Thursday 26 December 2013

இனி எஸ் எம் எஸ் -கூட அதிகாரப்பூர்வ செய்தி! மத்திய அரசு முடிவு?

By: ram On: 00:58
  • Share The Gag



  • இனி இந்தியாவில் பணப்பரிமாற்றம், பதிவு செய்வது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் குறுஞ் செய்தியையே ஆதாரமாக ஏற்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.


    பொதுமக்கள் கொடுத்த 241 மனுக்களை, 100 துறைகளுக்கு அனுப்பி தங்களின் குறுஞ்செய்தி சோதனையை இன்று அதிகாரிகள் மேற்கொண்டனர். பொதுமக்கள் தங்கள் மனுக்களில் தகவல் அறியும் உரிமை சட்டம், சுகாதாரம், ஆதார், கல்வி பற்றிய விவரங்களை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்த “மொபைல் சேவா” திட்டத்தை அறிமுகப்படுத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், 90 ஆயிரம் மொபைல் சந்தாதாரர்கள் உள்ள நிலையில் ரெயில்வே நிர்வாகத்தை போன்று பரிமாற்றம் தொடர்பான விவரங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை அதிகாரப்பூர்வ ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.


    ஆறு மாதங்களுக்குள் அரசின் அனைத்து துறைகளிலும் எச்.டி.எம்.எல் 5 என்ற பயன்பாடு நிலைநிறுத்தப்படும். அப்போது அனைத்து மொபைல் சந்தாதாரர்களுக்கும் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய வழி ஏற்படும் என தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    கர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!

    By: ram On: 00:51
  • Share The Gag



  • கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச்சிதைவு ஏற்படும் என்று தெரியும்.

    ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒருசில காய்கறிகளின் மூலமும் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் இந்த காலத்தில் தான் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

    எனவே இக்காலத்தில் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடனே வேலையை காண்பித்துவிடும். அதற்காக அதனை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. ஆனால் மிகவும் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

    இதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் தான். ஏனென்றால் வைட்டமின்கள் அதிகமாக இருந்தால், இரத்தக்கசிவு ஏற்படுவதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும். எனவே கீழ்கூறிய சில காய்கறிகளை பிரசவத்திற்கு முன் தவிர்ப்பது நல்லது.

    • கத்திரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

    • கர்ப்பிணிகளுக்கு ஒரு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான். ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள் இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது.

    பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும்.

    • கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    • கர்ப்பமாக இருக்கும் போது காலிஃப்ளவர் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின் கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் வைட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.

    • குடமிளகாயின் சுவை அனைவரையும் ஈர்க்கும். ஆனால் இதனை சாப்பிட்டால், கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். ஆகவே பிரசவம் முடியும் வரை இதனை சாப்பிடுவதை சற்று தவிர்க்கலாமே!

    இன்று 9-ம் ஆண்டு சுனாமி நினைவு நாள்:

    By: ram On: 00:48
  • Share The Gag



  • ஒரு பூகம்பமும் அதனைத்தொடர்ந்து நேரிட்ட ஆழிப்பேரலைகளும் இன்னமும் எவர் மனதில் இருந்தும் நீங்கியிருக்கப்போவதில்லை..

    சுனாமி என்ற பெயரின் வலி படர்ந்த வலிமையை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உணர்த்திய அந்த நாள் டிசம்பர் 26.. இந்நாளின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள் (26-12-2013) வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

    2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று உலகையே உலுக்கிய மறக்க முடியாத சுனாமி வந்து போன நாள். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எழுந்த சுனாமி ஆழிப் பேரலைகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை என இந்தியக் கடலோர நாடுகளை சுழற்றிப் போட்டது. லட்சக்கணக்கானோர் இந்த சுனாமி கோர தாண்டவத்திற்கு உயிரிழந்தனர். தமிழகம் இந்த ஆழிப் பேரலைத் தாக்குதலில் பேரிழப்பை சந்தித்தது. நாகப்பட்டனம், கடலூர், கன்னியாகுமரி, சென்னை என தமிழக கடலோர மாவட்டங்கள் கடும் பாதி்ப்பையும், உயிரிழப்பையும் சந்தித்தன. ஆனால் நாகையும், கடலூரும்தான் மிகப் பெரிய அளவில் உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்களாகும்.


    சுனாமி பேரழிவில் மிகுந்த பாதிப்படைந்து அதிர்ச்சியில் இருந்த மீனவ மக்கள் தற்போது மெல்ல, மெல்ல பழைய நிலைக்கு திரும்பிஉள்ளனர். இருப்பினும் தங்களது குடும்பத்தினரை இழந்ததை மறக்க முடியாமல் நினைவு தினத்தன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், பிரார்த்தனையில் ஈடுபடுவதை கண்டு வேதனையளிக்கிறது. மேலும் சுனாமி பேரலையின் பயம் மீனவர்கள் மத்தியில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

    குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க இயற்க்கை மருத்துவம்:-

    By: ram On: 00:43
  • Share The Gag



  • குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.

    சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள்
     உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக்
     கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்
     வெளியேறும்.

    கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக்
     கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்
     வெளியேறும்.

    கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும்
     வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல்
     பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின்
     வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.

    வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய்
     அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில்
     சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்

    குழந்தைகளுக்கு ஏற்படும் காதுவலி பற்றிய தகவல்கள்:-

    By: ram On: 00:29
  • Share The Gag



  • ஜலதோஷம் (சளி), காய்ச்சலுக்கு அடுத்து குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது காது வலி, பொதுவாக, பிறந்து ஆறு முதல் இருபது வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்தக் காது வலி அதிக அளவில் வருகிறது.

    இந்தக் காது வலியை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் மீண்டும் வலி ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். மேலும், காதில் சீழ் வடிதல், காது கேளாமல் போதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால், குழந்தைகளின் பேச்சுத் திறன் கூட பாதிக்கப்படும். சில சமயங்களில், காது வலி தானாகவே சரியாகிவிடும்.

    காரணங்கள்


     குழந்தைகளுக்கு ஜலதோஷம் (சளி) பிடிக்கும்போது, தொண்டை முழுவதும் புண்ணாகி வீங்கிவிடும். அதனால், தொண்டையில் இருந்து காது வரை செல்லும் யூஸ்டேஷியன் குழாயின் ஒரு முனையானது (தொண்டையில் இருக்கும் குழாய்) அடைபட்டுவிடும். மேலும், காற்று உறிஞ்சப்பட்டு, காதுப்படலமானது உள்நோக்கி நகருவதால், வலி ஏற்படுகிறது.
    பாதிக்கப்படுபவர்கள்

    * வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஒருமறையாவது காது வலி வந்துவிடும். இரண்டு வயதுக்குப் பிறகு இந்த வலி வருவது குறைந்துவிடும்.
     * பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தான் காது வலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

     * பெற்றோர்கள் காது வலியால் அவதிப்பட்டால், அவர்களுடைய குழந்தைகளுக்கும் காது வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

     * சத்துணவு சாப்பிடாத குழந்தைகள், உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காத குழந்தைகள், சிறிய வீட்டில் நிறைய பேருடன் வசிக்கும் குழந்தைகள், சுற்றுப்புறச் சூழல் மிகவும் மோசமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குக் காது வலி அடிக்கடி ஏற்படும்.

     * பிளவுபட்ட அன்னம், மரபியல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு யூஸ்டேஷியன் குழாய் சரியாக வேலை செய்யாதால் காது வலி வருகிறது.

     * அடிக்கடி ஜலதோஷத்தால் (சளி) பாதிக்கப்படும் குழந்தைகளுக்குக் காது வலி ஏற்படும்.

    அறிகுறிகள்


     காது வலிக்கான அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். காது வலியால் குழந்தைகள் எரிச்சலுடனும், ரியாகத் தூங்க முடியாமலும் அவதிப்படும். குழந்தைகள் சரியாகச் சாப்பிடமாட்டார்கள். அடிக்கடி காதுகளை பிடித்து தேய்த்துக் கொண்டோ, காதுகளை இழுத்துக் கொண்டோ இருப்பார்கள். ஒரு சில குழந்தைகளுக்குக் காயச்சல் இருக்கும். காதில் இருந்து சீழ் வடியலாம். இருமல், சளித் தொல்லை போன்றவை இருக்கும். காது சரியாகக் கேட்காமல் இருக்கும்.

    சிகிச்சை

     பிறந்து ஒரு மாதம்கூட நிறைவடையதாக குழந்தைகளுக்குக் காது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தையாக இருந்தாலும் டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    தவிர்க்கும் முறைகள்

    * குழந்தைகளைக் காது வலி தொல்லையில் இருந்து காப்பாற்ற தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

     * வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வீட்டுக்குள்ளேயே சிகரெட், பீடி பிடிக்கக்கூடாது.

     * குழந்தைகளுக்குச் சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும்.

     * ஜலதோஷம்(சளி), இருமல் இருந்தால் உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

     * வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

     * குழந்தைகளை விரல் சூப்ப விடக்கூடாது.

     * நிமோக்கஸ் , இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்கள் வராமல் இருக்க தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

    பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!

    By: ram On: 00:26
  • Share The Gag
  • உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.

    இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த பீரைப் பற்றிய பல உண்மைகளை, ஆய்வுகள் பல கூறுகின்றன. அவற்றில் பீரை அளவாக அருந்தி வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை 45% வருவதை தவிர்க்கலாம் என்றும், பீர் எலும்புகளை பலப்படுத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போன்று அந்த பீரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    பீர் பிராண்ட்டுகள்


     உலகில் சுமார் 400 வகையான பீர்கள் உள்ளன. இந்த 400 வகையான பீர்களின் சுவையையும் ருசிக்க வேண்டுமெனில், பெல்ஜியம் சென்றால் கிடைக்கும். ஏனெனில் இங்கு அனைத்து வகையான பீர்களும் கிடைக்கும்.

    பீர் ஃபோபியா

     உங்களுக்கு பீர் ஃபோபியா பற்றி தெரியுமா? ஆம், பீர் குடிக்கும் போது, முழுவதும் குடித்தப் பின்னர், அதன் பாட்டிலை காலியாக பார்க்கவே முடியாது. அதனால் பாட்டில் காலியாக காலியாக அடுத்தடுத்த பீரை குடிக்க வேண்டுமென்று தோன்றும். என்ன உங்களுக்கு இந்த பீர் ஃபோபியா இருக்கா?

    உண்மையான பீர்

     பீரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்று தான், அசல் பீரானது சிச்சா என்று அழைக்கப்படும்
     நொதிக்கப்பட்ட நீரில் இருந்து செய்யப்பட்டது என்பதாகும்.

    சளிக்கு சிறந்தது

     சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது 1 டம்ளர் பீர் குடித்தால், பீரில் உள்ள எத்தனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். அதிலும் இந்த பீரை சாப்பிட்டால், 60 சதவீத கிருமிகள் உடலில் இருந்து அழிக்கப்படும்.

    இதய நோய்

     இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சரிசெய்ய நினைத்தால், ஒரு டம்ளர் பீர் சாப்பிட்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். அதிலும் ஒரு பாட்டில் பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிளாஸ்மாவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.

    அழகு

     பீரில் உள்ள மற்றொரு உண்மை என்னவென்றால் பீரை பெண்கள் குடித்து வந்தால், பீரானது அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்க வைக்கும்.

    ஸ்மார்ட்டாக்கும்

     எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்க விரும்பினால், ஒரு டம்ளர் பீர் குடித்தால் ஆகலாம். ஏனெனில் பீர் குடித்தால், புரிந்து கொள்ளும் திறனானது மேம்படுத்தப்பட்டு, ஸ்மார்ட்டான நபராக மாற்றும்.

    ஆற்றல் பானம்

     உடலில போதிய ஆற்றல் இல்லாவிட்டால், அப்போது ஒரு டம்ளர் பீர் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதோடு, ஆற்றலும் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.

    விலை உயர்ந்த பீர்

     மிகவும் விலை உயர்ந்த பீரை குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆம், அங்கு தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பீரான 'Vielle Bon Secours' உள்ளது. அதுவும் லண்டனிலேயே ஒரே ஒரே ஒரு பாரில் மட்டும் தான் விற்கப்படுகிறது.