Thursday 18 September 2014

Tagged Under:

இந்தியர்களால் $1200 கோடி லாபம் பார்க்கப்போகும் பேஸ்புக் – இந்தியர்களே உஷார்..!

By: ram On: 17:18
  • Share The Gag
  •                வாட்ஸ்ஆப் என்ற மென்பொருள் அறிமுகமானதில் இருந்து முகநூலை பெரும்பாலானோர் மறந்துவிட்டனர். வாட்ஸ்ஆப் மென்பொருள், முகநூலை விட பாதுகாப்பானது என்கின்ற காரணத்தால் அசுர வளர்ச்சி அடைந்தது. இதன் வளர்ச்சியை கண்டு ஆடிப்போன பேஸ்புக் அதை பல மில்லியன் டாலர் விலைகொடுத்து வாங்கியது. போஸ்புக் எப்பொழுது வாட்ஸ்ஆப்பை வாங்கியதோ அப்பொழுதே வாட்ஸ்ஆப்பில் வைக்கப்பட்டிருந்த பல பாதுகாப்பு அம்சங்களை நீக்கப்பட்டுவிட்டது. நீண்ட நாட்களாக வாட்ஸ்ஆப்பை உபயோகப்படுத்திவருகின்றவர்களுக்கு இது தெரியும். மேலும் இந்த வாட்ஸ்ஆப் சேவையை தொடர்ந்து நம் மொபைலில் பெறுவதற்கு ஆண்டுக்கு சுமார் 60 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள வாட்ஸ்ஆப் பயனாளர்களால் மட்டும் 1200 கோடி டாலர் லாபம் பார்க்க உள்ளது பேஸ்புக் நிறுவனம்.

    பேஸ்புக் ஒரு அமெரிக்க நிறுவனம். கணினி துறை எப்பொழுதுமே அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றது. நாம் அனுப்பும் தகவல்கள் அமெரிக்க உளவுத்துறையால் வேகு பார்க்கப்படுகிறது. இப்படி பாதுகாப்பே இல்லாத மென்பொருளுக்கு 60 ரூபாய் கட்டணம் கண்டிப்பாக செலுத்த வேண்டுமா? வாட்ஸ்ஆப் போன்ற சந்தையில் புதியதாக அறிமுகமான மென்பொருள் டெலிகிராம்.

    டெலிகிராம் ஆப் வாட்ஸ்ஆப்பை விட மிகவும் பாதுகாப்பானது. இந்த மென்பொருளை லைப்லாங் இலவசமாகவே உபயோகப்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால், அடுத்தவர் பார்பதற்கு முன்பே அதை டெலிட் செய்யும் வசதியும் இதில் உள்ளது. குறிப்பாக டெலிகிராம் வாட்ஸ்ஆப்பை போன்றே செயல்படும், பெரிதாக மாற்றங்கள் தெரியாது. அதே நேரத்தில் பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளது.

    0 comments:

    Post a Comment