tamil Nadu state and currently ongoing in Chennai, finished in draw after 33 moves of play.

    The challenger and world’s top rated player Magnus Carlsen changed his opening strategy and went for 1.e4 this time. The defending champion Viswanathan Anand echoed Carlsen’s repertoire and defended with Berlin Ruy Lopez, to the surprise of everyone in the press room here in Chennai.

    Carlsen does not like to enter the Berlin endgame often with white pieces, and instead played the less frequent 5.Re1. The resulting pawn structure is symmetrical but with more pieces on the board.

    Only two months ago Carlsen had a similar position with black against Hikaru Nakamura in Saint Louis. In 2010 Carlsen and Anand already tested the system, with same colours, in Kristiansund and Nanjing. All these games were drawn.

    After the massive exchanges on the open e-file, the game ended in a draw on 33rd move. Carlsen spent only 20 minutes for the whole game. The current score is 5-3 in favour of the challenger.


    The players were subjected to doping test after the eighth game and that accounted for a mild delay in the arrival at the media hall. The tests were done by Dr Jana Bellin. FIDE to be part of the International Olympic Committee initiated doping tests from the Bled Olympiad of 2002.

    In the Bled 2002 Olympiad, Chennai’s women grandmaster Meenakshi was tested for doping after a random pick.

    Source:http://chennai2013.fide.com

    ஆதார் அட்டை பின் விளைவுகள்..!

    By: ram On: 18:37
  • Share The Gag
  • 2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

    ஆப்பரேட்டர் : ஹலோ.. பிஸ்ஸா ஹட்..

    கஸ்டமர் : என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

    ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

    கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

    ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

    கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

    கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

    ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..

    கஸ்டமர் : வாட்..? எதுக்குங்க..?

    ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

    கஸ்டமர் : வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

    ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

    கஸ்டமர் : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..

    ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை போன வாரம் நீங்க எடுத்திருக்கீங்க சார்..

    கஸ்டமர் : மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

    ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

    கஸ்டமர் : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

    ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

    கஸ்டமர் : சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

    ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

    கஸ்டமர் : ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவுவ நேரத்துல வரும்..?

    ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

    கஸ்டமர் : வாட்..?

    ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்.. கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

    ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

    கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

    ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

    கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)

    ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

    கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்) படித்துப் பாரக்கும்போது இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் ஆதார் அட்டை வினியோகிக்கும் அரசின் உள் நோக்கம் இதுதான்..

    யாசர் அரபாத்- பலஸ்தீனத்தின் சிங்கம்!

    By: ram On: 17:05
  • Share The Gag
  •  

    அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நீண்ட அரசியல் பயணத்திலிருந்து சில குறிப்புகள்.

    யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும். ஆகஸ்ட் . 4, 1929:எகிப்தின் கெய்ரோவில் பிறந்தார்.

    இவர் மாணவராக இருந்தபோதே அரபாத், அரசியல் மற்றும்
     சமூக ஆர்வலராக விளங்கினர்.1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வீரராக தோற்றம் பெறுகிறார் .

    உலக போரின் போது பாலை வனங்களில் கை விடப்பட்ட ஆயுதங்களை தேடி எடுத்து அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் பயிற்சியும் பெற்று வந்தார். பின்னர் எகிப்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றார்.

    பின்னர் அரபு இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்களில் களத்தில் செயற்ப்பட்ட இவர் 1958 ம் ஆண்டு அல்-பத்தா என்ற அமைப்பை நிறுவினார். 1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள் தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்தான் நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அரபாத்தின் அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, அரபாத் பாலஸ்தீன விடுதலைஇயக்கத்தின் தலைவராக ஆனார்.

    1970-ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டிலிருந்து அரபாத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில், பாலஸ்தீனப் போராளிகள் பல்வேறு நடவடிக்கைககளில் ஈடுபட்டன.

    1974, நவ. 13: ஐநா சபையில் உரையாற்றினார். அவர் தனது உரையில தம் ஒரு கையில் ஒலியமரக் கிளையும், இன்னொருகையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன, எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

    1987-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் "இன்டிபாடா" என்ற பெரும் கலகம் வெடித்ததை அடுத்து, பாலஸ்தீனப் பிரச்னை, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. எனினும் 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடாப் போரின் போது, அரபாத், இராக் அதிபர் சதாம் ஹூசைனை ஆதரித்ததால், சதாம் ஹூசைனின் தோல்விக்குப் பிறகு அரபாத், இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது.

    இதன் காரணமாக 1993-ஆம் ஆண்டு, நோர்வே நாட்டின் அனுசரணையின் பேரில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. சமரச உடன்பாட்டின் படி, இஸ்ரேலிய யூத அரசு பாலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களுக்கான சுயாட்சி நிர்வாகம் அமைவதை, இஸ்ரேல் ஏற்றது. ஆனால், இஸ்ரேல்ஆக்கிரமித்த பகுதிகள்,எருசலேம் நகரின் எதிர்காலநிலை, பாலஸ்தீன அகதிகள் நாடு திரும்புவது ஆகிய பிரச்னைகள் பெரும் இழுபறியாக அமைந்தது.இதனால் பலஸ்தீனர்களின்
     போராட்டம் தொடர்ந்தது. இஸ்ரேலுடன் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கைக்காக 1994 ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

     2004 ஆண்டு அராபத்தின் உடல்நிலை சீர்குலைந்ததை
     அடுத்து, அவர் விமானத்தில் பாரீஸ் நகர் வந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!

    By: ram On: 08:08
  • Share The Gag


  • படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

    கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

    கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், காய்ச்சல் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

    பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் காய்ச்சல் நீங்கும்.

    ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

    மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

    தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

    பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும்.
    ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

    இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

    மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

    இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

    குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!

    By: ram On: 07:50
  • Share The Gag


  • இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு  உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

    ஆண்மைக்கு ரோஜா குல்கந்து


     காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

    தாது விருத்தி தரும் பூசணிக்காய்


     பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

    இனிமையான உறவுக்கு இலுப்பை பூ


     இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.

    குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்

     சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்

    பழமொழியில் ரீமிக்ஸ்!! ரீமிக்ஸ்!!

    By: ram On: 07:42
  • Share The Gag

  • பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,
    பழைய படத்த ரீமேக் பண்றாங்க,
    அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?

    அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.
    அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.
    ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’.

    பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
     புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்

     பழசு: இளங்கன்று பயமறியாது
     புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது

     பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
     புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்

     பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு
     புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு

     பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்
     புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு ணிssணீஹ்வே அனுப்பும்

     பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
     புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்

     பழசு: ஆறிலும் சாவு... நூறிலும் சாவு
     புதுசு: ஆறு ரூபாய்க்கும் ரீசார்ஜ், நூறு ரூபாய்க்கும் ரீசார்ஜ்
     பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது
     புதுசு: நெட்வொர்க்காரனை திருத்த முடியாது

     பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு
     புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு

     பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு
     புதுசு: செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு

     பழசு: கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது
     புதுசு: பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது

     பழசு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
     புதுசு: வாயற்ற வாழ்வே குறைவற்ற பேலன்ஸ்

     பழசு: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
     புதுசு: வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்

     பழசு: குரைக்கிற நாய் கடிக்காது
     புதுசு: கொரியன் போன் உழைக்காது

     பழசு: யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
     புதுசு: ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்

     பழசு: ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது
     புதுசு: டவர் கிடைக்கும் வரை டைம் காத்திருக்காது

     பழசு: கடை தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே
     புதுசு: அடுத்தவன் போன எடுத்து உன் ஆளுகிட்ட பேசாதே

     பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே
     புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே

     பழசு: கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
     புதுசு: கேமராவுக்கும் ஆசை, குவாலிட்டிக்கும் ஆசை

     பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்
     புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்
     பழசு: பேராசை பெருநஷ்டம்
     புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்

    செவ்வாய்க்கு "மாவென்' விண்கலம்: "நாஸா அனுப்பியது"

    By: ram On: 07:27
  • Share The Gag
  •  

    செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக மாவென் என்ற விண்கலத்தை அமெரிக்கா திங்கள்கிழமை வெற்றிகரமாகச் செலுத்தியது.

    நாஸா அமைப்பினால் உள்ளூர் நேரப்படி மதியம் 1.28 மணிக்கு, அட்லஸ் வி-401 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் 10 மாதங்கள் பயணித்து செவ்வாயை அடையும். இது குறித்து நாஸா தரைக் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கையில், "விண்கலம் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளது.

    அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையும் மாவென், அந்த கிரகத்தின் நிலப்பரப்புக்கு 6 ஆயிரம் கி.மீ. உயரத்தில் ஓராண்டுக்கு சுற்றி வரும். எனினும், அது 5 முறை செவ்வாய் நிலப்பரப்புக்கு 125 கி.மீ. தூரம் நெருக்கமாக வந்து, அதன் சூழ்நிலையை ஆராயும். குறிப்பாக, அங்கு தண்ணீர் இல்லாததற்கான காரணம் போன்றவை குறித்து ஆராயப்படும்.

    செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்தியா சமீபத்தில் விண்ணில் செலுத்திய மங்கள்யானுக்கு முன்பாக, அமெரிக்காவின் மாவென் விண்கலம் அந்த கிரகத்தை அடைய உள்ளது. முன்னதாக, செவ்வாயின் தரைப்பகுதி தொடர்பான தகவல்களைச் சேகரிக்க அமெரிக்கா அனுப்பிய மார்ஸ் ரோவர் என்ற விண்கலம் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை எட்டி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.