Monday 4 August 2014

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்..?

By: ram On: 21:55
  • Share The Gag

  • கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?
    இதற்கு சீனாவில் ஒரு அருமையான விளக்கம் உள்ளது.

    பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.

    ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.

    நடுவிரல் - நம்மை குறிப்பது.

    மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.

    சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.


    முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.

    இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

    உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

    இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.

    இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.

    ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.


    கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா ம்ம் ....ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
    முடியாது.

    ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது.

    மூன்று முகம் படத்திற்காக போட்டிபோடும் அஜீத், விஜய், கார்த்தி..!

    By: ram On: 21:01
  • Share The Gag

  • தயாரிப்பாளர் கதிரேசன் அவர்கள் கடைசியாக தயாரித்த படம் ஜிகர்தண்டா. இப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இவர் 1980களில் ரஜினி நடிப்பில் வெளிவந்த மூன்றுமுகம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இப்படத்தில் ரஜினி அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் போன்ற மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

    அதிலும் அலெக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டர் இப்பவும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

    இப்போது இந்த ரீமேக் படத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி பெரிதாக எழும்பியுள்ளது.

    அஜீத் ஏற்கெனவே ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்திருக்கிறார். கார்த்தி எப்போதும் தன் படங்களுக்கு ரஜினி நடித்த படங்களின் பெயரையே வைத்து வருகிறார்.

    மேலும் விஜய் சிறுவயதில் இருந்தே ரஜினி ரசிகன் என்று நமக்கு தெரியும். இவர்களில் யார் நடிப்பார்கள் என்று தெரியவில்லை.

    குழந்தையின்மை குறை போக்க.. நீங்க ரெடியா?

    By: ram On: 19:34
  • Share The Gag

  • கணவனுக்குத்தான் பிரச்சினை, மனைவிக்குத்தான் பிரச்சினைனு இங்க சொல்ல முடியாது. ரெண்டு பேருமே மருந்து சாப்பிடணும். மாதவிலக்கு ஆன மூணாவது நாள் முதல் முத்தின வேப்பிலை நூறு கிராம் எடுத்து கஷாயம் செஞ்சி காலயில வெறும் வயித்துல (ரெண்டு பேரும்) ஆறு நாளைக்கு குடிக்கணும். அதுக்கு அப்புறமா அரச இலை, மா இலை வகைக்கு அம்பது கிராம் எடுத்து கஷாயம் போட்டு நூறு மில்லி வீதம் ஒன்பது நாள் வெறும் வயித்துல சாப்பிடணும். இந்த கஷாயத்த சாப்பிடும்போது சாப்பாட்டுல ராகி, கொத்தமல்லி தழை எல்லாம் கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கோங்க. ராத்திரி சாப்பாடு பாதி அளவுதான் இருக்கணும். இதை சரியா பின்பற்றினா குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு.

    பொண்ணுங்களுக்கு கருப்பைக் கோளாறு இருந்தா அதை சரி செய்றதுக்கு ஈஸியான வழி இருக்கு. அசோகா மரத்து பட்டை, மாதுளம்வேர் பட்டை, மாதுளம் பழ ஓடு சம அளவு எடுத்து நல்லா காய வச்சி இடிச்சி வச்சிக்கோங்க. இதை ஒரு நாளைக்கு ரெண்டு வேளை வீதமா ரெண்டு சிட்டிகை வாயில போட்டு வெந்நீர் குடிக்கணும். இதை தொண்ணூறு நாள் குடிச்சிட்டு வந்தா மலட்டுத்தன்மை போய் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    இதுபோக நெல்லிக்காய் சாறுல ரோஜாப்பூவை அரைச்சி அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தா பொண்ணுங்களோட பிரச்சினை நீங்கி தாய்மைப்பேறு கிடைக்கும்.

    இனிமே ஆண்கள் விஷயத்துக்கு வருவோமா? வாழைப்பூ சாப்பிட்டு வந்தா விந்து அதிகரிக்கும். வெத்திலை போடும்போது கூடவே துளசி விதை பொடியை சேர்த்து சாப்பிட்டா தாது கட்டும். நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இது மூணையும் நசுக்கி போட்டு கஷாயம் வச்சி குடிச்சாலும் தாது பலப்படும். வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 4 8 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும். திப்பிலி பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் தரும்.

    இப்படி பலவிதமான முறைகள் இருக்கு. ஆனா எல்லாத்தையும் ஒண்ணா சாப்பிடாதீங்க, எதையாவது ஒண்ணை சாப்பிட்டு பலனை அனுபவியுங்க. முருங்கைப்பூ, பிஞ்சு முருங்கை காய், முருங்கை விதை இவை எல்லாத்தையுமே தனித்தனியா பால்ல சேர்த்து சாப்பிட்டாலும் ஆண்மை பெருகும்.

    ஆண்மை பறி போவதற்கு முக்கிய காரணமாக இன்றைய உணவு முறை. அதிலும் குறிப்பாக மதுப்பழக்கம் ஆண்மை பறி போவதற்கு காரணமாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் பலன் கிடைக்கும். அது இல்லாம மருந்து மட்டும் சாப்பிடுறதால எந்த பிரயோஜனமும் இல்லை.

    பெண்களுக்கு வரும் தலை முதல் கால் வரை வலி..!

    By: ram On: 18:24
  • Share The Gag

  • பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசாரியாக பாதிகாலம் வலியால் அவதியுறுகிறார்கள். உச்சி முதல் பாதம் வரை வலி உண்டாக்ககூடிய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது.

    அலுவலக வேலை பளு, வீட்டு வேலை பளு மற்றும் பயணத்தால் ஏற்படும் பளு ஆகியவை சேர்ந்து மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது. நீண்ட நாட்களுக்கு தலை முதல் கால்வரை வேறுபட்ட இடங்களில் வலி, நாளுக்கு நாள் புதிய பாகங்களில் புதிய வலி ஏற்படுவது, சோர்வு, தலை வலி, ஞாபகமறதி, தூக்கமின்மை, புத்துணர்ச்சி இல்லாமல் காலையில் எழுவது, இவையெல்லாம் பைப்ரோ மையால்ஜியாவின் அறிகுறி.

    ஆண்கள், பெண்கள், மிக குறைந்த அளவிற்கு சிறுவர்கள் என்று எல்லோரையும் இந்த தசை வலி தூக்கமின்மை தாக்கினாலும் இதில் பொதுவாக அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களாகவே இருக்கின்றனர். பைப்ரோ மையால்ஜியா தாக்கியவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்களே என்பது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு மருத்துவம் உடல்பயிற்சி, மனஅமைதி காத்தல் ஆகியவை முக்கியமாகும். இந்த நோயை பற்றி முழுமையாக அறிதலும் மருத்துவ ஆலோசனை பெறுதலும் மிக மிக முக்கியமானது.

    இந்த நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இரவு நேரத்தில் அதாவது அடுத்தடுத்து இரவு சாப்பாடும் தூக்கமும் தான் என்ற நிலையில் காபி அல்லது மது அருந்துவதை காட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவம் கூறுகிறது.

    இதுவரை இந்த நோய்க்கான காரணம் கண்டு பிடிக்கப்படவில்லை என்றாலும், இந்த நோய் உள்ளவர்களுக்கு செரடோலின் என்ற வேதிப்பொருளின் அளவு மூளையில் குறைந்திருப்பதும், சப்ஸ்டேன்ஸ்-பி என்ற வலி உண்டாக்கக்கூடிய வேதிபொருள் தண்டுவடத்தில் அதிகமிருப்பதையும்,

    இவர்களின் மூளை வலி உணர்ச்சிக்கு அதிகமாக தூண்டப்படுவதையும், உடல் பருமன் அதிக இருப்பவர்களும் ஆர்த்ரைட்டிஸ், நோய் கொண்டவர்களுக்கும் அதிகம் வருவதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகிறது.

    மருந்தை தேடி அலைய வேண்டாம்...!

    By: ram On: 18:02
  • Share The Gag

  • மருந்தை தேடி அலைய வேண்டாம்...!

    தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்...

    பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்...

    சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது...

    சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்...

    தொடர்ந்து செய்து வந்தால்.....

    அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்....

    {தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே.}

    கோச்சடையானின் பெருமை, அரசாங்கத்திற்கு அசிங்கம்!

    By: ram On: 17:02
  • Share The Gag

  • இந்திய சினிமாவே வியந்து பார்த்த திரைப்படம் கோச்சடையான். தற்போது இப்படத்தினால் மத்திய அரசின் ரிசர்வ் வங்கிக்கு தர்மசங்கடம் ஏற்ப்பட்டுள்ளது.

    சமீபத்தில் மத்திய அரசின் ரிசர்வ் வங்கி தேர்வு நடைபெற்றது, இதில் பொது அறிவு பிரிவில் கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன எனக் கேட்டு அதற்கு ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், இவர்களில் யாரும் இல்லை என பட்டியலில் தேர்வு செய்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் கோபமடைந்த பல கல்வியாளர்கள் நாட்டின் மிக மதிப்பு வாய்ந்த மத்திய ரிசர்வ் வங்கியின் அலுவலர் பணிக்குப் இவ்வாறு சினிமாவில் இருந்து கேள்விகள் கேட்பதா? என்று கோபமடைந்தது மட்டும் இல்லாமல் இது அரசுத் தேர்வுக்கே ஒரு அவப்பெயர் என்று தெரிவித்துள்ளனர்.

    'பாஹூபலி'யில் ஒரு காட்சியிலாவது நடிக்க ஆசை: சூர்யா..!

    By: ram On: 08:18
  • Share The Gag

  •  ராஜமெளலி இயக்கிவரும் 'பாஹூபலி' படத்தில் ஒரு காட்சியிலாவது தான் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

    சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தயாரித்திருக்கிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். யு.டிவி நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

    'அஞ்சான்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'SIKINDER' இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. சூர்யா, சமந்தா, இயக்குநர் லிங்குசாமி, நாகார்ஜுன், இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

    இவ்விழாவில் பேசிய சூர்யா, "ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தவறு செய்வார்கள். இயக்குநர் ராஜமெளலி படத்தில் நடிக்க முடியாமல் போனது எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த இயக்குநர். அவர் எப்போது அழைத்தாலும் அவருடைய படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன். தற்போது இயக்கி வரும் 'பாஹூபாலி' படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை. எனக்கொரு வாய்ப்பு அளிப்பார் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

    பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் கூந்தல் உதிர்வு... தடுப்பது எப்படி..?

    By: ram On: 07:46
  • Share The Gag

  • பிரசவம் முடிந்த பின்பு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பல. ஆனால் அவற்றில் உடல் எடை அதிகரிப்பதும், கூந்தல் உதிர்தலும் தான் முதன்மையானவை. அதிலும் இந்த பிரச்சனைகள் குழந்தை பிறந்து 5 மாதம் வரை அதிகம் இருக்கும்.

    பிரசவத்திற்கு பின் சற்று அதிக அளவில் கூந்தலை கவனித்து பராமரித்து வந்தால், கூந்தல் உதிர்தலை குறைக்கலாம். பிரசவத்திற்கு பின் தற்காலிகமாக உதிரும் கூந்தலை, தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்..

    பிரசவத்திற்கு பின் ஏற்படும் கூந்தல் உதிர்தலை ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதன் மூலம் குறைக்கலாம். இப்படி ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, மயிர்கால்கள் வலுவுடன் இருந்து, முடி உதிர்வதைத் தடுக்கும்.

    வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி உதிர்வது நிற்கும்.

    பிரசவத்திற்கு பின்னர் எந்த ஒரு ஹேர் ஸ்டைல் கருவிகளையோ அல்லது ஹேர் டை போன்றவற்றையோ பயன்படுத்த வேண்டாம். இதனால் கூந்தலுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு, கூந்தல் இன்னும் உதிரும். பிரசவத்திற்கு பின் கூந்தல் வலுவின்றி இருக்கும்.

    எனவே இக்காலத்தில் நெருக்கமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டாம். மேலும் கூந்தல் ஈரமாக இருந்தால், அப்போது கூந்தலுக்கு சீப்பை பயன்படுத்தவே கூடாது. இல்லாவிட்டால், இது கூந்தல் உதிர்தலை இன்னும் அதிகரித்துவிடும்.

    பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு...!

    By: ram On: 07:29
  • Share The Gag

  • நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

    பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

    எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம். வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும். சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.

    பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.