Saturday 2 August 2014

Tagged Under: ,

கை குலுக்கும் பழக்கம் யாரிடமிருந்து வந்தது...?

By: ram On: 22:04
  • Share The Gag

  • கை குலுக்கும்  பழக்கம் மேல் நாட்டுக்காரர்களிடம் இருந்து, உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை சந்திக்க வந்தால் நீண்ட நேரமாக கை குலுக்குவதை "டிவி'களில் காட்டுகிறார்கள்.

     இந்தப் பழக்கம் குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தொற்றியது என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்கு தெரியுமா?

    ஒரு பெண்ணை ஆணுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை "பாணிக்ரஹணம்' என்பர். அதுபோல, ராமபிரானை சுக்ரீவன் சந்தித்து அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான்.அதற்கு அடையாளமாக தனது கையை அவர் பிடித்தால் போதும் எனக்கருதி "க்ருஹயதாம் பாணினா பாணிம்' என்றான். "கையைப் பிடித்தாலே நம் நட்பு உறுதியாகி விட்டது' என்று பொருள்.

    ராமன் மனிதனாக வந்திருந்தார் என்றாலும் அவர் கருணாமூர்த்தி. அவரவர் தரத்தைப் புரிந்து கொண்டு, அதே தரத்திற்கு தானும் இறங்கி வந்து அனுக்கிரஹம் செய்பவர். எனவே, குரங்கு என்றும் பாராமல் சுக்ரீவனின் கையைப் பிடித்து நட்பை உருவாக்கிக் கொண்டார்.

    இவ்வாறு முதன்முதலில் கைபிடித்து உருவாகிய நட்பு, இன்று பரிணாம வளர்ச்சி பெற்று கை குலுக்கும் அளவுக்கு போயிருக்கிறது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது, அவர்களை குரங்குகளுக்கு ஒப்பிட்டு பரிகாசம் செய்ய, ஆன்மிக உபன்யாசகர்கள் இந்த மேற்கோளை காட்டுவார்கள்

    0 comments:

    Post a Comment