Wednesday 1 October 2014

Tagged Under: ,

மூக்கு விஷயத்துக்காக மூக்குக்கு மேல் கோபப்பட்ட சமந்தா

By: ram On: 21:34
  • Share The Gag
  • சமந்தா சருமம் மீது பல பேருக்கு கண் உண்டு ,அவர் என்ன ஷினிங்க் மெட்டிரியல் போல் பல பல வென்று மின்னுகிறார் என்று கோடம்பாக்கமே வியத்தது . ஆனால் யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை அவர் சருமம் நாலே பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டு வந்தார் .தற்போது அவரை கோபபடுத்தும் விதத்தில் ஒரு செய்தி.

    என் மூக்குக்கு என்ன குறைச்சல்? ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார் சமந்தா.‘தற்போது மூக்கு ஆபரேஷன் செய்வதற்காக லண்டன் செல்லஇருக்கிறார் என தகவல் பரவ உடனே இதை பற்றி பதில் அளித்துள்ளார் சமந்தா.

    மூக்கு ஆபரேஷன் என்ற கிசுகிசு வெளியானதும் அவருக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்தது. இதற்கு கோபமா அவர் பதில் அளித்துள்ளார். இதுபற்றி சமந்தா கூறும்போது, ‘அழகான மூக்கு அமையாதவர்களுக்குத்தான் ஆபரேஷன் தேவைப்படும். என் மூக்கு மிகவும் அழகாக இருக்கிறது.

    அதை சீர்செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. என்னுடைய கணிப்புப்படி எனக்கு கச்சிதமான மூக்கு அமைந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது நான் ஏன் ஆபரேஷன் செய்ய வேண்டும். என்னைப்பற்றி வரும் பலவதந்திகளில் இதையும் ஒன்றாகவே நான் ஏத்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    0 comments:

    Post a Comment