Saturday 2 August 2014

Tagged Under: ,

நகைகள் அணியும் போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை..? பெண்கள் அவசியம் படிக்கவும்..!

By: ram On: 17:34
  • Share The Gag

  • நகைகள் அணிய ஆசைப்படாத பெண்களே இல்லை. நகைகளை அணியும் பொழுதும், தேர்ந்தெடுக்கும் பொழுதும் கீழ்க்கண்ட விவரங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

    • எப்பொழுதும் அதிகமாக நகைகளை அணிய வேண்டாம். திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டும் நகைகளை அதிகமாக அணிலாம்.

    • முத்தினால் ஆன ஆபரணங்கள் பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிப்பதுடன் அணிபவரை எடுப்பாகக் காண்பிக்கும். இதனால், அலுவலகத்திற்குச் செல்லும் போதோ, சின்ன சின்ன விருந்துகளில் கலந்து கொள்ளும் பொழுதோ முத்து பதித்த நகைகளை அணியவும்.

    • உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது.

    • இரு வேறு விதமான நகைகளை ( வெள்ளி மற்றும் தங்க நகைகளை ஒன்றாக அணிவது) ஒன்றாய்ச் சேர்த்து எப்பொழுதும் அணிவதைத் தவிர்க்கவும்).

    • காலை நேரங்களில் நகைகளைக் குறைவாக அணிய வேண்டும். இரவில் அதிகமான நகைகளை அணியலாம்.

    • வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும.

    • தற்பொழுது எங்கு பார்த்தாலும், கவரிங் நகை அதிகரித்து விட்டது. இவை மலிவாகக் கிடைப்பதோடு, ஈர்க்கக் கூடியவையாகவும், தொலைந்து போனால் பெரிதாக எதையும் இழந்து விடவில்லை என்று மனதை தேற்றிக் கொள்ளும் படியாகவும் உள்ளன.

    • நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது. வயதில் சிறியவர்கள் சின்ன நகைகளை அணிவதைக் காட்டிலும், நடுத்தர அளவு நகைகளை அணியலாம்.

    0 comments:

    Post a Comment