Tuesday 22 July 2014

பிரதர்ஸ்... உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு..?

By: ram On: 21:58
  • Share The Gag

  •  பிரதர்ஸ் நிறுவனம் செஸ் ஹண்டிங் படத்தை ஜூலை 25 வெளியிடுவதாகதான் இருந்தது. அன்றைய தேதியில் மதுரை பின்னணியில் தயாரான தண்டா படமும் வெளியாவதாக இருந்தது. தண்டாவுடன் மோதினால் ஓபனிங்கில் தடுக்கிவிடுவோம் என்று ஒருவாரம் முன்னதாக பட்டதாரியுடன் படத்தை வெளியிட்டனர்.

    சரி, பட்டதாரியால் ஓபனிங் பாதிக்கப்படாதா? அட, அந்த நடிகரோட படம்தான் ஓடுறதில்லையே. அவரு எங்களுக்கு ஒரு போட்டியே இல்லை என்று நமட்டு சிரிப்பு சிரித்திருக்கிறார்கள் பிரதர்ஸ். இந்த விஷயம் பட்டதாரியின் காதுகளையும் எட்டியிருக்கிறது.

    படம் ஹிட் என்று தெரிந்ததும் முதல்நாளே நண்பர்களுக்கு பார்ட்டி தந்து வெற்றியை கொண்டாடினார் பட்டதாரி. அப்போது பிரதர்ஸின் முடிவு பற்றி இவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்திருக்கிறார்கள்.

    அட நல்லாயிருக்கே..! நம்ம ஊரு வைத்தியம் - வெங்காயம்!

    By: ram On: 21:35
  • Share The Gag
  • வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுகள்ல மருத்துவ குணம் நிறைஞ்சது... சின்ன வெங்காயம்தான்!

    ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.

    மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா... பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

    பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப... ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா... தலைமேல பலன் கிடைக்கும்.

    தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா... காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்!

    ஜிகிர்தண்டா... சுள்ளான்களின் சண்டை!

    By: ram On: 20:28
  • Share The Gag

  • ஜிகிர்தண்டா படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது ஒரு சாதாரண சினிமா வர்த்தக நிகழ்வு என்று யாரும் எண்ணிவிடக் கூடாது என்பதில் படத்தின் ஹீரோ சித்தார்த் குறியாக இருக்கிறார்.

    இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனதால் தன் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்துப் போன லெவலுக்கு அவர் பொங்கித் தீர்த்திருக்கிறார்.

    இன்னொரு பக்கம், நீண்ட வருடங்களுக்குப் பிறகு, சற்று பரவாயில்லை என்ற ரேஞ்சுக்கு வந்துள்ள தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்துக்கு மறைமுகமாக ப்ளாக்பஸ்டர் அந்தஸ்து தருவதில் ஜிகிர்தண்டா தயாரிப்பாளரும் தனுஷின் அடுத்த படத் தயாரிப்பாளருமான கதிரேசன் குறியாக உள்ளார்.

    ஜிகிர்தண்டா... சுள்ளான்களின் சண்டை!

    இதுகுறித்த தனது அறிக்கையில், "வேலையில்லா பட்டதாரி படம் பெரும் வெற்றிப் பெற்றுள்ளதால், அந்தப் படம் கூடுதலாக ஒரு வாரம் போட்டியில்லாமல் ஓடி கோடிகளை அள்ள வசதியாக ஜிகிர்தண்டாவை தள்ளி வெளியிடுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது ஜிகிர்தண்டா பட நாயகன் சித்தார்த்துக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதெப்படி தன்னைக் கேட்காமல் படத்தை தள்ளி வைக்கலாம் என சமூக வலைத் தளங்கள் மற்றும் நண்பர்களிடம் பொங்கி வருகிறார்.

    நான்கு தொடர் தோல்விப் படங்களில் நடித்து வெறுத்துப் போயிருந்த தனுஷ், கிடைத்திருக்கும் ஒரு சுமார் வெற்றியை கண்ணீர் பொங்க கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியிருப்பதும் நல்லதுதான் என்கிறாராம். படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்குமே என்பதுதான் அவர் சந்தோஷத்துக்கு காரணம்!

    நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல்!

    By: ram On: 19:34
  • Share The Gag
  • விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

     மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது.

     உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள் பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

    பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள் இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள். ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்.

    பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

    By: ram On: 17:23
  • Share The Gag
  •  

    கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்

    . . . . உலகோர்க் கெல்லாம் காரமா

    மூலியடா பங்கம்பாளை கொண்டு

    . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்

    கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்

    . . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்

    நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா

    . . . . அன்றான ஆகாசகருடன் மூலி

    அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

    - சித்தர் பாடல்.

    ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.


    பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

    யுவன் பாடியதை வேண்டாமென்று, தானே பாடிய சூர்யா...!

    By: ram On: 17:03
  • Share The Gag

  • சமீப காலமாக சில நடிகைகள் படங்களில் பாடி வருதை சில இசையமைப்பாளர்கள் எதிர்த்து வருகின்றனர். முறையான சங்கீதப் பயிற்சி இல்லாமல் பலர் பாடி வருவது கண்டனத்துக்குரியது என்ற குரலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் 'அஞ்சான்' படத்தில் இடம் பெற்ற 'ஏக் தோ தீன் சார்...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் சூர்யாவும் பின்னணிப் பாடகராக அறிமுகமாகியுள்ளார். இந்த பாடலை சூர்யா ஏன் பாடினார் என்பதற்கான காரணம், இன்று காலை நடைபெற்ற 'அஞ்சான்' ஆடியோ ரிலீசில் வெளிவந்தது.

    மேற்கண்ட பாடலை முதலில் படத்தின் இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாவே பாடியிருக்கிறார். அந்த பாடலை வைத்து படத்தின் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்கள். ஆனால், அவர் பாடியதை விட வேறு யாராவது பாடினால் வித்தியாசமாக இருக்குமே என்று படத்தின் நாயகனான சூர்யா சொன்னாராம். அதன் பின் சூர்யா ஒரு விளம்பரப் படத்தில் பாடியது இயக்குனர் லிங்குசாமிக்கு ஞாபகம் வந்ததாம். அதன் பின் சூர்யாவிடம் அதைச் சொல்லி இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா சம்மதத்துடன் சூர்யாவைப் பாட வைத்திருக்கிறார்கள். பாடல் பதிவன்று சூர்யாவுக்கு ஜலதோஷம் வேறு இருந்ததாம். ஆனால், அதுவே சில பாடல்களுக்கு பிளஸ் பாயின்டாக அமைந்துவிடும் என யுவன் சொல்ல, பாடல் பதிவு இனிதே நடந்ததாம்.

    சரி, நாம் பாடியது நன்றாக இருக்காது, திரும்பவும் நம்மைப் பாட அழைப்பார்கள் என சூர்யா எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அந்த பாடலையே இயக்குனர் ஓகே சொல்லிவிட்டாராம். இப்படித்தான் சூர்யா பின்னணிப் பாடகராகியிருக்கிறார். “நான் பாத்ரூம்ல கூட தப்பித் தவறி பாடினதில்லை. என்னை இயக்குனர் பாடச் சொல்லிக் கேட்கும் போது, எனக்கு தயக்கமாதான் இருந்தது,” என சூர்யா பேசும் போது கூறினார்.

    மெட்டி அணிவது ஏன்? அறிவியல் விளக்கம்..!

    By: ram On: 08:17
  • Share The Gag

  • பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.


    கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.


    அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..


    ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்.


    பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.


    இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.


     காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்

    'அது' நல்லது... அந்த 'அது' எதுங்க...?

    By: ram On: 07:57
  • Share The Gag
  • கொஞ்சம் இருப்பா.... நீங்க நினைத்து வந்த அந்த 'அது' இது இல்லீங்கோ.....அந்த 'அது' மருத்துவம் சம்பந்தப்பட்டது...!

    மருத்துவக் குறிப்பு சம்பந்தமாக நாம் பார்க்க இருப்பது அந்த 4 நல்ல விசயங்களை பற்றி தான்.

    1. இசை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


    குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தாலாட்டு பாடல்களாலும், இனிமையான இசையாலும் பலன் பெறுகின்றன என்கிறது 'பீடியாட்ரிக்ஸ்(pediatrics)' இதழ்.

    அமெரிக்காவின் 11 மருத்துவமனைகளில் 272 குறைப்பிரசவ குழந்தைகளிடம் ஆராய்ச்சி நடந்தது. வழக்கமான சிகிச்சைகளோடு தாலாட்டு பாடல், பெற்றோரே பாடிய பாட்டு, இதயத்துடிப்பு போன்ற ஓசை அடங்கிய இசை என பலவற்றை மாற்றி மாற்றி குழந்தைகளைக் கேட்க வைத்தார்கள். இசை கேட்ட குழந்தையின் இதயத் துடிப்பு முதல் உடல் வளர்ச்சி வரை எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருந்ததாம்!

    2. புதுசு நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


    ரத்த வங்கிகள், தாங்கள் தானம் பெறும் ரத்தத்தை அதிகபட்சமாக 6 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்துகின்றன. ஆனால், "இவ்வளவு காலம் வைத்திருப்பதே அதிகம். மூன்று வாரங்களுக்குள் அதை இன்னொருவர் உடலுக்குள் செலுத்திவிட வேண்டும்" என்கிறது 'அனெஸ்தீசியா அண்டு அனால்ஜெஸியா (anaesthesia and analgesia)' இதழ்.

    மூன்று வாரங்களைத் தாண்டியதுமே ரத்த சிவப்பணுக்கள், மிகச்சிறிய ரத்த நாளங்களின் திசுக்களுக்குள் ஊடுருவி ஆக்சிஜனைக் கொடுக்கும் திறனை இழந்து விடுகின்றனவாம். இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

    3. ஜூஸ் நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


    'உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்' என்கிறது 'ஹைப்பர்டென்ஷன் (hypertension)' என்ற மருத்துவ இதழ். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 250 மி.லி பீட்ரூட் ஜூஸ் கொடுத்து பிரிட்டனில் ஆராய்ச்சி நடத்தினர். 24 மணி நேரத்தில் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தது.

    பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளது. வேர்கள் மூலம் மண்ணிலிருந்து இது நைட்ரேட்டைப் பெறுகிறது. இந்த நைட்ரேட் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இது ரத்தக்குழாய்களை விரியச் செய்து, ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. எனவே ரத்த அழுத்தம் குறைகிறது. கோஸ், பீன்ஸ், கீரைகள் போன்ற காய்கறிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகின்றன.

    4. குடை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


    மழையைப் போலவே வெயிலுக்கும் குடை பிடிப்பது நல்லதா? 'ஜாமா டெர்மடாலஜி (jama dermatology)' அமைப்பு, குடைகளை ஆராய்ச்சி செய்துவிட்டு "ஆமாம்" என்றிருக்கிறது.

    சூரியன் வெளிப்படுத்தும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களை பெரும்பாலான குடைகள் வடிகட்டி, பாதுகாப்பு தருகின்றனவாம். டார்க் நிறத்தில் இருக்கும் குடைகளே இதை சிறப்பாகச் செய்கின்றன; குறிப்பாக கறுப்புக் குடை 90 சதவீத கதிர்வீச்சைத் தடுக்கிறது.