Tuesday 4 November 2014

Tagged Under: ,

கார்த்தி - லிங்குசாமி இணையும் படம் கைவிடப் பட்டதா ?

By: ram On: 21:14
  • Share The Gag
  • அஞ்சான் படத்தின் படுதோல்வி பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கிறார் லிங்குசாமி. சமுக வலைதளங்களில் அவரை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்து மனதை புண்படுத்தினார்கள் .

    இந்நிலையில் அஞ்சான் எடுத்த சமயத்திலே கார்த்தியுடன் "எண்ணி ஏழு நாள்" படத்தின் முலம் மீண்டும் இணைய போகிறோம் என்று அறிவித்தார் லிங்குசாமி. அதன் பிறகு அஞ்சான் ரிலீஸ் ஆக படத்தின் ரிசல்ட் வேற மாதிரி போனதால் கார்த்தி படத்தின் கதை விவாதம் கிடப்பில் போடப்பட்டது.

    கார்த்தியும் வெவ்வேறு படங்களில் பிஸியானார், இந்நிலையில் எண்ணி ஏழு நாள் படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்க உள்ளாராம், ஆனால் எனக்கு கதை டெவலப் செய்ய இன்னும் போதுமான நாட்கள் தேவை என்று கார்த்தியிடம் சொல்லி இருக்கிறார். அவரும் சரி என்று கையில் வைத்திருந்த மற்ற சில படங்களில் கமிட் ஆக உள்ளாராம்.

    ஆக மொத்தத்தில் எண்ணி ஏழு நாள் இப்போதைக்கு இல்லை என்பது உறுதி.

    0 comments:

    Post a Comment