Tuesday 17 December 2013

Tagged Under: , , , ,

அறிவாளி சிறுவன்...!

By: ram On: 08:24
  • Share The Gag



  • அந்த சலூன் கடையை நோக்கி அந்த சிறுவன் வருவதை பார்த்த அந்த கடைக்காரர், தன்னிடம் முடி திருத்திக் கொள்ள வந்தவரிடம் "சார் இப்ப இங்க வர்ற பையன சரியான முட்டாள்னு நீருபிக்கிறேன் பாருங்கன்னு சொல்லிட்டு,


    ஒரு கையில் நூறு ரூபாயும் இன்னோரு கையில் இரண்டு ஐந்து ரூபாய் நானயங்களயும் கான்பித்து எது வேனுமோ எடுத்துக்கோ என்றார்.


    சிறுவன் இரண்டு ஐந்து ரூபாய்யை மட்டும் எடுத்து சென்றுவிட்டான்.


    கடைக்காரர் தன் கஸ்டமரிடம் பெருமையாக சொன்னார் டெய்லி இப்படி தான் சார் ஏமாந்துற்றான்.
    முடி வெட்டி விட்டு வெளியே வந்தவர் அந்த சிறுவன் ஐஸ்கிரீம் கடையிலிருந்து வெளியே வருவதை பார்த்தார்.


    அவனை கூப்பிட்டு ஏம்ப்பா இந்த வயசுல கூட உனக்கு நூறுக்கும், ஐஞ்சு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாதா என கேட்டார்.


    சிறுவன் ஐஸ் கிரீமை நக்கிக்கொன்டே சொன்னான் அந்த நூறு ரூபாய எடுத்திட்டா அன்னையோட இந்த விளையாட்டு முடிஞ்சிறும் அங்கிள்!!


    கடைகாரனை பாவமாய் பார்த்து சிரித்துவிட்டு போனார் கஸ்டமர்,

    0 comments:

    Post a Comment