Monday 15 September 2014

அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எச்சரிக்கை!

By: ram On: 22:27
  • Share The Gag
  • ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் தம்மை புகைப்படம் எடுத்து மகிழ்வது சாதாரண விடயமாகும்.

    இதில் சில அந்தரங்கமான விடயங்களையும் புகைப்படம் எடுத்து பின்னர் அதனை அழித்து விடுவார்கள்.

    ஆனால் அவ்வாறு அழித்த பின்னரும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளிலிருந்து குறித்த படங்களை மீட்டெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு உதாரணமாக eBay தளத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 20 அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளில் Avast நிறுவனத்தின் விசேட மென்பொருள் ஒன்றினைப் பயன்படுத்தி 40,000 அந்தரங்க புகைப்படங்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.

    இதேவேளை அன்ரோயிட் மென்பொருளை உற்பத்தி செய்யும் கூகுள் நிறுவனம் 3.0 பதிப்பு பிந்திய இயங்குதளங்களில் அழித்த புகைப்படங்களை மீட்டெடுக்க முடியாது என தொடர்ச்சியாக தெரிவித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    இதேபோன்று புதிய iPhone மற்றும் iPad களிலும் இதே பிரச்சினை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரம்மாண்டமாக அரங்கேறும் கத்தி இசை வெளியீடு!

    By: ram On: 22:04
  • Share The Gag
  • இந்த தீபாவளி இளைய தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். துப்பாக்கி கூட்டணி விஜய்-முருகதாஸ் ரீஎண்ட்ரி கத்தியாக இணைந்து வசூல் வேட்டை ஆட ரெடியாகி வருகிறது.

    இப்படத்தின் பாடல்கள் வரும் 18ம் தேதி ரிலிஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடுத்த படக்குழு முடிவெடுத்துள்ளது.

    இதற்காக டிக்கெட் மற்றும் பாஸ்கள் ரெடியாகி வருகிறது. சிறப்பு விருந்தினர்கள் யார் என்பது குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

    சக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து

    By: ram On: 20:31
  • Share The Gag
  • இன்று உலகில் அதிகமானவர்கள் இன்று இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.  அது மட்டுமல்ல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் விஷேட நிகழ்வுகளில் கலந்து இனிப்பான பண்டங்களை சாப்பிட முடியாது மற்றும் உறவினர்களின் வீட்டுக்குச் சென்றால் அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு இனிப்பு பண்டத்தை சாப்பிட முடியாது. அத்துடன் இந்த நோய் பரம்பரையாகவும் வருகின்றன எனலாம். இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சிறிய கைமருந்து முறை இங்கே உங்களுக்காக தரப்படுகின்றன. Suger

    நீரழிவு சக்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.

    சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை.

    முயற்சித்துப் பார்க்கலாமே…!

    மருந்து:-

    வெந்தையம் – 50 கி

    கருஞ்சீரகம் – 25 கி

    ஓமம் – 25 கி

    சீரகம் – 25 கி

    இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

    (வறுத்த பின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).

    தினமும் காலை சிறிய ஸ்பூன்-ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).

    ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் சோதித்து பார்த்துக் கொள்ளவும்.

    {வேறு நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் செய்யவும்.}

    ஐ லைவ் அப்டேட்! அர்னால்டை ஆச்சரியப்படுத்திய தமிழ் மக்கள்

    By: ram On: 20:08
  • Share The Gag
  • ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக தற்போது நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை பாபி சிம்ஹாவும், பாடகி சின்மயியும் தொகுத்து வழங்க இருக்கின்றனர்.

    தற்போது வரை விக்ரம், எமி ஜாக்ஸன், அனிருத், எ.எல்.விஜய், அமலா பால், லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் வந்துள்ளனர்.

    அனைவரும் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அர்னால்ட் இன்னும் சில நிமிடங்களில் வரயிருக்கின்றன..

    தொடர்ந்து லைவ் அப்டேட்டிற்கு இணைந்திருங்கள்

    பசியை தூண்டும் சீரக துவையல்

    By: ram On: 18:54
  • Share The Gag
  • தேவையானவை:

    சீரகம் - கால் கப்,
    இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
    சின்ன வெங்காயம் - 5,
    புளி - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 5,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை வதக்கவும்.

    ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம்.


    இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.

    அர்னால்டை சூர்யா சந்தித்ததன் நோக்கம்?

    By: ram On: 18:39
  • Share The Gag
  • ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக இன்று ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னை வந்தார். இதனிடையே தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அர்னால்டை, நடிகர் சூர்யா சந்தித்து பேசியுள்ளார்.

    சுமார் 1 நிமிடம் இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. பின் தான் வைத்திருந்த அர்னால்ட் பற்றிய குறிப்பு புத்தகத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார் சூர்யா.

    ருத்திராட்சம் ஐந்து லட்சம்... ராசிக்கல் மோதிரம் ஏழு லட்சம்! காரைக்காலில் ஒரு சதுரங்க வேட்டை..!

    By: ram On: 08:02
  • Share The Gag
  • ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இந்த சம்பவம்.

    மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தைப் பறிகொடுத்ததுடன் உயிரையும் விட்டிருக்கிறார் புதுவையைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ். மோசடி கும்பலைச் சேர்ந்த காரைக்கால் காசிநாதன், ஜெயக்குமார், இளவரசன் ஆகியோரை போலீஸ் கைது செய்திருக்கிறது.

    ரமேஷ§க்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ''புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழிலை லாபகரமாக நடத்தி வந்தார் ரமேஷ். இவரிடம் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்ட பழைய நண்பனான காசி, அதை எப்படியாவது அபகரிக்கத் திட்டம் தீட்டினான். காரைக்கால் காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.ஆர்.என். திருமுருகனின் உதவியாளராகிவிட்டேன் என்று சொல்லி ரமேஷிடம் நெருங்கியிருக்கிறான். இவரும் அதை உண்மையென நம்பிவிட்டார்.

    அடுத்ததாக  இவரிடம் பணத்தைக் கறக்க... இல்லாத ஒரு சாமியாரை கற்பனையாக உருவாக்கி, 'அந்த சாமியார் திருமுருகன் எம்.எல்.ஏ-வுக்கு ரொம்ப நெருக்கம். அவரிடம்  உங்களைப் பற்றிச் சொன்னதால், அவருக்கு உங்களைப் பிடித்துவிட்டது. அதனால் சக்தி வாய்ந்த இந்த இரண்டு எலுமிச்சை பழங்களை உங்களுக்காகக் கொடுத்தார். இதற்கு பத்து லட்சம் வரை தர நிறைய பேர் தயாராக இருந்தும், என் தம்பி ரமேஷ§க்குதான் இது சேர வேண்டும். அதனால் வெறும் இரண்டு லட்சம் மட்டும் போதும்’ என்று சாமி சொன்னதாக சொல்லி வேட்டையை ஆரம்பித்திருக்கிறார். இதை ரமேஷ் நம்பி பணத்தைக் கொடுக்கவே, மேலும் பல கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறான். அப்போதுதான் இளவரசனையும், ஜெயக்குமாரையும் கூட்டு சேர்த்திருக்கிறான். உலகத்திலேயே முதலில் உருவான ருத்திராட்சம் என்று சொல்லி ஒரு ருத்திராட்சத்தை ஐந்து லட்சத்துக்கும், ராசிக்கல் மோதிரத்தை ஏழு லட்சத்துக்கும், எதிரிகள் அருகே வராமல் இருக்க தாயத்து மூன்று லட்சத்துக்கும், விபூதி ஐம்பதாயிரத்துக்கும் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் ரமேஷ் உண்மை என நம்பி ஏமாந்து பணத்தைக் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

    சாமியைப் பார்க்க வேண்டும் என்று ரமேஷ் கேட்கும்போதெல்லாம், 'சாமி இமயமலையில் ஒரு மத்திய அமைச்சருடன் யாகத்தில் இருக்கிறார். அவர் வந்ததும் 'சைஸ் புல்லிங்’ உங்களுக்குக் கிடைத்துவிடும்’ என்று சொல்லி ஏமாற்றியிருக்கிறார். இதையெல்லாம்விட கொடுமை, சாமியின் சின்ன மனைவிக்கு பத்து பவுனில் அட்டிகை பெரிய மனைவிக்கு 12 பவுனில் ஆரம், தனக்கு ஏழு பவுனில் பிரேஸ்லெட் என்று சாமி கேட்டதாகச் சொல்லி வாங்கியிருக்கிறார்.
    அவரசரமாக சாமிக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று காசி போன் செய்யும்போதெல்லாம் இவர் காசியின் மனைவி ஆனந்தியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியிருக்கிறார். இப்படி இவரிடம் இருந்த அனைத்து பணத்தையும் சுரண்டிவிட்டதால், தொழிலிலும் கவனம் செலுத்தாமல் கடன் சுமையும் அதிகமானதால் சாமியை சந்திக்க வேண்டும் என்று காரைக்கால் சென்று காசியை நெருக்க ஆரம்பித்திருக்கிறார். அப்போது காசிக்கும் ரமேஷ§க்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதன் பிறகு ரமேஷின் உடல் புதுவையில் கரை ஒதுங்கியிருக்கிறது. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை'' என்று சொல்கிறார்கள்.

    ரமேஷ் மனைவியைப் பார்க்கப் போனோம். அவர் பேசும் நிலையில் இல்லை. அவரது உறவினர்களோ, ''தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு ரமேஷ் கோழை இல்லைங்க. அவரோட மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. ரமேஷ் எப்படி இறந்தார் என்பது நிச்சயம் காசிக்குத் தெரியும். சாமி என்ற பெயரில் ரமேஷிடம் பேசியது யார்? உண்மையில் அப்படி ஒருவர் இருந்தால் அவர் எங்கே இருக்கிறார்... என்பதெல்லாம் போலீஸ் விசாரிக்க வேண்டும். ரமேஷிடம் இருந்து சாமி பெயரைச் சொல்லி காசி வாங்கிய பணத்தையும் நகைகளையும் திருப்பிக்கொடுக்க வேண்டும்'' என்று சொல்கிறார்கள்.
    இது குறித்து கோட்டுச்சேரி எம்.எல்.ஏ திருமுருகனிடம் பேசினோம். ''காசி என் தொகுதியைச் சேர்ந்தவர். அவர் எனக்கு உதவியாளர் எல்லாம் கிடையாது. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!'' என்று சொன்னார்.
    வழக்கை விசாரிக்கும் காரைக்கால் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகரிடம் கேட்டபோது, ''தற்கொலைக்குத் தூண்டியதாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.

    பேராசை பெரு நஷ்டத்தில் மட்டுமல்ல... மரணத்திலும் சில நேரங்களில் தள்ளிவிடுகிறது!

    ஐ படத்தின் கதையை வெளியிட்ட விக்ரம்!

    By: ram On: 07:35
  • Share The Gag
  • இந்த வருடம் அனைவரின் கவனமும் ஐ படத்தின் மீது தான் உள்ளது. இப்படத்தை பற்றி எல்லோரும் அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு கதையை கூறி, இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று சொல்லி வருகின்றனர்.

    இந்நிலையில் விக்ரமே ஒரு பேட்டியில் இப்படத்தின் கதை குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் ” ’ஐ' என்றால் அழகு என்று அர்த்தம். விளம்பரம் மற்றும் மாடலிங் உலகம் குறித்து இப்படம் பேசும். ஒரு மாடலின் கடுமையான உழைப்பும், வேதனையும் தான் படம்.

    மேலும் இப்படத்திற்காக நான் மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், இதற்காக என் முழு உழைப்பையும் அளித்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

    By: ram On: 00:39
  • Share The Gag

  • உறவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.


    அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது.


    தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது உறவுகள் நீடிக்கவும், உறவுகள் பெருகவும் மென்மையான சின்னச்சின்ன பேச்சுக்கள் அவசியமாகின்றன.


    நல்ல முறையில் படித்து, நாகரீகமாக உடை அணிந்து செல்வோர்கூட புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் கூச்சப் படுவது உண்டு. கவுரவக் குறைச்சலாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு கொடுப்பதும், பேசி ஞானத்தை, நட்பை வளர்த்துக் கொள்வதும் நிச்சயமாக ஒரு கலைதான்.


    பணிச்சூழலோ, பொது இடமோ கனிவுடன் பேசுபவர்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். இதற்கு முதலில் கூச்சத்தை விட்டொழிக்க வேண்டும். புதிய மனிதர்களை சந்திப்பதாக இருந்தால், நான் இங்கு உங்களை அடிக்கடி பார்க்கிறேனே, என் பெயர்... என்று அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கலாம். உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன், இன்று என்ன சிறப்பு? என்று ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் பேசத்தொடங்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், பயண நேரம் எவ்வளவு? என்று பேச்சுக் கொடுக்கலாம்.


    குழுவாக இருக்கும்போது கூச்சப்பட்டு எதுவுமே பேசாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை கேட்கலாம். அது மற்றவர்கள் உங்களை கவனிக்க வைக்கும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுபோல உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தாலும், `ஒன்றுமில்லை' என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொள்ளாதீர்கள்.


    புதியவர்களுடன் பழக ஆரம்பிக்கும்போது நம்பிக்கை இல்லா தன்மையுடன், அல்லது வேண்டா வெறுப்பாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சிடுசிடுப்பாகவும், சில விஷயங்களில் பிடிவாதமும் காட்டுவது உங்களைப் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி விடக்கூடும். அது பின்னால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மென்மையாகப் பேசுங்கள். நான் சொல்வது உண்மை என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டு இருக்காதீர்கள்.


    உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளாமலும், நீண்ட லெக்சரும் கொடுக்காமல் சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள். அதாவது ஒருவர் உங்களிடம் `உங்கள் பொழுதுபோக்கு என்ன?' என்று கேட்டால், `நான் புத்தகங்கள் படிப்பேன்' என்று முடித்து விடாதீர்கள். `நான் புத்தகங்களை விரும்பி படிப்பேன். நாவல்கள், கவிதைகள், தலைவர்களின் சுயவரலாறுகளை எனக்கு மிகவும் பிடிக்கும்` என்று சொல்லுங்கள்.


    அப்படி இருந்தால் தான் அவர் நீங்கள் தாகூரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா, பாரதியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? என்பதுபோல தொடரவும், அவரும் உங்களைப் போன்ற விருப்பம் உடையவராக இருந்தால் உங்களுக்கிடையே நெருங்கிய நட்பு மலரவும் உறுதுணையாக இருக்கும்.


    நிகோலஸ் போத்மேன் என்பவர் தன் நூலில், மக்களில் 90 சதவீதத்தினர் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதையும், எப்போது என்ன செய்வார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள்' என்கிறார். எனவே ஒருவரது உடல் அசைவுகளும், செய்கைகளும் பேச்சுத் திறமைக்கு மிக முக்கியமானது. நீங்கள் கருத்துச் செறிவுடன் பேசும்போது அங்க அசைவிலும் கவனம் செலுத்துங்கள்.


    ஒருவருடன் பேசும்போது அவருக்கு பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். நேருக்கு நேராக இருந்து கண்களைப் பார்த்தபடி பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பேச்சின் பிரதிபலனை உணர முடியும்.


    பேச்சினை எப்போது நிறுத்த வேண்டும் என்பதுவும் பேச்சுத்திறமையில் குறிப்பிடத்தக்க விஷயம். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் கேட்பவருக்கு சலிப்பு வந்துவிடும். கேட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் பேச்சை விரும்புகிறாரா என்பதை சில விஷயங்களை வைத்து கணித்து விடலாம். `ஓ அப்படியா, நன்றாக இருக்கிறது? தொடர்ந்து சொல்லுங்கள்' என்றால் அவர் விருப்பத்துடன் கேட்கிறார் என்று பொருள். சரி..., அப்படியா..., சரி வேற... என்று கூறினால் அவருக்கு உங்கள் பேச்சில் விருப்பமில்லை என்று அர்த்தம்.


    அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பதும், கை, மூக்கு, தலையை சொரிந்து கொண்டு இருந்தாலும், நடக்கும்போது கால்களை தரையில் உரசியபடி நடந்து வந்தாலும் உங்கள் பேச்சில் நாட்டமில்லை என்று பொருள்.


    எனவே கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

    தீய பழக்கங்களில் இருந்து விடுபட .....?

    By: ram On: 00:38
  • Share The Gag

  • மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.


    ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.
    உதாரணத்திற்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.


    இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.


    தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது. ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு. ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை


    என்று எடுத்துக் கொண்டுவிடும். ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.


    மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.


    ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.


    நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு. ஆனால் ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.


    ’நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால் அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக்கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.


    நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ’இனி மேல் கோபப்பட மாட்டேன்’, ’இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்’ என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால் மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.


    எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.


    சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.


    முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.


    பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள்.


    அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.


    அடுத்ததாக அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.


    இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன்
    அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள்.


    இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம். (மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.)


    எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்.

    தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...?

    By: ram On: 00:37
  • Share The Gag

  • >> முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.


    >> முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.


    >> மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.


    >> மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.


    >>மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவளரும்.


    >> பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

    ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள்..!

    By: ram On: 00:36
  • Share The Gag


  • ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள்..!

    1.நோ ஐடியா (no idea)

     2.நண்பர்களாக இருக்கலாம்

    3.செருப்பு பிஞ்சிடும்

    4.நான் காதலை வெறுக்கிறேன்

    5.நான் உன்னை வெறுக்கிறேன்

    6.பெற்றோர் திட்டுவாங்க

    7.காதலில் நம்பிக்கை இல்லை

    8.யோசிக்க நேரம் வேண்டும்

    9.உங்களோட மாத வருமானம் என்ன?

    10.மன்னிக்கவும் அண்ணா

    11.நான் என்னுடைய பெற்றோர மட்டும் தான் காதலிக்கிறேன்.

    12.நீங்க எனக்கு அப்பா மாதிரி.