Thursday 2 October 2014

மோடியின் அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரியங்கா சோப்ரா

By: ram On: 23:45
  • Share The Gag
  • சுத்தமான இந்தியா உருவாக்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்றுக் கொண்டார்.

    டெல்லியில் ‘சுத்தமான இந்தியா’  திட்டத்தை தொங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்கா ஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய நான் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன்.

    சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்பு. என்றார். இந்தியாவை சுத்தப்படுத்துவதற்கு மக்கள் சுமார் 100 மணிநேரம் செலவிட வேண்டும். என்று மோடி கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த சவாலை பிரபல் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா தனது டூவிட்டர் இணையதளத்தில் நான் தாழ்மையுடன் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிஜியின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் பிரியங்கா சோப்ரா தனது ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். சுத்தமான இந்தியா திட்டத்தில் ஈடுபடவில்லை என்றாலும், ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் ஒன்றும் நடக்காது. ஆனால் நாம் ஒன்றாக இணைந்து பணிசெய்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும். நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியமானதாக இருக்க வேண்டும். நான் மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறேன். நான் இந்தியாவை சுத்தப்படுத்த விரும்புகிறேன். இது சுத்தம் செய்யும் நேரம். என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். 

    சிறுமிகளும், பிராய்லர் கோழிகளும் - ஒரு அதிர்ச்சி தகவல்..!

    By: ram On: 23:07
  • Share The Gag
  • நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்குச் சென்றிருந்தேன். தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஒரு ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு,சம்பிராதய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். “9″ வயது என்றார்கள்.

    இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒரு முறை தவறாமல் பிராய்லர் சிக்கன் கோழிகளை வாங்கி சமைக்கின்றனர். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு இது ஒரு விதத்தில் ஆபத்து என்றார்.

    பண்ணைகளில் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர ஹார்மோன் ஊசி போடுவது உண்டாம். இந்தக் கோழிகளை சமைத்துச் சாப்பிடும் நமக்கும் ஹார்மோன்கள் வேலை செய்கிறதாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வரும் முன்னரே பருவம் எய்தும் வேலையை இது செய்கிறது.இது பிஞ்சிலே பழுக்கும் அபாயம் ஆகும்.

    தோழியை விசாரித்த போது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் பிராய்லர் சிக்கனுக்குத்தான் முதலிடம் என்றாள்.

    பெண்களைப் பெற்றவர்களே! இந்த மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு எந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை டாக்டரிடம் கேட்டுப் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

    நயன்தாராவால் தள்ளிப்போகிறதா சிம்பு படம்?

    By: ram On: 22:43
  • Share The Gag
  • நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னாள் காதலர்களான சிம்புவும் நயன்தாராவும் இணைந்துள்ள படம் இது நம்ம ஆளு.

    இப்படம் தொடங்கி பல நாட்களாகியும் இன்னும் வெளிவராமல் உள்ளது. இதற்கு நயன்தாராவுடன் சிம்புவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று கூறப்பட்டது.

    இதை மறுத்த சிம்பு கூறுகையில், இது நம்ம ஆளு படத்தின் வசன காட்சிகள் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. ஒரு பாடல் காட்சி மட்டுமே இன்னும் பாக்கி உள்ளது.

    இந்த பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு உள்ளோம். அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் துவங்கும். டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைக்கிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.

    அதிகாலையில் சூரியனுக்கு நீரை காணிக்கையாக செலுத்துவதன் முக்கியத்துவம்!

    By: ram On: 21:55
  • Share The Gag

  • நமது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி நமக்கு அதிகாலையிலேயே விரைவாக எழுந்து கதிரவனுக்கு நீரை காணிக்கையாக வழங்குவதை நமக்கு சிறுவயது முதலே கற்று கொடுத்துள்ளனர். நாம் வாழ்கின்ற இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் நிறைந்துள்ள நம்முடைய இந்த பழக்கம் உண்மையிலேயே நமக்கு உதவி புரிகிறதா? அல்லது இது வெறும் கட்டுகதையா?

     ஒரு டம்ளரையோ அல்லது கைகளை பயன்படுத்தியோ சூரியனுக்கு தண்ணீரை காணிக்கையாக வழங்குவது நமக்கு நன்மை பயக்கும் என்று ஆய்வுகளும் அறிவியல் காரணங்களும் தெரிவிக்கின்றன. நாம் நமது இரு கைகளையும் உயர்த்தி சூரிய கடவுளை நோக்கி ஊற்றும் போது, மிக மெல்லிய நீரோட்டம் விழுகிறது. அந்த நேரத்தில் நம்மால் சூரியனை நோக்கி பார்க்க முடிவதில்லை காரணம் மிக வலுவான சூரிய கதிர்கள் வெளிப்படுவதனால்.

    நமது முன்னோர்கள் ஒரு பரந்த விளிம்புடைய பாத்திரத்தில் நீரை எடுத்து கொண்டு அதிகாலையில் சூரிய கடவுளுக்கு காணிக்கை செலுத்தினர். இரு கைகளையும் மேலே உயர்த்தி கண்களின் முன்னால் ஒரு பரந்த பாத்திரத்திலிருந்து நீர், காணிக்கையாக செலுத்தபட்ட போது நமது முன்னோர்கள் அந்த நீரோட்டத்தின் வழியாக சூரியக்கடவுளை கண்டனர். சூரிய உதயத்தின் போது சூரியனிலிருந்து வெளிப்படும் அந்த கதிர்கள் கண்களுக்கு மட்டும் சிறந்தவை அல்ல; மேலும் முழு உடலுக்கும் ஆன்மாவிற்கும் வலுவூட்டும் வல்லமை படைத்தது.

    மனித உடல் ஆற்றலினால் நிறைந்தது என்ற போதிலும் அதிகாலையில் வெளிப்படும் சூரியகதிர்கள் நன்மைகள் நிறைந்தவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித உடல் ஐந்து விஷயங்களால் ஆனது அவை காற்று, தண்ணீர், பூமி, தீ மற்றும் வானம். மேலும் உடலின் அனைத்து வியாதிகளுக்கான சிகிச்சைகளும் இந்த ஐந்து விதமான விஷயங்களிலேயே காணப்படுகின்றன. அவற்றுள் உதயமாகும் சூரிய கதிர்களும் அடங்கும். சூரிய கதிர்களை பயன்படுத்தி எண்ணற்ற நோய்களை குணப்படுத்த முடியும். உதாரணம் இதயம், கண்கள் சம்பந்தபட்ட நோய்கள், மஞ்சள் காமாலை, தொழுநோய், பலவீனமான மன வியாதிகள் ஆகியவை ஆகும்.
           
    ஒருவரை உறக்கத்திலிருந்து எழுப்புவது சூரியனே என்கிறது ரிக் வேதம். சூரியனின் காரணமாகவே அனைவரும் சுறுசுறுப்புடன் செயலாற்ற முடிகிறது. அனைத்து உயிரினங்களின் உருவாக்கமும், சூரியனையே சார்ந்துள்ளது. சூரியன், ஒருவரது உடல், மனம் மற்றும் ஆன்மீக பலவீனங்களை நீக்கி அவரை நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ செய்கிறது. சூரியனின் ஏழு நிறங்களும் நன்மை பயக்குபவை. மேலும் ஆரோக்கியத்திற்கு அவசியமானவையும் கூட. ஒருவர் அதிகாலையிலேயே குளியலை முடித்து பின்னர் கடவுளுக்கு பூஜை செய்து சூரிய கதிர்களை தமது வெற்றுடம்பில், அனுமதித்தால் அவரது உடலிலிருந்து அனைத்து வியாதிகளும் விடை பெறும். மேலும் அவரது அறிவாற்றல் அதிகரிக்கும்.

    மறுபுறம் சூரியன் தாகத்தில் இல்லை என்றும், இது போன்று காணிக்கை செலுத்துவதே சூரியனை அடையும் வழி என்றும், பல மாற்று கருத்துகள் நிலவுகின்றன. இதனை நிரூபிக்க ஒரு துறவி கங்கை நதியின் கரையில் 2-3 அடி அளவிற்கு நீர் செல்வதற்கு வழியை ஏற்படுத்தினார். மற்ற துறவிகள் அவரிடம் புனிதமான கங்கையின் நீரை ஏன் இப்படி வீணாக்குகிறீர் என்று கேட்டதற்கு பதிலளித்த அந்த துறவி, தான் தனது கிராமத்தில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் விட்டதாக தெரிவித்தார்.

    மற்ற துறவிகள் கோபம் கொண்டு இது போல செய்வதால் இந்த நீர் அவரது வயல்களை அடைய போவது இல்லை என்று கூறினர். அந்த துறவி சிரித்து கொண்டே அவ்வாறெனில் உங்களது காணிக்கைகள் மட்டும் எவ்வாறு சூரியனை அடையும் என்று கேட்டார். "ஆரக்யா" மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து இன்னும் கேள்விகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இரு வேறுபட்ட தத்துவவாதிகள் இடையே இது குறித்தான குழப்பங்களும், மோதல்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

    வருகிற 10 தேதி தனித்துவமாக களமிறங்கும் யாவும் வசப்படும்

    By: ram On: 21:37
  • Share The Gag
  • ஈழத்து கலைஞன் புதியவன் ராசைய்யா இயக்கத்தில் முழுக்க முழுக்க லண்டனின் தயாராகி இருக்கும் திரைப்படம் யாவும் வசப்படும். இப்படம் திரில்லர் கலந்த உத்வேகமான திரைக்கதையில் உருவாகியுள்ளது.

    இத்திரைப்படத்தை பற்றிய தகவலும், ரசிகர்களிடையே படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

    இப்படத்தை வருகிற 10ம் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளது படக்குழு. இதற்கு முன்பு இயக்குனர் புதியவன் வன்னியிலிருந்து “மண்” என்ற திரைப்படத்தை எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?

    By: ram On: 21:21
  • Share The Gag

  • மனிதர்கள் பலர் கடின உழைப்பால் முன்னேறுகின்றனர். ஒரு
    கட்டத்தில் மிகக் கடுமையாக உழைக்கும் சிலர், வசதி வாய்ப்புடன் கூடிய நல்ல
    நிலைக்கு வந்ததும், மது, மாது (பிற பெண்கள் தொடர்பு) இவற்றை நாடுகிறார்.
    அதுதவறு என்று அவர்களுக்குத் தோன்றினாலும், மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத்
    தரக் கூடியது வேறு இல்லை என மனதில் நினைத்துக் கொள்கின்றனர்.

    எனவே, ஒரு மனிதன் தனது வாழ்வில் மது, மாது ஆகியவற்றின் தொடர்பு இல்லாமல் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்க முடியுமா?
    பதில்: மது, மாது ஆகிய இரண்டில் மட்டுமே இன்பம்
    என உலகில் உள்ள 100% மனிதர்களும் கருதுவதில்லை. ஜாதகத்தை வைத்துப்
    பார்க்கும் போது, 4ஆம் இடமான சுகஸ்தானமே ஒருவரின் மகிழ்ச்சியை
    நிர்ணயிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக 12ஆம் இடம் ஒருவரின் மறைமுக
    இன்பங்களைக் காட்டக் கூடியதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது.

    எனவே, 4 மற்றும் 12ஆம் இடங்களைப் பொறுத்தே ஒரு மனிதனுக்கு எந்த
    விஷயத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பதைக் கூற முடியும். எனக்கு தெரிந்த
    ஒருவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து இன்று லட்சாபதிபதி நிலைக்கு
    உயர்ந்துள்ளார். எனினும், கோயிலில் சிதறு தேங்காய் உடைதால் அதனை
    சேகரித்துச் சாப்பிடாமல் அங்கிருந்து நகர மாட்டார். அவருக்கு அதில் தான்
    பேரானந்தம் அடங்கியிருக்கிறது.

    இதேபோல் மற்றொரு முக்கிய பிரமுகரும் தனது கடந்த கால வாழ்க்கையில்
    மேற்கொண்ட ஒரு விஷயத்தை தகுதி, தராதரம் பார்க்காமல் இன்றும் செய்து
    வருகிறார். ஏழ்மை நிலையில் சாலையோரக் கடைகளில் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட
    அவர், இன்று பல தொழில்களுக்கு அதிபரான பின்னரும் காரில் சென்று சாலையோரக்
    கடைகளில் உணவு அருந்துகிறார். அவருக்கு அதில்தான் இன்பம், சந்தோஷம்,
    மகிழ்ச்சி.

    எனவே, ஒருவரின் ஜாதகத்தில் சுகாதிபதி எப்படி அமைகிறதோ அதைப் பொறுத்தே அவர்களின் மகிழ்ச்சி, இன்பம் அமையும்.

    உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என கண்டறிய?

    By: ram On: 19:58
  • Share The Gag
  •  உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என கண்டறிய?
    உங்களுடைய ஜிமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்)உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? உங்களை அறியாமலேயே நீங்கள் தவறுதலாக வேறு எங்கேயாவது தொலைத்திருக்க வாய்ப்பு உள்ளது, ஏதாவது வெளியில் கம்பியூட்டர் சென்டர்களில் ப்ரவுசிங் செய்யும் போதோ அல்லது உங்களுடைய நண்பர்களின் கணினியிலோ தவறுதலாக உங்களின் முகவரி மற்றும் கடவுச்சொல்லை விட்டு சென்றீர்கள் ஆனால் உங்களுடைய பயனர்பெயர் (யூசர்நேம்)  மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உங்களுடைய ஈ-மெயிலை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது, அது போன்ற நிலையில் நீங்கள் உங்களுடைய பழைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ள வேண்டும். பின் செக்கியூரிட்டி பதிலையும் மாற்றிக்கொள்ள வேண்டும். நான் சொல்லவந்தது என்னவென்றால் உங்களுடைய ஜிமெயில் முகவரியை வேறு யாராவது பயன்படுத்தினால் அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதுதான், நீங்கள் முதலில் உங்களுடைய ஜிமெயில் முகவரியில் நுழைந்து கொண்டு கடைசியாக அடிபகுதியில் உள்ள Details என்பதை கிளிக் செய்யவும்.


    கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும் அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஒப்பன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும் அதில் நீங்கள் ஒப்பன் செய்யாத முகவரி இருந்தால் உடனே அதற்கு மேல் பாருங்கள் உங்கள் ஈ-மெயில் தற்போது வேறு எங்காவது ஒப்பன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.

    உடனே Signout all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய ஈ-மெயிலை Signout  செய்ய முடியும். முன்பே சொன்னதுபோல உடனே உங்களுடைய கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ளவும்.

    காந்திய வழியில் தமிழ் சினிமா

    By: ram On: 19:16
  • Share The Gag
  • இன்று இந்தியா ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அந்த அளவிற்கு நமக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. இந்த சுதந்திர காற்றை நாம் சுவாசிக்க பலர் இரத்தம் சிந்தினர். அவர்கள் பட்ட கஷ்டங்கள் தான் நாம் இன்று சந்தோஷமாக என்னுடைய நாடு இந்தியா என்று காலரை தூக்கிவிடுகிறோம்.

    ஆனால் அப்படி இரத்தம் சிந்திய பலரும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று தான் இருந்தவர்கள். இவர்களை ஒன்றிணைத்து ஒரு தலைவனாக இல்லாமல் மக்களோடு மக்களாக இறங்கி போராடியவர் தான் மகாத்மா காந்தியடிகள் அவர்கள்.

    எதற்கு எடுத்தாலும் அடிதடி, வெட்டுகுத்து என்று இருந்த மக்களிடம் அன்பு என்ற ஒரு வழியை காட்டி அஹிம்சை முறையில் அனைவரையும் போராட வைத்தார் காந்தி. உலகிலேயே அஹிம்சை முறையில் சுதந்திரம் பெற்ற ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

    எந்தவொரு முடிவுக்கும் அன்பு மட்டுமே தீர்வு என்று இவர் கூறியதை தான் கலைஞானி கமல்ஹாசன் ஹேராம் படத்தில் ஒரு பாடல் வரியாகவே வைத்திருப்பார். ‘அன்பென்னும் ஒரு சொல்லை இன்று நீ ஏற்றி வைத்தால், நாளை எரியும் உன் பெயர் சொல்லும் ஜோதி’ என்று அன்பின் வலிமையை பாட்டாவே பாடியிருப்பார்.

    மேலும் இப்படத்தில் காந்தியின் கொள்கையை முழுவதும் தெரியாமல் அவரை கொல்ல வரும் இளைஞனாக வந்த கமல், இறுதியில் காந்தியின் வழியை புரிந்து கொண்டு அவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பார்.

    இது மட்டுமின்றி காந்தியாக யாராலும் இருக்க முடியாது, ஆனால் காந்தியாக நடித்தால் கூட மாலைகளும், மரியாதைகளும் நம்மை தேடி வரும் என்பதற்கு சான்றாக காந்தி படத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி அவர்களுக்கு ஆஸ்கர் விருது தேடி வந்தது.

    மேலும் துப்பாக்கி, வன்முறை என்று தன் அனைத்து படத்திலும் இரத்தம் சொட்ட சொட்ட சண்டை போடும் விஜய்காந்த் கூட காந்தியடிகளின் கொள்கை மீது கொண்ட நம்பிக்கையால் ‘இந்தியாவின் அணு ஆயுதம் வாங்கிய காசில், அரிசி வாங்கியிருந்தால் பல ஏழைகளில் வயிற்று பசியை போக்கியிருக்கலாம்’ என்று அவரும் அன்பில் வலியை உணர்ந்துள்ளார்.

    அதே போல் திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் அவர்கள் கூட, ஞானப்பழம் என்ற படத்தில் காந்திய கொள்கையை விடாமல் பிடித்து, கடைசி வரை அஹிம்சையுடன் போராடி, தப்பு செய்தது தன் சொந்த தந்தையாக இருந்தாலும் மன்னிக்க கூடாது என்று அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்து தேசத்தந்தை வழியில் நின்றவர்.

    இதை தொடர்ந்து ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் காந்தியின் பெருமையை பற்றி கூறுகிறேன் என்று சொல்லி அதே படத்தில் வரும் விவேக்கை போல் நம்மையும் கதற, கதற தியேட்டரில் இருந்து ஓடவிட்ட படங்களும் உண்டு.

    மகாத்மா இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் அஹிம்சை வாதிகளுக்கு ரோல் மாடலாக திகழ்பவர். உலக தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலாவிற்கு முன்பே நிறவெறியை எதிர்த்து தென் ஆப்ரிக்காவில் போராடியவர் காந்தியடிகள்.

    இப்படி இந்தியா என் நாடு என்று குறுகிய வட்டத்தில் இல்லாமல் உலகம் முழுவதும் அன்பு என்று சொல் பரந்து விரிய வேண்டும் என்று நினைத்த மகாத்மாவின் பிறந்தாநாளான இன்று அவரை நாம் நினைவு கூர்வோம். அதே சமயத்தில் உலகில் வன்முறை நீங்கி எல்லோரிடத்திலும் அன்புடன் பழகுவோம் என்று இன்நாளில் உறுதி மொழி எடுப்போம்.

    திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள்

    By: ram On: 18:50
  • Share The Gag
  • நண்பர்கள் யாராவது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தாலே ஐயோ பாவம்
    என்ற ரீதியில்தான் அதனை வாங்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே உள்ளது. திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே காததூரம் ஓடுபவர்கள்தான் இருக்கின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது பழமொழி அதனை போற்றி பாதுகாப்பது அனைவரின் கடமை. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம்.

    சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படுவதாக ஆய்வு தெரியவந்துள்ளது

    திருமணத்தின் அவசியம்

    மனித வாழ்க்கையில் திருமணம் எந்த அளவிற்கு அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருமணத்தின் மூலம் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படுவது போல மனோரீதியாகவும் பல நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

    WHO-வின் மனநலப் பிரிவு மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அதில் 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்…

    பறந்துபோகும் மனச்சோர்வு

    இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் உள்ளது. அதிலும் பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

    திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது.

    தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    கமலஹாசனுக்கு பிரதமர் மோடியிடமிருந்து வந்த சுவாரசிய அழைப்பு!

    By: ram On: 18:20
  • Share The Gag
  • அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு இந்தியா திரும்பிய மோடி, டில்லியில் கிளீன் இந்தியா எனும், நாடு முழுவதையும் தூய்மைப்படுத்தும் திட்டத்தை அதாவது கிளீன் இந்தியா திட்டத்தை துவக்கி வைத்தார்.

    இதில் பல முக்கிய பிரமுகர்கள் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு என்று அழைப்பு விடுத்தார் .

    அவர் விடுத்த அழைப்பு லிஸ்டில் நம்ம கமல்ஹாசன் முக்கிய பங்கு வகுக்கிறார்,மற்றும் சல்மான் கான், ப்ரியங்கா சோப்ரா, சச்சின் டெண்டுலகர் என்ற பிரபலங்குளும் இணைய உள்ளதகவல் அடிபடுகிறது .

    கமல்ஹாசன் மோடியின் அழைப்பு ஏற்பாரா என்றால் ஏற்கனவே நம்மவர் படத்தில்,''சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பூமிதான்...'' என்ற பாடலை பாடியபடி நடித்துள்ளார் கமல்ஹாசன், எனவே அவரின் பதில் என்னவாக இருக்கும் என்று கேட்க ஆவலாக உள்ளனர் கமல் ரசிகர்கள்.

    Wi-Fi (வை-ஃபை) - பற்றி ஓர் அதிர்ச்சி தகவல்!

    By: ram On: 17:41
  • Share The Gag
  •  லேப்டாப் (மடிக்கணனி)களில் Wi-Fi (வை-ஃபை) மூலம் இன்டர்நெட்டினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

    இவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் (மடிக்கணனி)களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

    இக்கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ்வாராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் செல்ஃபோன்கள் (கையடக்கத்தொலைபேசி) மற்றும் லேப்டாப் (மடிக்கணனி) ஊடாகவும் Wi-Fi (வை-ஃபை) உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

    Wi-Fi (வை-ஃபை) இல்லாமல் லேப்டாப் (மடிக்கணனி)யை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் Wi-Fi (வை-ஃபை)யை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தவிர லேப்டாப் (மடிக்கணனி)களின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

    இதேவேளை லேப்டாப் (மடிக்கணனி)களை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் Wi-Fi (வை-ஃபை) பற்றி சில தகவல்கள்:

    WI -FI  விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்.

    NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம் உருவாக்கப்பட்டன WIRELESS FIDELITY என்பதாகும். WI–FI யின் தந்தை என அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார்.  இவர் IEEE802.11b மற்றும் 802.11aஎன்பதற்கு கீழ் இதை ஆரம்பித்தார். WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK)என்பதற்கு உரியதாகும்.

    மூழ்கிய உலகம் கண்டுபிடிப்பு

    By: ram On: 17:25
  • Share The Gag
  • காட்லாந்தின் வடக்குக் கரையருகே வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஆ..ஆ...ஆ ...ழத்தில் வீழ்படிவாய் பாரிய நிலப்பரப்பு இருப்பதை புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் பண்டைய உலகமாய் இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்தளித்துள்ளனர்.

    சுமார் 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இப்பாரிய நிலப்பரப்பில் நதிகளும் - முன்பு மலைகளாக இருந்தவற்றின் மிச்சங்களாய் - நில உச்சங்களும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றனவாம். அவை ஒரு கடற்கரை நாட்டின் வரைபடம் போன்று காட்சியளிப்பதாகவும், இந்தப் படிவுகள் கடற்படுக்கையின் கீ...ழே இரண்டு கி.மீ தொலைவில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் நில ஆய்வியல் மூத்த அறிஞர் நிக்கி வைய்ட் தெரிவித்துள்ளார்.

    மேம்படுத்தப்பட்ட எதிரொலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த ஆய்வின் மூலம் சுமார் 10,000 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இப்பாரிய நிலப்பரப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


    கத்தி படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? - எக்ஸ்ச்ளுசிவே செய்தி

    By: ram On: 16:54
  • Share The Gag
  • வருகிற தீபாவளிக்கு கத்தி படத்தை வெளியிட பட குழு இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறது .

    தற்போது வந்த தகவல் படி நேற்றைய தினம் கத்தி படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து புசிணிக்கை உடைக்க பட்டு விட்டது. கடந்த வாரம் முழுவது செல்பி பிள்ள படலை மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள் .

    இந்த நேரத்திலிருந்து கத்தி படத்தின் ட்ரைலர் எந்த நேரத்திலும் ரிலீஸ் ஆகலாம் என்று நமபகதக்க தகவல் கிடைத்தது .

    யான் - திரைவிமர்சனம் - விரைவில் மூட்டையைக் கட்டிவிடும்...!

    By: ram On: 14:28
  • Share The Gag

  • பாட்டியோட வருமானத்தில காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கிற படித்த வேலையில்லா பட்டதாரி சந்த்ரு. ஏடிஎம்மில் சந்திக்கும் ஸ்ரீலா மீது பார்த்த உடனேயே காதல் வருகிறது. அவர் பின்னாலேயே சுற்றி ஒரு வழியாக அவரது மனத்தையும் கவர்கிறார். ஸ்ரீலாவின் அப்பாவை சந்திக்க வரச் சொல்கிறார்கள். “ஏம்பா… நீ என்ன ஒரு வேலையும் பார்க்காம பாட்டியோட சம்பாத்தியத்தில உட்கார்ந்து சாப்பிடுறியா…?” என்று ஸ்ரீலாவின் அப்பா கேட்டுவிட, சந்த்ருவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வருகிறது. “யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசின… நான் படிச்ச படிப்புக்கு வேலை தேடிட்டு வந்து நிற்கிறேன் பாரு…” என்று ஆவேசமாக சவடால்… சாரி… சவால் விட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். வேலையை தேடுறாரு… தேடுறாரு… ஆனா ஒரு பயலும் வேலை கொடுக்க மாட்டேங்கிறான்… சரி இங்கே இப்படியே இருந்தா சரிவராதுன்னு முடிவு பண்ற சந்த்ரு, வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புற ஏஜென்ட் மூலமா பலிஸிஸ்தான் போகிறார். அங்க போய் இறங்கினா… போலீஸ் சந்த்ருவை கைது பண்றாங்க… அவர்களிடம் இருந்து தப்பித்தாரா சந்த்ரு என்பது மீதி கதை.

    மும்பையில் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொல்வதாக ஆரம்பிக்கிறது படம். அந்த நேரத்தில் அங்கு உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் ஸ்ரீலாவை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் செல்கிறார் சந்த்ரு. இந்த முதல் சந்திப்பு அவர் மீது காதலை வர வைக்கிறது. இதனால் ஸ்ரீலாவை கவரும் நோக்கில் ஒவ்வொரு செயலையும் செய்கிறார் சந்த்ரு. இவையெல்லாமே டெம்ப்ளேட்டான தமிழ் சினிமா காட்சிகள். அதுவும் ஸ்ரீலா தனது முகவரி விசிட்டிங் கார்டை சந்த்ருவிடம் கொடுப்பதும் அதை அவர் தவறவிடுவதும் அதைப் பிடிக்க கார்டு பின்னாலயே ஓடிப் போவதும்… ஒரு விசிட்டிங் கார்டை  கதாநாயகன் கைப்பற்ற தயாரிப்பாளர் எத்தனை லட்சங்களை செலவு செய்தாரோ…

    ஜீவா துளசி பின்னாலேயே அலைவதிலேயே ஒரு மணி நேரம் ஓடிப் போகிறது. அதன் பிறகு அப்பா நாசரை அவர் சந்திக்கப் போக, அவர் ஜீவாவுக்கு வேலை இல்லாதது பற்றி பேச அதற்கு உணர்ச்சி வசப்படுகிறார் ஜீவா. உடனே கோபித்துக் கொண்டு வெளிநாடு செல்கிறார். அங்கு காவல்துறையினர் அவரை கைது செய்கிறார்கள். முதல் பாதி இப்படி என்றால், இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் செம த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஓரளவு த்ரில்லான காட்சிகளாக நகருகிறது.

    மும்பையில் நடக்கும் கதை, பெலிக்ஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் என சாதாரண ரசிகர்களை விட்டு வெகு தூரத்தில் நடப்பதாக இருக்கிறது படத்தின் கதை. ரசிகர்களை இம்ப்ரஸ் பண்ணும் விதத்தில் பெரும்பாலான காட்சிகள் இல்லாதது கூட ஒரு குறைதான். இதுவே ரசிகனுக்கும் படத்திற்குமான தூரத்தை அதிகப்படுத்திவிடுகிறது. பாலை வனத்தில் எல்லைப் பகுதியில் முள்வேலி அமைத்து பார்டர் என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் காட்சியில் வெறும் ஆங்கிலம் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் எழுதியிருந்தால் அந்த சீரியஸ் காட்சியில் தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரிக்கும் சிரிப்பை குறைத்திருக்கலாம்.

    தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!! எச்சரிக்கை...?

    By: ram On: 14:16
  • Share The Gag
  • தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!



    நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

    இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .


    அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

    கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .


    இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .

    அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

    குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .

    மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

    இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .


    ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள் .

    நான் சவாலை விரும்புகிறேன் - ஹ்ருத்திக் ரோஷன்!

    By: ram On: 13:48
  • Share The Gag
  • ' நான் எப்பொழுதும் சவாலை விரும்புகிறவன். அந்த வகையில் எனக்கு 'Bang Bang ' சரியான படம் என கூறலாம். ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை அம்சங்களும் இதில்  இருக்கிறது.’ என்கிறார் ஹ்ருத்திக் ரோஷன்.

    இப்படத்தின் சண்டைக்காட்சிகள் , நான் இதுவரை செய்யாதது. நான் மட்டுமல்ல எந்த ஹீரோவும் செய்ய வில்லை என கூறலாம்.

                       உயரமான மாடியின் மேல்இருந்து விழும் போதும்,சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டும் போதும், F -1 மோட்டார் கார் ஓட்டும் போதும், வாட்டர் ஸ்கையிங் எனப்படும் தண்ணீரில் ஈடுபடும் சாகசத்திலும் சரி, அல்லது ஃப்ளை போர்டு வைத்து செய்த உயிருக்கு உத்திரவாதமில்லாத சண்டை க்காட்சியிலும் சரி எனக்கு உதவிய குழுவினரை மறக்கவே முடியாது .

    இப்படத்தில் நான் ஆடிய மைக்கேல் ஜாக்சன் நடனம் இப்போதே மிகவும் பிரபலம்.

    'Bang Bang ' டைட்டில் இசை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.அந்த இசைக்கு நான் கதாநாயகி கத்ரீனா கைஃப் உடன் ஆடிய நடனம் கூட பெரிய அளவில் பேசப்படும் .

    கத்ரீன மிக திறமையாக நடனம் ஆடக்கூடியவர். அவருடன் ஈடு கொடுத்து ஆடுவது மிகவும் சவாலான ஒன்று.

    நானும் கத்ரீனாவும் ராசியான ஜோடி என்று கூறுவது உண்மையாகவே இருந்தாலும், அவர் மிக மிக கடுமையான உழைப்பாளி.தொழில் பக்தி உடையவர்.

     எங்கள் ஜோடிப் பொருத்தம் ’பேங் பேங்’ படத்தின் வெற்றி மூலம் மேலும் மெருகேறும் ' என்கிறார் ஹ்ருத்திக் ரோஷன்.

    சமைய‌ல் ரு‌சி‌க்க ‌சில கு‌றி‌ப்புக‌ள்

    By: ram On: 13:11
  • Share The Gag
  • வெங்காய சூப்பில் சிறிதளவு சீஸை சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும்.

    சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வென்னீரில் பிசையவும். இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதுமானது.

    சாம்பார் பொடியை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு விட்டால் சில நாட்கள் ஆன உடனேயே குணமும் மணமும் குறைந்து விடும். அதனால் கொஞ்சமாக அரைத்து வைத்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவேண்டும். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

    கொத்த மல்லி இலைகளை நன்றாக ஆய்ந்து சுத்தமாக அலம்பி காய வைத்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

    மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது

    மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.

    மென்மையான காய்கறிகளை தோலுடன் சமைக்கவும். காய்கறியை நெய்யில் வறுக்க வேண்டுமென்றால் காரம் அதிகமாக சேர்க்க வேண்டாம். போதுமான அளவுக்கு வறுத்தால் நலம். ஏனெனில் சத்துகள் வற்றாமல் இருக்கும்.

    கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கிய‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டு கழுவ வே‌ண்டா‌ம். நறு‌க்குவத‌ற்கு மு‌ன்பே கழு‌வி ‌விடுவது ச‌த்து‌க்களை பாதுகா‌க்க உதவு‌ம்.

    பொதுவாக கா‌‌ய்க‌றிகளை ஆ‌வி‌யி‌ல் அதாவது த‌ட்டு‌ப் போ‌ட்டு மூடி வை‌த்து வேக வை‌ப்பது ந‌ல்லது.

    அரை வே‌க்காடாக கா‌ய்‌க‌றிகளை வேக வை‌த்து சா‌ப்‌பிடுவது‌ம் ‌சிற‌ந்தது. க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் போ‌ன்றவ‌ற்றை முழுமையாக வேக வை‌த்து சா‌ப்‌பிடவு‌ம்.

    மு‌ந்தைய நா‌ள் இரவே கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்வது ச‌த்து‌க்களை வெ‌ளியே‌ற்‌றி‌விடு‌ம். அ‌ப்படி நறு‌க்குவதாக இரு‌ந்தா‌ல் பா‌லி‌தீ‌ன் கவ‌ரி‌ல் இறு‌க்கமாக மூடி வை‌க்கவு‌ம்

    ரிலீஸாகும் முதல் நாள் அனைவருக்கும் இலவச காட்சி!!!

    By: ram On: 11:51
  • Share The Gag
  • இன்னைக்கு தேதியில் இதெல்லாம் நடக்குமா என்ன..? போய் ஆகவேண்டிய வேலைகளை பாருங்கள் என அவ்வளவு சுலபமாக இந்த விஷயத்தை ஒதுக்கிவிடமுடியாது. காரணம் இது பவர்ஸ்டார் நடித்துள்ள படம் அல்ல. சுப்ரீம்ஸ்டார் சரத்குமார் நடித்துள்ள படம். அதுதான் ‘நீ நான் நிழல்’. இந்தப்படம் ரிலீசாகும் முதல் நாள் மட்டும் அனைவருக்கும், குறிப்பாக டீனேஜ் பருவத்தில் இருக்கும் மாணவர்கள் என்பதற்காகவே இலவச டிக்கெட் தர முடிவு செய்திருக்கிறார்கள்.

    காரணம் இன்றைய இளம் பருவத்தினரிடையே இணையதளங்கள் மற்றும் சோஷியல் நெட் ஒர்க்குகள் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன.. அது அவர்களுடன் சேர்ந்து அவர்களது பெற்றோரையும் எந்த அளவு பாதிக்கிறது என பொட்டில் அடித்தாற்போல சொல்லும் வகையில் கதை இருக்கிறதாம்.
    அதாவது நம்மை பின் தொடரும் நிழல் கூட நமக்கு ஆபத்தை உருவாக்கும் என்பதால், மாணவர்கள் உட்பட பெற்றோர்களும் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ‘இலவச காட்சி’ திட்டமாம். இந்தப்படத்தின்இயக்குனர் ஜான் ராபின்சன், ‘சொர்ணமுகி’,

    தொட்டாச்சிணுங்கி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கே.எஸ்.அதியமானிடம் இணை இயக்குனராக வேலை பார்த்தவர்.
    இந்தப்படத்தில், சமூகத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அன்வர் அலி என்கிற மலேசியன் போலீஸ் ஆபிசராக நடித்துள்ளார் சரத்குமார். இளம் ஜோடிகளாக அர்ஜூன் லால் – இஷிதா நடிக்க முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மனோஜ் கே..ஜெயன். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவருமே கேரளாவை சேர்ந்தவர்கள். முக்கால்வாசிக்கு மேல் மலேசியாவில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் இவர்கள் எல்லோரும் நம்பியிருப்பது தமிழ் சினிமா மார்க்கெட்டைத்தான்.

    அதனால் தான் படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாரித்துள்ளார்களாம். அதனால் தான் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நேற்று முன் தினம் சென்னையிலே நடத்தியுள்ளார்கள்… இந்த விழாவில்இயக்குனர் கே.எஸ்.அதியமான், விதார்த், பாடலாசிரியர் சினேகன் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    குறட்டை (Snore) – இருக்கா!! என்ன செய்வது?

    By: ram On: 11:33
  • Share The Gag
  • நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

    ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

    இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

    காரணங்கள்:

    நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.

    முழு தூக்கம் இருக்காது:

    யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

    உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தவிர்க்க வேண்டியவை:

    சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

    சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    3 வகை நோயாளிகள்:

    குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

    1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

    2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

    3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

    மாரடைப்பு அபாயம்:

    7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

    ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

    கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

    ஆபத்தான நோய்:

    டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

    கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

    ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

    குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

    இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

    இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

    குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

    உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

    குறட்டையை குறைக்க:

    ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

    குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

    ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

    யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

    சிகிச்சை முறை:

    குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.

    அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.

    முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.

    இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.

    அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.

    ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

    உலக வரலாற்றில் முதல் முறையாக அஞ்சான்

    By: ram On: 09:49
  • Share The Gag
  • லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி ஏகப்பட்ட எதிர்பார்புடன் வெளியான அஞ்சான் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளித்தள்ளியது. இந்த படம் வரும் அக்டோபர் 3ம் தேதி உலக வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஹீரோ நடித்த படம் 50 நாட்கள் கூட ஆகாத திரைப்படத்தை சின்னத்திரையில் ஒளிபரப்புகின்றனர்.

    அஞ்சான் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ள சன் டிவி நிறுவனம் விஜயதசமி அன்று ஒளிபரப்புகிறது, இதனால் அன்று மக்களின் முழுகவனமும் சன் டிவியின் பக்கம் தான் இருக்கும் என்பதால் அன்று சன் டிவியின் டி.ஆர்.பி ரேட் எகிறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    மொத்தத்தில் இந்த விஜயதசமியில் அஞ்சான் உங்கள் வீடுகளில்…இதைப் பற்றிய உங்கள் கருத்துகளை கிழே பதிவு செய்யவும்…

    எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??

    By: ram On: 09:30
  • Share The Gag
  • எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??

    * பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு..
    * முகம் பார்த்து சிரிக்கையில் அழகு...


    * கை பிடித்து நடக்கையில் அழகு...

    * தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு...

    * ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு...

    * தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு...

    * தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு...

    * கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு...

    * என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு...

    * என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு...
    அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு தான்.

    ‘மெட்ராஸ்’, முழுப் படமாகப் பார்க்கும்போது அந்த அளவுக்கு வலிமையாக வெளிப்படவில்லை..திரைவிமர்சனம்!

    By: ram On: 09:14
  • Share The Gag
  •  வடசென்னையில் இருக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெரிய சுவர். அதில் விளம்பரம் எழுத இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியும், அதனால் நடக்கும் கொலைகளும்தான் ‘மெட்ராஸ்’ படத்தின் மையம். இதனூடாக வடசென்னை மக்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறார் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பா. ரஞ்சித்.

    காளி (கார்த்தி), அன்பு (கலையரசன்) இருவரும் நண்பர்கள். காளி படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அன்பு கட்சி ஒன்றில் சிறு பொறுப்பில் இருக்கிறான். அந்தப் பகுதியின் செயலாளர் மாரியின் நம்பிக்கையைப் பெற்றவன் அவன். விளம்பரம் எழுதும் சுவரை வைத்து அப்பகுதி மக்களிடம் வன்முறையை தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறான் மாரி. இரு கோஷ்டிக்கும் இடையில் அடிக்கடி சச்சரவுகள் வெடிக்கின்றன.

    இதற்கிடையில், நாயகன் காளியின் வாழ்க்கை, அன்பான அம்மா, அப்பா, பாட்டி, நண்பர்கள் என உற்சாகமாகப் போகிறது. அவனுக்குப் பார்க்கும் பெண்களை எல்லாம் அம்மா தட்டிக் கழிக்க, நண்பர்கள் ஆலோசனையின் பேரில் காதலிக்க முடிவெடுக்கிறான். அப்போது அவன் கண்ணில்படுகிறார் கலையரசி (புதுமுக நாயகி கேத்ரின் தெரஸா). இவர்கள் இருவருக்கும் இடையே உருவாகும் காதல் அழகு!

    தேர்தல் வருகிறது. சுவரைக் கைப்பற்றும் போட்டி தீவிரமடைகிறது. சுவருக்கான போட்டி என்பது அடிப்படையில் அதிகாரத்தைக் கைப் பற்றும் போட்டி. இந்தப் போட்டியில் கொலைகள் நடக்கின்றன. துரோகங்கள் அரங்கேறுகின்றன.

    வடசென்னையையே கதாபாத்திரமாக ஆக்கி அங்குள்ள வாழ்க்கையின் மகிழ்ச்சி யையும் துக்கங்களையும் நன்கு பதிவு செய் துள்ளது இந்த படம். சுவரை மையமாக வைத்து ரஞ்சித்தின் குரல், கதை சொல்லத் தொடங்கும்போதே திரைக்கதையின் மீது ஈர்ப்பு உண்டாகிறது. அதற்கு அடுத்த காட்சிகளில் காதல், அரட்டை எனப் போகிறது. ஆனாலும் ரசிக்க வைக்கிறது. அன்பு இறந்த பிறகு திரைக்கதையில் தொய்வு. அதன் பிறகு நடப்பது எல்லாம் ஊகிக்கக்கூடியவைதான்.

    யதார்த்தமான களம், யதார்த்தமான கதை. இருந்தாலும் படம் பின் பாதியில் ஹீரோயிஸக் கதையாக மாறுகிறது. பலரைக் கொன்று போடும் ஹீரோ, கடைசியில் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவதெல்லாம் ஓவர். அன்புவின் பின்னணி குறித்த சித்தரிப்பில் தெளிவு இல்லை.

    இடைவேளை வரை திரைக்கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. சண்டைக் காட்சிகள் படத்துக்குப் பலம்!

    அன்புக்கும் அவன் மனைவிக்குமான அன்யோன்யம் அற்புதம்! ஒண்டுக்குடித்தன வீட்டில் பல இடையூறுகளுக்கு இடையில் நடக்கும் தாம்பத்யத்தையும் காளி அன்பு இடையிலான நட்பையும் மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் ரஞ்சித். யாருக்கும் தெரியாமல் வடசென்னையில் ஒரு வீட்டுக்குள் நுழைந்து படம்பிடித்ததுபோல இருக்கிறது.

    வடசென்னை இளைஞனாக கார்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார். அரட்டை, காதல், துயரம், ரவுத்திரம் எனப் பலவித உணர்ச்சிகளையும் பொருத்தமான உடல் மொழியுடன் நன்கு வெளிப்படுத்துகிறார்.

    கேத்ரின் இயல்பாக நடிக்கிறார். அழகாக இருக்கிறார். ஆனால் அவரது நிறமும், பேச்சும் பின்னணிக்குப் பொருந்தாமல் இருக்கின்றன. வடசென்னைக்குப் பதில் சவுகார்பேட்டை பெண்ணாகக் காண்பித்திருக்கலாம்.

    வடசென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பல்வேறு கோணங்களில் முரளி காட்சிப்படுத்தியுள்ளார். சென்னை என்றால் வானுயர் கட்டிடங்களைக் காட்டிப் பழகிய சினிமாவுக்கு வெளியே அசலான வடசென்னையைப் படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. வடசென்னையின் தற்போதைய மாற்றங்களும் பதிவாகத் தவறவில்லை.

    பெரும்பாலான நடிகர்கள் புதியவர்கள். சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. மெட்டு, குரல் தேர்வில் வடசென்னையின் மணம் கமழ்கிறது. கானா பாலா பாடும் மரணப் பாடல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. ஆனால் வசன உச்சரிப்பு, திரைக்கதை எனச் சில விஷயங்களில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர்.

    கதையாகக் கருதும்போது பலமாகத் தெரியும் ‘மெட்ராஸ்’, முழுப் படமாகப் பார்க்கும்போது அந்த அளவுக்கு வலிமையாக வெளிப்படவில்லை.

    உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள் . . .

    By: ram On: 09:04
  • Share The Gag


  • குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளைகடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.

    இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவவல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு:-

    குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

    பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.

    இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ‘அம்பேல் ஜூட்’ இப்படி படம் எடுத்தால்.... ரசிகர்கள் ஜூட் ...!

    By: ram On: 02:29
  • Share The Gag
  • வினோ, கமல், ஆண்டனி, லிபின் நால்வரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். சிறுவர் இல்லத்தில் வசித்து வரும் இவர்களுக்கு அங்குள்ள வார்டன் ஒருவரால் பாலியல் தொந்தரவு இருக்கிறது. இதை அந்த இல்லத்தின் மற்றொரு வார்டனான பாண்டு கண்டிக்கிறார்.

    ஆனால், பாண்டுவிடமும் அவன் அடாவடித்தனம் செய்ய, இதைப் பார்த்து ஆத்திரமடைந்த நால்வரும் அவனை கொன்று விடுகின்றனர். பின்னர் நால்வரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    சிறையிலிருந்து வெளிவரும் இவர்களை இன்ஸ்பெக்டரான திவாகர், அவருக்கு தெரிந்த நகைக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார். நகைத் தொழிலுடன், கடத்தல் வேலைகளையும் செய்துவரும் அந்த கடையின் முதலாளி அவருடைய சுயநலத்துக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்கிறார். கடத்தல் வேலைகளை இவர்களை வைத்து முடித்துக் கொள்கிறார்.

    ஒருகட்டத்தில் நண்பர்களில் இருவர் மட்டும் போலீசில் சிக்கிக் கொள்கிறார்கள். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அவர்களை திருடன் என்று பட்டம் கட்டி போலீசில் மாட்டி விடுகிறார் நகை வியாபாரி. போலீசில் இருந்து தப்பிக்கும் இருவரும் நகை வியாபாரியை கொல்ல திட்டமிடுகின்றனர். இதற்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டரையும் கொல்ல முடிவெடுக்கின்றனர்.

    இதற்கிடையில், நகை வியாபாரியின் மகளான நாயகியை காதலிக்கிறான் நண்பர்களில் ஒருவன். ஆனால், அவனது காதலை அவள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள்.

    நாயகியின் அண்ணன், தன்னைவிட வசதி குறைவான பெண்ணை காதலித்ததால் அவனது காதலை எதிர்க்கிறார் தந்தை. இதனால், அவளது அண்ணன் தற்கொலை செய்துகொள்கிறான். ஆனால், ஒருகட்டத்தில் அவன் அண்ணன் தற்கொலை செய்துகொள்ளவில்லை, பணத்துக்காக தன்னை காதலிப்பவன்தான் அவனை கொன்றான் என்பது நாயகிக்கு தெரிய வருகிறது.

    இறுதியில் சுயநலத்திற்காக பழிவாங்கப்பட்ட நண்பர்கள், தங்களின் வாழ்க்கையை கெடுத்தவர்களை பழி தீர்த்தனரா? தன்னை காதலித்தவன் ஒரு கொலைகாரன் என்பதை உணர்ந்த நாயகி என்ன முடிவெடுத்தாள்? என்பதே மீதிக்கதை.

    நாயகர்களாக வினோ, கமல், ஆண்டனி, லிபின் நால்வரும் நடிப்பை கொண்டுவர ரொம்பவே முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், நடிப்புதான் வரவில்லை. அனைவரும் மிகையான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    நாயகி அஷ்மிதாவுக்கு நாயகிக்குண்டான தோற்றம் இல்லை. இவரது முகத்தில் முதிர்ச்சி மேலோங்கியிருக்கிறது. படத்திலும் அழுத்தமான நடிப்பு இல்லை.

    இன்ஸ்பெக்டராக வருபவர் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். நகை வியாபாரியாக வருபவர் முகத்தில் வில்லத்தனம் காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், நமக்கோ இவரைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

    இயக்குனர் டி.எஸ்.திவாகர், படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிளாஷ்பேக் காட்சிகள் வைத்து ரொம்பவும் போரடிக்க வைத்திருக்கிறார். கதையின் திருப்பத்திற்காக ஏகப்பட்ட டுவிஸ்டுகளை வைத்து குழப்பியிருக்கிறார். நிறைய காட்சிகள் நீளமாக வருவதால் ரசிகர்களால் இருக்கையில் அமர முடியவில்லை.

    இவரே படத்திற்கு பாடல்களையும், இசையையும் அமைத்திருக்கிறார். அதில் 2 பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுத்த மோசம். ஆனந்த் மேனனின் ஒளிப்பதிவும் மெச்சும்படியாக இல்லை.

    மொத்தத்தில் ‘அம்பேல் ஜூட்’ ரசிகர்கள் ஜூட்

    காம உணர்வும் யோகமும்!

    By: ram On: 02:17
  • Share The Gag

  • புகைப் பிடித்தல், மது அருந்துதல் தவிர்த்து இன்னுமோர் அபாயமிருக்கிறது, அது காம விருப்பு சம்பந்தமானது. யோகம் தனது தூய்மையாக்கும் வேலையைச் செய்யும் போது உன்னிடம் பதுங்கிக் கிடக்கும் வேகங்களையும் ஆசைகளையும் மேலுக்கு எறிகின்றது. நீ விஷயங்களை ஒளிக்காமலும், ஒதுக்கிவைக்காமலும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ அவைகளைச் சந்தித்து, வென்று, அவைகளுக்குப் புது உருவம் தரவேண்டும்.

    யோகத்தின் முதற்பயன் என்னவெனில் மனத்தின் ஆதிக்கம் தளர்ந்துவிடுகிறது. உள்ளே உறங்கிக் கிடக்கும் வேட்கைகள் திடீரென விடுதலையடைந்து குப்பென்று கிளம்பி ஆதாரத்தை ஆக்கிரமிக்கின்றன. மனத்தின் ஆதிக்கம் இருந்த இடத்தில் இறைவனின் ஆட்சி ஸ்தாபிக்கப்படாத வரையில் ஓர் இடைநிலை ஏற்படுகிறது. அதுசமயம் உனது நேர்மையும் சரணமும் சோதனைக்குட்படும்.

    காம உணர்ச்சி போகன்ற வேகங்களின் பலமானது சாதாரணமாக ஜனங்கள் அவைகளின் மீது அதிகமாகக் கவனம் செலுத்துவதிலிருந்தே வருகின்றது. அவர்கள் அவைகளை மிக அழுத்தமாக மறுத்து பலவந்தமாகக் கட்டுப்படுத்தவும் உள்ளே அமுக்கிவிடவும் முயல்கின்றனர். ஆனால் ஒன்றை நினைத்துக்கொண்டே, "அது எனக்கு வேண்டாம், அது எனக்கு வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டு போனால் நீ அதற்குப் பந்தப்பட்டுப் போகிறாய். நீ செய்ய வேண்டியது என்னவெனில், அதை உன்னிடமிருநூது சிலக்கி, அதனுடைய உறவு வைத்துக்கொள்வதை நிறுத்தி, கூடுமானவரை அதைக் கவனிக்காமல் இருந்துவிட வேண்டும். நீ அதை நினைக்க நேரிட்டாலும் அசட்டையாயும் கவலையில்லாமலும் இருந்துவிட வேண்டும்.

    யோகத்தின் நெருக்கத்தினால் மேலே கிளம்பிவரும் வேகங்களும் ஆசைகளும் உனக்கு அந்நியமாயும் புறஉலககைச் சேர்ந்தவையாயும் இருப்பவைபோலக் கருதி அவைகளைப் பற்றற்ற நோக்குடனும் அமைதியுடனும் நீ சந்திக்க வேண்டும். இறைவன் அவற்றை எடுத்துக்கொண்டு உருமாறுதல் செய்யும் பொருட்டு அவற்றை இறைவனுக்கே அர்ப்பணம் செய்துவிட வேண்டும்.

    உன்னை ஒருதரம் இறைவனுக்குத் திறந்துவிட்டு, இறைவனது சக்தியும் உன்னுள்ளே இறங்கிவர ஆரம்பித்தபிறகு நீ பழைய சக்திகளோடு ஒட்டிக்கொண்டிருக்க முயன்றால், தொந்தரவுகளுக்கும், கஷ்டங்களுக்கும் அபாயங்களுக்கும் நீயே வழிதேடிக்கொள்வாய். நீ விழிப்புடனிருந்து, உனது ஆசைகளைத் திருப்தி செய்வதன் பொருட்டு இறைவனை ஒரு மறைப்பாக உபயோகித்துக் கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    புதிய தோற்றத்தில் வருகிறார் நம்ம ஐஸ்வர்யா ராய்...!

    By: ram On: 02:08
  • Share The Gag
  • தமிழில் ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இந்தியிலும் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

    அதன்பிறகு ஐஸ்வர்யா ராய், கர்ப்பம், பிரசவம் குழந்தை வளர்ப்பு என குடும்ப வேலைகளில் மூழ்கி இருந்ததால் சினிமாவுக்கு தற்காலிக முழுக்க போட்டு இருந்தார். உடம்பும் வெளுத்தது.

    தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். சஞ்சய் குப்தா இயக்கும் இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இதற்காக கடும் உடற்பயிற்சிகள் எடுத்து எடையை குறைத்துக் கொண்டு இருக்கிறார்.

    கிராம்பு மருத்துவ குணங்கள்………!!

    By: ram On: 02:00
  • Share The Gag
  • எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

    1) கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

    2) உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

    3) ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

    4) கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

    5) நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

    6) சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

    7) கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

    8) முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

    9) கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

    10) 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

    11) தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

    12) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

    13) கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

    14) சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.