Thursday 25 September 2014

சதுரங்கவேட்டை பார்ட் 2 வருகிறதாம்.. இயக்குநர் ரெடி..!

By: ram On: 22:49
  • Share The Gag
  • சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் சதுரங்கவேட்டை. நடிகர் மனோ பாலா தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிக்க, அறிமுக இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார்.

    இப்படம் சமுகத்தில் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெளிவாக படம் பிடித்து காட்டியது. அனைவராலும் வரவேற்கப்பட்ட இப்படத்தின் இயக்குனர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதே எல்லோருடைய கேள்வி.

    வினோத் அடுத்து 3 கதைகளை ரெடியாக வைத்துள்ளாராம், அதில் ஒன்று சதுரங்கவேட்டை-2 என்று கோலிவிட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்?

    By: ram On: 22:42
  • Share The Gag
  • ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எட்டு:

    1. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஆண்களுக்கு ஒரு விதமான சக்தி தருகிறது. 'நான்தான் குடும்பத் தலைவன். எனக்குக் கீழ்ப்படிந்துதான் டி.வி. உள்பட எல்லாரும் இயங்க வேண்டும்' என்கிற ஆணாதிக்கச் செயல் என்கிறார்கள்.

    2. ஒரு மனைவியின் கூற்றின்படி... 'என் கணவரால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. ரிமோட் கண்ட்ரோலை இம்சை செய்கிறார்.'

    3. ஆண்களின் ஆதிகால வேட்டையாடும் குணத்தின் நவீன வடிவம் இது. கையில் ரிமோட் வைத்திருக்கும் ஆண் சுவாரஸ்யமான இரைகளைத் தேடும் வேட்டை மிருகம்.

    4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.

    5. எப்போதுமே ஆண்களுக்குக் கொஞ்சம் அலையும் ஆசையும், இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கும் ஆசையும் உண்டு. 'இதைப் பார்த்தாகிவிட்டதே... வேறு எதாவது கிடைக்கிறதா பார்ப்போம்' என்கிற நப்பாசை.

    6. ஒரு எலி, பூனை, நாய் போல பாவ்லாவியன் ரிஃப்ளக்ஸாக (Pavlovian Reflex) பட்டனை அழுத்தும்போதெல்லாம் சந்தோஷம் கிடைத்தால் அதிகம் சேனல் மாற்றமாட்டார்கள். ஆனால், அப்படிக் கிடைப்பதில்லை. அதனால் சந்தோஷத்தைத் தேடி இன்னும் இன்னும் தாவல்.

    7. ரிமோட் கண்ட்ரோல் என்பது, ஒரு கணவன் தன் மனைவியைச் சுலபமாக வெறுப்பேற்றுவதற்கான சாதனம்.

    8. ஒரு மனைவி எழுதியிருந்தார் - 'என் கணவனுக்கு பக்கவாதம் வந்து மெள்ள மெள்ள செயலிழந்து கொண்டிருந்தார். கடைசிவரை அவரால் தன்னிச்சையாகச் செய்ய முடிந்த காரியம் - ஒரு பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் ரிமோட்டின் பட்டனை அமுக்குவதே. அந்தக் காரியம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும் இழந்த பின் அவர் இறந்துபோனார்.'

    பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு காரணம் யார்? கசிந்த தகவல்

    By: ram On: 20:04
  • Share The Gag
  • மைக்ரோசொப்ட் அதிபரும், உலகின் பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் பணக்காரர் ஆவதற்கு யார் காரணம் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.பில்கேட்ஸ் 20 வருடங்களுக்கு முன்னர் மைக்கேல் லார்சன் (Michel Larson) என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார். அப்போது, பில்கேட்ஸின் சொத்து மதிப்பு வெறும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்தான்.

    ஆனால், சுறுசுறுப்பும், கணிப்பு திறனும் இயற்கையாகவே கொண்ட லார்சன், பில்கேட்ஸின் சொந்த முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தை உச்சிக்கு கொண்டு சென்றார்.

    ஒருநேரத்தில், பில்கேட்ஸின் சொத்து மைக்ரோசொப்டை மட்டுமே நம்பியிருந்தது.‘

    ஆனால், லார்சனின் திறமையால் முதலீட்டு நிறுவனத்தில் வருமானம் கணிசமாக அதிகரித்தது. அதில் வந்த வருமானத்தை லார்சன் புத்திசாலித்தனமாக டெக்னாலஜியில் மட்டுமே முதலீடு செய்து வந்த முறையை மாற்றி ரியல் எஸ்டேட், கனடியன் ரெயில்வே கம்பெனி, ஆட்டோ நேஷன், ரிபப்ளிக் சர்வீஸஸ் போன்றவற்றில் முதலீடு செய்து பணத்தை பெருக்கினார்.

    அந்த பணமே இன்று பில்கேட்ஸின் அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது.

    இன்று பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

    'ஐ' படத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உங்களுக்காக..!

    By: ram On: 19:30
  • Share The Gag
  • மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் 'ஐ' படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஷூட்டிங் முடிந்ததை ஒட்டி, சென்னையில் ஷங்கர் உள்ளிட்ட 'ஐ' படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

    இதில் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

    யூடியூப்பில் வெளியான 'ஐ' படத்தின் டீஸரை இதுவரைக்கும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர். ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களின் டீஸர் - டிரெய்லரைக் கூட இவ்வளவு பேர் பார்த்ததில்லை. அதனால், 'ஐ' படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    ஷங்கர் 'ஐ' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். படம் தீபாவளிக்கு வரும் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !!

    By: ram On: 18:07
  • Share The Gag
  • பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள் :::

    கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம்,சுற்றுச்சூழல் மாற்றத்தை கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வை ஆப்பிர்க்காவின் சவான்னா புல்வெளிகளில் மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.

    கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைநத தாவரவியல், நில அமைபபு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

    கரையான்கள் அதிக ஈரபபதமாகவும், அதிக உலர்வாகவம் இல்லாத, எளிதாக தண்ணீர் வடியக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி சவான்னா நிலபபகுதியில் சீப்லைன்ஸ் எனப்படும் சரிவுகளில் கரயான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.கரயான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மணணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுடடிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியன தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எலலாம் புற்றுகள் மூலமே அறியமுடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

    திட்டமிட்டுச் செயலாற்றும் கறையான் ::::

    கரையான்கள் எறும்புகளைப் போல இருந்தாலும், உண்மையில் அவை எறும்புகள் வகை அல்ல. எறும்புகள் Hymenoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. ஆனால், கரையான்கள் Isoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Iso என்றால், 'ஒரே மாதிரி ' என்று பொருள். Ptera என்றால், 'இறக்கை ' என்று பொருள். அதாவது, கரையான்களின் மறுவடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்த வகைப்பாட்டியல் பெயர். கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விடும். மண்ணில் புற்று அமைத்து வாழும்.

    கரையான்களும், தேனீக்களைப் போல ஒரு சமுதாய பூச்சி (Social insect) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவற்றால் தனித்து வாழ இயலாது. ஒரு கரையான் கூட்டத்தில் இராணிக்கரையான் (Queen), மன்னர் கரையான் (King), இராணுவ வீரர்கள் (Soldiers) மற்றும் பணிக்கரையான்கள் (Workers) என நான்கு வகை இருக்கும்.

    இராணுவ வீரர்களுள் இரண்டு வகை உண்டு. முதல்வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். அவை Mandibulate Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது தாக்குதல் நடத்தி விரட்டிவிடும். அடுத்த வகை, Nasute Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம், இராணுவ வீரர்கள் கண்பார்வையற்ற குருடர்கள். இராணுவ வீரர்களுள் ஆண், பெண் என இருபாலருமே உண்டு. பணிக்கரையான்களும் கண்பார்வையற்ற குருடர்களே ! அவற்றிலும், ஆண், பெண் என இருபாலருமே உண்டு. இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களின் வாழ்நாள் 1-2 ஆண்டுகள் ஆகும். பணிக்கரையான்கள் புற்றினைக் கட்டுதல், பழுதடைந்த புற்றினைச் சரிசெய்தல், இளம்கரையான், இராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் இராணி கரையான்களுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகளைச் செய்யும்.

    இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு. ஒரு வேளை, பாதுகாப்பு பணியில் உள்ள இராணுவ வீரர்கள் பகைவர்களுடனான போரில் கணிசமாக இறந்து விட்டால், இந்த வாசனை குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணிக்கரையான் இராணுவ வீரர்களுக்கான முட்டைகளை வைக்கும். இப்படியாக இந்த கரையான்களுக்கு தனி இராஜியங்கள் உண்டு என்பதை அறியும்போது இந்த சின்னஞ்சிறிய கண்தெரியாத பூச்சிக்கு இத்தனைப்பெரிய ஆற்றல் என்று நினைக்குக் போது வியப்பாகவே இருக்கிறது

    பாம்பு ஏன் புற்றுக்கு வருகிறது ?

    ஒரு கரையான் புற்றில், பல மில்லியன் கரையான்கள் இருக்கும். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவிித மிதவை உந்து விசைகளை (Buoyant forces) உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று Central chimney மூலம் மேலே வரும். அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன Surface conduits மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்ிறுக்குள் Surface conduits, Central chimney மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், பாம்பு புற்றுக்கு வந்து தங்கிவிடும்.

    கரையான்கள் மரம் மற்றும் நூல்களை உண்ணுகிறதே, அதை எப்படி செரிக்கிறது ?

    பொதுவாக, பேப்பர் மற்றும் மரங்களில், செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி நமக்கோ, கரையான்களுக்கோ இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் Protozoa க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும். இப்படித்தான் கரையான்களுக்கு உணவு செரிக்கின்றது.


    இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா....

    கமலுடன் ட்ரிபிள் ட்ரீட்! ஜிப்ரானுடன் ஒரு சுவையான நேர்காணல்..!

    By: ram On: 17:47
  • Share The Gag
  • 'வாகை சூட வா’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். இப்போது 'விஸ்வரூபம்-2’, 'உத்தம வில்லன்’, 'பாபநாசம்’ என கமல் ஹாசனின் மூன்று புராஜெக்ட்களுக்கு நோட்ஸ் பிடித்துக்கொண்டிருக்கிறார். நமாஸ், கம்போஸிங், பின்னணி ஒலிப்பதிவு எனச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தவருடன், இரவில்தான் ரிலாக்ஸாகப் பேச முடிந்தது... 

    ''இளையராஜாவுக்கு அப்புறம் கமல் உங்க மீதுதான் அபார நம்பிக்கை வெச்சிருக்கார்போல..?''

    நெஞ்சில் கைவைத்து பணிவாகச் சிரிக்கிறார்... ''அந்த மேஜிக் எப்படி நடந்ததுனு எனக்கே ஆச்சர்யம்தான். அவர்கூட வேலை பார்க்கிற ஒவ்வொரு நாளும் பெர்சனலா நிறையக் கத்துக்கிட்டே இருக்கேன். கமல் சார்கூட டெல்லியில் முதன்முதலா 'விஸ்வரூபம்-2’ படத்துக்காக டிஸ்கஷன் போனப்போ, ரொம்ப நெர்வஸா இருந்தேன். 'உட்காருங்க ஜிப்ரான்’னு கையைப் பிடிச்சுப் பக்கத்துல உட்காரவெச்சுக்கிட்டார். 'உங்க மியூசிக் எனக்குப் பிடிச்சிருந்தது. உங்களைப் பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். ஒரு மியூசிக் டைரக்டரா இல்லாம, சாதாரண ஜிப்ரானா பேசுங்க’னு சொன்னார். குடும்பம், படிப்பு, இசைக்கு எப்படி வந்தேன்னு நான் சொல்லச் சொல்ல, எல்லாத்தையும் கேட்டார். பார்த்தா... முழுசா ரெண்டு மணி நேரம் ஆச்சு. அப்புறம்தான் என் கூச்சத்தை, தயக்கத்தைப் போக்கி கொஞ்சம் நான் சகஜமான பிறகுதான், 'விஸ்வரூபம்-2’ படத்தை எனக்கு ப்ளே பண்ணார்.

     படம்... செம மிரட்டல். இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நடக்கிற கதைங்கிறதால, எந்த இடத்துல என்ன மாதிரியான பேக்ரவுண்ட் வெச்சுக்கலாம்னு கேட்டார். என் பதிலில் அவருக்கு ரொம்பவே திருப்தி. 'இப்பவே ஒரு பாட்டுக்கு கம்போஸிங் உட்கார்ந்தா என்ன?’னு கேட்டார். 'தாராளமா சார்’னு நம்பிக்கையா சொன்னேன். கடகடனு கால் மணி நேரத்துல பாட்டு எழுதிட்டார். ஒரு கிளாசிக்கல் கர்னாட்டிக் பாடலை அவர் பாட, உடனே கம்போஸ் பண்ணோம். அப்படியே அடுத்தடுத்த பாடல்களுக்கும் வேலை நடந்துட்டு இருந்தப்ப, ஒரு நாள் ரமேஷ் அரவிந்த் சாரை எனக்கு அறிமுகப்படுத்தினார். 'உத்தம வில்லன் புராஜெக்ட்ல ஜிப்ரான்தான் மியூசிக் டைரக்டர்’னு அவர்கிட்ட சொன்னார் கமல் சார். டபுள் சந்தோஷத்துல ஷாக் ஆகிட்டேன். 'உத்தம வில்லன்’ வேலை பார்த்துட்டு இருக்கிறப்பவே, ' 'பாபநாசம்’ படமும் நீங்கதான் பண்றீங்க’னு சொன்னார். இந்தத் தடவை எனக்குப் பேச்சே வரலை. இப்பவும் எல்லாமே ஏதோ மேஜிக் மாதிரி இருக்கு. கமல் சார் ஆபீஸில் சிலர், 'உங்க மியூசிக்கை சார் ரொம்ப ரசிச்சுப் பாராட்டினார்’னு சொன்னப்போ இன்னும் சந்தோஷமா இருந்தது. கமல் சார்கூட ஹாட்ரிக் எனக்கு. இந்த மூணு படங்களிலும்  ஒவ்வொரு கோர்ஸ் படிச்ச அனுபவம் கிடைச்சது!''

    ''கமல் எழுதின பாட்டுல என்ன விசேஷம்?''

    '' 'உத்தம வில்லன்’ படத்துக்கு சார் எழுதின ஒரு பாட்டு, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இளவரசி பாடுற சிச்சுவேஷன். கொஞ்சம் எராட்டிக்கான பாட்டு. சில வரிகள் மட்டும் சொல்றேன்...

    'காதலாம் கடவுள் முன்
    கண்களாம் கோவிலில்
    தேகத்தின் தாகமே ஆராதனை...
    காமமாம் கடும்புனல்
    கடந்திடும் படகிது
    ஆசையாம் பாய்மரம்
    அமைந்ததோர் படகிது
    கரையைத் தேடி அலையும் நேரம்
    உயிரும் மெழுகாய் உருகுதே’

    - இப்படி இன்னும் நிறைய ரகசியம் பேசும்!''

    '' 'வாகை சூட வா’ மியூசிக்ல தனித்துத் தெரிஞ்ச ஜிப்ரான், அப்புறம் சின்னதா சறுக்கிட்ட மாதிரி தெரிஞ்சதே?''

    ''ஒரு இசையமைப்பாளரின் கேரியரில் அது எல்லாருக்கும் நடக்கும்தான். எனக்கு ரொம்ப சீக்கிரமே நடந்திருச்சு. 'வாகை சூட வா’ படத்துக்குப் பிறகு என்கிட்ட அதே மாதிரி ஒரு மியூசிக் எதிர்பார்த்தாங்க. ஆனால், நான் வேலை பார்த்த ஸ்க்ரிப்ட்ல இயக்குநர்கள் என்ன மியூசிக் எதிர்பார்த்தாங்களோ, அதைக் கொடுத்திருக்கேன். அதுல 'வத்திக்குச்சி’ ஆரம்பிச்சு 'குட்டிப்புலி’ வரை என் பரிசோதனை முயற்சிகளும் நல்லா இருந்துச்சு. 'நய்யாண்டி’ படத்துக்கு வித்தியாசமான ஜானர்ல கமர் ஷியலா மியூசிக் பண்ணேன். அது இங்கே ஒர்க்-அவுட் ஆகலை. ஆனா, ஒரு தெலுங்கு படத் தயாரிப்பாளர், ' 'நய்யாண்டி’ படத்துக்கு மியூசிக் பண்ணினவர்தான் வேணும்’னு அடம்பிடிச்சுக் கேட்டிருக்கார். ஆனா, அந்தப் பட இயக்குநர், 'அதெல்லாம் வேணாம். எனக்கு 'வாகை சூட வா’ மியூசிக் டைரக்டர்தான் வேணும்’னு மல்லுக்கட்டினாராம். அப்புறம் விசாரிப்பதான் ரெண்டு பேரும் ஒருத்தர்தான்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இதுக்கு என்ன சொல்றது?''

    ''உங்க செட் இசையமைப்பாளர்களோட டச்ல இருக்கீங்களா?'

    ''நேரடியாத் தொடர்பு இல்லைன்னாலும், பொதுவான நண்பர்கள் மூலமா நானும் அனிருத்தும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்குவோம். சந்தோஷ் நாராயணன் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். ரெண்டு பேரோட பாசிட்டிவ் நெகட்டிவ் பத்தி அப்பப்போ அப்டேட் பண்ணிட்டே இருப்போம். மத்தபடி இங்கே எல்லாருக்கும் நடுவுல ஆரோக்கியமான ஒரு போட்டி இருக்கு. அது ரொம்ப நல்லா இருக்கு!''

    ''சமீபத்துல உங்களுக்குப் பிடிச்ச பாட்டு என்ன?''

    '' 'காவியத்தலைவன்’ ஆல்பத்தின் 'யாருமில்லா தனி அரங்கில்’ பாட்டு... அந்த ட்யூன் பச்சக்னு மனசுல ஒட்டிக்கிச்சு. ரஹ்மான் ரஹ்மான்தான்!''

    யார் கையில் எத்தனை படங்கள்?

    By: ram On: 12:52
  • Share The Gag
  • நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா, த்ரிஷா, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, தமன்னா , காஜல் அகர்வால்,லட்சுமி மேனன், ஶ்ரீதிவ்யா ஆகியோர்  தமிழ் சினிமாவின் முன்னணி  ஹீரோயின்களாக இருக்கிறார்கள்.

    இந்தஹிட் ஹீரோயின்கள் நடிக்கும் படங்களின் லிஸ்ட்:

    நயன்தாரா, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, ஜெயம் ரவியுடன் ’தனி ஒருவன்’ மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் ‘நண்பேன்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    சமந்தா வசம் ‘கத்தி’, ‘பத்து எண்ணுறதுக்குள்ள’ என இரண்டு தமிழ்ப் படங்கள் உள்ளன.  அடுத்து, 'பெங்களூர் டேஸ்'படத்தின் தமிழ் ரீமேக்கில் சமந்தா நடிக்க உள்ளார்.

    ஸ்ருதிஹாசன் ‘பூஜை’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார்.இந்தியில் செம பிஸியாகி விட்ட ஸ்ருதி ஹாசன் அடுத்து விஷால் - சுசீந்திரன் கூட்டணியில் இவர் நடிக்கலாம் என்ற பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

    ‘மீகாமன்’, ‘வாலு’, ‘ரோமியோ ஜுலியட்’ ஆகிய படங்களில் நடிக்கும் ஹன்சிகா அடுத்து ’ஆம்பள’, ’இதயம் முரளி’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

    அனுஷ்கா ‘லிங்கா’ படத்திலும், 'அஜித் 55' , 'மகாபலி' , 'ருத்ரம்மா தேவி' ஆகிய படங்களில் நடிக்கிறார்.

    த்ரிஷா வசம் ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, சுராஜ் இயக்கத்தில் 'ஜெயம்' ரவியுடன் நடிக்கும் பெயரிடப்படாத படம், அஜித்துடன் ‘தல 55’ ஆகிய படங்கள் உள்ளன.

    லட்சுமி மேனன் கௌதம் கார்த்தியுடன் ‘ சிப்பாய்’, மற்றும் கார்த்தியுடன் ‘கொம்பன்’ படங்களில் நடித்து வருகிறார்.

    ஶ்ரீதிவ்யா அதர்வாவுடன் 'ஈட்டி', விக்ரம் பிரபுவுடன் 'வெள்ளைக்கார துரை', ஜி.வி.பிரகாஷூடன் 'பென்சில்', சிவகார்த்திகேயனுடன் 'காக்கிசட்டை', விதார்த்துடன் 'காட்டுமல்லி', அகிலுடன் 'நகர்ப்புறம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வருவது ஶ்ரீதிவ்யாதான்.

    தமன்னா எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய இருவருக்கும் எந்தப் படமும் தமிழில்  இல்லை.

    நெருப்பு நெருங்காத மரம் - ஒரு அதிசய செய்தி..!

    By: ram On: 12:37
  • Share The Gag
  •  காட்டுத் தீ பரவும் போது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு-வைப்பதில்லை என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தும் தன்மை அமையப்பெற்ற மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன.
    ரொடோடென்ரன் (Rhododendran) என்ற-ழைக்கப்படும் இந்த மரத்தின் அருகில் நெருப்பு சென்றால், பல அடுக்குகளாக அமைந்துள்ள இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கி-விடும். இதனால் இம்மரத்திற்கு நெருப்பினால் அழிவு ஏற்படாது.

    பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இம்மரங்கள் பறவைகளைக் கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாசஸ்தலமாக விளக்குகின்றன. பலத்த காற்றி-னையும் தாங்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மருத்துவத் தன்மை கொண்டது.
    தமிழில் காட்டுப் பூவரசு எனவும் நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் அழைக்கப்-படுகிறது.

    இம் மலர்கள் போரஸ் என்று பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவரால் அழைக்கப்-படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி-களில் (நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை) கடல் மட்டத்திற்கு மேலே 1500 மீட்டர் உயரத்-திற்கும் அதிகமான பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்-துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இதனை அழைக்கலாம்.

    இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் ரொடோடென்ரன் மரங்கள் காணப்படுகின்றன.

    டயபடிஸ் வரக் காரணம் என்ன? ஒரு முழுமையான அலசலும் தீர்வும்..!

    By: ram On: 12:04
  • Share The Gag
  • டயபடிஸில் முக்கியமான மூன்றுவகைகள் உண்டு. டைப் 1, டைப் 2 மற்றும் ப்ரி டயபடிஸ் என மூன்று முக்கியவகை டயபடிஸ் உண்டு. இதில் டைப் 1 டயபடிஸ் என்பது நம் உடலில் உள்ள பேன்க்ரியாஸ் எனும் உள்ளுறுப்பு கிருமிகளால் பாதிக்கப்படுவதால் அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் வருவது. பேன்க்ரியாஸ் தான் இன்சுலினை சுரக்கும் உறுப்பு என்பதால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படுகையில் நமக்கு டைப் 1 டயபடிஸ் வருகிறது.

    டைப் 2 டயபடிஸ் தான் பெரும்பாலானோருக்கு வருவது. இது நம் உணவு பழக்கங்களாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும் வருவது. நம் ரத்த அளவில் உள்ள சர்க்கரை 125 மிகி/ டிஎல் எனும் அளவைத் தாண்டுகையில் நாம் சர்க்கரை நோயாளி என அறியப்படுகிறோம். 100 மிகி/டிஎல் முதல் 125 மிகி/டிஎல் அளவில் சர்க்கரை இருந்தால் நாம் ப்ரிடயபடிக் என அழைக்கபடுகிறோம். 100 மிகி/டிஎல் அளவுக்கு கீழ் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என பொருள்.

    டயபடிஸ் வரக் காரணம் என்ன?

    நம் உணவில் உள்ள சர்க்கரை (கார்போஹைட்ரேட்) தான் சர்க்கரை நோய்க்கு காரணம். சர்க்கரை அரிசி, கோதுமை, பழங்கள், காய்கள் முதலிய பலவற்றிலும் ஏராளமாக இருக்கிறது. சர்க்கரையில் மூன்றூவகை உண்டு

    க்ளுகோஸ்

    லாக்டோஸ் – பாலில் இருக்கும் சர்க்கரை

    ப்ருக்டோஸ் – பழத்தில் இருக்கும் சர்க்கரை

    நாம் உண்ணும் அரிசி, கோதுமை முதலிய உணவுகளில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை உண்டு. இது நேரடியாக குளுகோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுகோஸ் உடலில் இறங்கியவுடன் அதை ஜீரணம் செய்ய நம் பேன்க்ரியாஸ் இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டி உள்ளது. இன்சுலின் உற்பத்தி ஆனதும் பல தீய விளைவுகள் உடலில் நிகழ்கின்றன.

    ஆதி மனிதன் தினமும் மூன்று வேளை உண்ணும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பதே சிரமம் எனும் நிலையில் இருந்தவன். அதனால் தேவைக்கு அதிகமாக உண்டால் அந்த அதிகபட்ச உணவை சேமித்து பஞ்சகாலத்தில் பயன்படுத்தும் அவசியம் அவனுக்கு இருந்தது. அதற்கு இன்சுலின் பேரளவில் பயன்பட்டது. ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுகோஸ் கலந்தால் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. இன்சுலினின் உற்பத்தி நம் உடலில் உள்ள செல்களுக்கு அந்த கூடுதல் சர்க்கரையை சேமிக்கும் சிக்னல். கூடுதல் சர்க்கரையை எப்படி சேமிக்க முடியும்? இரு வழிகளில். ஒன்று கிளைகோஜென். கிளைகோஜென் நம் உடலின் ஆற்றல் தேவைகளுக்கு பயன்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் உடலுக்கு இரு நாள் அளவுக்கு மேல் தேவையான ஆற்றலை கிளைகோஜென்னாக சேமிக்கும் சக்தி இல்லை. ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஏராளமாக கொழுப்பைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால் நம் உணவில் உள்ள சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு தொப்பையில் சேர்க்கபடுகிறது. நாமும் குண்டோதரர் ஆகிறோம்.

    சர்க்கரை வியாதி இதில் எப்படி வருகிறது?

    இன்சுலின் என்பது ஃபயர் எஞ்சின் மாதிரி. கூடுதல் சர்க்கரை உடலில் சேர்ந்தால் ஒரு எமெர்ஜென்சி எனும் அளவில் இன்சுலின் சுரந்து அதை கட்டுக்குள் வைக்கும். ஆனால் தினம் மூன்று வேளையும் நெருப்பு பிடித்து அலாரம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? இதுவே தொடர்ந்து நாற்பது வருடம் நீடித்தால் என்ன ஆகும்?

    ஓடிக்கொன்டிருக்கும் ஃபயர் எஞ்சின் களைத்துப் போய் நின்றுவிடும். அதாவது பேன்க்ரியாஸ் தன் இன்சுலின் சுரக்கும் திறனை இழந்துவிடும் அல்லது குறைத்துக் கொள்ளும். இன்சுலின் சுரப்பது குறைந்தால் உடலில் சர்க்கரை அளவு அதிகம் ஆகி நமக்கு சர்க்கரை வியாதி வரும். அதன்பின் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்குச் செல்வோம்.

    துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரை சத்து கொன்டவையாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம். காலையில் ஐந்து இட்லியும், சாம்பாரும் சாப்பிட்டால் நீங்கள் காலையில் மட்டும் 20 ஸ்பூன் சர்க்கரை (75 கிராம் சர்க்கரை)உண்கிறீர்கள் என பொருள்.

    “இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?” எனக் கேட்டு நீங்கள் என் மேல் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

    ஐந்து இட்டிலி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது.

    சில உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதில் உச்சக்கட்டமாக, உடனடியாக எரிந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு க்ளுகோஸ். க்ளுகோஸ் சாப்பிட்டவுடன் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு நமக்கு இருக்கும். அதற்கு காரணம் இதுதான். ரத்தத்தில் சர்க்கரை ஏறியவுடன் உடல் சுறுசுறுப்பு அடையும். உடல் உடனே அதை ஜீரணிக்க இன்சுலினை அனுப்பும். இன்சுலின் சுரந்தவுடன் பசி எடுக்கும். மேலும் எதையாவது உண்ணவேண்டும் போல் தோன்றும்.

    ஆக க்ளுகோஸ் ரத்தத்தில் கரையும் விகிதம் 100 என்பதை மையமாக வைத்து க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனும் இண்டெக்ஸ் உருவாக்கப்பட்டது. 72 தாண்டி இதில் இருக்கும் உணவுகள் ஆபத்தானவை. 72க்கு எத்தனை கீழே எண்ணிக்கை இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அந்த உணவு நல்லது. காரணம் அது மெதுவாக எரிந்து உடலுக்குத் தேவையான எனெர்ஜியை அளிக்கும். இன்சுலின் சுரப்பின் தேவையை குறைக்கும். இது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும் சமாச்சாரம். உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    சில உணவுகளில் க்ளைசெமிக் இண்டெக்சை பார்க்கலாம்

    நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் லிக்விட் க்ளுகோஸ் 100

    உருளைகிழங்கு 80 முதல் 98 (வகையை பொறுத்து)

    வெள்ளை சர்க்கரை 64

    முழு கோதுமை ரொட்டி 64 முதல் 87 வரை

    வெள்ளை அரிசி 64 முதல் 87 வரை (வகையை பொறுத்தது)

    வெள்ளை ரொட்டி 87

    ஆக சர்க்கரை, க்ளுகோஸ் ஆகியவற்றை உண்ணுவது நம் ரத்தத்தில் க்ளுகோஸ் சுரப்பை அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் க்ளுகோஸ் லெவெல்கள் உடலை வெலவெலத்துப் போகச் செய்யும். அதைக் குறைக்க உடனடியாக இன்சுலினை சுரக்கவேன்டியது கட்டாயம். ஒரு நாளுக்கு நாலைந்து தடவை இப்படி இன்சுலினை சுரந்தால் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலினை சுரக்கும் சக்தியை இழந்துவிடும். நாம் டைப் 2 டயபடிஸில் வீழ்வோம். அதன்பின் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேன்டியதுதான்.

    ஆக நம்மில் பெரும்பாலானோர் உண்ணும் அரிசி, கோதுமை (முழு கோதுமையாக இருப்பினும்) ஆகியவை சர்க்கரையை விட அதிக வேகத்தில் நம் ரத்தத்தில் கரைந்து க்ளுகோஸ் லெவெலை ஏற்றும். சர்க்கரை வியாதியை அதிகரிக்க/வரவழைக்க வேன்டுமனால் அதற்கு குறுக்கு வழி சர்க்கரை தின்பது கூட அல்ல. அரிசியையும், ப்ரெட்டையும் உண்பதே.

    ஆக “நான் குறைவாக தான் சாப்பிடுகிறேன். உடல் இளைக்கவில்லை” என சொல்லுகையில் அதற்கான காரணம் இதுதான்.

    காலை ஐந்து இட்டிலி

    மதியம் சாதம், சாம்பார், ரசம்,

    மாலை வடை, டீ காப்பி

    இரவு சப்பாத்தி, உருளைகிழங்கு குருமா

    இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது தினம் சுமார் அரை கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளை சர்க்கரையை நேரடியாக உண்பதற்கு சமம்.

    தினம் அரை கிலோ வெள்ளை சர்க்கரையை 40, 50 வருடங்களாக தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும், கொலஸ்டிரால் வருவதிலும் வியப்பு என்ன?

    இது எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

    காட்டுமிராண்டி உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு என்ன?

    கிட்டத்தட்ட பூஜ்ஜியத்துக்கு சமம்.

    காரணம் ஆதிமனிதன் உண்டது பெருமளவில் மாமிசம், சில வேர்கள், காய்கள். கோடையில் மட்டும் சில பழங்களை உண்டான். அதிலும் வேட்டை கிடைக்காத நாட்களில் முழு பட்டினி. தவிரவும் சர்க்கரை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற விவசாயகாலகட்ட பழங்கள் அவன் காலத்தில் இல்லை. ஆக ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 30 கிராம் அளவு சர்க்கரை அவன் உடலில் சேர்ந்திருந்தாலே பெரிய விஷயம். மேலும் 10,000 ஆன்டுகளுக்கு முன்புவரை உலகின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டு இருந்தது. அதனால் மாமிசம் தான் அவன் முதன்மை உணவாக இருந்தது. இன்றும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ உணவில் 97% மாமிசம். மாமிசத்தில் துளி சர்க்கரை இல்லை. அதனால் ஆதிமனிதன் நாம் உண்பதைப் போன்ற பெரும் அளவுகளில் சர்க்கரையை உண்ணவில்லை. அதனால் அவனுக்கு சர்க்கரை வியாதியும் வரவில்லை.

    ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு என்ன?

    இட்டிலி மற்றும் சப்பாத்தி.

    சப்பாத்தியின் கிளைசெமிக் எண் வெள்ளை சர்க்கரையின் கிளைசெமிக் இண்டெக்சை விட அதிகம்.

    சர்க்கரை நோயாளிகள் நாலு சப்பாத்தியை சாப்பிட்டு அதில் உள்ள சர்க்கரையை கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வது என்பது அரை கிலோ சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அதைக் கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வதற்கு சமம்!!!

    இப்படி இட்டிலி, சப்பாத்தி போன்ற “ஆரோக்கிய உணவுகளை” தொடர்ந்து உண்டுவந்தால் அப்புறம் எப்படி சர்க்கரை வியாதி குணம் ஆகும்?

    'பயப்படலாம்’ எனப் போனால், சிரிக்கவைத்து அனுப்புகிறார்கள்! அரண்மணை - திரைவிமர்சனம்!

    By: ram On: 11:35
  • Share The Gag
  • தமிழ் சினிமாவுக்குப் பழக்கமான 'ஆயிரம் ஜென்மத்து’ப் பேய், இந்த முறை 'அரண்மனை’யில் பயமுறுத்துகிறது!

    பழைய அரண்மனையை விற்க சித்ரா லட்சுமணன், கோவை சரளா, மனோபாலா, வினய், ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம்... என உறவினர்கள் ஒன்றுகூடுகிறார்கள். ஆனால், அரண்மனையை விற்க முடியாமல் ஏகப்பட்ட தடங்கல்கள். விருந்தாளி சுந்தர்.சி அதற்கான காரணத்தைத் தேடிப்போனால்... பேய் ஃப்ளாஷ்பேக். அப்புறம் என்ன... அப்பாவி, கொலை, அம்மன், கிரகணம், இரவுக்குள் கணவன்-மனைவி சேரக் கூடாது என, பேய் ஃபார்முலா சினிமா!

    பேய் படமாக ஆரம்பித்து காமெடி படமாக மாறி, சாமி படமாக முடிக்கிறார்கள். 'ஆயிரம் ஜென்மங்கள்’, 'சந்திரமுகி’, 'முனி’ என படம் முழுக்க பரண் தூசி!   

    ஒரு ஹீரோயினுக்கே ஸ்கோப் இருக்காது தமிழ் சினிமாவில். ஆனால், ராய் லட்சுமியின் கிளாமர் பேக்கேஜோடு ஆரம்பிக்கும் படம், ஹன்சிகா ஃப்ளாஷ்பேக்கில் பயம் காட்டி, ஆண்ட்ரியா ஆவேசத்தில் முடியும் விதத்தில் அனைவருக்கும் சரிவிகித முக்கியத்துவம்.

    மறக்காமல் மூவரும் துண்டு கட்டிக் குளிக்கிறார்கள். வாவ்..! 

    கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதும் வில்லன்களிடம் கெஞ்சுவதுமாக ஹன்சிகா ஓ.கே ஓ.கே.. தலை கவிழ்ந்து, முகம் மறைத்து உறுமுவதும், கவிழ்ந்துகிடக்கும் காரில் குத்தவைத்து அமர்ந்து மிரட்டுவதுமாக... அதட்டுகிறார் ஆண்ட்ரியா. 'பேய், பயம் காட்டுகிறதோ இல்லையோ, நான் காட்டுகிறேன்’ என 'காத்தாட’ உடைகளில் அழகு காட்டிக்கொண்டே இருக்கிறார் ராய் லட்சுமி. 

    வழக்கம்போல அலட்டிக்கொள்ளாமல் சுந்தர்.சி., 'என்னமோ கூப்பிட்டாங்க... எதுக்கோ வந்தேன்’ என வந்துபோகிறார் வினய். இவர்களுக்கு இடையில் மொத்தப் படத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறது, சந்தானம் - கோவை சரளா - மனோபாலா கூட்டணி. பேய்க்கு பால் கொடுக்கச் செல்லும் சரளாவின் 'பயந்து வருது’ பதற்றத்துக்கு படா அப்ளாஸ். தலையில் அடிபட்டு 25 வருடங்களுக்குப் பின்னால் ரீவைண்டு ஆகிவிடும் மனோபாலாவின் அலப்பறைகளும், அதற்கு 'முன்னாள் மனைவி, இந்நாள் காதலி’ கோவை சரளாவின் புலம்பல் கவுன்ட்டர்களும் அட்ராசிட்டி!

    'என் பாட்டி உழைப்பு எல்லாம் வீணாப் போயிருச்சே’, 'பழைய பிளேடை வெச்சு பைல்ஸ் ஆபரேஷன் பண்ணமாதிரி ஓடுறான்’, 'முருங்கைக்காய் சாப்பிட்டாதான் முறுக்கேறும்பாங்க... இங்க முருங்கைக்காய்க்கே முறுக்கேறிக்கிடக்குது’, 'பேயைப் பார்த்தா செவுள்லயே அடிப்பேன்’ என அள்ளு கிளப்புகிறார் சந்தானம். படத்தின் 'ஸோ கால்டு ஹீரோ’க்களைவிடவும் அழகா இருக்கீங்களேஜி!

    'பேயே லாஜிக் கிடையாது. பேய்க்கு எதற்கு லாஜிக்?’ என நினைத்துவிட்டார்கள். பேய்க்கு திகில் கிளப்பும் உருவமும் இல்லை. திரைக்கதையில் பேய் பயத்துக்கான உதறலும் இல்லை!

    பரத்வாஜ் இசையில் 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ பாடல் மட்டும் ஹம்மிங் ரகம். பின்னணி இசையில் திகில் கிளப்புகிறார் கார்த்திக் ராஜா. 

    'பயப்படலாம்’ எனப் போனால், சிரிக்கவைத்து அனுப்புகிறார்கள்!

    அட இப்படியும் செய்யலாமா........

    By: ram On: 11:08
  • Share The Gag

  • பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார், ஐந்து பழங்கள் பத்து ரூபாய்
    என்று கூவி, பழங்களை விற்க முயன்றார், எவரும் பழம் வாங்க முன்வரவில்லை,
    சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன்
    பேருந்தில் ஏறினான், ஆறு பழங்கள் பத்து ரூபாய் என்று கூவினான், அவனுக்கு
    நல்ல விற்பனை,

    மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ஐந்து
    பழங்கள் பத்து ரூபாய் என்று விற்க முயன்றார், பலன் இல்லாமல் போகவே கீழே
    இறங்கி விட்டார், அடுத்து ஆறு பழங்கள் பத்து ரூபாய் என்று கூவியபடி அந்தப்
    பேருந்தில் ஏறிய இளைஞன் ஏகத்துக்கு விற்பனை செய்தான்,

    மிகப் பெரிய
    கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக்
    கொண்டிருந்தார், முதியவரை அருகில் அழைத்தவர் அந்த இளைஞனின் சாமர்த்தியம்
    உங்களிடம் இல்லையே, அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய்
    என்று விற்றால் தானே உங்களுக்கு விற்பனை ஆகும், அதிகக் கொள்முதல் மூலம்
    குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப்
    பழகுங்கள் தாத்தா என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்,

    முதியவர்
    சிரித்தபடி போய்யா... அவன் என் பேரன், இந்தப் பழமும் அவனது தான், ஆறு பழம்
    பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு நம்ம சனத்துக்கு மனசு
    வராது, அதனால் நான் 'ஐந்து பத்து ரூபாய்னு கூவிகிட்டுப் போவேன், அப்புறமா
    ஆறு பழம் பத்து ரூபாய்னு அவன் வந்து சொன்னதும்... அடடே லாபமா இருக்கேனு
    சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க, அவன் தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட
    மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான் என்றார் முதியவர்.

    பின்னி எடுக்கும் பிக்பாஸ் 8!

    By: ram On: 10:52
  • Share The Gag
  • வருடா வருடம் கலர்ஸ் டி.வி.யில் நடைபெரும் மிகப் பிரபலமான தொடர், 'பிக்பாஸ்'. அதன் எட்டாவது பாகம், செப்டம்பர் 21ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இதனை நான்காவது முறையாக தொகுத்து வழங்குகிறார், சல்மான் கான். இந்த நிகழ்ச்சியைப் பற்றியும், அதன் விதிமுறைகள் பற்றியும் ஒரு சிறப்புப் பகிர்வு...

    தொடக்கம்

    1999-ல் 'பிக் பிரதர்ஸ்' எனத் தொடங்கப்பட்ட நெதர்லேண்ட் நிகழ்ச்சியின் இந்தி வெர்ஷன் தான் இந்த 'பிக் பாஸ்'. குறிப்பிட்ட எண்ணிக்கையில் சில பிரபலங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்துவதற்கு என்றே உருவாக்கப்பட்ட வீட்டில் தங்க வைப்பார்கள். அந்த நபர்களின் எண்ணிக்கையும் அவர்கள் தங்கியிருக்கும் நாட்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு முறையும் மாறுபடும். ஒவ்வொரு வாரமும் இந்த குழுவிலிருந்து யார் வெளியேற வேண்டும் என்பது, நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களின் வாக்குகள் மூலம் முடிவு செய்யப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் மூன்று பேர் மட்டும் மீதமிருப்பார்கள். அவர்களில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதும் நேயர்களின் வாக்குகள் மூலம் முடிவு செய்யப்படும். இதில் கலந்து கொள்பவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து, தேவைப்படும் போது சில அறிவிப்புகளையும் 'பிக் பாஸ்' என அழைக்கப்படும் நபர் தனது குரல் வழியே வழங்குவார்.

    விதிமுறைகள்:

    பொதுவாக இந்த நிகழ்ச்சியின் விதிமுறைகளை, நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போதே கூறுவார்கள். அதில் சில விதிகள் மட்டும் எப்போதும் உபயோகிக்கப்படும்.

    1. இதில் கலந்து கொள்ளும் நபர்கள் தங்களின் சகாக்களுடன் இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் பேசக்கூடாது.
    2. கோபப்பட்டு வீட்டில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடாது.
    3. பகல் நேரத்தில் உறங்க அனுமதி கிடையாது.
    4. அவர்களுக்கான வெளியேறும் நேரம் வரும் வரை வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது.
    5. சில நேரங்களில் விதிகளை மீறுதல், வேறு ஏதாவது முக்கியமான பிரச்சனை வரும் போது, அதற்குக் காரணமான அந்த நபர், நேயர்களின் வாக்கு இல்லாமலேயே வெளியேற்றப்படுவார்.

    போட்டியாளர்கள்:

    1. அரசியல் சார்ந்த நபர்கள்
    2. முன்னாள் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர்
    3. LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) வகையில் உள்ள நபர்
    4. அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற நபர்கள்
    5. குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள்
    6. கவர்ச்சி நடிகைகள்
    7. சர்வதேச நட்சத்திரங்கள்
    8. முன்னேறிக் கொண்டிருக்கும் மாடல்கள்
    9. பல திறமைகள் கொண்ட நபர்கள்
    10. பாடகர்/ பாடகி
    11. விளையாட்டு துறை சார்ந்த நபர்கள்
    12. திரைப்பட நட்சத்திரங்கள்
    13. நகைச்சுவை நடிகர்கள் (டிவி, நாடகம், சினிமா)

    இந்த பதிமூன்று வகையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் சில வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்படலாம். சில நேரங்களில் ஒரு நபர் கூட தேர்வு செய்யப்படாமல் போகலாம்.

    வீடு:

    இந்த நிகழ்ச்சி முழுவதும் ஒரு வீட்டுக்குள்ளேயே நடைபெறும். எனவே ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சிக்காக வேறு வேறு இடங்களில் இந்த வீடு அமைக்கப்படும். படுக்கையறை, கழிவறை, தோட்டம், நீச்சல்குளம், உடற்பயிற்சிக்கூடம் என ஒரு ஆடம்பர வீட்டின் எல்லா அம்சங்களும் இருந்தாலும், நிகழ்ச்சிக்காகப் பிரத்யேகமான சில ஏற்பாடுகளும் வீட்டில் செய்யப்பட்டு இருக்கும். உதாரணதிற்கு, வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையவசதி, கடிகாரம், காகிதம், பேனா போன்ற எந்த விஷயமும் இருக்காது.

    இவை தவிர ஓர் உரையாடல் அறை இருக்கும். 'பிக் பாஸ்' எனும் திரைமறைவு நபர் போட்டியாளர்களில் யாரையும் எதாவது ஒரு தலைப்பின் கீழ் உரையாட அழைக்கலாம். நேயர்களின் வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகளும் இந்த அறையில் நடைபெரும்.

    ஹைலைட்ஸ்:

    * அதிகபட்சமாக இந்த நிகழ்ச்சி 105 நாட்களும் குறைந்த பட்சமாக 84 நாட்களும் நடைபெற்றிருக்கிறது.
    * ஒரு கோடி வரை பரிசுத்தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
    * ஜேட் மற்றும் பண்ட்டி என்பவர்கள் 2 நாட்களில் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
    * அர்ஷட் வர்ஷி, ஷில்பா, ஷெட்டி, அமிதாப் பச்சன், சல்மான்கான், சன்ஜய் தத் போன்றவர்கள் இதன் முந்தைய 5 பாகங்களை தொகுத்து வழங்கியுள்ளனர்.
    * 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் சோனி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி 2008 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுகிறது.

    மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோவுக்கே உரிய முக்கிய அடையாளமாக பல சர்ச்சைகளும் இதன் மூலம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதையும் கடந்து தொடரின் 8-ம் பாகமும் தொடங்கிவிட்டது. இதில் என்ன பிரச்சனை வரப்போகிறது, வெற்றியாளர் யார் என்ற கேள்விகளுக்கான சுவாரஸ்யமான விடையை பொறுத்திருந்து பார்ப்போம்.

    வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது?

    By: ram On: 10:32
  • Share The Gag
  • யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்?

    எல்லாவற்றிற்கும ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.
    சம்பாதித்து நல்ல நிலைக்குவரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.
    உண்மை வரிகள் ....

    •பிறந்த நாட்டை விட்டு பிரிந்து உறவுகளை விட்டுவிட்டு தனியனாய் உரிமைகள் அற்று சிதறி கற்பனை வாழ்வில் மட்டுமே கனவுகளில் லயித்து நிஜமற்றகானல்நீராய் நீள்கிறது எங்கள் வாழ்க்கை..!

    •எனக்கொரு கனவு கடனில் இருக்கும் வீட்டை என் காலத்திலாவது கட்டி மீட்டிட வேண்டும்..!

    •நண்பனுக்கொரு கனவு தன்னோடு கஷ்டம் போகட்டும் தன் தமையன்களுக்காவத ு நல்லபடிப்பை நல்கிட வேண்டும்..!

    •அறைத் தோழன்னுக்கோர் கனவுஅப்பாவின் ஆப்பரேசனுக்கு பணம் சேர்த்து மீளாத் துயரில் இருக்கும் குடும்பத்தை மீட்டிட வேண்டும்..!

    •தோழியின் கனவு தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து பார்த்து மகிழ்ந்திட வேண்டும்..!

    •இப்படியாய் நாங்கள் கனவுகள் வெவ்வேறு பணம் ஒன்றே பிரதானமாய் எல்லோரும் வெளிநாட்டில்..!

    •காய்ச்சல் வந்ததென்றால் கஞ்சி கொடுக்க தாயில்லை.
    அன்பை பகிர்வதற்கு அருகில்என் தங்கை இல்லை.
    அதிகாரம் செலுத்திட அருகாமையில் அப்பா இல்லை.
    சோகம் சுமந்தோமேன்றால் ஆற்றுவதற்கு ஆளில்லை.
    சொல்லொண்ணா துயரில் நாங்களும் அனாதைகள்தான்.
    நாடுகடந்து வாழ்வதால் நாங்களும் அகதிகள்தான்..!

    •அம்மா அழைக்கிறாள் உன்முகம் பார்த்து நாளாச்சு.. கண்ணுலையே நிக்குற.. வந்து காட்டிட்டுபோ உன் முகத்தைன்னு..!

    •தகப்பன் சொல்கிறார் தங்கச்சிக்கு மாப்ள பாத்துட்டேன்.. கல்யாணத்துக்கு பணம் பத்தலஅனுப்பி வைப்பான்னு..!

    •தம்பி கேட்கிறான் அண்ணா..நான் நடந்தே பள்ளிக்கூடம் போறேன் சைக்கிள் ஒன்னு வாங்கி தாணான்னு..!

    •தங்கை கேட்கிறாள் கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வருவியான்னு..!

    •முகத்தில் மலர்ச்சி காட்டி உள்ளத்தால் அழுகின்றோம் எப்போ விடியும் எங்களின் வாழ்க்கையென்று. .!

    பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா

    By: ram On: 09:49
  • Share The Gag
  • ?

    16 வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து
    விடுகிறார்கள்.

    இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

    நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.

    செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.

    காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

    வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
    பட காட்சிதான்.

    அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
    வளர்த்து… வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும்,
    டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன்
    சுற்றும் நிலை ஏற்படுகிறது.

    டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது…

    பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

    இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

    வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
    அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்…

    இது கல்லுரி செல்லும் மாணவிகளுக்கும் பொருத்தும்

    எஸ்.பி.பியை மிரட்டிய இசைமேதை.. 36 வருடம் கழித்து வெளிவரும் உண்மை!!!

    By: ram On: 09:26
  • Share The Gag
  • சுமார் 36 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி ஓராண்டு தொடர்ந்து ஓடி வெற்றி பெற்றதுடன், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து நான்கு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்த படம் தான் ‘சங்கராபராணம்’. கே.விஸ்வநாத் இயக்கி, கே.வி.மகாதேவன் இசையமைத்த தற்போது இந்தப்படம் டி.டி.எஸ் மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த 12 பாடல்களும் நவீன தொழில்நுட்பத்துடன் அதேசமயம் மாறாத இசையுடன் உருவாகி இருகின்றன. 36 வருடங்களுக்கு முன் அந்த ‘சங்கராபரணம்’ படத்தில் பாடிய எஸ்.பி.பி, ஜானகி, வாணி ஜெயராம் மூவரும் இந்தப்படத்தில் பாடியுள்ளனர்.

    இதுபற்றி எஸ்.பி.பி சொல்லும்போது, “இந்தப்படம் தெலுங்கில் உருவானபோது நான் பல படங்களில் பிசியாக பாடிக்கொண்டிருந்த நேரம்..
    அப்போது என் வீட்டிற்கு வந்த இசைமேதை கே.வி.மகாதேவன் அண்ணா என் தந்தையிடம் ஒழுங்கா அவனை இந்தப்படத்துல பாடிக்கொடுத்துட்டு மற்ற படத்துல பாடச்சொல்லுங்க என அன்பாக மிரட்டினார். என் தந்தையும் அவனுக்கு நல்லா பாடவரலைன்னா அவன் கன்னத்துல அறைந்து பாடவைங்க என்றார். அதன்பின் இந்தப்பாடலுக்காக மிகவும் பயிற்சி எடுத்து பாடினேன். அதுதான் எனக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது” என்கிறார் பெருமிதத்துடன்.

    எலித் தொல்லையா? அருமையான வழிகள்!

    By: ram On: 09:13
  • Share The Gag
  • நிறைய பேருக்கு செல்லப் பிராணிகள் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அந்த செல்லப் பிராணிகள் பல்வேறு சூழ்நிலைகளில் மிகவும் உதவியாக இருக்கும். அத்தகைய செல்லப் பிராணிகளில் நாய், பூனை, கிளி போன்றவற்றை தான் பெரும்பாலானோர் வளர்ப்பார்கள். சிலர் எலிகளில் வெள்ளை நிற எலியை வளர்ப்பார்கள். ஆனால் அந்த வகைகளில் ஒன்றான கருப்பு நிற எலியைக் கண்டால் பலரும் எரிச்சல் அடைவார்கள். ஏனெனில் கருப்பு நிற எலியின் அட்டகாசத்தை தாங்கவே முடியாது.

    குறிப்பாக பெருச்சாளி என்றால் அனைவரும் அது மட்டும் கையில் கிடைத்தால், அதனை அடித்தே சாவடிப்பேன் என்ற அளவில் கோபப்படுவார்கள். ஏனென்றால், அவை வீட்டில் உள்ள மரத்தாலான நாற்காலி, உடைகள் போன்றவற்றை கிழித்து வைத்துவிடும். பொதுவாக இந்த மாதிரியான எலிகளின் இருப்பிடம் வீட்டின் தோட்டம் என்று சொல்லலாம். ஏனெனில் அங்கு நாம் குப்பைத் தொட்டிகள் மற்றும் இதர குப்பைகளை போடுவதால், அதன் வாசனைக்கு அது பொந்து போட்டு, தங்கி, வீட்டின் உள்ளே வந்து வீட்டையே அசிங்கமாக்கிவிடுகிறது. எனவே வீட்டையும், தோட்டத்தையும் எலிப் பிரச்சனையின்றி வைப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

    * முதலில் குப்பைத் தொட்டியை வீட்டின் வெளியே தோட்டத்தில் வைத்தால், அவற்றை நன்கு மூடி வைக்க வேண்டும். குறிப்பாக ஈரமாக இருக்கும் குப்பைகளை போடும் போது, மறக்காமல் அதனை மூடி வைக்க வேண்டும். ஏனெனில் குப்பையின் வாசனைக்கு எலிகள் எளிதில் வந்துவிடும். எனவே குப்பைத் தொட்டியை நன்கு மூடி வைக்க வேண்டும். மேலும் குப்பையை வெளியே எறிந்த பின்னர், அதனை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும்.

    * மரத்தூள் குவியல் மற்றும் தோட்டத்தின் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அதன் வாசனையால் எளிதில் எலியானது வந்துவிடும்.

    * வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை களிமண் அல்லது கம் வைத்து நன்கு அடைத்துவிட வேண்டும். இதனால் எலிகள் வீட்டில் வந்து விளையாடுவதை தடுக்கலாம்.

    * வீட்டில் ஆங்காங்கு எலிப் பெட்டியை வைக்க வேண்டும். அதிலும் அந்த பெட்டியில் நல்ல வாசனை உணவுப் பொருட்களை வைத்து, எலி அடிக்கடி வரும் இடம் மற்றும் தங்கியிருக்கும் இடங்களில் வைக்க வேண்டும். இதனால் உணவுப் பொருட்களின் வாசனைக்கு எலியானது பெட்டிக்குள் சென்று மாட்டிக் கொள்ளும். பின் அதனை வீட்டிற்கு மிகவும் தொலைவில் விட்டுவிட வேண்டும்.

    * எலிகளுக்கு புதினாவின் வாசனை என்றால் அறவே பிடிக்காது. எனவே வீட்டைச் சுற்றி புதினாவால் செய்யப்பட்ட எண்ணெய் அல்லது வாசனை திரவியத்தை எலி தங்கியிருக்கும் இடத்தில் தெளித்தால், அதனை வீட்டிற்குள் வராமல் விரட்டலாம்.

    * அதுமட்டுமின்றி எலிகளுக்கு அந்துருண்டையின் வாசனை பிடிக்காது. ஆகவே வீட்டில் ஆங்காங்கு அந்துருண்டையை வைத்து விட்டால், எலிகளின் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

    இவையே எலிகளின் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழி. வேறு ஏதாவது எளிதான வழிகள், உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    முதல் படத்தில் என் சம்பளம்? ரகுமான் உருக்கம்

    By: ram On: 09:01
  • Share The Gag
  • உலகம் போற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் கால்ஷிட்டிற்காக முன்னணி இயக்குனர்கள் பலர் தவம் இருக்கிறார்கள்.

    இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கேரளாவில் நடந்த விருது விழா ஒன்றில் ‘ நான் முதலில் கீபோர்ட் மலையாள சினிமாவிற்காக தான் வாசித்தேன்.

    அப்போது என்னுடைய சம்பளம் ரூ. 50 தான் என உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

    தன்னை விட வயது அதிகமானவரை திருமணம் செய்யலாமா?

    By: ram On: 08:48
  • Share The Gag
  • பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன. அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும்.

    * தன்னை விட பெரிய ஆண்களை திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான பிரச்சனையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அத்தகையவரை திருமணம் செய்து கொள்ளும் போது, ஈஸியாக சரிசெய்து விடலாம். எத்தகைய பிரச்சனைக்கு எப்படி நடக்க வேண்டும் என்று நன்கு தெரியும். ஆகவே இந்த வாழ்க்கைப் பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

    * வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருப்பார்கள். எனவே திருமணத்திற்குப் பின், வாழ்க்கையில் எந்த ஒரு பணப் பிரச்சனையும் இருக்காது. பின் எதிர்காலத்தில் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.

    * வயது அதிகம் உள்ளவர்கள் எதையும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, குறும்புத்தனமாக ஏதாவது ஒரு செயலை செய்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு, கடுமையாக நடப்பார்கள். அதேசமயம் அவர்கள் குறும்புத்தனம் என்று நினைத்து ஏதேனும் செயலைச் செய்வது, நமக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும்.

    * வயது குறைவாக இருக்கும் பெண்கள் வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, ஆண்களுக்கு ஒருவித நம்பிக்கையில்லாத கோபம் வரும். அது என்னவென்றால், வயது குறைவாக இருப்பதால், தன் மனைவி இயம் வயது ஆண்களிடம் நட்புறவுடன் பேசும் போது, கோபம் வந்து சண்டை போடுவார்கள்.

    - ஆகவே எதுவானாலும், சரியான புரிதல் இருந்தால், எந்த ஒரு வாழ்க்கையும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் சந்தோஷமாக செல்லும்.

    ஹெல்மெட் ஆபத்தை விளைவிக்குமாம் எச்சரிக்கை தகவல்!!

    By: ram On: 01:32
  • Share The Gag
  • ஹெல்மெட் ஆபத்தை விளைவிக்குமாம் எச்சரிக்கை தகவல்!!

    ஹெல்மெட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு அதிகரிக்கும்.

    எந்த அளவுக்கு
    நாளைய வாழ்க்கையின் பெரும் தாக்கங்கள் இதன் காரணமாக உருவாக நேரிடும்
    என்பதை அக்குபங்சர் எனும் மேன்மையான சித்தாந்தத்தின் மூலம் அறிந்து
    கொள்ளலாம். தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி நாளம் நடு மத்தியில்
    நேர்கோடாக அமைந்துள்ளது.

    உயிர் சக்தி நாளத்தை அடுத்து சிறு
    நீர்ப்பை சக்தி நாளங்கள் அதன் இருபுறமும் அமைந்துள்ளது. இதனையடுத்து உயிர்
    சக்தி நாளம் அமைந்துள்ள தலை நடு மையக் கோட்டின் இருபுறமும் பித்தப்பை சக்தி
    நாளங்கள் அமைந்துள்ளன.

    இதனையடுத்து நடு மையக் கோட்டின் இரு
    புறங்களிலும் தேக வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி நாளங்கள்
    அமைந்துள்ளன. இவையனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கக் கூடியது.
    தலைப்பகுதி, முதலில் தலையின் நடு மையக்கோட்டில் அமைந்துள்ள உயிர் சக்தி
    நாளத்திலிருந்து தூரமாக உள்ளது.

    ஹெல்மெட் அணியும்பொழுது அதனுடைய
    கீழ் ஓரப் பகுதி இந்த நாளங்களை அழுத்திப் பிடிக்கிறது என்பதை நீங்கள்
    பார்க்க முடியும். சாதாரணமாக சக்தி நாளங்கள் அழுத்தப்படக் கூடாது. அவ்வாறு
    அழுத்தப்படுமானால் அதனுடைய விளைவுகளாக நோய்கள் தோன்றும்.

    இந்த
    நோய்கள் படிப்படியாக வலிகளாக கழுத்திலும், பிடரிகளிலும் ஏற்படும். முழங்கை
    வலி, தோள்பட்டை வலி, மணிகட்டு வலிகள் இன்னும் விரல் மூட்டுகளில் வலிகள்
    போன்றவற்றைத் தோற்றுவிக்கும்.

    காதைச் சுற்றி இந்த சக்தி நாளம்
    பரவியிருப்பதைப் பாருங்கள். ஹெல்மெட் அணிவதன் காரணமாக பிற்காலத்தில்
    காதுகளில் மந்தம் ஏற்படலாம். இன்னும் காதுகளில் வலிகளும் அடிக்கடி சீழ்
    பிடித்தலும் உருவாகும்.

    கண்களின் இருபுறமும் வெளிப்புறங்களில்
    நெற்றிப் பொட்டுக்களில் தாங்க முடியாத வலி தோன்றினால் அது இந்த சக்தி
    நாளத்தில் ஏற்பட்டுள்ள பாதகங்களின் காரணமாகவே ஆகும்.
    ஹெல்மெட் மற்றும்
    கண்ணாடிகளை அணிவது இந்த சக்தி நாளங்களை பாதிக்கும் என்பதை அறிந்து
    கொள்ளுங்கள். சிறு பிள்ளைகளுக்கு கண்ணாடிகளை அணிவிக்கும் பொழுது காதுகளைச்
    சுற்றி அமையும்.

    அதனுடைய ஃபிரேம் நிச்சயமாக இவர்களுடைய காதுகளை
    பாதிக்கும். அடிக்கடி காதுகளில் சீழ் பிடிக்கும். இதனை மற்ற மருத்துவத்தால்
    ஒரு போதும் குணப்படுத்த முடியாது.
    எத்தகைய ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தாலும் குணமாகாது.

    குணமாக இந்தப் புள்ளிகளுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல்
    பாதுகாப்பீர்களானால் நாளை வரக்கூடிய மணிக்கட்டு வலிகள், விரல் மூட்டுகளின்
    வலிகள், முழங்கை தோள் பட்டை வலிகள், பிடரி மற்றும் காது, நெற்றிப் பொட்டு
    வலிகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

    அடுத்து
    பித்தப்பை சக்தி நாளம் தலையின் பக்கவாட்டு முழுவதும் இந்த சக்தி நாளம்
    பரவியிருக்கிறது. தலையின் இருபுறமும் இது அமைந்திருக்கிறது. ஹெல்மெட்
    அணியும்பொழுது இந்த சக்தி நாளங்களே பெரும்பாலும் அழுத்தத்திற்கு
    உள்ளாகின்றன.

    இதன் விளைவு வெயில் காலங்களில் ஏற்படும் மயக்கம்,
    தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது. பலருக்கு சன் ஸ்ட்ரோக்
    ஏற்பட்டு இறப்போரும் இருக்கின்றனர். ஹெல்மெட் அணிவதன் காரணமாக வெயிலின்
    உச்சக்கட்டத்தில் வாகனங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து
    ஏற்பட நிச்சயமாக வாய்ப்பு உண்டு.

    ஹெல்மெட் அணிவதன் காரணமாக
    மயக்கம், வாந்தியுணர்வு ஏற்பட்டால் இது மட்டுமல்ல, ஹெல்மெட் கடுமையான கோடை
    காலங்களில் அணிந்ததன் காரணமாக அதன் விளைவுகள் ஹெல்மெட் அணியாததன் போதிலும்
    வெயிலில் செல்லும்போது சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு விடலாம்.

    அடுத்து
    சிறு நீர்ப்பை சக்தி நாளம் அமையப் பெற்ற தலைப்பகுதியைப் பாருங்கள்.
    ஹெல்மெட் அணிவதன் காரணமாக யாருக்கு சிறுநீர்ப்பை பலவீனமாக இருக்கிறதோ
    அவர்கள் அதை அணிய நேரிட்டால் இதன் காரணமாக இந்த சக்தி நாளங்கள்
    அழுத்தத்திற்கு உட்பட்டு விட்டால், கண்களிலிருந்து தலை முழுதும் வலி ஏற்பட
    ஆரம்பிக்கும். கண்களின் புருவங்களின் மத்தியில் கடுமையான உளைச்சல்
    ஏற்படும்.

    தலையை ஆட்டினால் நடு மையக் கோட்டிற்கு இருபுறமும்
    தலையில் நீர் கோர்த்துக் கொண்டது போன்று பாரம் ஏற்படும். கழுத்தின் பின்
    பகுதியின் மையத்தில் ஏற்படும் வலிகள், குதிகால் வலி போன்றவை ஹெல்மெட்
    அணிவதன் காரணமாக எந்த நேரத்திலும் தோன்றக்கூடிய நோய்களாகும்.

    இவையனைத்தும் கோடை காலங்களில் ஹெல்மெட் அணிவதன் காரணமாக உடல் நிலையில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    கோடை காலத்திலும் மற்ற நேரங்களிலும் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டியவர்கள்
    அவர்களுக்கு ஏற்படும் மேலே கண்ட அனைத்து நோய்களிலிருந்து அக்குபங்சர்
    சிகிச்சையின் மூலம் மேற்படி நோய்கள் வராமலும், ஏற்கனவே
    அவதிப்படுபவர்களையும் குணப்படுத்த முடியும்.

    இரத்த அழுத்த
    மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளை அக்குபங்சர் மூலம்
    குணப்படுத்தலாம். எப்போது இரத்த அழுத்த மாத்திரைகள் ஒரு நோயாளி சாப்பிட
    ஆரம்பிக்கிறாரோ அப்போது தொடங்குவது தான் சிறு நீரகங்களின் அழிவு.


    நுரையீரலும், சிறு நீரகங்களும் பாதிப்படைய ஆரம்பிக்கும்போது தூக்கமின்மை
    ஏற்பட ஆரம்பிக்கிறது. காரணம் தெரியாத பயமும் தூக்கத்தை கெடுக்கும். இரண்டு,
    மூன்று மணிக்கு மேல் பின்னிரவில் தூக்கம் கலைந்து விடுமானால் அது
    நுரையீரல் பாதிப்பை வெளிப்படுத்துகிறது. ஆண்களையும், பெண்களையும்
    மலடுகளாக்குவதும் இந்த இரத்த அழுத்த மாத்திரைகள்தாம்.


    ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி, இரத்த அழுத்த மாத்திரையை உட்கொள்ள
    ஆரம்பித்த சில வருடங்களில் உடலுறவில் நாட்டமழிப்பார்கள். ஈடுபட
    நினைத்தாலும் அவர்கள் உறுப்புகள் ஒத்துழைக்காது.

    சிலருக்கு
    வயிற்றின் மேல் பகுதிகளில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு இடுப்பு
    மடிப்புகளில், சிலருக்கு இடுப்பு மடிப்புக்கு கீழே தொடைப்பகுதியில்,
    சிலருக்கு முதுகு அல்லது தோள் பட்டைகளில் இன்னும் சிலருக்கு கழுத்தின்
    முன்புறமோ, பின்புறமோ சதைகள் பருமனாகும்.

    கழுத்தின் முன்புறம் சதை
    பருமனாகுதல் சிறு நீரகங்கள் சக்தியிழந்து வருவதை உணர்த்துகிறது. கழுத்தின்
    பின்புறம் போடும் சதை சிறுநீர்ப்பையின் சக்தி குறைவை வெளிப்படுத்துகிறது.
    பெண்களுக்கு பொதுவாக சதை போட ஆரம்பிக்கும்.

    மார்பகங்களில்
    அதிகனமாக தோற்றமளித்தால் அது பெண்ணோ, ஆணோ வயிற்றுடன் சம்மந்தப்பட்டது.
    வயிற்றின் வேலை செய்யும் திறன் குறையும் போது அதிகப் பசி எடுப்பதோடு
    மட்டுமில்லாமல் மார்பகங்களில் ஊளைச் சதை போடும்.



    மார்பகங்களுக்குப் பக்கவாட்டில் அக்குகளிலும் அக்குள் மடிப்புகளிலும் சதை
    விழுமானால் அது சிறு குடல், இருதயம் ஆகிய இவ்விரு உறுப்புகளின் பலவீனத்தைக்
    குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது அவ்வப்போது குணப்படுத்தப்படாமல்
    போகும்போது தான் நாளடைவில் சிறு குடல் நோயின் காரணமாக ஏற்படும் அஜீரணக்
    கோளாறை காலமெல்லாம் அனுபவிக்க நேரிடுகிறது.

    அது மட்டுமல்ல இருதயக் கோளாறுகளும் படபடப்பு, தூக்கமின்மை, மயக்கம், தலைச்சுற்றல் ஆரம்பம் பெற வழி ஏற்படுகிறது.

    மேலே கண்ட அனைத்து நோய்களையும் அக்குபங்சர் சிகிச்சையின் மூலம்
    குணமாக்குவதுடன் தொடர்ந்து இரத்த அழுத்த மாத்திரைகளை பயன்படுத்துவதை
    தவிர்க்கலாம்.