Wednesday 17 September 2014

Tagged Under: ,

ஐ படத்தின் கடைசி பாடல் படப்பிடிப்பு ஆரம்பம்

By: ram On: 19:58
  • Share The Gag
  •  ஷங்கரின் ஐ படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரம்மாண்டமாக நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    பொதுவாக ஒரு படத்தின் விழா நடக்கிறது என்றால் அப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடித்து விட்டு தான் நடத்துவார்கள்.

    ஆனால் ஐ படத்தை பொறுத்த வரை இப்படத்தின் முக்கால்வாசி பகுதி முடிந்தாலும் ஒரு பாடல் எடுக்க வேண்டி இருந்தது, இதை இயக்குனர் ஷங்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் இசை வெளியிட்டுக்கு பிறகு நடத்துவோம் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இன்று இப்படத்தின் 3 வில்லன்களில் ஒருவராக நடிக்கும் உபன் பட்டேல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐ படத்தின் பாடல் காட்சி செட்டில் இருக்கிறேன் என்று ட்விட் செய்துள்ளார்.

    ஆக மொத்தத்தில் மீதி உள்ள பாட்டை இன்றுடன் துவக்கி தீபாவளி அன்று மிக பிரம்மாண்டமாக 3000 திரையரங்குகளில் வெளியிட உள்ளது ஐ படக்குழு.

    0 comments:

    Post a Comment