Monday 18 August 2014

பெரும்பாலான பெண்களை பாதிக்கும் சூலக நீர் கட்டி..!

By: ram On: 22:16
  • Share The Gag

  • ஒரு காலத்தில் ஏதோ ஒரு சில பெண்களுக்கு இருந்த சூலக நீர் கட்டி பிரச்னை தற்போது பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பிரச்னையாகிவிட்டது.

    சூலக நீர் கட்டி என்பதை ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோம் என்று கூறுகிறார். ஓவரி என்பது பெண்களின் சூலகமாகும். இதில் உருவாகும் முட்டைகள்தான் கருவாகி கருப்பையில் குழந்தையாக வளருகிறது. இந்த சூலகத்தில் நீர் நிரம்பிய ஒன்று அல்லது அதிகமான கட்டிகள் இருப்பதைத்தான் சூலக நீர் கட்டி என்கிறோம்.

    இந்த பிரச்னை பொதுவாக நிறைய பெண்களுக்கு இருந்தாலும், இவற்றில் சில பெரிதாக எந்த பிரச்னையையும் செய்யாமலே இருந்து விடுகிறது. குழந்தைப் பேற்றின் போது தானாகவே மறைந்துப் போகும் நீர்க்கட்டிகளும் உள்ளன.

    சில பெண்களுக்கு இந்த நீர் கட்டிகளால் மாதவிலக்கில் தாமதம், குழந்தைப் பேறில் தாமதம் போன்றவை ஏற்படுகிறது.

    இது மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரித்தல், முகத்தில் பரு போன்றவையும் இதன் அறிகுறிகளாக உள்ளன.

    இந்த நீர்க்கட்சிகளைப் பொருத்த வரை எளிதான சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து மாத்திரைகளிலேயே குணப்படுத்தும் கட்டிகளும் உள்ளன. சில சிறிய அறுவை சிகிச்சை மூலமாகக் குணப்படுத்தும் கட்டிகளும் உள்ளன. ஆனால், எவ்வளவு விரைவாக இதற்கு சிகிச்சை எடுக்கிறோமோ அவ்வளவுக்கும் எளிதாக நிவாரணம் பெறலாம்.

    மாதவிடாய் தள்ளிப் போவது, ஒரு வருடத்துக்கு 8க்கும் குறைவான மாதவிடாய் போன்றவை இருக்கும் இளம் பெண்களை உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது பிற்காலத்தில் ஏற்படும் மலட்டுத் தன்மையை தவிர்க்க உதவும்.

    எனினும், இந்த நீர்க்கட்டி இருந்தாலே மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதை கூற முடியாது. நீர்க்கட்டிகள் இருந்தும் எந்த சிக்கலும் இன்றி குழந்தைப் பேறு உண்டானவர்களும் பலர் உள்ளனர். எனவே, இது பற்றி பயப்படாமல், இது ஒரு சிறிய பிரச்னை என்பதை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை பெறுவது சிறந்தது.

    தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... உங்களுக்காக...!

    By: ram On: 21:41
  • Share The Gag

  • அஜித் தற்போது கௌதம் மேனன் படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படம் இந்த வருடம் வராது, பொங்கலுக்கு தான் வரும் என்ற செய்தியே ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் அவர்களை குஷிப்படுத்த ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் டைட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் அன்றைய தினமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    ஷிமோகா அருவி பகுதியில் லிங்கா கிளைமாக்ஸ் படப்பிடிப்பு..!

    By: ram On: 19:55
  • Share The Gag

  • ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா பகுதியில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் நடத்துகின்றனர்.

    கிளைமாக்ஸ் காட்சியும் இங்கேயே படமாகிறது. துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் படப்பிடிப்பில் பணியாற்றுகின்றனர். இதனால் அருவி பகுதியில் பெரும் கூட்டத்தை காண முடிகிறது. அவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்க 100 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிக சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு நடக்கிறது.

    நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தங்க அருவி கரையோரம் சேமியானா துணியால் சிறு சிறு குழல்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. படப்பிடிப்பை காண தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அப்பகுதியில் திரள்கிறார்கள். இதனால் 100 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர். இப்படத்தில் ரஜினி இருவேடங்களில் வருகிறார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட திரிஷாவிடம் பேசி வருகின்றனர்.

    சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்...!

    By: ram On: 19:36
  • Share The Gag

  • சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.

    சர்க்கரைக் கொல்லி :

    சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.

    விஷக்கடி போக்கும் :

    வண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். (Gymnema) நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.

    கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் - ரஜினிகாந்த் ..!

    By: ram On: 18:35
  • Share The Gag

  • கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    ரஜினிகாந்த் நடித்து வரும் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு மங்க்களூர் அருகிலுள்ள ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மங்களூர் விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேள்விகள் கேட்டனர்.

    அப்போது ரஜினிகாந்த் கூறுகையில், "'லிங்கா' படம் எனது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை எனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அளிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார். தொடர்ந்து, ரஜினியிடம் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியலுக்கு நான் வர கடவுள் விரும்பினால் நிச்சயம் வருவேன். கடவுளின் விருப்பம்தான் என்னுடைய விருப்பம் என்று கூறினார்.

    பெண்களின் தலைமுடியை திருடும் விசித்திர கும்பல்!

    By: ram On: 18:07
  • Share The Gag

  • ஒரு நாட்டின் அதிபர் தீர்க்கவேண்டிய அத்தியாவசியப் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க, வெனிசுலா அதிபரான நிக்கோலஸ் மதுரோ முன் ஒரு வித்தியாசமான பிரச்சினை வைக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் நீளக் கூந்தல் உள்ள பெண்களின் முடி தொடர்ந்து திருடப்படுகிறது. அதுவும் சில நேரங்களில் கத்தி முனையில் பெண்களை மிரட்டும் திருடர்கள், அவர்களின் கூந்தலைக் கத்தரித்து எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் இதனை செயற்கை முடி தயாரிப்பவர்களிடம் விற்று பணமாக்கி விடுகின்றார்கள்.

    இத்தகைய திருட்டு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மரகைபோவில் இத்தகைய திருடர்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

    இதில் விசித்திரம் என்னவென்றால், முடி வளர்க்கும் பல்வேறு பெண்களிடம், அவர்களின் முடியை குதிரைவால் போல் கட்டிக்கொண்டு வரும்படி திருடர்கள் கூறுகிறார்களாம். அப்போதுதான் அவர்களுக்கு கத்தரிக்க எளிதாக இருக்குமாம். எனினும், இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை.

    காவல்துறையிடம் புகார் அளிப்பது குறித்து ஒரு பெண்ணிடம் கேட்டபோது, தன்னை கேலி செய்வார்கள் என்ற காரணத்தினால் தான் புகார் தர மறுத்து விட்டதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில், தலைநகர் காரகாசில் நேற்று ஒரு ரெயில் நிலையத் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்க அதிபர் மதுரோ வந்திருந்தார். அவர் தனது சிறப்புரையில், இந்த முடித் திருடர்களை பெண்களின் முடியைக் கத்தரிக்கும் மாபியா கும்பல் என்று குறிப்பிட்டார். இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

    அஞ்சான் படம் குறித்து விமர்சகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்....!

    By: ram On: 17:13
  • Share The Gag

  • அஞ்சான் படம் வந்ததிலிருந்து இணையதள ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஒவ்வொரு நாளும் படத்தை கிண்டல் செய்து தங்கள் கற்பனை குதிரைகளை தட்டிவிடுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் காட்சியில் நடிகர் சூர்யா விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதில் ‘ஒரு படத்தை விமர்சனம் செய்யுங்கள், நாங்கள் அதை சரி செய்து கொள்கிறோம், ஆனால் கேலி, கிண்டல் செய்வது எந்த விதத்தில் நியாயம், அது எல்லோர் மனதையும் புண்படுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

    4 மணி நேரம் தவம்...! கமலின் கடின உழைப்பு..!

    By: ram On: 16:58
  • Share The Gag

  • படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் கமல். தற்போது இவர் விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களை முடித்து பாபநாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

    உத்தமவில்லன் படத்தில் தேயம் எனப்படும் கெட்டப்பிற்காக சுமார் 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடித்தாராம். இந்த மேக்கப் போடப்படும் நேரத்தில் கமல், தவம் போல் உட்கார்ந்து இருப்பார் என படக்குழு தெரிவித்துள்ளது.

    இதில் பயன்படுத்திய மேக்கப் நிபுணர்கள் எல்லாம் கொரியா, தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களாம்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் பிரச்சனை!

    By: ram On: 16:42
  • Share The Gag
  • ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்னை மிகவும் சகஜம். இது 2வது, 3வது மாதத்தில் தொடங்கி, 8வது மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி (pregnancy gingivitis)   என்று பெயர். ஈறுகளில் வீக்கம், சிவந்து, ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரிதான்  இதுவும்.


    கவனிக்கப்படா விட்டால், பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளை பாதித்து, திசு இழப்புக்கு வித்திடும். அரிதாக சில நேரங்களில் வீங்கிய ஈறு திசுக்களானது, அந்த இடத்தில் கட்டிகளைப் போன்று உருவாக்கலாம். அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால் பயப்படத் தேவையில்லை. அந்தக் கட்டிகள் வலியின்றி இருக்கும். சில வேளைகளில் உணவுத்துகள்கள் அதன் அடியில் புகுந்து கொண்டு, வலியை ஏற்படுத்தலாம்.


    பிரசவத்துக்குப் பிறகு இது மெல்லக் குறையத் தொடங்குமே தவிர, முற்றிலும் சரியாகாது. எனவே, பிரசவத்துக்குப் பிறகு, முழுமையான பல் பரிசோதனை அவசியம். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் பல் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை இல்லை என்கிற பட்சத்தில், பிரசவமாகும் வரை அதைத் தள்ளிப் போடலாம்.


    நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள், அவற்றின் அளவுகள் பற்றி பல் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். டெட்ராசைக்ளின் போன்ற சில மருந்துகள், கருவிலுள்ள குழந்தையின் பற்களைப் பாதிக்கும் என்பதால், அவை கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.  எக்ஸ் ரே எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.


    மசக்கை அதிகமுள்ள பெண்கள், அடிக்கடி வாயைக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வாந்தி எடுப்பதால் உருவாகும் ஒருவித அமிலச்சுரப்பின் காரணமாக, பற்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். பற்பசைகூட உபயோகிக்க முடியாத அளவு மசக்கை தீவிரமாக இருந்தால், மருத்துவரிடம் கேட்டு, சுவையற்ற பற்பசை வாங்கி உபயோகிக்கலாம்.


    குழந்தைச்செல்வம் என்பது வரம் தான்... என்பதற்கான காரணங்கள்!!!

    By: ram On: 07:53
  • Share The Gag
  • தற்போது குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு குழந்தை செல்வத்தின் மகிமையைப் பற்றி பல பெற்றோர்கள் உணராமல் இருப்பதே காரணம்.

    வேலைக்காகவும், பிஸியான சமுதாயத்திற்காகவும், இப்படி பலவித காரணங்களுக்காகவும் குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவை பெற்றோர்கள் எடுத்து வருகின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கை தரத்தை குறைக்கின்றது என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் வாழ்க்கை நிலையை உயர்த்தக் கூடியவர்கள். அதற்கான பல காரணங்களை நம்மால் கொடுக்க முடியும். அப்படிபட்ட முக்கியமானதாகவும், கவனிக்கக்கூடிய சில காரணங்களையும் பார்போமா!!!

    பொறுப்புணர்ச்சி

    குழந்தைக்கு தாயாகும் முன் நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஆனால் தாயான பின் பொறுப்புகள் மிக அதிகம். பொறுப்பான அம்மாவாக இருக்கும் பட்சத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வதை விட, வேறு எந்த வேலையும் முக்கியமில்லை. குழந்தையை கையில் ஏந்தும் தருணத்திலிருந்து பேரப்பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வரை பொறுப்புகள் குறைவதில்லை. இந்த அக்கறை என்னும் பண்பு சிறந்த தாயாக உருவெடுக்க செய்கின்றது.

    மகிழ்தல்

    குழந்தை தூங்குவதை கண்டு மகிழ்வதென்பது, இது நாள் வரை பார்த்த விஷயங்களிலேயே சிறந்தது என்று கூறுவர். மேலும் அது நம்மை பரவச படுத்தும் காட்சி என்றும் சொல்வார்கள். அத்தகைய குழந்தையை தொடும் பொழுதும், நெஞ்சோடு அணைத்து கொள்ளும் போது ஒருவித அதிர்வை உணர நேரிடும். அதுவே தாங்க முடியாத மகிழ்ச்சி.

    குழந்தைப்பருவம்

    குழந்தை வளர வளர நாமும் குழந்தையாய் ஆகின்றோம். முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் விஷயம் என்று எதை நினைக்கின்றீர்களோ, அதை குழந்தையுடன் மகிழ்ச்சியாக செய்வோம். குறிப்பாக தலையணை சண்டை, சிறு பிள்ளை விளையாட்டு போன்றவை.

    புதிய பந்தம்

    குழந்தைக்கும், தாய்க்குமான உறவை போல வேறு எந்த உறவையும் காண முடியாது. இதில் எல்லா வகையான உணர்ச்சிகளை உணர முடியும். குழந்தை வேண்டாம் என்று நினைத்தால், இவை அனைத்தையும் இழக்க நேரிடும்.

     வாழ்க்கையின் புதிய கோணம்

    குழந்தையின் சூழ்நிலையை அனுகும் திறனை கொண்டு, இக்கட்டான சூழ்நிலையை கையாளும் திறனை கற்றுக்கொள்ளலாம். அதிலும் இந்த உலகத்தில் எது தேவை, எது தேவையற்றது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    மன அழுத்தம்

    குழந்தைகள் இருந்தால் தேவையில்லாத டென்ஷன் என்று நம்பும் பெண்கள், தயவு செய்து உங்கள் அம்மாவிடம் கேளுங்கள், குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியை கொண்டு வரும் என்பதை உணர்வீர்கள். நாள் முழுவதும் வேளையில் அவதிப்பட்டு வீடு திரும்பும் தாய்மார்கள், வீட்டில் குழந்தைகளால் எவ்வளவு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி அடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும் எவ்வளவு டென்ஷன், விரக்தி இருந்தாலும் குழந்தையின் அரவணைப்பில், அனைத்தும் மறந்து போகும் என்பதை உணர முடியும்.

    உறவு

    குழந்தை செல்வம் கணவருடனான உறவை பலப்படுத்தும். திருமண வாழ்க்கையில் குழந்தை பல அற்புதத்தை நிகழ்த்துகின்றது. குழந்தை பிறந்த உடன் தம்பதியினருடனான அன்பு பலப்படுத்தப்படுகின்றது. மேலும் இடையில் தொலைந்து போன அன்பை திருப்பி தருவது குழந்தை செல்வமே.

    முதுமையில் பலம்


    வயதானவுடன் உடல் சோர்வடையும் போது, உடல் அளவிலும், மனதளவிலும் ஊன்றுகோளாய் இருப்பது குழந்தைகளே. கவலைகளை கேட்பதற்கும், தோள் சாய்வதற்கும் நம் குழந்தைகள் மட்டுமே இருப்பார்கள்.

    நம்பிக்கை


    வாழ்க்கையில் பலவித பாதைகளை கடக்கின்றோம். சில வேலைகளையும், சில விஷயங்களையும் நாம் சுமந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் எழுகின்றது. சில வேளைகளில் விழுவதும் உண்டு. ஆகவே குழந்தைகள் இருந்தால் வாழ்க்கையில் முன்னோக்கி செல்லும் ஆற்றல் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்பது சத்தியம்.

    என்னது…? விஜய்க்கு பில்லி சூனியம் வச்சுட்டாங்களா?

    By: ram On: 07:32
  • Share The Gag

  • இன்று வெளியாகியிருக்கும் நக்கீரன் புலனாய்வு இதழில் அதிர்ச்சிகரமான ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்கள் வெளியாகிற நேரங்களில் எல்லாம் அவரது படங்களை முடக்க பெரிய சதி நடக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் அவர் படங்கள் திரைக்கே வருகின்றன. பல கோடி ரூபாய் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்யும் விநியோகஸ்தர்கள் முன்பெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு விஜய் படத்தை வாங்குவார்கள். இப்போது அவர்கள் அத்தனை பேருக்கும் அச்சம் ஏற்படுத்துவதை போல சூழ்நிலைகள் அமைந்து வருகின்றன. அல்லது அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலை அப்படியே நீடித்தால், விஜய் படங்களை வாங்கவே ஆளிருக்காது என்கிற சூழ்நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை. விஜய் மட்டுமல்ல, அவரை சுற்றியிருப்பவர்களும் இந்த சிக்கலை தீர்ப்பது எப்படி என்கிற பெரும் கவலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி முதல்வரை சந்திக்க தொடர்ந்து நேரம் கேட்டுக் கொண்டேயிருக்கிறாராம். இந்த நிலையில்தான் இதற்கெல்லாம் காரணம், அரசியல் அல்ல. பில்லி சூனியம் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறாராம் விஜய்யின் அம்மா ஷோபா.

    உடனடியாக கேரள மாந்திரீகர்களை அழைத்து வந்து விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள பில்லி சூனியத்தை அகற்ற வேண்டும் என்று அவர் விரும்புவதாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, குடும்பத்தோடு வேளாங்கண்ணி சென்று மாதாவை தரிசிக்கவும் ஏற்பாடாகி வருகிறதாம்.