Friday 19 September 2014

Tagged Under: ,

தேவர் மகன், விருமாண்டிக்கு பின் மீண்டும் வேட்டி, சட்டையில் கமல்

By: ram On: 07:56
  • Share The Gag
  • கிராமத்து பின்னணியில் அமைந்த படங்களில் கமல் நடித்து ரொம்ப நாட்களாகி விட்டது' என்ற, ரசிகர்களின் ஏக்கம், விரைவில் தீரப்போகிறது.

     'தேவர் மகன், விருமாண்டி' ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது, மலையாளப் படமான 'த்ரிஷ்யம்' ரீ - மேக்கில் உருவாகும், 'பாபநாசம்' படத்தில், மீண்டும் வேட்டி, சட்டையில் அசத்த காத்திருக்கிறார், கமல். இந்த படத்தின் படப்படிப்பு, நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சமீபத்தில் நடந்தது.

    கேரளாவின் இடுக்கியிலும் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக, இடுக்கியில், இயற்கை அழகு சூழ்ந்துள்ள இடத்தில், ஓர் அழகான வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

    0 comments:

    Post a Comment