Wednesday 17 September 2014

Tagged Under:

ஆடி மாதம் எதற்கு ஜோடிகள் ஒன்றுசேரக்கூடாது ?

By: ram On: 23:54
  • Share The Gag
  • தமிழ் - "ஆடி" வந்தால் புது ஜோடிகளை பிரிப்பதேன்? ஆடி மாதம் வந்தாலே புதிதாக கல்யாணமான ஜோடிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும்.வீட்டில் உள்ள பெரியவர்கள் புதுமண ஜோடிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டுக்கு அணுப்பி வைத்துவிடுவார்கள்.இந்த பழக்கம் கால...ம் காலமாக நம் தமிழகத்தில் நடந்து வருகிறது.என்னை பொறுத்த வரையில் இப்பொழுது அது ஒரு சம்ப்ரதாயமே ...ஆனால் அது கடை பிடிக்க பட்டதுக்கான உண்மையான காரணம்/ விளக்கம் அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும் ..

    தெரியாதவர்களுக்கு :-

    ஆடி மாதம் கூடினால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்.சித்திரை மாதம் அதிகம் வெப்பம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் கர்பிணிகளும் பிறக்கும் குழந்தையும் மிகவும் சிரமத்துக்குள்ளாகும்.அந்த நாட்களில் நம் முன்னோர் வாழ்ந்தது பெரும்பாலும் மாட மாளிகைகள் அல்ல ... கூரை வீடுகள் தான் ..அதனால் கோடை வெப்பம் கர்பினிக்கு பிரசவ நேரத்தில் கடும் இன்னலாக அமையும்.

    குழந்தைக்கு சின்னம்மை (Small Pox) போன்ற வெப்ப நோய் எளிதில் தாக்கும்... கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரை சின்னம்மை நம் பிரதேசத்தில் ஒரு மிக பெரிய உயிர் கொல்லி என்பது குறிப்பிட தக்கது
    ஆடி மாதத்தில் தான் பருவமழை தொடங்கும்,தண்ணீர் மூலமாகவும் காற்று மூலமாகவும் நோய்கள் எளிதில் பரவும்.இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நேரிட்டால் கருவில் வளரும் குழந்தைக்கு நோய் எளிதில் தாக்கும்.
    ஆடி காற்று பலமாக வீசும் ...அதனால் கூரை மாத்தும் , மற்றும் வீட்டின் மராமத்து வேலை செய்யும் மாதமாகவும் இருந்தது.

    இதுவே காரணம் !

    அது ஏன் புதுமண தம்பதிகள் மட்டும் ? எல்லா தம்பதிகளையும் பிரிக்கலாமே ? என்கிற கேள்வி எழுவது நியாயம் தான் --
    மற்ற தம்பதியர் ஏற்கனவே குழந்தை பேரு பெற்றிருப்பார்கள் என்கிற காரணமாக இருக்கலாம்

    0 comments:

    Post a Comment