Tuesday 21 October 2014

Tagged Under: ,

நடிகர் விவேக்கின் விவகாரமான கேள்விக்கு பதில் அளித்த கமல்!

By: ram On: 23:23
  • Share The Gag
  • கமல்ஹாசன் தற்போது பிரபல வார இதழ் ஒன்றிற்கு பதில் அளித்து வருகிறார். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதழில் இடம்பெறும் கேள்விகளை பிரபலங்கள் மட்டுமே கேட்கும் படி அமைத்துள்ளனர்.

    நடிகர் விவேக் இதில் ‘சமூக வலைத்தளங்களில் படம் நன்றாக இல்லை என்று மெசேஜ் அனுப்புகிறார்கள். இதனால் படத்திற்கு வரவேண்டியவர்களையும் தடுத்து விடுகிறார்கள். சமூக வலைத்தளங்களின் கமென்ட்களில் நேர்மை இருப்பதாக தெரியவில்லை. எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் சிவகார்த்திகேயன் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்புகிறார்கள். இது சரியா, இதற்கு அரசாங்கம் சென்சார் கொண்டு வருமா?’ என்று கேட்டுள்ளார்.

    இதற்கு பதில் அளித்த உலக நாயகன் ‘இன்டர்நெட் வருவதற்கு முன்பே நானும், அண்ணன் ஜேசுதாஸும் ஒரே நாளில் இறந்துபோன வதந்தி எங்கள் காதுக்கே எட்டியது. சிரித்தபடி, பரஸ்பரம் இரங்கல் தெரிவித்துக் கொண்டு 35 வருடங்கள் ஆகிவிட்டன.

    விமர்சனத்துக்கு வரம்போ, தணிக்கையோ இருக்கக் கூடாது. தரம் குறையும்போது விமர்சகனே விமர்சனத்தின் மதிப்பெண்ணை கோடிட்டுக் காட்டி விடுவான். இன்டர்நெட் விமர்சகனுக்குத் தடை போடுவது, பெண்ணுக்குத் தாலி கட்டுவது அவர்களின் கற்புக்கு உத்தரவாதமாகாது. அவர்கள்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

    நம் கலையும், திறமையும் மக்கள் ஆதரவுடன் எல்லா சமகால விமர்சனங்களையும் கடந்து வாழ உழைக்க வேண்டும் என்பதே என் பணிவிலாக் கருத்து’ என்று கூறியுள்ளார்.

    0 comments:

    Post a Comment