Sunday 31 August 2014

ஷங்கருக்கு நோ சொல்லி சூர்யாவுக்கு ஓகே சொன்ன சத்யராஜ்! காரணம் என்ன?

By: ram On: 23:05
  • Share The Gag

  • தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி கொண்டவர் நடிகர் சத்யராஜ்.

    வில்லனாக அறிமுகமாகி அசத்தியவர் ஹுரோவாகவும் பட்டைய கிளப்பினார்.

    இவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு எஸ்.ஜே சூர்யாவின் இசை படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார்.

    இது குறித்து சத்யராஜ் கூறுகையில், நான் 75 படங்களில் வில்லனாகவும், 125 படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளேன்

    கடந்த 1994-ம் வருடம் வெளிவந்த ‘அமைதிப்படை’ படத்தில், கடைசியாக வில்லனாக நடித்ததற்கு பிறகு சில வருடங்களுக்கு முன்பு ‘சிவாஜி’, ’எந்திரன்’ படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அழைப்பு வந்தது.

    அந்த படத்திலும் நடிக்க மறுத்து விட்டேன். வெங்கட்பிரபு டைரக்ஷனில் உருவாகி வரும் ‘மாஸ்’ படத்திலும், சாஹித்கபூர் கதாநாயகனாக நடிக்க, பிரபுதேவா இயக்கும் இந்தி படத்திலும் வில்லனாக நடிக்கும்படி கேட்டார்கள். மறுத்து விட்டேன்.

    20 வருடங்களுக்குப்பின், எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ‘இசை’ படத்தில் வில்லனாக நடிக்கிறேன். ‘சிவாஜி’ படத்துக்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தில், பத்தில் ஒரு பங்கு சம்பளம் வாங்கிக்கொண்டு இந்த படத்தில் நடித்து இருக்கிறேன். சம்பளமே கொடுக்காவிட்டால்கூட, ‘இசை’ படத்தில் நடித்து இருப்பேன். அப்படி ஒரு கதையம்சமும், கதாபாத்திரமும் உள்ள படம் அது.

    உலகிலேயே எந்த நடிகரும் நடித்திராத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில், நான் நடித்து இருக்கிறேன் என்றும் அதற்காக பெருமைப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

    ஜோதிகாவுடன் சூர்யாவும் இணைகிறார் - எக்ஸ்குளூசிவ் தகவல்

    By: ram On: 22:02
  • Share The Gag

  • பிரபல நடிகை ஜோதிகா "ஹெவ் ஓல்டு ஆர் யூ" என்ற மலையாளே ரீமேக் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீண்ட்ரி ஆகிறார் என்று எல்லாருக்கும் தெரியும்.

    தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து மிக விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர் . இந்நிலையில் ஒரு மிக முக்கியமான தகவல் கசிந்து உள்ளது , மலையாளே பதிப்பை அப்படியே எடுக்காமல் பல மாற்றங்கள் செய்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளனராம் படக்குழு.

    இதில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது ஜோதிகா சூர்யாவை நடிக்க வைக்கலாம் என்று பரிந்துரை செய்து உள்ளார்.

    இந்த கதாபாத்திரம் முக்கியமானது என்றாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டுவார். ஏற்கனவே சூர்யா சில படங்களில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆடாதொடை செடியின் மருத்துவ குணங்கள்

    By: ram On: 21:48
  • Share The Gag

  •  நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. சிற்றூர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

    சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.

    1. இலைச் சாறும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.

    குழந்தைகளுக்கு 5 + 5 துளி
    சிறுவர் 10 + 10 துளி
    பெரியவர் 15 + 15 துளி

    2. இலைச் சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்தப்பேதி குணமாகும்.

    3. 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன் கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் காசம், இரத்தக் காசம், சளிச்சுரம், சீதளவலி, விலாவலி ஆகியவைத் தீரும்.

    4. ஆடாதொடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணப்படும்.

    5. ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை, மாலை பருகி வரக் குட்டம், கரப்பான், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றவலி தீரும்.

    6. உலர்ந்த ஆடாதொடை இலைத் தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.

    7. 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம், சித்தரத்தை வகைக்கு 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப் பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் 1 கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி(ஆடாதொடை மணப்பாகு) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும். ஒரு நாளைக்கு 3 வேளையாக நீண்ட நாள்கள் கொடுத்து வரக் காசம், என்புருக்கி, மார்புச்சளி, கப இருமல், புளூரசி, நீடித்த ஆஸ்துமா, நிமோனியா ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.

    8. ஆடாதொடை, கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி 1 லிட்டர் நீரில் போட்டு அரை விட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. அளவாகப் பருகி வர (அஷ்ட மூலக் கஷாயம்) எவ்விதச் சுரமும் நீங்கும்.

    9. வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும்.

    ஹாலிவுட் பாடகியை மயங்க செய்த ஏ.ஆர். ரஹ்மான்

    By: ram On: 21:19
  • Share The Gag

  • ஏ.ஆர். ரகுமான் கோலிவுட், பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிற்கு இசையமைத்து வருவது நமக்கு தெரியும். அவரது இசையில் மயங்கியுள்ளாராம் ஹாலிவுட் மற்றும் பாப் பாடகி டைலர் ஸ்விப்ட்.

    இவர் 4 முறை கிராமி விருது பெற்றதுடன் இளசுகளை கவரும் குரல் வளத்தால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

    இவர் ரஹ்மான் இசையை பற்றி கூறுகையில், இந்திய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மயங்கி இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றார்.

    இதற்கு பதில் கூறும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான், கண்டிப்பாக நீங்கள் இந்தியா வருவதை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

    உடல் எடை குறைய -கொழுப்பை எரிக்கும் கொடம்புளி (படம் & சாப்பிடும் முறை )

    By: ram On: 18:32
  • Share The Gag

  • பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?....குறையும் .ஆனால் பத்து நாளில் குறையாது ஆனால் நாற்பது நாளில் குறையும் -கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால் ???
    1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.

    கொடம்புளி சூப் எப்படி செய்யணும்?

    கொடம்புளி ஐம்பது கிராம் - முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.
    கொள்ளு (கருப்பு காணம்)  இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .
    காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.
    இந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

    2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது
    3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3  மணி நேரமாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .
    4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.
    5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.
    6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது
    8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால்    சாபிடலாம்.
    9 .எண்ணையில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
    10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிட கூடாது.சாப்பிடும் போது பேச கூடாது.

    மந்திரத்தில் மாங்காய் காய்க்காது .உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் செய்யணும்.


    ஷங்கரின் ஐ படத்தில் வினோதமான பாடல் - கசிந்த உண்மை

    By: ram On: 17:29
  • Share The Gag

  • இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்துள்ளது ஐ படம். ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது எல்லாருக்கும் தெரியும்.

    அதே போல் வினோதமான விஷயங்களும் யோசிக்க முடியாத விஷயங்களும் தன்னால் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் தான் எந்திரன் படத்தில் வரும் கொசு காட்சி.

    அது போல் ‘ஐ’ படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். அதில் ஒரு பாடலை விமானத்தில் பயணித்தவாறும், வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த ஒரு தோட்டத்திலும், இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து எழுதியிருக்கிறார் கபிலன்
    .

    அது ஒரு வித்தியாசமான, சுகமான அனுவபம் என்று கூறியிருக்கிறார் கபிலன். இவர் எழுதிய அந்த 3 பாடல்களில் ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசை அமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

    பிரபுதேவா வரிசையில் ஒரு ஹீரோ

    By: ram On: 08:36
  • Share The Gag

  • பிரபுதேவா, லாரன்ஸ் வரிசையில் மீண்டும் ஒரு நடன இயக்குனர் ஹீரோவகிறார்.

    ஃபிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ’ஒரு குப்பைக்கதை’.இப்படத்தின் மூலம் இயக்குனர் அஸ்லம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.இவர் ஸ்ரீகாந்த் நடித்த 'பாகன்' படத்தை இயக்கியவர்.

    காளி ரங்கசாமி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

    நடன இயக்குநர் தினேஷ் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற தினேஷ் இதுவரை 130 படங்களுக்கு மேல் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

    "என்னப்பா படத்தை குப்பை படம்னு சொல்கிறாய் என நிறைய பேர் கேட்டார்கள். அவர்கள் அப்படி கேட்கும்போதே அதில் ஒரு அக்கறை தெரிந்தது. இப்படி கேட்டுக் கேட்டே படம்

    பொடுகு என்றால் என்ன ?

    By: ram On: 08:11
  • Share The Gag
  • தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

    பொடுகு ஏன் வருகிறது?

    1. வரட்சியான சருமத்தினால் வரும்

    2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.

    3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

    4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்

    5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

    6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

    7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

    8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

     பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

    2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

    3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

     பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?


    1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

    2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

    3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

    4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

    5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

    6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

    7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

    8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

    9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

    10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

    11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

    12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

    13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

    14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

    15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

    16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

    17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

    18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

    19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

    20.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

    நட்பின் சிறப்பு என்பது யாதெனில்....

    By: ram On: 08:10
  • Share The Gag
  • உயிர் காப்பான் தோழன்..என்பர்.

    அது எவ்வளவு தூரம் உண்மை என நான் அறியேன்..ஏனெனில் நான் யார் உயிரையும் காப்பாற்றியதில்லை..என்னையும் யாரும் காப்பாற்றியதில்லை.

    ஆனால்..நமக்கு வாழ்வில்..ஏற்படும் நண்பர்கள்தான் எவ்வளவு?

    பள்ளி பருவத்தில்...உண்டாகும் இளம் நண்பர்கள்..மன விகாரம் இல்லா வயது.கிடைத்த அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் வயது.ஒன்றாக சேர்ந்து விளையாடிய வயது.மாமரத்தில் இருந்து விழும் அல்லது திருடும் மாங்காயை..உப்பு ,காரம் தோய்த்து சாப்பிட்ட நட்பு,கமர்கட்டை காக்காய் கடி கடித்து பகிர்ந்துக் கொண்ட வயது.போட்டி படிப்பில் மட்டுமே.இப்படி அந்த கால நட்பு..மனதில் பசுமரத்தாணி போல பதிந்து இன்றும் நினைவில் அவர்கள் பெயர் தங்கியிருக்கும் நட்பு.

    அடுத்து..கல்லூரி கால நட்பு.பெற்றோர் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைப்பது தெரிந்தும்..பணத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வயது.இக்காலத்தில் ஏற்படும் நட்பு சிலருக்கு வாழ்வில்..சிகரெட்,மது,மாது..போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி வைக்கிறது..அப்படிப்பட்டவர் நட்பு இவ்வயதில் அதிகம் கிடைக்கிறது.இப்படிப்பட்ட நட்பு..ஆசைக்காக..சில எதிர்ப்பார்ப்புகளோடு அமைந்து விடுகிறது.இப்பருவ நட்பு கம்பி மேல் நடப்பது போல.

    அதைத் தாண்டி வந்தால்..அலுவலகத்தில், உடன் வேலை செய்வார் நட்பு.இந்த சமயம்...நிறைய சம்பாதிக்க வேண்டும்,சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாக வரவேண்டும்..அவனைவிட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்றெல்லாம் எண்ணக்கூடிய சுயநலம் நிறைந்த நட்பு..

    பின் ஓய்வு பெற்றதும்..கிடைக்கும் நட்பு...பழைய வாழ்வை அசை போடும் நண்பர்களுடன்.

    இப்படி ஒவ்வொரு பருவத்திலும்..பல வேறுபட்ட நண்பர்கள்..பள்ளி பருவம் முதல்..கடைசி வரை தொடரும் நட்பு..ஒரு சிலருக்கே கிட்டும்.அப்படிப்ப நட்பு அமைந்தால் அதுதான் சிறந்த நட்பு..அப்படிப்பட்டவன் தான் சிறந்த நண்பன்.

    ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

    இது தான் நட்பின் சிறப்பு.

    மௌனம்....?

    By: ram On: 08:09
  • Share The Gag
  • வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

    “மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

    எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

    இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

    மனதை இளமையாக வை‌‌த்திருக்க சில ஆலோசனைகள்

    By: ram On: 08:08
  • Share The Gag
  • மனதை இளமையாக வை‌‌த்திருக்க  சில ஆலோசனைகள்


    மனதை எ‌ப்போது‌ம் உ‌ற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் நா‌ம் எ‌ப்போதுமே இளமையாக இரு‌க்கலா‌ம். அதெ‌ப்படி ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌ம் போது மனதை உ‌ற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் கே‌‌ட்கலா‌ம்.
    முடியு‌ம். எதையு‌ம் நே‌ர்மறையாக ‌சி‌ந்‌தி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டா‌ல் ந‌ம்மா‌ல் எ‌ந்த ‌சூ‌ழ்‌நிலை‌யிலு‌ம் உடை‌ந்து போகாம‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியாக வாழ முடியு‌ம்.

    ஒரு நகை‌ச்சுவை இரு‌க்‌கிறது. அதாவது ‌நீ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏ‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்...எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்குமே இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள் தா‌ன் உ‌ள்ளன.
    வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ஆரோ‌க்‌கியமாக இரு‌ப்‌பீ‌ர்க‌ள் அ‌ல்லது நோ‌ய்வா‌ய்‌ப்படு‌வீ‌ர்க‌ள். முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் நலமாக இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் ஏ‌‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்? இ‌ல்லை, உட‌ல் நல‌க் குறைவு ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். அத‌ற்கு‌ம் இர‌ண்டு வா‌ய்‌ப்புக‌ள்தா‌ன். ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் இற‌ந்து‌விடு‌வீ‌ர்க‌ள். நீ‌ங்க‌ள் குணமடை‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ஏ‌ன் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டு‌ம். இ‌ல்லை இற‌ந்து ‌வி‌ட்டா‌ல் ஒ‌ன்று ‌நீ‌ங்க‌ள் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ற்கு செ‌ல்‌வீ‌ர்க‌ள் இ‌ல்லை நரக‌த்‌தி‌ற்கு செ‌ல்‌வீ‌ர்க‌ள். சொ‌ர்‌க்க‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ன்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி கவலை‌ப்பட வே‌ண்டுமா எ‌ன்ன? இ‌ல்லை நரக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்‌வீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல்... அ‌ங்குதா‌ன் உ‌ங்களது ஏராளமான ந‌ண்ப‌ர்க‌ள் இரு‌ப்பா‌ர்களே.. அவ‌ர்களுட‌ன் அர‌ட்டை அடி‌த்தே கால‌த்தை ‌க‌ழி‌க்கலாமே ‌பிறகு ஏ‌ன் கவலை‌ப்பட வே‌ண்டு‌ம்.. இதுதா‌ன் அ‌ந்த நகை‌ச்சுவை.

    ஆனா‌ல் இது நகை‌ச்சுவை ம‌ட்டும‌ல்ல‌.. வா‌ழ்‌க்கை‌யி‌ன் சுவையை அ‌றியு‌ம் வ‌ழியு‌ம் கூட..

    எ‌திலு‌ம் ஒ‌ன்று ந‌ல்லது அ‌ல்லது கெ‌ட்டது நட‌க்கு‌ம். ந‌ல்லது நட‌ந்தா‌ல் கவலை‌ப்பட ஒ‌ன்று‌மி‌ல்லை, கெ‌ட்டது நட‌ந்தா‌ல் அ‌திலு‌ம் இர‌ண்டு ‌விஷய‌ங்க‌ள். இ‌ப்படி இரு‌க்க, உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யைப் ப‌ற்‌றிய கவலையைத் தூ‌க்‌கி எ‌றி‌ந்து ‌வி‌ட்டு, வா‌ழ்‌க்கை எ‌ன்பது பூ‌ங்காவன‌ம் அ‌ல்ல போரா‌ட்ட‌க்கள‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

    போரா‌ட்ட‌க்கள‌த்‌தி‌ல் இழ‌ப்புகளு‌ம், வெ‌ற்‌றிகளு‌ம் சாதாரண‌ம். எத‌ற்கு‌ம் கல‌ங்காம‌ல் வாழப் பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். எ‌ப்போது‌ம் நட‌‌ப்பவை எ‌ல்லா‌ம் ந‌‌ன்மை‌க்கே எ‌ன்று அத‌ன் போ‌க்‌கி‌ல் உ‌ங்களது வா‌ழ்‌க்கையை ‌சிற‌ப்பாக வாழப்‌ பழ‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

    ‌நீ‌ங்க‌ள் ‌எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையு‌ம் ச‌ந்‌தி‌க்காம‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ல் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் தவறான‌ பாதை‌யி‌ல் பய‌ணி‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். முத‌லி‌ல் உ‌ங்க‌ள் பாதையை மா‌ற்று‌ங்க‌ள். ‌‌சில சமய‌ங்க‌ளி‌ல் இது பெ‌ரிய அள‌வி‌ல் மு‌ன்னே‌ற்ற‌த்தை அளிக்கும்.

    பு‌திதாக செ‌ய்யு‌ம் போதுதா‌ன் உ‌ற்சாக‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம். அரை‌த்த மாவையே அரை‌த்து ‌நீ‌ங்க‌ள் எதையு‌ம் சா‌தி‌க்க முடியாது எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

    உ‌ற்சாக‌ம் உ‌ங்களு‌க்கு‌ள்தா‌ன் இரு‌க்‌கிறது. அதை வெ‌ளி‌யி‌ல் தேடா‌தீ‌ர்க‌ள். ம‌ற்றவ‌ர்களு‌க்கு மு‌ன்னுதாரணமாக வா‌ழ்‌ந்து கா‌ட்டு‌ங்க‌ள்.

    என்றும் புன்னகையோடு...

    ஒரு அப்பாவும், 4 வயது மகனும்!

    By: ram On: 00:24
  • Share The Gag

  • ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

    கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

    மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

    வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

     அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
    " ஐ லவ் யூ அப்பா".

    மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

    எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..?

    பிரசவத்திற்குப் பின் கவனிக்க வேண்டியவை...!

    By: ram On: 00:23
  • Share The Gag
  • ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய காலகட்டம் என்றால் அது தாய்மைப் பருவம் தான். குழந்தை பெற்ற பிறகு, அது சுகப்பிரசவமானால் 1 மாதமும், அறுவை சிகிச்சை என்றால் 3 மாதங்களும் ஓய்வு அவசியம்.

    பிரசவித்த பெண் முழுமையாக மனதளவிலும்,உடலளவிலும் பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது 18 மாதங்கள் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    அறுவை சிகிச்சை என்றாலும் சுகப்பரசவம் என்றாலும் சரி அதிக கணம் கொண்ட பொருட்களை தூக்குவது கூடாது. அது உடல் நிலையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

    குழந்தைக்கு முதலில் தாய் பால் தான் தரவேண்டும். தாய்பாலைவிட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை. பிறந்த குழந்தையை தாயின் உடலோடு இணைத்து அந்த சூட்டில் குழந்தையை படுக்க வேண்டும்.

    குழந்தை பெற்ற உடன் அனேகப் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளவு சற்றே குறைகிறது மேலும் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கிறது. சருமம் பொலிவிழக்கிறது. அவர்களது ஒட்டுமொத்த தோற்றமுமே மாறிப் போகிறது.

    இதெல்லாம் 18 மாதங்களுக்குப் பிறகு சகஜ நிலைக்குத் திரும்பும் அதுவரை பொறுமை அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்த கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

    By: ram On: 00:22
  • Share The Gag
  • கள்ளிப்பட்டு என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது.

    பெண்-ஒற்றைக் கண்ணுடன்ஆசிரியர் திரும்பிப் பார்த்தார். வகுப்பறையின் வாசற்படிக்கு அருகே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. ஏனெனில் அவளுக்கு ஒரு கண் இல்லை. அவளைப் பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் பயந்துவிட்டனர். வகுப்பு ஆசிரியர் கூட பயந்தவராய் அவளைப் பார்த்து,

    “யாரும்மா நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.


    “ஐயா, என் மகன் ராமு மதிய சாப்பாட்டை மறந்து விட்டு வந்து விட்டான். அவனிடம் கொடுக்கத்தான் இந்த சாப்பாடுக் கூடையை எடுத்து வந்துள்ளேன். இதை அவனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன்.” என்றாள்.
    “ராமு! உங்க அம்மாகிட்ட போய் அந்த கூடையை வாங்கிட்டு வா.”

    ராமு எழுந்து சென்று வாங்கி வந்து ஆசிரியரிடம் நன்றி கூறி அமர்ந்தான். அவனது அம்மாவும் சென்றுவிட்டாள். ஆனால் வகுப்பறையில் உள்ள மாணவர்கள்தான் ராமுவை ஓட்டித்தள்ளிவிட்டனர்.

    “ஏய்....... ஒத்த கண்ணு அம்மா!”

    “டேய்! அதுதான் உங்க அம்மாவா? பேய் மாதிரி இருக்காங்க...”

    “ராமு அம்மா, ஒத்த கண்ணு அம்மா”

    என்றெல்லாம் அவனை ஏளனம் செய்தனர். ராமுவிற்கு அழுகையே வந்துவிட்டது. ஆசிரியர் மாணவர்களை அதட்டி அமைதிபடுத்தினார்.

    பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற ராமு, தனது புத்தகப்பையை வீட்டினுள் ஒரு மூலையில் தூக்கி எறிந்தான். அவன் அவ்வளவு கடுப்பாக இருப்பதைப் பார்த்த அவன் அம்மா வள்ளி “என்னப்பா ஆச்சு? ஏன் இவ்வளவு கடுப்பா இருக்கே?” என்று கேட்டாள்.

    “எல்லாம் உன்னாலதான். நான் எத்தனை முறை சொல்றது, என்ன பார்க்க பள்ளிக்கூடம் வராதேனு? நீ இன்னைக்கு வந்ததால எல்லாரும் என்ன ‘ராமு அம்மாவுக்கு ஒத்த கண்ணு’ அப்படினு எவ்வளவு கேலி கிண்டல் பண்ணினாங்க தெரியுமா? நான் அழுதே விட்டேன்.”

    “நீ சாப்பாட்டை மறந்து விட்டு போயிட்டே. சாப்படலனா உடம்பு கெட்டுடும். அதனாலதான் எடுத்துக்கிட்டு வந்தேன்.”

    “நான் சாப்பிடாம செத்தா உனக்கு என்ன? என்னையை அசிங்கப்படுதுவதே உனக்கு வேலையாப்போச்சி. நீ இனிமே பள்ளிக்கூடம் வந்த, நான் பள்ளிக்கு போகவே மாட்டேன்.”.

    “சரிப்பா, என்ன மன்னிச்சிடு. இனிமே உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன்.” என்று கூறியவள் சாமியறைக்குள் சென்று குமுறிக் குமுறி அழுதாள். தன் மகனே தன்னை கேவலமாக பார்க்கிறானே என்று சாமியிடம் முறையிட்டாள்.

    ராமுவின் அப்பா அவன் பிறந்த ஒரு மாதத்திலேயே இறந்துவிட்டார். அவனுடைய ராசிதான் அவரை கொன்றுவிட்டது என்று அனைவரும் கூறினர். ஆனால் அவனது அம்மா வள்ளி, “என் புருஷன் குடிகாரன். குடிச்சி, குடிச்சியே செத்து போய்ட்டான். அதுக்கு என் புள்ள ராசியை தப்பா சொல்லாதீங்க” என்று அவனை மெச்சிக்கொள்வாள். புருஷன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல், கூலி வேலை செய்து அவனை காப்பாற்றி வருகிறாள்.

    ராமு தன் உயர் கல்விக்கு சென்னை செல்லவேண்டிய சூழ்நிலை. அதனால் தன் தாயிடம் விடைபெற்று சென்று அங்கு விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் படிக்கும் காலக்கட்டத்தில் விடுமுறைக்கு கூட அவன் அம்மாவை பார்பதற்கென்று வந்தது கிடையாது. இதை நினைத்து வள்ளி வருந்தாத நாளே இல்லை. பெத்த மனம் தன் பிள்ளையை பார்க்க ஏங்கியது. அதனால் அவள் ஒருநாள் ராமுவின் கல்லூரிக்கே சென்றுவிட்டாள். இப்போதும் ராமு தனது அம்மாவை மிகவும் அசிங்கப்படுத்தி அனுப்பினான். அதனால் நொந்துபோய் வீட்டிற்கு சென்ற அவள் ராமுவை பார்க்கச்செல்லாமல் அவனுக்குத் தேவையான பணம் மட்டும் அனுப்பி வந்தாள். ராமுவிடமிருந்து கடிதம் வரும். ஆனால், வள்ளி எப்படி இருக்கிறாள் என்று கேட்டிருக்கமாட்டான். “எனக்கு ஐயிந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும்” என்று மொட்டையாக இருக்கும். அவளும் தன் மகன் இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருக்கிறானே என்று அழுதுகொண்டே பணத்தை அனுப்புவாள்.

    ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அவனிடமிருந்து வரும் கடிதம் கூட வருவதில்லை. தன் மகனுக்கு என்ன ஆயிற்றோ என்று அவன் தன்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லையென்று அவனது கல்லூரிக்குச் சென்று விசாரித்ததில், அவனது படிப்பு முடிந்து வேலை கிடைத்துச் சென்றுவிட்டதாக தெரியவந்தது. அவளும் தன்னை தன் மகன் அடியோடு மறந்துவிட்டானே என்று தினமும் அழுதுகொண்டே இருப்பாள். அதனால் அவளது உடல்நிலை மோசமானது. சில வருடங்கள் கழிந்தன. ராமு நல்ல வேலையில் உள்ளதாகவும், அவனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தான் அவனைப் பார்த்ததாகவும் ஒருவர் வந்து வள்ளியிடம் கூறினார். இந்த செய்தி அவளுக்குப் புத்துயிர் அளித்தது.

    அவர் மூலம் அவன் விலாசத்தை அறிந்து அவனை பார்க்கச் சென்றாள். சென்னையில் அவனது இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் அவன் வீட்டைக் கண்டுபிடித்தாள். அங்கு ராமுவின் பிள்ளைகள் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் தவறவிட்ட பந்து வள்ளிக்கு அருகில் வந்தது. அதை எடுத்துக்கொண்டு தன் பேரப்பிள்ளைகளை கொஞ்ச அவள் சென்றபோது அவளது ஒற்றைக்கண்ணைப் பார்த்து பயந்துபோய் பிள்ளைகள் அழ ஆரம்பித்தன.

    குழந்தைகளின் அழுகை சத்தத்தை கேட்டு ராமு வெளியில் வந்தான். அம்மாவை பார்த்த ராமு ஏதோ பிச்சைக்காரியைப்போல் போல் “நீ எதுக்கு இங்க வந்த, நாங்க நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலயா? உன் மூஞ்சிலேயே படக்கூடாதுன்னுதான நான் எங்க இருக்கிறேன்னு சொல்லவேயில்ல, இப்ப என் பிள்ளைகல பயம்புறுத்த வந்துட்டியா? முதல வெளிய போ”, என்றான் ராமு.

    “இத்தனை வருடங்கள் கழித்து நான் அவனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால் இவன் நம்மை அம்மா என்று கடுகளவு கூட பாராமல் இப்படி சொல்லிவிட்டானே! இனிமேல் இவனிடம் பாசத்தை எதிபார்ப்பது தவறு” என்று எண்ணிய வள்ளி அங்கிருந்து வந்துவிட்டாள்.

    சில நாட்கள் கழித்து ராமுவிற்கு ஒரு கடிதம் வந்தது. அது அவன் அம்மாவின் அண்டை வீட்டுக்காரர் எழுதியது. அதில் “ராமு உங்க அம்மா இறந்துவிட்டார். அவங்க உன்னிடம் தருமாறு கொடுத்தக் கடிதத்தை இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். தயவு செய்து படிக்காமல் விட்டுவிடாதே. இருக்குபோதுதான் அவர்களை மதிக்கவில்லை. இறந்தபிறகாவது இந்த கடிதத்தை படித்து அவருடைய ஆத்துமாவை சாந்தியடைய வை!” என்று இருந்தது. ராமு தன் அம்மா இறந்துவிட்டாளே என்று சிறு கவலைகூட இல்லாமல் இன்னொரு கடிதத்தை எடுத்துப் படித்தான்.

    “ராமு! என் மகனே! உன்னைப் பெற்றெடுக்க மறு பிறவி எடுத்தேன். என் ரத்தத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுத்தேன். என் உடலையே உருக்கி கூலி வேலை செய்து உன்னைப் படிக்கவைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் நீ கொடுத்த கைமாறு எந்தவொரு தாய்க்கும் கிடைக்கக்கூடாது. சரி, ஏன் என்னை நீ வெறுக்கிறாய்? நான் ஒற்றைக் கண் கொண்டவள் என்பதால்தானே? நீ குழந்தையாய் இருந்தபோது ஒரு விபத்தில் உன்னோட ஒரு கண்ணை இழந்துவிட்டாய். உன்னை ஒரு கண்ணோடு பார்ப்பதற்கு என் இருதயமே நின்றுவிடும் போலிருந்தது. அதனால் என் ஒரு கண்ணை கொடுத்து உன் கண்ணைக் காப்பாற்றினேன், என் அழகை இழந்தேன். ஆனால் எனக்கு அப்போது அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை உனக்கு கூறி வளர்த்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், நீ ஒருவித மன உறுத்தலுடன் வாழ்ந்துவந்திருப்பாய்.” இதைப் படித்தவுடன் ராமுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மேலும் படித்தான்.

    “அழாதே மகனே, எனக்காக அழாதே. உன் பிள்ளைகளுக்காக அழு. அவர்களை வளர்க்கும்போதே நீ படும் கஷ்டங்களை சொல்லி வள. இல்லையென்றால் என் கதிதான் உனக்கும்.”

    இதை படித்ததும் ராமு தன் தவறை உணர்ந்தான். அவனது கண்ணில் தாரை தரையாய் நீர் வழிந்தது. தரையில் புரண்டு புரண்டு அழுதான்.

    வாழும்போதே தன் தாயின் தியாகத்தை உணராமல், அவள் இறந்தபிறகு அழுது என்ன பிரயோஜனம்?

    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?.

    உங்கள் பெண் பிள்ளைகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில வழிமுறைகள்…

    By: ram On: 00:21
  • Share The Gag
  • உங்களுடைய மகள் உங்களுக்கு மிகவும் அரிய சொத்தாக இருப்பவள். அவள் இனிமையானவள், அழகானவள் மற்றும் வளமாக வாழ்வதற்கு மிகவும் தகுதியானவள். இவையனைத்தும் உண்மை என்னும் போது, அவளுடைய பெற்றோர்ககளாகிய உங்களுக்கு அவளை சுய மதிப்புடையவளாக வளர்க்கும் பொறுப்பு பெரிதும் உள்ளது.

    இது மிகவும் எளிமையானது மற்றும் தினசரி அவளை சில செயல்களைச் செய்யச் சொல்லி கற்றுக் கொடுக்கக் கூடியது. ஒரு பெற்றோராக நீங்கள் குழந்தையின் மனதில் உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையையும் மற்றும் அவளுடைய வாழ்க்கைக்கு சிறந்த அர்த்தத்தையும் உருவாக்க கொடுக்க வேண்டும். மகளை வளர்தெடுப்பது பொதுவாகவே கடினமான விஷயமாக இருந்தாலும், அது ஒரு உன்னதமான வேலையாகும். பெண் குழந்தையை வளர்த்தெடுப்பதிலும், அவளுடன் பழகுவதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    வாழ்க்கை தங்களிடம் முன்வைக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையை அளித்து, பின்நாளில் சமூகத்தின் சிறந்த மனிதர்களாக தங்களை வெளிப்படுத்தவே குழந்தைகளின் சுய மதிப்பு உதவுகிறது. தங்களை சூழ்ந்துள்ளவர்கள் தங்களை மதிப்பவர்களாகவும், தங்களுடைய மதிப்பை உணர்ந்தவர்களகாவும் இருக்கும் இடங்களில் பெண்களை இருக்கச் செய்ய வேண்டும். குறைவான சுய மதிப்புடைய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் தவறான பாதையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது பொதுவான உண்மையாகும். குழந்தைகளை நல்ல வழியில் வளர்ப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. ஒரு தயானவள் தன்னுடைய குழந்தையின் வாழ்வில் பெரிய விஷயங்களை செய்யக் கூடியவள் மற்றும் பெண்களை அவள் வளர்ப்பது ஒன்றும் குறைவான கவனம் கொண்டு செய்யும் விஷயமும் அல்ல. உங்கள் மகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

    1. பாராட்டுங்கள்!


    அவளுக்கு பாராட்டுகளை தெரிவியுங்கள்! அவள் அதற்கு தகுதியானவள் தான். அவள் சிறிய வேலையை செய்தால் கூட, நீங்கள் அவளை பாராட்டலாம். அவள் மிகச்சிறந்த பணியை செய்துள்ளதாக சொல்லுங்கள். அவளுக்கு மேலும் சில பணிகளை கொடுத்து, அவளால் அவற்றை செய்ய முடியும் என்று சொல்லுங்கள். அவளால் அவளுடைய வழிமுறையில் எந்த விஷயத்தையும் கையாள முடியும் என்று சொல்லுங்கள். பெண் குழந்தையை வளர்ப்பது சில நேரங்களில் அதிக தேவையுள்ளதாக இருக்கும், அதனால் உங்களுடைய அன்பை முழுமையாக அவளுக்கு கொடுங்கள்.

    2. தேவை கல்வி


     நல்ல தரமான கல்வி இயற்கையாகவே சுய மதிப்பை அதிகரிக்கும் கருவியாகும். அவளுக்கு எல்லா வகையிலும் கல்வியை புகட்டுங்கள். அவளை செய்திகளை அறியச் செய்யுங்கள். உங்களுடைய பிஸியான வேலைகளிலிருந்து சிறிது நேரத்தை அவளுடன் கழிப்பதற்காக ஒதுக்குங்கள். அவள் என்ன கற்றுக் கொண்டாள் என்பதை கேளுங்கள், அவளுடன் சேர்ந்து டிவி பாருங்கள்! டிவியில் பார்த்த விஷயங்கள் பற்றியும், அவளைப் பற்றியும் மற்றும் உங்களைப் பற்றியுமான விஷயங்களை அவளுடைய பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், மேலும் அவள் எவற்றை பார்க்கக் கூடாது என்பதையும் குறிப்பிடுங்கள். ஊடகங்களின் தகவல்களை சரியாக தேர்ந்தெடுக்கும் வகையில் அவளுக்கு உதவி செய்யுங்கள். இந்த வகையில் உங்கள் மகளின் சுய மதிப்பினை நீங்கள் உயர்த்தலாம்.

    3. திறன்களை வளர்த்தல்

     குழந்தைகளை திறன் மிக்கவர்களாக வளர்ப்பதன் மூலம் அவர்களை சுய மதிப்பு மிக்கவர்களாக்க முடியும் என்பது முக்கியமான கருத்தாகும். பெண் குழந்தைகளை அவர்களுக்கான திறன்களை அவர்களாகவே வளர்க்கச் செய்வதும் கூட, பெண்களை வளர்ப்பதன் ஒரு பகுதியாக உள்ளது. அவள் தன்னுடைய கனவுகளை செயல்படுத்த ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுங்கள். பெண்களை வளர்ப்பது எளிதான விஷயம் கிடையாது, அதற்கு நிறை அன்பும், நேரமும் தேவைப்படும்.

    4. வீட்டில் உள்ள இதழ்களை கவனிக்கவும்

     நீங்கள் எப்பொழுதும் செய்ய வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கும் இதழ்களையும் மற்றும் உங்கள் மகள் அவற்றில் எதை படிக்கிறார் என்பதையும் சற்றே கவனிக்க வேண்டும். அவள் சரியான இதழ்களையும், நூல்களையும் படிக்க நீங்கள் வழிகாட்ட வேண்டும். இதுவும் பெண்களை வளர்க்கும் முறை தான்.

    5. அன்பை வெளிப்படுத்துங்கள்

     உங்களுடைய அன்பை உங்கள் மகள் உணர வேண்டும். கடினமான நாட்களிலும் கூட அவளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் மற்றும் அவள் துன்பத்தில் இருக்கும் நாட்களில் தனிமையில் அவளை விட்டு விடக் கூடாது. உங்களுடைய அன்பை அவளுக்கு காட்டுங்கள், அவளை உணரச் செய்யுங்கள். இதன் மூலம் குழந்தைகளின் சுய மதிப்பு உயரும். சில குழந்தைகளிடம் சுய மதிப்பு குறைவாகவே இருக்கும். எனினும், உலகம் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் குழந்தைகளை தயார் செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். அவளை இவ்வகையில் சுய மதிப்புடன் தயார் செய்வதன் மூலமாக ஒரு நல்ல வாழ்க்கையை நீங்கள் அவளுக்கு அமைத்துக் கொடுக்கிறீர்கள்.

    குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !

    By: ram On: 00:20
  • Share The Gag
  •  
    1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.


    *
    2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.


    *
    3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது’ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள். இது தவறான பழக்கம். இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை.


    *
    4. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர தொக்கம் எடுப்பது தவறு - சில சமயம் விபரீதம் ஏற்படக் கூடும்.



    பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று ‘தொக்கம் எடுத்தல்’ என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று ‘குடல் தட்டல்’ என்று செய்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.


    *
    5. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளைச் சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.


    *
    6. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவை அவசியமில்லை; பயனுமில்லை.


    *
    7. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும்.


    *
    8. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும்போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சி உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.



    *
    9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறுசிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். மருந்தை உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.

    Saturday 30 August 2014

    நானும் ரவுடிதான்... தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடிக்கும் படம்!

    By: ram On: 23:28
  • Share The Gag

  • தனுஷின் சொந்தப் பட நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

    தனுஷ் சமீபத்தில் தயாரித்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி' படம் பலத்த வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் புதுப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நானும் ரவுடிதான்... தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடிக்கும் படம்!

    இந்தப் படத்துக்கு நானும் ரவுடிதான் என தலைப்பிடப்பட்டுள்ளது. நயன்தாரா - விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். ‘போடா போடி' படத்தை எடுத்த விக்னேஷ் இயக்குகிறார்.

    நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்பது விஜய் சேதுபதியின் நீண்ட நாள் ஆசையாகும்.

    முன்பு ஒரு விழாவில், நயன்தாராவைக் கடத்த வேண்டும் என ஆசை இருக்கிறது என்று கூறி அதிரவைத்தார் விஜய் சேதுபதி. அதை முன் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கேட்டார் நயன்தாரா.

    இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க வேண்டும் என நயன்தாராவிடம் கேட்டதும், சந்தோஷமாக ஒப்புக் கொண்டாராம்.

    பண்டைய கால வீடுகளில் திண்ணை வைத்து கட்டியது ஏன்?

    By: ram On: 22:24
  • Share The Gag

  • நம் முன்னோர்கள் பிறருக்கு ஈகை புரிவதில் வான் அளவு உயர்ந்து நின்றனர். இன்றைய கால மக்கள் காலம் காலமாக வைத்து போற்றும் அளவு எதிர்கால சந்ததியினருக்கு நிறைய பண்பாடு,கலாசாரம்,வளங்கள்,மருத்துவ முறைகளை விட்டு சென்றுள்ளனர். அவர்களது ஈகை உணர்வுக்கு எடுத்துகாட்டாக பண்டைய கால வீடுகளில் உள்ள திண்ணைகளை கூறலாம். பேருந்து இல்லாத காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் வழிபோகர்கள் தங்க ஏதுவாக வீட்டில் திண்ணைகளை அமைத்தனர்.

    மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரும் இடமாகவும், வயது முதிர்ந்த வயதானவர்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்கள் அறிவினை பகிருந்துகொள்ள, பொழுது போக்கிற்காக,கூட்டு குடும்பங்களாய் வசிப்போர் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினை கழிக்க என பல முகங்கள் திண்ணைகளுக்கு உண்டு. இன்றைய "பாஸ்ட் பூட்" காலத்தில் பெற்ற குழந்தையுடன் செலவிடும் நேரமே குறைந்து விட்டநிலையில், நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று பாருங்கள் என்று நமக்கு ஒரு பாடமாகவே விளங்குகிறது நம் முன்னோர் விட்டு சென்ற இந்த திண்ணைகள்.

    ஆண்மை அதிகரிக்க இலவங்கப்பட்டை(Cinnamon)

    By: ram On: 21:11
  • Share The Gag

  • தாது விருத்திக்கு
    தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.

    தாதுநட்டம் பேதி சருவவிஷம் ஆகியநோய்
    பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ்-சாதிவிடம்
    ஆட்டுமிரைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற
    ஓட்டுமில வங்கத் துரி
    சன்னலவங் கப்பட்டை தான்குளிர்ச்சி யுண்டாக்கும்
    இன்னுமிரத் தக்கடுப்பை யீர்க்குங்காண்-முன்னமுறும்
    உந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புண்போக்கும்
    கந்தமிகு பூங்குழலே! காண்

    - அகத்தியர் குணபாடம்

    லவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடியது.

    நீரிழிவு நோய்க்கு

    நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

    வாய் துர்நாற்றம் நீங்க

    வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

    செரிமான சக்தியைத் தூண்ட
    எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

    இருமல், இரைப்பு

    சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

    விஷக்கடிக்கு

    சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

    வயிற்றுக் கடுப்பு நீங்க

    வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

    பெண்களுக்கு

    குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும்இது சிறந்த மருந்து.

    இத்தகைய அரிய பயன்களைக் கொண்ட கருவாப்பட்டையை இனியும் ஒதுக்கலாமா... முன்னோர்களின் வழியைப் பின்பற்றி நாமும் நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் விஜயசாந்தி

    By: ram On: 20:26
  • Share The Gag

  • தமிழ், தெலுங்கு திரையுலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் விஜயசாந்தி, இரு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினி, கமல், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்றோருடனும் நடித்துள்ளார். பிறகு அரசியலில் இணைந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கு பட மொன்றில் மீண்டும் நடிக்கிறார்.

    விஜயசாந்தி ஏற்கனவே நடித்து வெற்றிகரமாக ஓடிய ஓசே ராமு லம்மா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கின்றனர். இதில் விஜயசாந்தி நடிக்கிறார்.

    இந்த படத்தின் முதல் பாகம் 1997–ல் வெளியாகி 200 நாட்கள் ஓடிய விஜய சாந்தியின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இது இருந்தது. தாசரி நாராயணராவ் இயக்கினார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடித்து மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.

    அண்ணனே தேவலாம்… அலற வைக்கிறாராம் தம்பி

    By: ram On: 19:27
  • Share The Gag

  • ‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே… ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத் இசையமைப்பாளர்கள். இவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு மாறுபட்டு நிற்பார் என்று பெரிதும் நம்பப்படுகிறார் குறளரசன். ஏனென்றால் அவரது அப்பா டி.ஆர் போட்ட பாடல்கள் அப்படி. இன்றும் எங்காவது டி.ராஜேந்தரின் பழைய பாடல்களை கேட்டால், வண்டி ஒரு நிமிஷம் நின்று அனுபவித்து விட்டு போகிற அளவுக்கு இருக்கிறது அவரது காலத்தை கடந்த ஹிட்டுகள். இத்தனைக்கும் இசைஞானி இளையராஜா காலத்திலேயே பாடல்களுக்காக கோல்டன் டிஸ்க் விருதுகள் வாங்கியவர் அவர்.

    காலப்போக்கில் அவரும் டண்டணக்கரா ஆகிப் போனார் என்பது வேறு விஷயம். ஆனால் அதிலும் ஒரு தாளம் இருந்தது. சுதி இருந்தது. எல்லாவற்றும் மேல் ஒரு ருசி இருந்தது. அவரது வாரிசான சிம்பு நடிக்க வந்தாரே ஒழிய இசையமைப்பாளர் ஆகவில்லை. அவர் நினைத்திருந்தால் இன்று முன்னணியிலிருக்கும் அத்தனை இசையமைப்பாளர்களையும் ‘வர்றீங்களா விளையாட்டுக்கு?’ என்று சவால் விட்டிருக்க முடியும். ஆனால் அவர் ரூட் மாறி போய்விட்டார். இன்று குறள்….?

    பாண்டிராஜ் இயக்கி வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசையமைப்பாளரே குறள்தான். தமிழ் திரையுலகமே ரொம்பவும் ஆவலோடு எதிர்பார்த்து வருவது இந்த படத்தையும் அதைவிட இந்த படத்தில் இசையமைத்திருக்கும் குறளையும்! ஆனால் குறள் என்ன செய்கிறாராம்? படத்தில் ஐந்து பாடல்களை திட்டமிட்டிருக்கிறாராம் பாண்டிராஜ். ‘அதுல ரெண்டு வந்தாச்சு… மிச்சம் மூணு எங்கேப்பா…?’ என்றால், ‘அந்த மூணுதான்ணே இது’ என்று பதில் சொல்லக்கூட ஆளைக் காணோமாம்! அண்ணனுக்கு போட்டியா தம்பி வருவார்னு பார்த்தால், மற்றவங்களுக்கு இம்சை கொடுக்கிற விஷயத்தில்தான் அது நடக்கும் போலிருக்கு என்கிறார்கள் இ.ந.ஆ யூனிட்டில். படமே முடிஞ்சுருச்சு. பாடல்களுக்காக காத்திருக்க ஆரம்பித்திருக்கிறாராம் பாண்டிராஜ்.

    என்ட்ரி டிக்கெட் போடும்போதே எக்சைட் கேட் திறக்கற டயத்தையும் கேட்டு தெரிஞ்சுக்க வேணாமா சார்…?

    கோவில்கள் ஏன் மலைகளில் அதிகம் அமைதுள்ளன?

    By: ram On: 18:39
  • Share The Gag

  •  மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது.

    இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.

    தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.

    இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

    இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.

    13 ஆம் எண்,8 ஆம் எண் கெட்ட சகுனமா?

    By: ram On: 18:25
  • Share The Gag

  • மூடநம்பிக்கைகள் பலவிதம் உண்டு; அதில் ஒன்று இவ்வகை எண் மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை நிறைந்து இருக்கும்.

    சிலர் தன்பெயரில் கூட ஓர் எழுத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ மாற்றியமைப்பதுண்டு.

    கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவது உண்மையானால், இந்த 13ஆம் எண்ணைப் படைத்தவரும் கடவுள் தானே?.

    இன்னும் சில பேருக்கு எட்டாம் எண்ணும் பிடிக்காது;

    ஏன் வாகனப் பதிவில் பெருவாரியாக இது பின்பற்ற படுகிறது. கூட்டினால் 9 வருகின்ற எண்ணை வாங்க தனிக்கட்டணம்.

    எந்த எண்ணாக இருந்தாலும் சரியாக ஓட்டவில்லை என்றால் விபத்து தானே நடக்கும், உயிரிழப்பு வரும்.

    விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (51A).

    நாட்டு மக்களுக்கு உணவைவிட உண்மையில் முக்கிய மாகத் தேவைப்படுவது பகுத்தறிவே. அது சரியாக இருந்தால்தான் மற்றவைகளும் சரியாக இருக்கும்.

    ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிக்கு கமல் சொன்ன அறிவுரை

    By: ram On: 17:22
  • Share The Gag

  • தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து முன்னணியில் இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன்.

    இவர் தன்னுடைய உடலை எப்படி ஸ்லிம்மாகவும், கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்பதை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    அவர் கூறியதாவது, உடல்நலத்திற்கு தீங்கு இளைக்காததும், உடம்பை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உதவி செய்வதும் சைவ உணவு வகைகள் மட்டுமே என்று தனது தந்தை கமல்ஹாசன் தனக்கு சிறுவயது முதல் அறிவுறுத்தி வந்துள்ளதாக கூறினார்.

    மேலும் அவருடைய அறிவுரையை முடிந்தவரை தான் கடைபிடித்து வருவதால்தான் தன்னால் ஸ்லிம் உடம்பை கவர்ச்சியாக மெயிண்டன் செய்ய முடிகிறது என்று அவர் கூறியுள்ளார்.

    கமல் படத்தில் சித்தார்த் நடிக்கிறார்..!

    By: ram On: 17:08
  • Share The Gag

  • கன்னடத்தில் உருவான லூசியா திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது.

    இப்படத்தை சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழில் ரீமேக் செய்யவுள்ளது. ஏற்கெனவே இப்படத்திற்கு சித்தார்த் நாயகனாகவும், தீபா சன்னிதி நாயகியாகவும் நடிக்கிறார் என்று நாம் அறிவித்திருந்தோம்.

    தற்போது இந்தப் படத்திற்கு ‘எனக்குள் ஒருவன்’என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கெனவே இந்த பெயரில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ஒரு படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கத்தி கதையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு! அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்!

    By: ram On: 16:48
  • Share The Gag

  • தீபாவளிக்கு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரவுள்ள திரைப்படம் கத்தி.

    விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் ஏற்கனவே தயாரிப்பாளர் ராஜபக்சே உறவினர் என்ற சர்ச்சை உள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் கதையை என்னிடமிருந்து திருடிவிட்டார் என்று ஏ.ஆர். முருகதாசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மீஞ்சூர் கோபி மனு தாக்கல் செய்துள்ளார்.

    தனது ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் துவங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. இதை வைத்து 'மூத்த குடி' என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினேன்.

    இந்தக் கதையை கேட்டுவிட்டு பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ், சில திருத்தங்களைச் சொல்லி, கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாகவும் மாற்றச் சொன்னார். அதன்பின் என்னை இயக்குநராக வைத்து இந்தப் படத்தை தயாரிக்கவும் ஏ.ஆர்.முருகதாஸ் சம்மதித்தார்.

    கதையை மேம்படுத்தும் வேலைகள் மட்டும் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு திடீரென்று அந்த வேலையை நிறுத்திவிட்டு 'என்னால் இப்போது இத்திரைப்படத்தைத் தயாரிக்க முடியாது' என்று சொல்லி ஏ.ஆர்.முருகதாஸ் ஒதுங்கிக் கொண்டார்.

    அதன்பிறகு திடீரென்று நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அது பற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது 'கத்தி' திரைப்படத்தின் கதை நான் சொன்ன 'மூத்த குடி' கதைதான் என்று எனக்குத் தெரிய வந்தது.

    எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் 'கத்தி' திரைப்படம் வெளியாகும் முன் எனக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மீஞ்சூர் கோபி தன் மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு பற்றி விசாரித்து உண்மை நிலையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அட்வகேட் கமிஷனராக வழக்கறிஞர் சங்கரை நீதிமன்றம் நியமித்துள்ளது. 'மீஞ்சூர் கோபியும், ஏ.ஆர்.முருகதாஸும் தங்களது கதையின் நகலை இவரிடம் கொடுக்க வேண்டும். இரண்டும் ஒரே கதையா என்பதை வழக்கறிஞர் சங்கர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம் - க்ரஞ்சஸ் பயிற்சி!

    By: ram On: 13:46
  • Share The Gag
  • தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சிஇன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

    அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

    செய்முறை: 


    முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

    அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

    ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும். 

    ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்!

    By: ram On: 13:46
  • Share The Gag

  • ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்



    சுவருக்கு அருகே நேராக நின்று கொள்ளவும். வலது கையை சுவரில் வைத்துக்கொண்ட இடது கையை இடுப்பில் வைக்கவும். இந்த நிலையில் இடது காலை முடிந்த வரை முன்னால் உயர்த்தவும்.

    பின்பு பழைய நிலைக்கு வந்த பின் இடது பக்கம் உயர்த்தவும். இது போல் 15 முறை செய்தவுடன் இடது கையை சுவரிலும் வலது கையை இடுப்பிலும் மாற்றி வைத்து 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். சில விநாடிகள் ரிலாக்ஸ் செய்த பின் மேலும் 2 செட்கள் செய்ய வேண்டும்.

    பலன்கள் :

    இடுப்புத் தசைகள் வலுவடையும். கோர் மசில்ஸ் எனப்படும் வயிற்றைச் சுற்றியுள்ள அனைத்துத் தசைகளும் வலுப்பெறும். பெண்களுக்கு, அடி வயிற்றுப் பகுதிகள் வலுவடையும். கால்கள் வலுப்பெறும். 

    சசாங்காசனம்!

    By: ram On: 13:46
  • Share The Gag
  • சசாங்காசனம்

    செய்முறை:

    விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும்.  பின்னர் நிமிர்ந்து இயல்பான சுவாசத்தில் மெதுவாக உடலை முன் புறமாக குனியவும். உங்கள் தலை படத்தில் உள்ளபடி கால்களுக்கு இடையே இருக்க வேண்டும்.

    கைகள் இரண்டையும் பின்புறமாக கொண்டு சென்று கால் பாதத்தின் பின்புறத்தை தொடவும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

    பயன்கள்:

    முதுகுத்தண்டுக்கு மேலும் புதிய ரத்தம் கிடைக்க வழி செய்கிறது. நரம்பு மண்டலத்திற்கு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கிறது. தைராய்டு, மூலம், ஜலதோஷம், சைனஸ் பிரச்சனை போன்ற நோய்களை குணமாக்குகிறது. தூக்கமின்மை, சர்க்கரை நோய் மற்றும் மனநோய் தீருகிறது.

    தென்னைமட்டை தலையில் விழுந்தால் ஆயுள் குறையுமா?

    By: ram On: 12:05
  • Share The Gag

  • தென்னை மரங்கள் உயரமாக இருக்கறதுனால அதுல இருக்குற தென்னை மட்டை, தேங்காய் போன்றவை தென்னை மரம் அடியில் நடக்கும் பொது
    தலையில் விழ நேரிடும்.

    இப்படி தென்னைமட்டை தலையில் விழுறது கேட்ட சகுனம்னு பொதுவான ஒரு கருத்து இருக்கு.

    அது அவர் அவர் விருபத்த பொருத்தது, இருந்தாலும் அறிவியல் உண்மை என்னனா தென்னை மட்டை, தேங்காய் எல்லாம் நம்ம தலையில விழும்போது தலையில் "உள்காயம்,நரம்பு பாதிப்பு,மண்டை பாதிப்பு, மூளை பாதிப்பு" ஏற்படும்.

    இதுனால உடல் கொஞ்சம் கொஞ்சமா நோய்வாய்ப்படும்.

    சிலருக்கு ஒண்ணுமே ஆகாது. அது காயத்த பொருத்து மாறும்.

    எப்படியோ தென்னைமரம் அடியில நடகுறப்ப கொஞ்சம் ஜாகரதையா
    இருங்க நண்பர்களே.

    ரிலிஸ்க்கு முன்பே வசூல் சாதனை செய்த ஐ!

    By: ram On: 11:44
  • Share The Gag

  • ஷங்கர் இயக்கிய எந்திரன் படமே இதுநாள் வரை கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் முதலில் இருக்கிறது. இதை முறியடிக்க அவரே ஐ மூலம் களத்தில் இறங்கியுள்ளார்.

    இப்படம் உலகம் முழுவதும் 15,000 தியேட்டர்களுக்கு மேல் ரிலிஸ் ஆகிறது, இவை ஒரு ஹாலிவுட் படத்தின் ரிலிஸ்க்கு நிகரானது.

    இதை தொடர்ந்து இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்ஸும் பல கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னே போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்று ஆஸ்கர் பிலிம்ஸ் தரப்பு கூறிவருகிறது.

    பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் - உஷார்...!!!

    By: ram On: 10:43
  • Share The Gag

  •  இன்றைய பெரும்பாலான கல்லூரி மாணவர்கள், தினசரி வேலைக்கு
    செல்பவர்களுடன் ஒன்றிவிட்டது பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்.

    பார்க்க அழகாகவும், நிறைய வண்ணங்களில் கிடைப்பதாலும், மக்கள்
    விரும்பி வாங்குகின்றனர்.
    நாகரிக முன்னேற்றம் என உண்ணும் உணவில் கூட நஞ்சை விதைகின்றனர் நம் மக்கள்.

    சூடான உணவினை இதுபோன்ற டிபன்களில் அடைப்பதனால் சுவையின்
    குணமே மாறிவிடுகிறது.

    மைக்ரோவேவ் ஒவனில் உணவுகளை சமைப்பதோ, அடிக்கடி பிளாஸ்டிக் கண்டெய்னர்களின் மூலம் உணவுகளை சூடு செய்வதோ, உணவுகளை உண்பதோபெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பில் சிக்கல் எழும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    "ஃபூட் கிரேடு" என்று பிளாஸ்டிக் வகைகள் இருந்தாலும் அதிலும் உணவுக்கேடு உருவாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே ஆரோக்கியமான உணவும், ஆரோக்கியமான சமையல் முறையுமே ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஹார்மோன்களுக்கு முக்கிய பங்குண்டு.
    ஹார்மோன்களின் சுரப்பு சமமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவைகளின் சுரப்பு, குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

    சத்தான சரிவிகித உணவு உட்கொண்டால் மட்டுமே ஹார்மோன்களின் சுரப்பை கட்டுக்குள் வைக்கமுடியும். ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களுக்கு அவசியமானது.

    Friday 29 August 2014

    பட்டுப் புடவையும் பராமரிப்பு முறையும்!

    By: ram On: 11:09
  • Share The Gag

  • பெண்கள் பட்டுப் புடவை எடுப்பதற்குள் கடை ஒரு வழி ஆகிவிடும் என்று பரவலாக கிண்டலடிப்பது உண்டு. பட்டுப் புடவை விலை அதிகம் கொடுப்பதால், அதை அவ்வளவு சிரத்தையுடம் எடுப்பார்கள். அது மட்டும் அல்ல, அதனை பராமரிப்பதற்கும் நிறைய வேலை இருக்கிறது.

    அதாவது,

    பீரோவில் திறந்த நிலையில் பட்டுப்புடவைகளை வைக்கக் கூடாது துணிப் பையில் போட்டு அதனை கவரில் வைத்து வைக்கலாம்.

    நிறைய ஜரிகை உள்ள பட்டுப் புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும். எனவே, பட்டுப் புடவைகள் மீது வேறு ஏதேனும் துணிப் போட்டு அதன் மீது ஐயர்ன் செய்யலாம்.

    அதுபோல பட்டுப் புடவைகளை ஸ்டீல் பீரோவை விட மர பீரோவில் வைத்தால் என்றும் புதியதுபோல பல வருடங்கள் இருக்கும்.

    விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுப் புடவையைத் தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுப் புடவையைக் களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது. நிழலில் காற்றாட சில மணி நேரங்கள் உலரவிட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

    பருத்தித் துணியால் ஆன பைகளில் பட்டுப் புடவைகளைப் போட்டு பராமரித்தால் ஜரிகை கறுக்காமல் இருக்கும்.

    எக்காரணம் கொண்டும் பட்டுப் புடவையைச் சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. சோப்போ, சோப் பவுடரோ உபயோகித்துத் துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

    பட்டுப் புடவையை மாதத்திற்கு ஒருமுறை, மடித்து வைத்ததற்கு எதிர்ப்புறமாக மடித்து வைக்க வேண்டும். இல்லை என்றால், மடித்த இடங்களில் இருக்கும் ஜரிகைகள் அவ்விடத்தில் தளர்ந்து போய்விடும்.

    பட்டுப் புடவையில் ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய்க் கறை இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர்விட்டு அலச வேண்டும். சாதாரண கறைகள் ஏதேனும் இருப்பின் அந்த இடத்தில் மட்டும் சிறிது எலுமிச்சைச் சாறுவிட்டு கறையை நீக்கிவிட்டு உலர்த்தவும்.

    பட்டுப் புடவைகளை அடித்து பிரஸ் போட்டு துவைக்கக்கூடாது. முதலில் அலசும்போது உப்பு போட்ட குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் சாயம் கெட்டிப்பட்டு பட்டுப்புடவை நீண்டநாள் உழைக்கும்.

    பட்டுப் புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக் கூடாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.

    பட்டுப் புடவைகளைத் துவைக்கும்போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். காரமான சோப் கூடவே கூடாது.

    பட்டுப் புடவைகளை அயர்ன் செய்யும்போது ஜரிகையைத் திருப்பி அதன்மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன்  செய்யக்கூடாது.

    பட்டுப் புடவைகளை தண்ணீரில் நனைப்பதைவிட ட்ரைவாஷ் செய்வதே நல்லது.

    பட்டுப் புடவையைக் கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப்பையில் வைக்க வேண்டும்.

    பாசிப் பருப்பை ஊறவைத்து நீர் விட்டு அரைத்து பட்டுப்புடவையின் கறை உள்ள இடத்தில் தேய்த்து அலசினால் கறை நீங்கி விடும்.

    பட்டுப் புடவையில் துருக்கறைபட்டால் ஆக்சாலிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் வாங்கி துருபிடித்த இடத்தில் தேய்த்து வெயிலில் வைத்தால் துருக்கறை மாயமாய் மறைந்துவிடும்.

    பட்டுப் புடவைகளுக்கு இரசக் கற்பூர உருண்டைகளைப் பயன்படுத்தக் கூடாது. தரமான ஷாம்பு போட்டு, கைகளால் துவைத்து சிறிது கஞ்சி போட்டு நிழலில் காய வைத்துப்பின் இஸ்திரி செய்தால் புதியதுபோல் பளபளக்கும்.

    ஆறு கிராம்புகளை பழைய துணியில் சிறு மூட்டைபோல் கட்டி, ஜரிகை உள்புறமாக இருக்குமாறு மடித்து வைக்கப்பட்ட பட்டுப் புடவைகளுக்கு இடையில் வைத்தால் பட்டு பழுதடையாமல், பூச்சி அரிப்பு ஏற்படாமல் புடவையைப் பாதுகாக்கலாம்.

    முதல் தரம் பட்டுப் புடவையை அலசும்போது பக்கெட் தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு போட்டு அதில் ஒரு ஐந்து நிமிஷம் பட்டுப் புடவையை முக்கி வைத்து அலசுங்கள். பட்டுப்புடவையின் எக்ஸ்ட்ரா சாயம் எல்லாம் நீங்கிவிடும்.

    நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் ஆறு விஷயங்கள்!

    By: ram On: 11:09
  • Share The Gag

  • நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் ஆறு விஷயங்கள்!


    1. சாலையில் எச்சில் துப்புதல் :


    இதில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றை கணக்கெடுத்தால் நான்கு ஜென்மம் எடுக்கும்.

    2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

    இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விடயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.

    3. குப்பைகளை கொட்டுவது :

    நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்க்கு படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும் நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.

    4. வரிசையை முந்தியடித்தல் :


    இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம், பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.

    5. விட்டுகொடுக்காத பழக்கம் :

    அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எங்கனம். அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.

    6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :


    நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல்.. இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான். இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

    7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

    நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும். முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது.

    8. ஜாதி வெறி- மத வெறி - இன வெறி:



    நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்

    கர்ப்பம் தரிப்பதற்கு முன்!

    By: ram On: 11:08
  • Share The Gag
  • ‘உலகிலேயே மிக உயர்ந்த, உன்னதமான பதவி தாய்மை. அன்புதான் அதற்கான சம்பளம்...’ பெருமைக்குரிய இந்தப் பதவிக்கு எல்லாப் பெண்களும் தகுதியுடையவர்களே... அதற்கு முன் தேவை கொஞ்சம் ஆலோசனைகள்... கொஞ்சம் முன்னெச்சரிக்கைகள்...
    இவை இரண்டும் இருந்தால், தாய்மைப் பதவிக்காக எந்தப் பெண்ணும் தவிக்க வேண்டியிருக்காது. குழந்தை வேண்டும் என விரும்புகிற பெண்கள், திருமணத்துக்கு முன்பிலிருந்தே கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் குழந்தையின்மை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் மனு லட்சுமி.

    திருமணத்துக்கு முன்...


    குழந்தைப்பேறு என்பது திருமணத்துக்குப் பிறகு திட்டமிட வேண்டிய விஷயமில்லை. திருமணத்துக்கு முன்பிலிருந்தே, அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாக வேண்டும். அதாவது, திருமண வயதில் இருக்கும் பெண்கள், திருமணத்துக்கு முன்பே மகப்பேறு மருத்துவரை சந்திக்கலாம். குறிப்பாக முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்கள், தைராய்டு, நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரை சந்தித்து, இந்தப் பிரச்னைகளை சரியாக்கும் அல்லது கட்டுப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவர்களிடம் எடுத்துக் கொள்கிற ‘ப்ரீமேரி டல் கவுன்சலிங்’கில், தாம்பத்ய உறவு குறித்த அவர்களது பயம், பிரசவ பயம் போன்றவற்றுக்கும் பதில் கிடைக்கும்.

    திருமணத்துக்குப் பிறகு...


    திருமணமான உடனேயே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிற பெண்களும், ஒருமுறை மகப்பேறு மருத்துவரை சந்தித்து, ரத்தப் பரிசோதனை, கர்ப்பப்பை சோதனை, அதில் ஏதேனும் தொற்று இருக்கிறதா என்பதற்கான சோதனைகளை செய்வது நலம். இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ரூபெல்லா தடுப்பூசி. ஏற்கனவே இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்குப் பிரச்னையில்லை. ஒருவேளை போடாவிட்டால், கர்ப்பம் தரித்த பிறகு ரூபெல்லா பாதித்தால், தாய்க்குப் பிரச்னை இல்லை. கர்ப்பத்தில் இருக்கிற குழந்தைக்குப் பெரிய பாதிப்பு உண்டாகும். இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டு, 1 மாதத்துக்கு கர்ப்பம் தரிக்கக் கூடாது.

    முதல் குழந்தையைத் தள்ளிப் போடலாமா?


    இது தம்பதியின் வயதைப் பொறுத்தது. குழந்தை பெற்றுக்கொள்ள மிகச் சரியான வயது 20 முதல் 30 வரை. கர்ப்பத்தை தாங்கும் சக்தி, சிக்கல்கள் இல்லாத கர்ப்பமெல்லாம் அந்த வயதில்தான் சாத்தியம். 20 வயதில் திருமணம் செய்கிறவர்கள், மருத்துவரை அணுகி சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டுக்கான சராசரி சோதனைகளை செய்து, எல்லாம் நார்மல் எனத் தெரிந்தால் குழந்தைப்பேறைத் தள்ளிப் போடலாம்.

    30 வயதுக்கு மேல் திருமணம் செய்பவர்களுக்கு இது பொருந்தாது.

    எத்தனை நாள் காத்திருக்கலாம்?


    இதற்கும் அதே விதிதான். இள வயதில் திருமணம் செய்தவர்கள் என்றால் ஒரு வருடம் வரை காத்திருக்கலாம். அதிலும் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்குச் சுழற்சி முறையாக இருக்க வேண்டும். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்தவர்கள் என்றால் 6 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டாம்.

    என்னென்ன சோதனைகள்?


    ஏற்கனவே ஏதேனும் உடல்நலக் கோளாறு இருக்கிறதா, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா, மாதவிலக்குச் சுழற்சி முறையாக இருக்கிறதா, கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறதா என்பதற்கான பொதுப் பரிசோதனை. சினைப்பை மற்றும் கர்ப்பப்பையில் ஏதேனும் கட்டிகளோ, நீர்க்கட்டிகளோ இருக்கின்றனவா என்பதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்.

    நீரிழிவு மற்றும் தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை.  கருக்குழாய்களில் பிரச்னை இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஹெச்.எஸ்.ஜி. (ஹிஸ்ட்ரோசால்பினோகிராம்).

    கருக்குழாய்களில் ஒன்றிலோ, இரண்டிலுமோ அடைப்புகள் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் சோதனை.

    கருத்தரிக்காததற்கான பிரச்னைகள்...


    மேலே சொன்ன சோதனைகளில் எதில் பிரச்னைகள் இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் தாமதமும், பிரச்னைகளும் ஏற்படலாம். தவிர, கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தாலோ, சதை வளர்ச்சி இருந்தாலோ, கர்ப்பப்பை வடிவம் மாறியிருந்தாலோ, கணவருக்குப் பிரச்னைகள் இருந்தாலோ கருத்தரிப்பது தாமதமாகும். இவற்றையெல்லாம் தாண்டி, காரணத்தை விளக்க முடியாத மலட்டுத்தன்மை என ஒரு பிரிவும் உண்டு.

    என்ன சிகிச்சைகள்?

    ஐ.யு.ஐ.

    சாதாரணமாக 15 மில்லியனாக இருக்க வேண்டிய கணவரின் உயிரணுக்களின் எண்ணிக்கை, 8 முதல் 10 மில்லியனாக இருந்தாலோ, காரணத்தை விளக்க முடியாத மலட்டுத்தன்மையாக இருந்தாலோ, சினைப்பையில் ரத்தக்கட்டிகள் இருந்தாலோ, இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படும். பெண்ணின் கருமுட்டையுடன், ஆணின் உயிரணுவை செயற்கையாக இணையச் செய்து, கருத்தரிக்கச் செய்கிற இந்த டெக்னிக்கிற்கு மருத்துவமனையில் தங்கவோ, ஓய்வோ தேவையில்லை. இதில் 10 முதல் 15 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு.

    ஐ.வி.எஃப்.

    ஐ.யு.ஐ. சிகிச்சையை 4 முதல் 5 முறைகள் முயற்சி செய்து பலனில்லாமல் போனால், அடுத்து ஐ.வி.எஃப். சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள். 2 கருக்குழாய்களிலுமே அடைப்புள்ளவர்களுக்குப் பெரும்பாலும் இதுதான் பரிந்துரைக்கப்படும். கருமுட்டை உருவாக ஊசிகள் போடப்பட்டு, 8 முதல் 10 முட்டைகள் வந்ததும், அதிலிருந்து சிறந்தவற்றைத் தேர்வு செய்து, வெளியே வைத்து,  உயிரணுக்களுடன் சந்திக்கச் செய்து, கருவானதும் எடுத்து, கர்ப்பப்பையினுள் வைத்து வளர்க்கப்படும். இதில் 30 முதல் 40 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு. ஒரு முறை சிகிச்சைக்கே ஒன்றரை லட்சம் செலவாகும்.

    ஐ.எம்.எஸ்.ஐ.


    ஐ.வி.எஃப். சிகிச்சையின் அடுத்தகட்ட முன்னேற்றம் இது. ஆரோக்கியமான உயிரணுக்களைத் தேர்வு செய்து, பெண்ணின் கருமுட்டையை சந்திக்கச் செய்கிற சிகிச்சை இது.

    கர்ப்பம் தரிப்பதற்கு முன்..
    .

    உங்கள் பி.எம்.ஐ. (உயரத்துக்கேற்ற எடை உள்ளதா என்பதற்கான பாடி மாஸ் இன்டக்ஸ்) சரியாக உள்ளதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். அதிக எடை இருந்தால் உடனடியாகக் குறைக்கும் முயற்சிகளில் இறங்குங்கள். ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நீரிழிவு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், மாத்திரைகளுக்குப் பதில் இன்சுலினுக்கு மாறலாம். பெரும்பாலான நீரிழிவு மாத்திரைகள், கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள உகந்தவை அல்ல.

    வலிப்பு நோய் உள்ளவர்களும் கர்ப்பம் தரிப்பதற்கு முன் மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். மருந்துகளின் அளவும் வீரியமும் குறைவான வேறு மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

    மாவீரன் சிவாஜியின் பக்தி அடையாளம்!

    By: ram On: 11:07
  • Share The Gag

  • மாவீரன் சத்ரபதி சிவாஜியின் ஆன்மிகப்பற்று, இந்து சமயத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் அவர் கட்டிய கோயில் திருப்பணிகள் எல்லாமே  மிகப்பெரியன. மஹாராஷ்டிரா மாநிலம் கொங்கண் கடற்கரையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சில கோயில்கள் உள்ளன. அவற்றுள் பகவதி தேவி  கோயில், கணபதிதாரி கோயில் மற்றும் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர் கோயில்கள் மிகவும் புகழ்பெற்றவை. கொங்கண் காட்டுப்பகுதியில் உள்ள  சவந்தவாடி என்ற குன்றிலிருந்து உற்பத்தியாகும் நீர், கர்லா என்ற நதி வழியாக தாமாப்பூர் ஏரிக்கு வந்து சேருகிறது.

    அந்த ஏரிக்கரையின்மேல் அமைந்துள்ள கோயிலில் பகவதி தேவி தரிசனமளிக்கிறார். அக்கோயிலைச் சுற்றி ஓடுகள் வேயப்பட்டு கேரளபாணியில் கட் டப்பட்ட மண்டபங்கள் உள்ளன. அவை இத்தலத்திற்கு புனிதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்டவை. அங்கிருந்து சிறிது தூரம்  சென்றால் மால்வன் என்ற கோட்டைக்கு அருகில் கணபதிதாரி என்ற இடத்தில் ஒரு கிணற்றில் புனித கங்கை நீர் ஊற்றெடுக்கிறது. அதன் அருகில்  வலது பக்கத்தில் ஒரு துளசிமாடம் உள்ளது.

    மாவீரன் சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட பரம்பரை பூசாரிகள், கணபதிதாரி கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்துத் தருகிறார்கள்.  அலங்கரிக்கப்பட்ட பாய் மீது அக்குடத்தை வைத்து மலர் மாலை அணிவித்து பக்தர்கள் பூஜை செய்கின்றனர். சம்பந்தப்பட்ட மந்திரங்களை பூசாரி ஓ துகிறார். சந்தன மணம் கமழும் ஊதுவத்தி, ஆரத்தியாக காட்டப்படுகிறது. லட்டு போன்ற இனிப்பு வகைகள் அக்குடத்திற்கு நிவேதனம் செய்யப்பட்டு  பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றி பெற விரும்பிய மாவீரன் சிவாஜி இங்கு வந்து கங்கா பூஜை செய்து ள்ளார். அவருடைய வேண்டுகோளை ஏற்று கங்கா தேவி அக்கிணற்றுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது.

    அதன் நினைவாகவே மேற்படி பூஜை. சற்று தூரம் சென்றால், மால்வன்கோட்டைக்கு தெற்குப் பக்கத்தில் மன்னன் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர்  கோயில் உள்ளது. அக்கோயில் முழுவதும் செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. சிவாஜி தன் கைகளாலேயே செங்கல் எடுத்து வைத்து, கட்டு மானப்பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

    கோயில் கருவறையில் காட்சி தரும் சிவராஜேஸ்வர் சிலையின் முகத்திற்கு உலோகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெரிய மீசையுடன்  கம்பீரமாக போர்வீரனைப் போல் காணப்படுகிறார். முகம் தவிர மற்ற பாகம் முழுவதும் சிவப்புத்துணியால் மறைக்கப்பட்டுள்ளது. இச்சிலையையொட்டி  சிவாஜி பயன்படுத்திய இருமுனைவாள் (தோதார்) வைக்கப்பட்டுள்ளது. கீழே அமர்ந்த நிலையில் உள்ள சிவராஜேஸ்வர் படமும் வைக்கப்பட்டுள்ளது.  இக்கோயிலை சிவாஜி கோயில் என்றும் அழைக்கின்றனர்.

    மேலும் அப்பகுதியிலுள்ள கோட்டைகள், கிணறுகள், மதகுகள், எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்லும் சுரங்கவழிப் பாதைகள், திசை காட்டும் உயரமான  கோபுரங்கள், மணிக்கூண்டுகள் மற்றும் சிவராஜேஸ்வர் கோயில் சுவர்கள் என்று எல்லா இடங்களிலும் சிவாஜியின் வலது கை அடையாளம்  பதிக்கப்பட்டு இன்றும் அப்படியே காணப்படுகிறது. ஒரு முகமதிய வியாபாரி தன் சரக்குகளை கப்பலின் ஏற்றிக் கொண்டு கொங்கண் கடற்கரை  நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இடி மின்னலுடன் பெருமழை பெய்து பெரும் புயலும் வீசியது.

    அதனால் அந்தக் கப்பல் வழிதடுமாறி ஒரு கருப்பு மலையில் மோதிக் கொள்ள இருந்தது. அப்போது அந்த மலையிலிருந்து ஒரு ஒளி தோன்றியது.  அந்த வெளிச்சத்தில் மலைமீது ஒரு மூங்கில் கொட்டகை இருப்பது அந்த வியாபாரியின் கண்களில் பட்டது. பின்னர் இறைவன் அருளால் புயல்  அபாயம் நீங்கியது. அதனால் மகிழ்ந்த வியாபாரி இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்பி மூங்கிலாலேயே ஒரு சிவபெருமான் உருவத்தைச் செய்து  அந்த மூங்கில் கொட்டகையில் வைத்து வணங்கினார். இன்றும் அந்த மூங்கில் ஆலயம் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக  விளங்கிவருகிறது.

    மும்பை வந்து விட்டால் இக்கோயில்களுக்குச் செல்ல வசதிகள் உள்ளன. காடுகள் நிறைந்த மலைப்பிரதேசமாக இருப்பதால் வழிகாட்டிகளை அழை த்துச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும்தான் இங்கு செல்ல முடியும்.

    நாலாபுறத்திலும் நெருக்கடி கத்தி…இனி அவ்ளோதான்?

    By: ram On: 10:41
  • Share The Gag

  • ராஜபக்சே, சுபாஷ்கரன் அல்லிராஜா, லைக்கா, காமன்வெல்த் மாநாட்டுக்கு உதவி, எல்லாவற்றையும் தாண்டி இப்போது புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது கத்தி. இந்த படத்தின் கதை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திலிருப்பதால், எப்போ தீர்ப்பு வந்து? எப்போ படத்தை ரிலீஸ் பண்ணி? எப்போ ரசிகர்கள் கைதட்டி? அட போங்கப்பா!

    பொதுவாகவே நம் ஊரில் ஒரு வழக்கு போட்டால், குற்றவாளி குழிக்கு போன பின்னால்தான் பிடிவாரண்ட்டே வரும். அந்தளவுக்கு வேகம்! ‘கத்தியின் கதை என்னுடையது. நான் முருகதாசிடம் இந்த கதையை இரண்டரை மணி நேரம் சொன்னேன். கதையை கேட்டவர் நன்றாக இருப்பதாக கூறி அவரது கம்பெனியிலேயே என்னை படம் இயக்க சொன்னார். கதையை இன்னும் மெருகேற்றி வரும்படி கூறியிருந்தார். அதற்காகவே ஒன்றரை வருடம் செலவிட்டேன். இப்போது அவர் எடுத்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை என்னுடையது என்று அறிகிறேன். எனவே என்னை முருகதாசிடம் அறிமுகப்படுத்தி வைத்து கதை சொல்ல வைத்த ஜெகனையும் முருகதாசையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். எனக்கான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்’ என்று மீஞ்சூர் கோபி என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இவருக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடி வருகிறார்.

    நீதிமன்றம் இருவரது கதையின் முழு ஸ்கிரிப்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. மீஞ்சூர் கோபி தன் ஸ்கிரிப்டை ஒப்படைத்துவிட்டார். ஆனால் முருகதாஸ் தரப்பிலிருந்து இன்னும் ஸ்கிரிப்ட் வரவில்லையாம். ஸ்கிரிப்ட் கோர்ட்டுக்கு போனால் கதை லீக் ஆகிவிடும் என்று அஞ்சுகிறாராம் அவர்.

    நமது சந்தேகமெல்லாம் இதுதான். ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு போனால், தீர்ப்பு எத்தனை வருடம் கழித்து வரும் என்பது நம்மை படைத்த கடவுளுக்கு கூட தெரியாது. பல வழக்குகளின் கதி அப்படிதான். அந்த லிஸ்ட்டில் கத்தியும் சேர்ந்தால் என்னாவது? சிந்துபாத் லைலாவை தேடிப்போன கதைதான் போலிருக்கிறது.

    கத்தியை சுற்றி பின்னப்படும் வலைகள் சிலந்தி வலையாக இருந்தால் சரக்கென அறுத்தெறிந்துவிடுவார்கள். ஒவ்வொன்றும் இரும்பு வலையாக இருக்கிறதே… என்ன செய்யப் போகிறார்களோ?

    இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன் தெரியுமா??

    By: ram On: 10:19
  • Share The Gag

  • மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. அவ்வாறே மரங்களும், செடி, கொடிகளும் உயிர் வாழ பிராண வாயு தேவை.

    மனிதன் எப்போதும் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறான். மரங்களோ இரு விதமாக மூச்சு விடுகிறது. பகலில் அசுத்த காற்றை உள் வாங்கி, பிராண வாயுவை வெளிவிடுகிறது. இரவில் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறது.

    எனவே, இரவில் மனிதன் மரத்தின் கீழே படுத்தால், அவனுக்கு போதுமான அளவு பிராண வாயு கிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று கூறினார்கள்.

    இதனை ஒரு சிலர் மறுத்து பேசினர். அவர்களுடைய உடல் நாலத்திற்க்கும் கேடு வரக் கூடாது என்பதற்காக, இரவில் மரத்தடியில் படுத்தால் பேய் அமுக்கும் என்று பயமுறுத்தி வைத்தனர்.

    Thursday 28 August 2014

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை எப்படி அறிவது...?

    By: ram On: 21:24
  • Share The Gag

  • ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது.

    குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை. ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள். அதைப்பற்றி அறிந்து கொள்வோம்.
    காய்ச்சல்

    குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும். வீறிட்டு அழும். திடீரென்று தன் தாயை சேர்த்து அணைத்துக்கொள்ளும். இலேசாக இருமிக்கொண்டே இருக்கும். பால் குடிக்காது. உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும். உமிழ்நீர் சூடாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி விடும்.

    உடலில் அக்கி உண்டானால்
    குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும். அடிக்கடி அழும். காய்ச்சல் இருக்கும். உதடுகள் வறண்டு காணப்படும்.

    வயிற்றுப் பொருமல்குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும் அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும். கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும். உடல் மிகவும் வாட்டமாக இருக்கும். பால் குடிக்காது. மலம் வெளியேறாது.

    காமாலைகுழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக தோன்றும். பசியில்லாமல் இருக்கும். பால் குடிக்காது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறும். மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.
    விக்கல்மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஏப்பம் விடும்.

    நாக்கில் பாதிப்புஉமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும். நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும். சில சமயங்களில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும். வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.

    மூலம்மூலமூளை நீண்டிருக்கும். குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கும். மலத்துடன் இரத்தம் வெளிப்படும்.

    தொண்டைப் பிடிப்புஇலேசான சுரம் இருக்கும். குழந்தைகள் எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும். எதையும் விருப்பமுடன் சாப்பிடாது.

    காது பாதிப்புகையினால் காதுகளைத் தொடும். காதுகளை அழுத்தித் தேய்க்கும். தூக்கமிருக்காது. பால் குடிக்காது.

    கழுத்தில் பாதிப்புகுடித்த பால் ஜீரணம் ஆகாது. தொண்டையில் சளி கட்டும். பசி எடுக்காது. காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாக காணப்படும்.

    வாயில் பாதிப்புஅதிக உமிழ்நீர் சுரக்கும். தாய்ப்பால் குடிக்காது. மூச்சு விட திணறும்.

    வயிற்றுவலிகுழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது. நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும். உடல் குளிர்ந்திருக்கும். முகம் வியர்த்துக் காணப்படும்.

    இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.

    கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள் பறிக்கப்பட்டது! அதிர்ச்சியில் திரையுலகம்?

    By: ram On: 21:01
  • Share The Gag

  • தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் காதல் நாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு நீண்ட இடைவேளைக்கு பிறகு ராவணன் படத்தில் நடித்தார். தற்போது அனேகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அவரது சொந்த வீட்டில் இருந்து அவரை வெளியேறும் படி அவர் சொந்தகாரார்கள் சொல்ல, விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

    கார்த்திக்கை ஏமாற்றி அவரது உறவினர்கள் பல கோடி ரூபாயை அபகரித்து விட்டதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது. பத்திரத்திலும் கார்த்தியின் பெயர் இல்லை. இதே வீட்டில் தான் கார்த்திக் பல வருடங்களாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

    நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை...

    By: ram On: 20:43
  • Share The Gag

  • செப்பு நெருஞ்சில் திரிதோடம் போக்கிவிடும்
    வெப்பு முதலனைத்தும் வீட்டுங்காண்-செப்பரிய
    சுக்கிலமே கம்போர்க்குந் தொல்லையனல் மாற்றும்
    மிக்கு மருந்துநீ விள் ------அகத்தியர் குணபாடம்


    எதிர்அடுக்குகளில் முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடுபடர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடுதிரும்பும் தன்மை உடையது. முள்உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர்,தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவைநிறுத்தும் குணம் உடையது. .

    வகைகள் : 1.பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில்

    பெருநெருஞ்சில் :இது ஒன்றரை அடிவரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறக்குறைய மூக்கு கடலையைப்போல இருக்கும். அதன் மேல் ஏழு, எட்டு, முட்கள் நீண்டு இருக்கும். இதன்காயளவு அரை நெல்லிக்காய் அளவில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள்இருக்கும்.

    சிறு நெருஞ்சில் : இதுதரையோடு படர்ந்து வளரக்கூடியது. இதன் காய்கள் சுண்டைக்காய் அளவில் மூக்குகடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு எட்டு முட்கள் நீண்டிருக்கும்.மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.

    செப்பு நெருஞ்சில் : இது தரையோடு படர்வதோடு தரையில் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் முட்கள் இருக்காது. சிவப்பு நிறப்பூக்கள் பூக்கும்

    கத்தி தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா?

    By: ram On: 19:53
  • Share The Gag

  • கத்தி படத்தை தீபாவளி அன்று காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் இருக்கும் போது, தற்போது மீண்டும் ஒரு தலைவலி வந்துள்ளது.

    இந்த தீபாவளிக்கு கத்தி படத்தை போல் பூஜை படமும் வெளிவரும் என பூஜை போட்ட அன்றே விஷால் கூறிவிட்டார். ஆனால் விஷால் என்பதால் விஜய்யும் இந்த போட்டியை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

    தற்போது ஷங்கரின் ஐ படமும் வருகிறது என்றவுடன் விஜய் தரப்பிற்கு கொஞ்சம் சுதாரிக்க தொடங்கியுள்ளது. ஏனெனில் ஐ படம் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் நிறைய தியேட்டர்களில் எடுப்பதால் கத்தி படத்தில் தியேட்டர் எண்ணிக்கை குறையும் என்று தெரிகிறது.

    உங்கள் காதலி உங்களை கழற்றி விடப் பார்க்கிறாரா – கண்டுபிடிக்க இதோ எளிய வழி !!

    By: ram On: 17:26
  • Share The Gag

  • இவ்வுலகில் காதலிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அப்படி காதலிப்பவர்களின் அனைத்து காதலும் வெற்றி பெறுவதில்லை. காதலில் வெற்றி பெற்று கடைசி வரை வாழ்க்கையிலும் ஒன்றாக வாழ்பவர்கள் வெகு சிலரே. காதலில் வெற்றி பெற்று சிலர் திருமண வாழ்க்கையில் தோற்பதுண்டு. ஆனால் பல பேர் காதலிலேயே தோற்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இனக்கவர்ச்சி. அதே போல் புரிதல், அலுப்புத் தட்டல் என பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

    காதல் முறிவதற்கு ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் சரிசமமான பங்கை வகிக்கின்றனர். உங்கள் காதலியுடனான உறவில் ஏதேனும் உரசல் ஏற்படுகிறதா அல்லது உங்கள் காதலி உங்களை கலட்டி விட போகிறாரா என்று தெரியாமல், உங்கள் தலையை சொரிந்து கொண்டு இருக்கிறீர்களா..? அப்படியானால் அதனை சோதனை செய்ய வேண்டிய நேரம் இது. கீழ்க்கூறிய அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை கவனிக்கத் தொடங்குங்கள்.

    உங்களுக்கு மத்தியில் நடக்கும் உரையாடலில் சுவாரஸ்யம் குறைகிறதா?

    இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது, உங்கள் காதலி அன்யோநியமாக இல்லாமல் ஒரு இடைவெளியுடன் நடந்து கொள்கிறாரா? முன்பு போல் செல்ல சண்டை போடாமல், உங்களை கிண்டல் செய்யாமல் விலகியே இருக்கிறாரா? நீங்கள் கூறுவதில் குறை கண்டுபிடிப்பவராக இருந்தவர், இப்போது மௌன சாமியாராக மாறியுள்ளாரா? உங்கள் இருவரின் உரையாடலும் சம்பந்தமில்லாமல் எங்கோ செல்கிறதா? அல்லது தொலைபேசியில் நீங்கள் அழைக்க மறந்து விட்டாலும் கூட, உங்கள் மீது கோபம் கொள்வதில்லையா? பொதுவாக முக பாவனைகளும், கண்களுமே, உங்கள் காதலி உங்கள் மீது வைத்திருக்கும் நாட்டத்தை வெளிக்காட்டிவிடும். நீங்கள் உடன் இருக்கும் போது, அவளுக்கு எப்போதுமே சலிப்பு தட்டுகிறது என்றால், அவள் உங்களுக்கானவள் அல்ல.

    உங்களை விமர்சிக்க காரணமே தேவையில்லை

    உங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த போதெல்லாம், உங்கள் முகத்தை பார்த்து விமர்சனம் செய்தவளாக இருந்திருக்கலாம் உங்கள் காதலி. ஆனால் இப்போது நீங்கள் என்ன செய்தாலும், அவள் வேதனை அடைகிறாளா? அல்லது நீங்கள் என்ன செய்தாலும் அதனை குறை சொல்கிறாளா? சிறு வாக்குவாதம் உறவை வலுப்படுத்தினாலும், காரணமே இல்லாத வாக்குவாதங்கள் மற்றும் அதிகப்படியான விமர்சனங்கள், உங்கள் இருவருக்கும் உள்ள உறவை பாதிக்கும்.

    உங்களுக்கு வேண்டியவரை அவள் சந்திக்க விரும்புவதில்லை

    நீங்கள் விரும்பிய பெண்ணை காதலியாக அடைய, நீங்கள் பட்டபாட்டை உங்கள நண்பர்களும் அனுபவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட நண்பர்களை, அவள் திடீரென தவிர்த்தால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தமாகும். உங்கள் ஒட்டு மொத்த நண்பர்கள் கூட்டத்தையும், அவளுக்கு திடீரென பிடிக்காமல் போனாலோ அல்லது நீங்கள் கெட்ட சகவாசத்துடன் இருக்கிறீர்கள் என்பதை போல் கூறினாலோ, உங்கள் உறவில் விரிசல் விழுகிறது என்று அர்த்தமாகும். அப்படிப்பட்ட அவளின் விமர்சனங்கள் உங்களை அவமானப்படுத்துவதாக இருந்தால், உங்கள் மீது அவள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது என்றும் சொல்லலாம். அதன் விளைவு பிரிவு மட்டுமே.

    உங்கள் காதலினால் உண்டான தீப்பொறி இப்போது இருப்பதில்லை

    காதல் என்பது உடல் கவர்ச்சி மட்டுமல்லாமல், மூளை வரை சென்று ஒருவித தீப்பொறியை ஏற்படுத்தி, உங்கள் உறவை நீடிக்க செய்யும். நீங்கள் செய்யும் குறும்புகள், நீங்கள் சில வார்த்தைகளை உச்சரிக்கும் விதங்கள் மற்றும் நீங்கள் அவளை புகழ்ச்சியாக பேசியவைகள் ஆகிய செயல்கள் அனைத்தும் அவளை உருகச் செய்யும். ஆனால் திடீரென இந்த செயல்கள் எல்லாம் அவளை ஈர்க்கவில்லை என்றால், உங்கள் உறவுக்கு மத்தியில் பிளவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

    உடலளவில் உங்களின் நெருக்கத்தை அவள் விரும்புவதில்லை

    படுக்கை அறையில் இருக்கும் நெருக்கம் மட்டுமல்லாது, இறுக்கி அணைப்பது, முத்தங்கள் கொடுப்பது மற்றும் அரவணைப்பாக இருப்பது போன்றவைகளும் கூட அன்பின் வெளிப்பாடே. இவைகளில் நீங்கள் ஈடுபடும் போது, திடீரென அவள் ஒரு சந்நியாசி போல் ஒதுங்கினால், இந்த உறவு அவளுக்கு கசக்கிறது என்று அர்த்தமாகும். இதற்கு முன் உடல்ரீதியாக உங்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி, இப்போது குறைந்துவிட்டால் அது பிரச்சனைகளின் அறிகுறியாகும்.

    இருவரின் வருங்காலத்தை பற்றிய எந்த பேச்சும் இருப்பதில்லை

    இதற்கு முன்பெல்லாம் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறையை எப்படி இருவரும் சேர்ந்து களிக்க வேண்டும் என்பதை பற்றி முன்கூட்டியே பேச தொடங்கிவிடுவாள். அதே போல் உங்களை திருமணம் செய்வதை பற்றியும், குழந்தைகளை பற்றியும் பேசுவாள். இப்போது வருங்காலத்தை பற்றிய எந்த பேச்சும் நடைபெறவில்லை என்றால், உங்கள் உறவின் மீது அவளுக்கு இருக்கும் ஈடுபாடு போய்விட்டது என்று அர்த்தமாகும்.

    தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை

    உங்களுடன் ஒரு சிறிய விழாவிற்கு செல்ல வேண்டுமானாலும் கூட, அழகான ஆடைகள் அணிந்து அழகாக காட்சி அளிப்பாள். அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு அதிக நேரத்தை செலவழித்து, ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு அதிக பணத்தை செலவழித்திருப்பாள். அதிலும் அது ஒரு படம் பார்க்க சென்றாலும் கூட இருக்கும். ஆனால் இப்போது திடீரென இதிலெல்லாம் நாட்டம் இல்லாமல், உங்களுடன் வெளியே வரும் போது, இப்போது தான் கோமாவில் இருந்து கண் விழித்த ஒரு நோயாளியை போல் வந்தால், உங்களுக்கே புரிந்துவிடும். இது ஒரு வகையில் உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்….!

    ஆஸ்கர் ரவிசந்திரனுக்காக இணைந்த ரஜினி, கமல்!

    By: ram On: 16:38
  • Share The Gag

  • ரஜினி, கமல் இருவரும் தான் தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத தூண். இவர்கள் படம் வருகிறது என்றால் தமிழகம் மட்டுமில்லாமல், இந்தய திரையுலகமே கவனிக்க ஆரம்பிக்கும்.

    இவர்கள் இனி ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பது கடினம். ஆனால் ஒரே மேடையில் இவர்களை பல முறை நாம் பார்க்கலாம், அந்த அளவிற்கு நல்ல நட்புடன் இருந்து வருகிறார்கள்.

    தற்போது ஆஸ்கர் ரவிசந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஐ திரைப்படத்தில் இசை வரயிருக்கிறது. இதில் உலக சூப்பர் ஸ்டார்களான அர்னால்ட், ஜாக்கிஜான் கலந்துகொள்கிறார்கள்.

    இந்நிலையில் அவர்களுக்கே அழைப்பு வரும் போது நம் சூப்பர் ஸ்டார், உலக நாயகனுக்கும் அழைப்பு இல்லாமல் இருக்குமா? அவர்களையும் ரவிசந்திரன் அழைக்க அவர்களும் இந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.