Wednesday 1 October 2014

Tagged Under: ,

இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டு: ஜிப்ரான்

By: ram On: 09:46
  • Share The Gag
  • ‘வாகை சூடவா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். இப்படத்தின் இசை ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் கவர்ந்தது. குறிப்பாக ‘சர சர காற்று...’ பாடல் அந்த வருடத்தின் சிறந்த பாடலாக அறிவிக்கப்பட்டு பல விருதுகளையும் தட்டிச் சென்றது.

    அப்படத்திற்குப் பிறகு ‘வத்திக்குச்சி’, ‘குட்டிபுலி’, ‘நய்யாண்டி’ போன்ற படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றது. இந்த வருடம் ஜிப்ரான் இசையில் ‘திருமணம் என்னும் நிக்ஹா’, ‘அமரகாவியம்’ ஆகிய படங்கள் வெளியாகியது. இப்படத்தின் பாடல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் முணுமுணுக்கும் ரகமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

    மேலும் கமல் நடித்து வரும் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களுக்கும் ‘சென்னை சிங்கப்பூர்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதைப்பற்றி அவர் கூறும்போது, இந்த ஆண்டு என்னால் மறக்க முடியாத ஆண்டு என்று கூறினார்.

    0 comments:

    Post a Comment