Tuesday 17 December 2013

Tagged Under: ,

சூப்பர் ஸ்டாருடன் மோதத் தயாராகும் பவர் ஸ்டார்?

By: ram On: 21:40
  • Share The Gag



  • 'லத்திகா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் 'பவர்ஸ்டார்' சீனிவாசன்.அந்தப் படத்தை ஒரே தியேட்டரில் ஓடவைத்து வெள்ளிவிழா கொண்டாடினார்.


    அதற்குப் பிறகு. 'ஆனந்தத் தொல்லை', 'இந்திர சேனா', 'மூலக்கடை முருகன்', 'தேசிய நெடுஞ்சாலை' என பல படங்களுக்கு ஒரே சமயத்தில் பூஜை போட்டார்.


    அதில். 'ஆனந்தத் தொல்லை' படம் மட்டும் எடுக்கப்பட்டு, ரிலிஸுக்குத் தயாராக உள்ளது.


    இதற்கிடையில் தான் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து பிரபலமானார். பண மோசடி வழக்கில் சிறைக்கு சென்று வந்தார்.


    இப்போது 'சுட்ட பழம் சுடாத பழம்'. 'நாலு பொண்ணு நாலு பசங்க', 'நாலு பேர் ரொம்ப நல்லவங்க' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


    'ஆனந்தத் தொல்லை' படத்தை எப்போது வெளியிடுவீர்கள் என்று அவரிடம் கேட்டால், சூப்பர் ஸ்டார் ரஜினியின்  'கோச்சடையான்' எப்போது ரிலீசாகுமோ அன்றே எனது 'ஆனந்தத் தொல்லை'யும் வெளிவரும் என கூலாக சொல்கிறார்.

    0 comments:

    Post a Comment