Wednesday 8 October 2014

வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்த சிறுமியின் 90 நிமிடங்கள்

By: ram On: 22:30
  • Share The Gag
  • நியூயார்க்கில் கண்ணாம் பூச்சி விளையாடியபோது வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்த சிறுமி 90 நிமிடங்கள் அதற்குள் சிக்கி கொண்டார்.

    சால்ட் லேக் சிட்டியில் 11 வயது சிறுமி தனது சகோதரிகளுடன் கண்ணாம் பூச்சி விளையாட்டு விளையாடியுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு வாஷிங் மெஷின் ஒளிவதற்கு சிறந்த இடமாக தெரிந்துள்ளது. இதில் ஒளிந்தால் யாருக்கும் தெரியாது என்று எண்ணிய சிறுமி அதற்குள் ஒழிந்து கொண்டார். அப்போது சிறுமி வெளியே வரமுடியாத வண்ணம் உள்ளே சிக்கி கொண்டார். அவளது பெற்றோர்கள் மீட்டு பார்த்தும் சிறுமியை மீட்க முடியவில்லை.

    பின்னர் தீயணைப்பு துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு சென்ற மீட்பு படையினர் 90 நிமிடங்கள் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிய சிறுமியை வெளியே எடுத்தனர்.

    ஆபாச வீடியோவில் சிக்கிய ஷாரூக்கான் மகன் மற்றும் அமிதாப் பேத்தி

    By: ram On: 22:00
  • Share The Gag
  • பிரபல நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் மற்றும் அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நாவெல் ஆபாச வீடியோ தற்போது இணையத்தளத்தில் காட்டு தீ போல் வரவி வருகிறது.

    அரைநிர்வாண கோலத்தில் ஷாரூக்கான் மகன் இருப்பது பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில் ஆர்யன் படுக்கையில் நிர்வாண கோலத்தில் செல்பி பிக் எடுப்பது போல் சித்திரிக்க பட்டுள்ளது .ஆனால் இது போலியான வீடியோ என்று ஆர்யன் தரப்பில்சொல்லப்படுகிறது.

    இதற்கு முன்பு அமிதாப் பேத்தி நவ்யா நாவெல் மற்றும் ஆர்யன் அதுவும் ஒன்றாக ஊர் சுற்றுகின்றனர் என்ற செய்தி நாளிதழில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது


    எச்சரிக்கை தகவல்..! பெண்களின் கவனத்திற்கு!!

    By: ram On: 21:25
  • Share The Gag
  • உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்று நாம் விலை கொடுத்து வாங்கும் பொருட்களே, நமக்கு ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தும் காரணியாக இருந்தால்…? அதுதான் நடக்கிறது பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் “நாப்கின். விடயத்தில்’ அதிர்ச்சியான தகவல் சொல்கிறார் பேராசிரியர் முகமது ஷாபீர்.

    “இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களை ஆய்வு செய்தபோது பல உண்மைகள் புரிந்தது. இந்த நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

    மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது பிளாஸ்டிக் வகைப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பொதுவாக நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில்

    1.முதல் லேயர்… சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது.

    2.இரண்டாவது லேயர், மறுசுழற்சி செய்யப்பட்ட அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்,

    3.முன்றாவது லேயர் ஜெல் (பெட்ரோலியப் பொருளால் தயாரானது)

    4.கீழ் லேயர்… பொலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது.

    தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் (ஜெல்) பசை வகை.

    *இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் இரசாயனம் இருப்பதுடன் ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது.

    * பெண்கள் இதைப் பயன்படுத்தும் போது நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த இரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டையாக்ஸேன் ஆக மாறுபாடடைகிறது.

    *புற்று நோய்க்கான மூலக் காரணிகளில்… இந்த டையாக்ஸேனும் ஒன்று.

    தவிர இத்தனை இரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்சினை, வெள்ளைபடுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் புற்று நோய் என்று பல பிரச்சினைகள் வரிசை கட்ட நேரிடுகிறது.

    நாப்கின் தயாரிப்புக்குப் பிறகு அவை பேக்கிங் செய்து அனுப்பப்படுவதிலும் போதுமான சுத்தம் இருப்பதில்லை என்பதும் கவலைக்குரிய விடயமே! அதிக விலை கொடுத்து வாங்கும் முன்னணி நிறுவன நாப்கின்களில் கூட தயாரிக்கப்படும் திகதிதான் இருக்குமே தவிர, காலாவதி நாள் என்பது குறிப்பிடப்படுவதில்லை. சில கம்பனி தயாரிப்புகளில் “தயாரிக்கப்பட்ட திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது’ என்று போட்டிருக்கிறார்கள்.

    “இன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோபாஸ் ஏற்படும் 45 வயது வரை மாதத்தில் மூன்று நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் மாதவிடாய் சமயங்களில் நாப்கின் உபயோகிக்க நேரிடுகிறது. இரசாயனக் கலவைகளால் உருவான நாப்கினைத் தொடர்ந்து உபயோகிக்கும் போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது’ என்று நிறுத்தினார்.

    “இதற்குத் தீர்வுதான் என்ன?’ என்று அவரிடமே கேட்டபோது, “வாங்கும் காசுக்குத் தரமான நாப்கின்களைத் தயாரித்துக்கொடுக்கும்’ மனசாட்சி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும்.
    இதோ… இந்த நாப்கின் ஹொங்காங்கில் தயாரிக்கப்பட்டது. இதில் *பிளாஸ்டிக்* பயன்படுத்தப்படவில்லை. பிரின்ட் எதுவும் செய்யப்படாத துணிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஜெல் என்பது *மக்காச்சோளத்தின்* தண்டிலிருந்து எடுக்கப்பட்ட ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல். மேலும் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ள “அனியன்ஸ் சிப்’ கிருமி நாசம் செய்யும் தன்மை கொண்ட பொருள். மேலும் இதில் இருந்து வெளியாகும் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதுடன் அதை சமன் செய்ய வல்லது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டிஷ்யூ பேப்பரும் தீங்கு விளைவிக்காதது.

    வெளிநாட்டு நாப்கின் என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால் அதன் தரக்கட்டுப்பாட்டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள். விளம்பரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அதன் தர மேம்பாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்காத்து நம் பெண்களின் ஆரோக்கியத்தில் அவர்களும் அரசும் கொண்டுள்ள அலட்சியத்தைத்தான் காட்டுகிறது’ என்று சாடிய ஷாபீர்,

    “மாதவிடாய்க் காலங்களில் தரமான நாப்கின்கள் உபயோகிக்க வேண்டும். அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இதுதான் பெண்களை பல பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்’ என்று வலியுறுத்தினார்.

    மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாதனாவிடம் இதுபற்றி கேட்டபோது, “ஷாபீர் சொல்கின்ற தகவல்கள் அத்தனையுமே சரி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் சில உண்மைகள் இருக்கவே செய்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. நீங்கள் இதுபற்றி என்னிடம் போனில் கேட்டதுமே… பிரபல கம்பனிகள் தயாரிக்கின்ற சில நாப்கின்களை வாங்கிப் பார்த்தேன். அவற்றின் உள்ளே இருக்கின்ற பொருட்கள் பற்றியோ, எப்படி சுத்தமானதாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றியோ எந்த விபரங்களும் அதில் இல்லை. அதேசமயம், எத்தனை மாதத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்கிற தகவல் இடம்பெற்றிருக்கிறது.

    ஐ படத்துக்காக குரலில் விக்ரம் மேற்கொள்ளும் புது முயற்சி

    By: ram On: 20:26
  • Share The Gag
  • கிட்டதட்ட ஐ படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து டப்பிங் பணிகள் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் சீராக நடந்து வருகிறது.

    ஐ தீபாவளிக்கு வெளிவரும் என்று முன்பே அறிவித்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் தற்போது தன் முடிவை மாற்றி நவம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் விக்ரம் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி பதிப்பிலும் அவரே அவருடை கேரக்டருக்கு குரல் கொடுக்க போகிறாராம். என் உடலை வருத்தி இப்படத்தில் நடித்து உள்ளேன், அதனால் ஹிந்தி பதிப்பிலும் என் குரல் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்றாராம்.

    “ஓ” குரூப் இரத்தம் பெண்களுக்கு ஆபத்தானதா !

    By: ram On: 20:05
  • Share The Gag
  •     

    “ஓ” குரூப் இரத்தம் பெண்களுக்கு ஆபத்தானதா !ஒரு பெண்ணுக்கு குழந்தை பேறு ஏற்படுவது அவரது ரத்த குரூப்பை பொறுத்தது. குழந்தை பேற்றை ஊக்குவிப்பதும், குழந்தை பாக்கியத்தை குறைப்பதும் ரத்த குரூப்பை சார்ந்தே உள்ளது.

    குறிப்பாக “ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு. ஏனெனில் இவர்களின் கருப்பையில் குறைந்த அளவே கரு முட்டை உற்பத்தியாகிறது. அவ்வாறு உருவாகும் கரு முட்டையும் கரு உண்டாகும் தன்மை குறைந்ததாக உள்ளது.

    இந்த தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க்கில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருந்து கல்லூரியும் இணைந்து 560 பெண்களிடம் ஆய்வு நடத்தினர்.

    அந்த ஆய்வுக்கு சராசரியாக 35 வயது வரை உள்ள பெண்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

    ரத்தத்தில் உள்ள முதிர்ந்த கரு முட்டை சுரப்பிகளின் ஹார்மோனின் அளவு பார்க்கப்பட்டது. ஏனெனில் கருத்தரிப் பதில் இவற்றின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

    சோதனைக்கு எடுக்கப் பட்ட ரத்த வகைகளில் “ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு முதிர்ந்த கரு முட்டை சுரப்பிகளில் ஹார்மோன் உற்பத்தியாகும் அளவு 10 மடங்கு அதிகமாக இருந்தது. இது கரு முட்டையின் கருத்தரிப்பு சக்தியை குறைய செய்கிறது.இதன் மூலம் “ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு மற்ற ரத்த குரூப் பெண்களை விட குழந்தை பாக்கியம் குறைவு என தெரிய வந்துள்ளது .முறையான சிகிச்ச்சைகள் எடுக்கும் பட்சத்தில் குழதைகள் பெற்றுகொள்ளலாம் “ஓ” குரூப் ரத்த பெண்கள்.

    விஜய்யின் கத்தி படம் 17ம் தேதியே வெளியாகிறது...! முழுகாரணமும் இங்கே..!

    By: ram On: 18:32
  • Share The Gag
  • விஜய்யின் கத்தி படம் வருமா? வராதா? என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் அனைவரிடத்திலும் இருந்து வருகிறது.

    தற்போது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. தீபாவளி ரேஸில் கத்தியுடன், விஷாலின் பூஜை மற்றும் ஜெயம் ரவியின் பூலோகம் படம் வெளியாக இருந்தது.

    மூன்று படங்களும் ஒரே நாள் திரைக்கு வந்தால், கலெக்ஷன் மூன்றாக பிரியும். தியேட்டர்களும் முறையாக அமையாது என்பதால் அனைத்து விநியோகஸ்தர்களும் சேர்ந்து பேசி ஒரு முடிவு எடுத்துள்ளனராம்.

    தமிழ்நாடு திரையரங்கத்தை பொறுத்த மட்டும் சுமார் 40 கோடிக்கும் மேல் விஜய் படத்திற்கான வியாபாரம் இருக்கிறது.

    எனவே, தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே கத்தியை வெளியிடுவதாக முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி 17ம் தேதி விஜய்யின் கத்தி படம் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    தமிழர்கள் செய்யும் வீண் செலவும் தவிர்க்கும் வழிமுறையும்!

    By: ram On: 18:06
  • Share The Gag
  • ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். இவர் கூறும் இந்தத் தத்துவத்தின் ஆழத்தை அறியாமல் இருப்பவர்களே வீண் செலவுகள் செய்து சொத்துக்களை இழப்பவர்கள் ஆவார்கள். தவக்கும் குழந்தை முதல் தள்ளாடும் முதியோர் வரை அனைவரின் மனதிலும் தனக்கு இப்பொருள் இருந்தால், இந்த வசதி இருந்தால் நான் மகிழ்வாக இருப்பேன் என்ற மனநிலை ஆணிவேராய் வேரூன்றி இருக்கிறது.

    தன் வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்க அடிப்படை பணம். இந்தப் பணத்தை எப்படிச் சம்பாதிப்பது? அப்படி சம்பாதித்த பணத்தை எவ்வாறு சிக்கனமாக செலவு செய்வது? என்ற திட்டமிட்டு செயல்படும் மனப்பான்மை பெரும்பாலான தமிழர்களுக்கு இல்லை என்றே கூறலாம். அவ்வாறு இல்லை என்றால் தமிழர்கள் கொஞ்சமும் அறியாத, தெரியாத, பழக்கப்படாத அயல்நாட்டுப் பொருட்களை வாங்கி நுகரும் தன்மைக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள்.
    அமெரிக்காவின் பொருளாதாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு மளமளவென சரிந்த போது, அதற்கு முக்கியக் காரணமாக நிபுணர்கள் சுட்டிக் காட்டியது அமெரிக்க மக்களின் ஊதாரித்தனமான செலவைத்தான். அம்மக்கள் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் வாங்கி வாங்கி குவித்ததால் வந்த அவல நிலையே இது என்றனர். ஒரு தனி மனிதனின் வீண் செலவுகள் ஒரு வளர்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை எப்படி வீழ்த்தக் காரணமாக இருந்தது என்பதற்கு உதாரணமே அமெரிக்கா.

    தற்போது அந்தச் செயல்பாடு இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் நம் மக்கள் செலவு செய்யும் விதத்தில் சமீப காலமாக பயங்கர மாறுதல்கள் அடைந்துள்ளன.

    மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இன்றைய மக்கள் சில ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு பணத்தைச் செலவு செய்யாமல் இருப்பதில் நமக்கென்ன நன்மை? என இன்றைய சமுதாய மக்கள் கேள்வி கேட்பதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், இவ்வாறு கூறிக்கொண்டு நம் இளைய சமுதாயத்தினர், செய்யும் செலவு கணக்கைப் பார்க்கும் போது கொஞ்சம் மலைப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இன்றைய நிலையில் வாழும் தலைமுறையினர் மூன்றில் ஒரு பங்கை அனாவசியச் செலவிற்காக பணத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று புள்ளிவிபரங்கள் சொல்வது நமக்கு மலைப்பாகத்தான் இருக்கிறது.

    தமிழர்களின் எந்தெந்த வகையில் செலவு செய்கின்றனர் என்று பார்த்தால் மலைப்பு அதிகரிக்கிறது.

    1. பொருட்கள் வாங்குதல் (ஷாப்பிங்):
    தனக்குத் தேவையான பொருட்களை வாங்குவதைப் பிடிக்காத மனிதர்களே இல்லை எனலாம். காரணம் தனியார்மயம், தாராளமயம் ஆனதின் விளைவாக அனைவரும் இன்று அறிமுகம் இல்லாத பொருட்களைக் கூட வாங்கிக் குவிக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். கிராமம் முதல் நகரம் வரை இருக்கும் ஆண்,பெண் இரண்டு தரப்பும், சம்பளம் வாங்கிய முதல் நாளே தனக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
    இதில், நகரத்தில் வசிக்கும் மக்களே குடும்பத்திற்கு அவசியமில்லாத செலவுகளும், ஆடம்பரமான செலவுகளும், அழகுசாதனப் பொருட்களை வாங்கும் செலவுகளையும் கூட்டிக் கொள்கின்றனர்.

    2.அலைபேசி:
    பெண்ணுக்கும் அலைபேசிக்கும் எப்போதும் பெற அவசரம் காட்டக்கூடாது. ஏனென்றால் ஒன்றுபோனால் வேறு நல்ல வகை வரும் என நகைச்சுவையாக ஆண்கள் மத்தியில் ஒரு புதுமொழி உண்டு. அந்த வகையில் அலைபேசியைப் பயன்படுத்தாதவர்களை இன்று காண்பதே அரிதாகி விட்டது. இதில் அலைபேசிக்கு (recharge) செய்வதிலேயே முக்கால்வாசி பணம் செலவாகிவிடுகிறதென்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதல் (recharge) தவிர இணைய இணைப்பு கொடுத்து, பாடல்களை பதிவிறக்கும் செய்வது, காணொளிகளை பதிவிறக்கம் செய்வது, (caller tune) மாற்றுவது, ஏன் அலைபேசிகளையே மாற்றுவதென சம்பாதித்தப் பணத்தை இவ்வழியில் வீணடித்துக்கொண்டு இருப்பவர்களே இங்கு அதிகம்.

    3. திரைப்படம்:
    திரைப்படம் என்பது இன்று மக்கள் அதிகம் விரும்பிய பொழுது போக்குகளில் ஒன்று. இதில் இருபிரிவினர் உள்ளனர். வீட்டில் வரும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் படத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் ஒரு பிரிவினர். திரையரங்கம் சென்று படம் பார்ப்பவர்கள் மற்றொரு பிரிவினர். இதில் திரையரங்கம் சென்று படம் பார்ப்பவர்களே அதிகம். இதில் ஆண்களே முதலிடம் வகிக்கின்றனர். தனக்குப்பிடித்த கதாநாயகனின் படத்தை முதல்நாளே காண வேண்டும் என்பதற்குப் பல நூறு ரூபாய் செலவு செய்கின்றனர். ஏன் திரும்பத்திரும்ப அதே படத்தைக் காணும் ஆட்களும் உண்டு. இவ்வாறான வழியில் பணத்தை வீண் விரயம் செய்வதே வாடிக்கையான ஒன்றாகி விட்டது இன்றைய இளம் தலைமுறையினருக்கு.

    4. உணவகம்:
    வீட்டில் அம்மா கையாலோ, மனைவி கையாலோ சமைத்து சாப்பிட்டு வந்த மக்கள், இன்று அதை விட நல்ல சாப்பாடு உணவகத்தில் தான் கிடைக்கிறது என்றெண்ணி இதற்காகப் பணத்தை வீண் செலவு செய்பவர்கள் அதிகம். முன்பெல்லாம் எப்போதாவது உணவகத்திற்குச் சென்றவர்கள், இன்று வாரத்தில் 2,3 நாட்களிலும், கட்டாயமாக வாரத்தின் இறுதி நாட்களிலும் உணவகத்திற்குச் சென்று ஆரோக்கியமற்ற உணவை உண்டு உடலைக் கெடுத்துக்கொள்ளும் கூட்டம் நாட்டில் ஏராளமாய் உள்ளது.

    5. நொறுக்குத் தீனிகள்:
    இதில் இரு பாலினமும் இந்தச் செலவுகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். என்றாலும் இதில் ஆண்களின் செலவு அதிகமாக இருக்கிறது. டீ,காபி,வடை,பஜ்ஜி,பர்கர்,பீட்சா,பேல்பூரி,கெண்டகி சிக்கன் என நொறுக்குத் தீணிக்காகச் செலவு செய்யும் உணவுப் பட்டியல் நிகழ்கிறது. இதில் பாக்கெட் பணத்தைக் காலி செய்வதில் டீ கடைகளின் பங்கே பிரதானமாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் இதற்காகச் செலவு செய்வதை இங்கிருக்கும் எவரும் தவிர்க்க முடியவில்லை என்பதை விட, தவிர்க்க விரும்பவில்லை என்றேதான் கூற வேண்டும்.

    ஆதலால் கஷ்டப்பட்டு உழைத்தப் பணத்தை நமக்கு எது தேவையோ, நம் பண வரவுக்கு எவ்வளவு செலவழிக்க முடியுமோ அதற்குள் வாழப் பழகுவதே வீண் பண விரயத்தைத் தடுக்கும் முதற்கட்ட நடவடிக்கையாகும். மேலும் நமக்கு செய்யவிருக்கும் வேலையை சரியான நேரத்தில் செய்து முடித்தால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம்.
    இதில் மின் கட்டணம், பள்ளி, கல்லூரிக் கட்டணம், வருமான வரிக் கட்டணம் இவ்வாறு செலுத்த வேண்டிய பல கட்டணங்களை நேரத்திற்குக் கட்டாவிட்டால் பின்னாளில் அபராதத் தொகையும் சேர்த்துக் காட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறோம்.

    சிலர் முக்கிய நிகழ்வுகளுக்கு பயணப்பட வேண்டியிருக்கும் சூழலை வைத்துக்கொண்டு பொறுமையாக இருப்பர். நிகழ்வு நெருங்கிவரும் இறுதி நேரத்தில் டிராவல்ஸ் மற்றும் தட்கல் முறையில் பயணச்சீட்டை அதிக விலை கொடுத்து வாங்கி பயணப்படுவர். இதுபோன்று திட்டமிடாமல் இருத்தலின் விளைவால் வீண் பணவிரயம் செய்வதையும் பலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

    நேர்மையாக உழைத்து வரும் உன்னதமான பணத்தை வீண் செலவுக்கு விரயமாக்குவதை விட அதைச் சேமித்து வைப்பதே சிறந்த முறையாகும். பணத்தைச் சேமித்து வைப்பதே சேமிப்பு இல்லை, பணத்தைச் சிக்கனமாக செலவு செய்வதும் ஒரு சேமிப்புதான் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டாலே பொருளாதாரத்தில் தமிழகம் முன்னடைவு பெறும் என்பதில் ஐயமில்லை.

    விக்ரமின் ஐ நவம்பர் மாதம் 14ம் தேதி வருகிறது..!

    By: ram On: 17:27
  • Share The Gag
  • பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ஐ. இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

    இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு தமிழ் மட்டுமில்லாது, தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் விக்ரமே டப்பிங் செய்து வருகிறாராம்.

    தற்போதைக்கு தெலுங்கில் டப்பிங் பேசி முடித்துவிட்டாராம் விக்ரம். அடுத்து ஹிந்தியில் டப்பிங் பேச ஆரம்பிக்க இருக்கிறாராம்.

    அதேபோல் இப்படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என்று படக்குழுவினர் கூறியிருந்தனர். ஆனால் தற்போது இப்படம் நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    காற்றில் கரைந்த பாலு மகேந்திராவின் கனவுப் பட்டறை!

    By: ram On: 08:30
  • Share The Gag
  • இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குனர் பாலுமகேந்திரா. தமிழ் நாட்டிற்கு கிடைத்த சத்யஜித்ரே. தன் ஒப்பற்ற திறனால் திரையில் அடர் இருட்டைக் கூட அழகுபட காண்பித்த ஒளி ஒவியர்..சக மனிதர்களை மட்டுமல்ல,

    காற்றில் கரைந்த பாலு மகேந்திராவின் கனவுப் பட்டறை!

    அஃறிணைகளிடமும் அளவில்லாத பாசத்தை வைத்திருந்த மனிதன்.

    ஒரு முறை நாம் அவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது குறும்படங்கள் குறித்து பேச்சு எழுந்தது. பரபரப்பான இயக்குனராக இருந்தபோதும் குறும் படங்கள் எடுப்பதை பாலுமகேந்திரா எப்போதும் கைவிட்டதில்லை. இது பற்றி அவரிடம் கேட்டபோது, 'குறும்படங்கள் எடுப்பது ஒரு சுகானுபவம்,' என்றார். நாம் அவர் எப்போதோ எடுத்த ஒரு குறும்படத்தைப் பற்றி நினைவு படுத்தியதும், அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் அந்த படம் எடுத்து பல ஆண்டுகளாகி விட்டது. வார இதழ் ஒன்றில் ஒரு பக்க கதையாக வந்திருந்தது. அது ஏற்படுத்திய பாதிப்பால் அந்த கதையை படமாக்கியிருந்தார் பாலு சார்.

    'அந்த கதையை எழுதியவர் பெயர் எனக்கு மறந்து விட்டது . உங்களுக்கு நினைவிருக்கா,' என்றார்.

    'இருக்கு சார் சூரியசந்திரன்,' என்றதும்,

    'ஆமாம்ப்பா. அவரை கண்டுபிடிக்க முடியுமா,' என்று குழந்தைபோல் கெஞ்சினார்.

    காற்றில் கரைந்த பாலு மகேந்திராவின் கனவுப் பட்டறை!

    காரணம் அந்த கதையின் மேல் அவர் வைத்திருந்த காதல். கண்ணுக்குத் தெரியாத ஒரு அறிமுக எழுத்தாளர் எழுதிய படைப்புதானே என்று அலட்சியப்படுத்தாமல் அந்த படைப்பை மதித்து அவரை சந்திக்க துடிக்கும் அந்த படைப்புள்ளம் யாருக்கு வரும்?அவர் உதவியாளர்கள் என்று சொல்லிக்கொண்டு உயர்ந்த இடத்தில் இருக்கும் இயக்குனர்களுக்குக் கூட வராது.

    பாலு சாரை கிறங்கடித்த அந்தக் கதை இதுதான். ஊரில் பெரிய நிலசுவான்தாராக இருக்கும் ஒரு பெரியவர் தெரு நாய் ஒன்றை குட்டியிலிருந்தே வளர்த்து வருவார். அவர் வீட்டில் யாரும் அவரை மதிப்பதில்லை. இந்த நாய்தான் அவருக்கு துணை. குட்டிநாய் வளர்ந்து பெரிதாகிவிடும். திடீரென்று ஒரு நாள் அந்த பெரியவர் இறந்துவிடுவார்.

    பெரும் சொத்து வைத்திருப்பவர் என்பதால் சொந்தங்கள் திரண்டு வந்தது. பெரியவர் உடலை நாற்காலியில் வைத்து அழும். அப்போது ஒரு புகைப்படக்காரர் பெரியவரைச் சுற்றியழும் கூட்டத்தை போட்டோ எடுப்பார். அங்கு அழுதுகொண்டிருந்த அத்தனைபேரும் உடனே முகத்தை துடைத்து, தலையை சரிசெய்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பார்கள். ஆனால் அந்த பெரியவர் வளர்த்த நாய் மட்டும் 'நம்ம ஃப்ரண்டுக்கு என்னாச்சு' என்கிற மாதிரி உயிரற்ற அவரின் உடலை வெறித்துப் பார்த்தபடி நிற்கும். இதுதான் அந்த கதை. இதை கண்கள் குளமாகும் வகையில் உயிரோட்டமாகப் படம் பிடித்திருப்பார் பாலு மகேந்திரா.

    ஒரு படைப்பிற்கு மரியாதை செய்யும் அந்த பேரன்பும் பெருங்கருணையும் பாலுமகேந்திராவிற்கு மட்டுமே உண்டு. அவரோடு பேசி முடித்து கிளம்பும் போது, 'இருங்கள் என் பிள்ளைகளை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்,' என்று மாடிக்கு அழைத்துப்போனார். நமக்கு யாராக இருக்கும் என்று சர்ப்பரைஸ்.. போனால், மாடி முழுதும் வண்ண வண்ண பூக்களோடு செடிகள் நிறைய இருந்தன. ஒவ்வொரு செடியாக எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘இவன் பேரு வித்தியாசமானது. இவன் என்ன செய்வான் தெரியுமா இலைகளையே பூக்களோட நிறத்துல முளைக்க வைப்பான். மூணு மாசம் இலைகளை உதிர்த்து விட்டு நிற்பான். அப்புறம் தழைப்பான்,' என்று நிஜக் குழந்தைகளை போல வாஞ்சையோடு செடிகளை வருடிக் கொடுத்துக் கொண்டே சொன்னார்..

    இந்த நேரத்தில் தான் ஒரு தலைசிறந்த கேமராமேன், இயக்குனர் என்ற எந்த கிரீடமும் அவர் தலையில் இருந்ததில்லை. இந்த எளிமையை பல்வேறு தருணங்களில் அவரிடம் காணலாம்.

    ஒரு இயக்குனருக்கு படம் எடுப்பது மட்டுமே வேலையில்லை. அவன் இலக்கிய உலகத்தினரோடும், சாமான்ய மக்களோடும் இணைந்திருக்கவும் வேண்டும் என்ற பண்பு அவரிடம் இருந்தது.

    தமிழ் சினிமா வரலாற்றில் மற்ற மொழிக்காரர்களிடம் நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடியத் திரைப்படமான ‘வீடு' படத்தில் ஒரு காட்சி வரும். தன் பேத்தி கஷ்டப்பட்டுக் கட்டிக் கொண்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட வருவார் சொக்கலிங்க பாகவதர். செருப்பைக் கழட்டிப் போட்டு, வலது காலை எடுத்து வைத்து மாடிப்படி ஏறிச் செல்வார். இன்னும் பூசி முடிக்கப்படாத செங்கற்சுவரினை தன் தளர்ந்த கைகளினால் தடவிப் பார்ப்பார். கண்களில் கசியும் மகிழ்ச்சியை, அவரது பொக்கை வாய்ச் சிரிப்பு நமக்குக் காட்டும்.

    கூடவே இளையராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்' நம்மை அந்தக் கட்டடத்துக்குள் கொண்டு செல்லும். ‘வீடு' படத்தைப் பார்த்த ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனுக்கும் இந்தக் காட்சி மறக்க முடியாத ஒன்று. கட்டி முடிக்கப்படாத அந்தக் கட்டடம்தான் ஒப்பற்ற கலைஞர் பாலுமகேந்திராவின் கனவுப் பட்டறையான ‘சினிமாப் பட்டறை' என்பது எல்லோருக்கும் தெரியாத செய்தி.

    பாலுமகேந்திரா தனது இறுதிக் காலங்களில் பெரும்பகுதியை தனது சினிமாப் பட்டறையிலேயே கழித்தார். சினிமாவை ஒருபோதும் தொழிலாகக் கருதாத அந்த கலைஞருக்கு அவரது சினிமாப் பட்டறைதான் உயிர்மூச்சு. அதனால்தான் அவரது உயிர் பிரிந்தவுடன் அவரது உடல் சினிமாப் பட்டறையிலேயே பொது மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அவர் காலமானவுடன் அவரது கனவு கலைந்து விடாத வண்ணம், சினிமாப் பட்டறையில் வகுப்புகள் நடந்து கொண்டுதானிருந்தன. பாலுமகேந்திரா என்னும் கலைஞர் உயிரோடு அந்தப் பட்டறையில் உலவிக் கொண்டிருந்தார்.

    இப்போது அந்த கனவுப் பட்டறை மூடப்பட்டு விட்டது. கட்டடத்தின் முகப்பில் பாலு மகேதிராவின் கையெழுத்திலேயே பொறிக்கப்பட்டிருந்த ‘பாலு மகேந்திரா சினிமாப் பட்டறை' என்னும் எழுத்துகள் காணாமல் போய்விட்டன. ‘வீடு' திரைப்படத்தில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் ஆசையுடன் தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்த அந்தக் காட்சியை இப்போது பார்க்கும் போது, அது சொக்கலிங்க பாகவதர் அல்ல, பாலு மகேந்திரா என்பது நமக்குப் புரிய வருகிறது.

    கடைசி வரைக்கும் கதையும் கருணையுமாக வாழ்ந்து விட்டுப் போன பாலு சாரை இப்போது நினைத்தாலும் மனம் கலங்குகிறது. யாரோ முகம் தெரியாத ஒரு எழுத்தாளனைப் பார்க்க, இந்திய சினிமாவின் முகமாக இருந்த ஒரு இயக்குனர் ஆசைப்படுகிறார் என்றால் அந்த எளிமையை என்னவென்று சொல்வது. அவர் வாழ்ந்த காலத்தில் 'அப்பா அப்பா' என்று வெறும் வாய் ஜாலத்திலேயே வலம் வந்த பிள்ளைகளுக்குப் புரியுமா அப்பாவின் ஆன்மாபடும் வலி?

    மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம் இதுதானா ?

    By: ram On: 07:49
  • Share The Gag
  • மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம் இதுதானா ?பழைய கைத்தொலைபேசிகளை விற்கவோ தானமாக கொடுக்கவோ வேண்டாம் ஒரு விழிப்புணர்வு பதிவு நண்பர்கள் கண்டிப்பாக படித்து உங்களுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்

    நம்மில் பலர் புதிய கைத்தொலைபேசிகள் பாவனைக்கு வரும் போது அவை தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரத்தில்
    மயங்கி அல்லது அவற்றில் உள்ள புதிய தகவல்
    தொழில் நுட்ப வசதிகளுக்காக அவற்றை வாங்கும் போது ஏற்கனவே வைத்திருந்த பழைய தொலை பேசிகளை விற்றுவிடுகிறோம் அல்லது நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறோம்.

    இவ்வாறு செய்யும் போது நாம் அவற்றிலுள்ள நமது
    தரவுகளையும் விபரங்களையும் அழித்துவிட்டு கொடுப்பதாகவும் நினைத்துக்கொள்கிறோம். அனால் நாம் நினைப்பது போல அவை அவ்வளவு சுலபத்தில் அழிந்து விடுவதில்லை என்றும் தகவல் தொழில்நுட்பத் திருடர்கள் அவற்றை திரும்ப கண்டுபிடித்து நமது விபரங்ளை திருடிவிடும் ஆபத்து உள்ளதென்றும் தகவல் தொடர்பு மற்றும் இணைய குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    நாம் பாவித்த எமது பழைய கைத் தொலைபேசிகளை விற்கும் போது எமது தரவுகளையும் சேர்த்தே விற்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.நண்பர்களுக்கு அன்பளிப்பாக அவற்றை கொடுப்பதற்கும் இது பொருந்தும்.

    நாம் பாவித்த தொலைபேசிகளை நாமே உடைத்து அழித்துவிடுவதுதான் சிறந்த வழி என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    அனேகன் படத்தில் வித்தியாச கெட்டப்புகள் ஏன்?

    By: ram On: 07:37
  • Share The Gag
  • அனேகன் படம் வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் தனுஷும், அம்ரியா தஸ்தூரும் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளனர்' என அனேகன் படத்தின் இயக்குனர் கேவி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    இப்படத்திற்கு படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கே.வி.ஆனந்துக்கு 5-வது படமாகும்.

    சிவாஜிக்கு பாரதரத்னா கோரிக்கை...ஏன் கொடுக்கக்கூடாது...?

    By: ram On: 07:17
  • Share The Gag
  • நடிகர் திலகம் மறைந்த சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று எச் வசந்த குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைத் துறையில் செய்திருக்கும் சாதனைகளை யாரும் மறுக்க முடியாது. கலைத் துறையில் மட்டுமல்ல, தேசிய நலனில் அக்கறை கொண்டவர், தேசிய சிந்தனைகளை மக்களிடையே பரப்பியவர்.

    தேசிய தலைவர்களான வீரர் பகத்சிங், லோகமானிய பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், திருப்பூர் குமரன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றினை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர். தமிழகம் எங்கும் காமராஜர் புகழ் பாடி தேசிய உணர்வினை வளர்த்தவர். கலைத்துறையிலும், தேசிய நலனிலும் அக்கறையோடு பாடுபட்ட சிவாஜி கணேசனை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தொடரும் 'பாட்ஷா' மேஜிக்: சுரேஷ் கிருஷ்ணா மகிழ்ச்சி

    By: ram On: 01:08
  • Share The Gag
  •  ரஜினி படங்களின் வரிசையில், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் 'பாட்ஷா'. சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்த படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்து இருந்தார். 1995ம் ஆண்டு இப்படம் வெளியானது.

    சமூகவலைத்தளங்களின் தாக்கம் இல்லாத காலகட்டத்தில் வெளியான இப்படம், பலமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. கடந்த ஞாயிற்றுகிழமை (அக்.5) சன் டி.வியில் ஒளிபரப்பப்பட்டது.

    ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் பலரும் 'பாட்ஷா' படத்தைப் பற்றி தங்களது கருத்துக்களை பகிர ஆரம்பித்தார்கள். இதனால் ட்விட்டர் தளத்தில் முதலில் சென்னை அளவில் ட்ரெண்ட் ஆன #Baasha என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் வர ஆரம்பித்தது.

    இது குறித்து 'பாட்ஷா' இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்ட போது, "1995ல் வெளியான படம். இதற்கு 19 வருடங்கள் கழித்தும், 2014ல் ரசிக்கிறார்கள் என்றால் அது படத்தோட மேஜிக் என்று தான் சொல்வேன். படம் வெளியான காலத்தில் இருந்த இளைஞர்களுக்கு இப்போது 20 வயது கூடியிருக்கும். அவர்களும் சரி, தற்போதுள்ள இளைஞர்கள், சிறு குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ரசிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்திய திரையுலகில் 'ஷோலே', 'பாட்ஷா' போன்ற சில படங்களுக்கு தான் இந்த மேஜிக் இருக்கிறது.

    'பாட்ஷா' படத்தின் திரைக்கதை தான் மிகவும் பலம். அத்திரைக்கதையைப் பின்பற்றி தமிழ், தெலுங்கில் பல்வேறு படங்கள் வந்திருக்கின்றன. இருந்தாலும் 'பாட்ஷா' அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இன்னொரு முறை 'பாட்ஷா' ரீமேக் எல்லாம் சாத்தியமே இல்லை. இப்பவும் அப்படம் தொலைக்காட்சியில் போடும் போது எல்லாம் எனக்கு நிறையப் பேர் போன் செய்து பாராட்டுகிறார்கள்.

    'பாட்ஷா 2' பண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை. என்னைப் பொறுத்தவரை 'பாட்ஷா' படத்தை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது. அதை தான் ரஜினியும் விரும்புவார்" என்று கூறினார்.

    கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு !!!

    By: ram On: 00:16
  • Share The Gag
  • இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.

    தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.

    எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன் முதன்மைப் பணி.

    கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.

    ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி என்னதான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது

    இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.

    தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.

    பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.

    இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.

    அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.

    இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.

    கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.

    அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.

    மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.

    இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.