Monday 13 October 2014

Tagged Under:

நமக்கு தெரியாத சில உலக கொடூரர்களை தெரிந்துக் கொள்வோம் !!

By: ram On: 19:55
  • Share The Gag
  • அந்திரேய் சிக்காட்டிலோ (Andrei Chikatilo)

    ரஷ்ய எல்லையோர நாடான உக்ரைனில் 1936 -ம் ஆண்டு பிறந்த சிக்காட்டிலோஇளமையில் தாழ்வு மனப்பான்மை கொண்ட சவலைப் பிள்ளை. அந்தத் தாழ்வுமனப்பான்மையே அவனை வேறு திசைக்குத் திருப்பியது. பதின்ம வயதில் தனக்குஆண்மை இல்லையோ என்ற சந்தேகத்தில் 9 வயதான சிறுமியைப் பாலியல் சித்ரவதைசெய்தான். பிறகு திருமணம், குழந்தைகள் என நார்மல் வாழ்க்கையை முயற்சித்தாலும்அவனது வக்கிர மனம் அடங்கவில்லை. 78 -ல் ஒரு சிறுமியைக் கடத்தி, பாலியல்பலாத்காரம் செய்து, கத்தியால் குத்திக் கொன்றான். அந்தக் கொலையும் அது தந்ததிருப்தியும் அவனுக்குள் வெறியாக ஊறின. விளைவு, அந்த ஆண்டு மட்டும் இவனால்கொல்லப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை ஏழு. பிறகு, கொன்று ரத்தம் பார்த்தால் மட்டுமேசெக்ஸில் ‘திருப்தி’ அடையும் எடாகுட நிலையை எட்டினான்.

    இளம் பெண்களையும் சிறுவர்களையும் ஏமாற்றிக் கடத்தும் கலையில் தேர்ந்து,அவர்களைச் சித்ரவதை செய்து கொலை செய்வதில் இன்பம் கூடிக் கொண்டே போனதாம் இவனுக்கு. ஒரேவருடத்தில் சிறுவர்கள் உட்பட 15 பேர் மர்மமாக கொல்லப்பட்டனர். போலிஸ் குழம்பியது. சைக்கோவோ,ஹோமோவா, சீரியல் கில்லரா என வகை பிரிக்க முடியாமல் தடுமாறியது. 1990 ல் இவன் சிக்கியபோது அவன்செய்த கொலைகள் உலகத்தையே நடுங்கச் செய்தது. மொத்தம் 53 கொலைகள் செய்திருப்பதைஒப்புக்கொண்டான். ‘நான் ஒரு அப்பாவி, என்னை விட்டுவிடுங்கள் என்னும் இவனுடைய கருணை மனுநிராகரிக்கப்பட்டது. 1992 பிப்ரவரி 14-ம் நாள் துப்பாக்கியால் பின் மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    போல் பாட் (Pol Pot)

    கம்போடியாவில் பிறந்து கம்யூனிசம் பயின்ற போல் பாட்டுக்கு இளம் வயதிலேயேஅரசியலில் ஆர்வம். ‘கம்பூசியன் கம்யூனிச இயக்கம்’ என்ற பெயரில் கம்போடியாவின்ஆட்சியைப் பிடித்த இவன் சித்ரவதை, சித்தாந்த அடிப்படையிலானது!

    ‘விவசாயிகளைத் தவிர, மற்ற அனைவரும் சோம்பேறிகள், வாழத் தகுதியற்றவர்கள்’என்று தீர்ப்பு எழுதினான். அரசுப் பணியாளர்கள், ஆலை முதலாளிகள், படித்தவர்கள்,வியாபாரிகள் என அனைவரும் கேள்வி இல்லாமல் போட்டுத்தள்ளப்பட்டனர்.மருத்துவமனைகள் மூடப்பட்டதால் ஆண்டிபயாடிக் மருந்துகூட இல்லாமல் 15 லட்சம்மக்கள் செத்து மடிந்தார்கள்.

    ‘எதிரிகளை அழிக்கிறேன்’ என்ற பெயரில் இவன் ஆரம்பித்த S-21 என்னும் சித்ரவதைக்கூடத்தில் சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கிளைகள் வேறு!மக்களின் வாயில் மனித மலத்தைத் திணிப்பது, எலக்ட்ரானிக் ஷாக் கொடுப்பது, தலையில் ஆணி அடிப்பது,கோழிகளைப் போல வரிசையாக மக்களின் கழுத்தை அறுத்துத் தண்ணீரில் போடுவது… என்பதெல்லாம் இவனதுசித்ரவதைக் கூடத்தின் சில சாம்பிள்கள். அதிலிருந்து தப்பிய வான் நாத் என்பவர் சமீபத்தில் தான் தப்பிய திகில்கதையை உலகுக்கு வெளியிட்டார். மனித பிணங்களையும், புழு பூச்சிகளையும் தின்று அவர் உயிர் தப்பிய கதைபயங்கரத்திலும் பயங்கரம். 1998-ல் மர்மமாக செத்துப் போனான் இந்த போல் பாட்! அடுக்கடுக்கான மண்டைஓடுகள் இவன் வெறிக்கு சாட்சி!

    மாக்ஸ்மில்லன் ராபெஸ்பியர் (Maximilien Robespierre)

    ‘தீவிரவாதம் இல்லாத அரசியல் ஆண்மை இல்லாதது. அரசியல் வாழ்க்கையில் படுகொலைசெய்வது தவிர்க்க முடியாதது’ என பேஜார் ஸ்டேட்மென்ட் விட்ட இவன், பிரெஞ்சு நாட்டில்நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம்தான் பின்னர் புகழ்பெற்ற ஜகோபியன் கிளப்ஆனது. 1790 -ல் ஜகோபியன் கிளப்பின் தலைவரான மாக்ஸ்மில்லன், தனது அரசியல் எதிரிகள்மட்டுமில்லாமல், தன்னை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள் என அத்தனை போரையும்கில்லட்டின் இயந்திரத்தில் வைத்து தலையைத் துண்டித்தான். இப்படி 10 மாதங்களில்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைந்தபட்சம் 40,000 என்கிறது வரலாறு. 1794 -ல் கைது செய்யப்பட்டவனை எவ்வித விசாரணையும் இன்றி கில்லட்டின் அடியில்குனியவைத்து தலையை எகிறச் செய்தார்கள்!

    ஜோசப் கோணி:

    இடி அமீன் கோரத்தாண்டவமாடிய உகாண்டாவில் இருந்து வந்தவன். ‘கடவுளின் பேரால் நாட்டுக்கு நல்லாட்சி கொடுக்கப் போகிறேன்!” என்றுஉகாண்டாவையே ரணகளம் ஆக்கியவன். இவன் ஆரம்பித்த ‘கடவுளின்தற்காப்புப் படை’க்கு முதல் சிப்பாய் குழந்தைகள்தான்.

    வாழிடங்களுக்குச் சென்று நாய்களைப் பிடிப்பது மாதிரி குழந்தைகளை வலைவீசிப் பிடிப்பான்.பிடிபடும் குழந்தைகளுக்கு துப்பாக்கிச் சுடக் கற்றுக்கொடுப்பான். பின்னர், அந்தக் குழந்தைகள்மூலமாகவே அவர்களது பெற்றோர்களைச் சுட்டுக் கொல்வான். இப்போது பல நாடுகளும்கோணியை ‘மனித குலத்தின் எதிரி’ என்று அறிவித்து உகாண்டா காடுகளில் தேடி வருகிறது.

    0 comments:

    Post a Comment