Friday 26 September 2014

Tagged Under: ,

100 அடி உயர சிலையைக் கொண்டு வர 50 மணி நேரம்...!

By: ram On: 19:35
  • Share The Gag
  • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்திய அளவில் பல மொழிகளிலும் தற்போது நூற்றுக்கணக்கான படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை பெற்றிருப்பது இரண்டே இரண்டு படங்கள்தான். அந்த இரண்டில் ஒன்று.... விக்ரம் நடிக்க, ஷங்கர் இயக்கி வரும் 'ஐ' படம் என்பது நமக்கெல்லாம் பெருமை. மற்றொரு படம்... 'நான் ஈ' படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாஹுபலி தெலுங்குப்படம். பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க பல கோடி செலவில் உருவாகும் படம் இது.


    'ஐ' படத்தின் பிரம்மாண்டத்தையும், அப்படத்தில் விக்ரமின் மாறுபட்ட தோற்றம் மற்றும் நடிப்பையும் சமீபத்தில் நடத்திய ஆடியோ விழாவில் திரையிட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மூலம் கோடிட்டுக் காட்டிவிட்டார் இயக்குநர் ஷங்கர். ஐ படத்தைப் போலவே, தற்போது பாஹுபலி படத்தைப் பற்றி வெளிவரும் செய்திகள் ஒவ்வொன்றும் வாய் பிளக்க வைக்கின்றன.


    பாஹுபலி படத்திற்காக கலை இயக்குநர் சாபு சிரில் 100 அடி உயர சிலை ஒன்றை உருவாக்கியிருக்கிறாராம். சாபு சிரில் குழுவினர் உருவாக்கிய இந்த சிலையை கிட்டத்தட்ட 50 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து படப்பிடிப்பு இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இதற்கு தன் ஆட்களுடன் களத்தில் இறங்கி உதவி செய்தது ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன்.


    சிலையை செய்த இடத்தில் இருந்து படப்பிடிப்பு நடந்த இடத்துக்குக் கொண்டு வந்ததைவிட மிகப்பெரிய சவால் ஒன்றும் இருக்கிறது என்று ட்வீட் பண்ணி இருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மௌலி. என்ன சவால்? அந்த சிலையை நேராக நிமிர்த்தி, குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்துவது அந்த சவால்.

    0 comments:

    Post a Comment