Monday 13 October 2014

Tagged Under:

திருமணத்திற்கு முன் செக்ஸ் கூடாது என்பதற்கான 10 பவர்ஃபுல் காரணங்கள்!

By: ram On: 17:39
  • Share The Gag
  • செக்ஸ் என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று தான். ஆனால், இந்தக் காலத்து சின்னஞ் சிறுசுகளுக்கு, முக்கியமாக டீன்-ஏஜ்ஜில் உள்ளவர்களுக்கு, செக்ஸ் ஒரு விளையாட்டாகவே ஆகிவிட்டது.

    வாழ்க்கைக்குத் தேவையான செக்ஸ் என்பது முறையாகத் திருமணம் ஆன பின்பு மட்டுமே ஆண்-பெண் இருவர் மனத்திலும் வர வேண்டும். அதை விட்டு, டேட்டிங் என்ற பெயரில் ஆடைகளைக் களைந்து விட்டு செய்யப்படும் ஒரு கொச்சையான மொழியாகவே செக்ஸ் மாறிவிட்டது. அதுமட்டுமல்ல, நம் இந்தியா போன்ற நாடுகளில் அது ஒரு பெரும் கலாச்சார சீர்குலைவிற்கும் காரணமாகி உள்ளது.

    காதல் என்பதைத் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு, இனக் கவர்ச்சிக்கு அடிமையாகி, வயிற்றில் கருவைச் சுமந்து கொண்டு தவிக்கும் எத்தனையோ இளம் பெண்கள் கடைசியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’யில் தான் வந்து நிற்கின்றனர்.

    திருமணத்திற்கு முன் ஏன் செக்ஸ் கூடாது என்பதற்குக் கூறப்படும் 10 காரணங்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

    பொறுமை
    ஆம் ‘ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கணும்’ என்ற பழமொழிக்கேற்ப, நம் வாழ்க்கைத் துணையை முறையாகத் திருமணம் செய்து கொண்ட பின்பே அவளை/அவனை கட்டிலில் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அதுவரை பொறுத்துத் தான் ஆக வேண்டும். அப்போது தான் இருவருக்குமிடையே அன்பும் அதிகரிக்கும்.

    புரிதல்
    காதலர்களாகிய இருவரும் முதலில் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பே எதற்கு ஆடைகளைக் கழற்ற வேண்டும்?

    செக்ஸ் வெறியா?
    உங்கள் காதலர்/காதலி செக்ஸ் வெறி கொண்டவர்களாக இருந்து விட்டால் மிகவும் ஆபத்தாகும். அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரே இரவிலா?
    செக்ஸ் என்பது ஒரே இரவில் முடிந்துவிடக் கூடிய விஷயமல்ல. அதற்காக ஒரு சர்ப்ரைஸோடு காத்திருத்தல் அவசியம். அதற்கு, திருமணம் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

    புனிதம்
    இந்த வார்த்தை மீது உங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதா? அப்படியென்றால், திருமணத்திற்கு முன் செக்ஸ் என்ற விஷயத்தை அடியோடு மறந்து விடுங்கள்.

    எய்ட்ஸ்
    இந்தக் காலத்தில் செக்ஸ் தொடர்பான பல வியாதிகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், திருமணத்திற்கு முன் செக்ஸைக் கண்டிப்பாகத் தவிருங்கள்.

    கவர்ச்சி
    நீங்கள் டேட்டிங் தொடர்பு வைத்துள்ள நபருக்கு உங்கள் கவர்ச்சி பிடிக்காமல் போயிருக்கலாம். சந்தோஷமாக குட்-பை சொல்லிவிட்டு வந்து விடுங்கள். செக்ஸ் பிரச்சனையிலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.

    பழக்கம்
    எதையாவது பழகி விட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறீர்களா? அப்படியென்றால், செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அப்படியே மாட்டிக் கொண்டாலும், அந்தப் பழக்கம் திருமணத்திற்குப் பின்பே வரட்டும்.

    மாத விலக்கு
    மாத விலக்கு நேரங்களில் நீங்கள் எளிதாக செக்ஸ் விஷயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

    நோய் பரவும்
    தகாத முறையில் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொண்டால், அது தொடர்பான வியாதிகளை நீங்களும் பரப்புவதற்குக் காரணமாகி விடுவீர்கள். அதாவது, செக்ஸ் வியாதிகள் ஏற்கனவே உங்களுக்கு இருந்தால், அது மற்றவர்களுக்கும் பரவ நேரிடும்.

    0 comments:

    Post a Comment