Saturday 6 September 2014

Tagged Under:

எரிவது இன்றையப் பிணம். எரியூட்டுவது நாளையப் பிணம்

By: ram On: 23:15
  • Share The Gag

  • 'நான் நான்' என்று ஆணவத்தோடு சொல்வதைவிட‌ 'நாம் நாம்'என்று அடக்கத்தோடு சொல்லு. உலகம் உன் கையில்,

    இளமையில் ஆரோக்கியம் தொலைத்துப் பணத்தை தேடுகிறோம். முதுமையில் பணத்தை தொலைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்.

    காற்றில் கலந்து, செவியில் நுழைந்து, இதயத்தை நிரப்பும் இசையை கேள். மனம் பூவாக‌ மலரும்.

    முடியாது, முடியாது என்று நூறு முறை சொல்வதை விட‌, 'முடியும்' என்று ஒரு முறை சொல் முடியாததும் முடியும்.

    கொடுத்து சிவந்த‌ கரங்களை விட‌ உழைத்து சிவந்த‌ கரங்களை பாராட்டு.அதுதான் உழைப்புக்கு மரியாதை ஆகும்.

    வாழ்க்கை என்பது ஒரு புதிர், புரட்சி, போராட்டம், சந்தோஷம், மகிழ்ச்சி, விளையாட்டு, சவால், சாதனை. வாழ்ந்து சாதிக்கலாம் வாங்க‌.

    தோல்விகளைக் கண்டு துவளாதே. வெற்றியைக் கண்டு வெறியாட்டம் போடாதே.

    உனக்குள்ளும் பல‌ தலைவர்கள் உண்டு. முயற்சிச்செய். நீயும் தலைவன் ஆவாய்.

    எரிவது இன்றையப் பிணம். எரியூட்டுவது நாளையப் பிணம்.

    ஒரு குடும்பம் வாழ‌ ஒருவன் அழியலாம். ஒரு ஊர் வாழ‌, ஒரு குடும்பம் அழியலாம். அழிவும், சில‌ நேரங்களில் பயனுள்ளதே.

    பணக்காரனைக் கண்டு வெம்பாதே. பிச்சைக்காரனைக் கண்டு சிரிக்காதே.இவை உன் குணத்தையே அழித்துவிடும்.

    வானவில் ஓர் வண்ணப்பூச்சரம், ஓவியம், கதம்ப‌ மாலை, அழகு வண்ண பட்டுப்புடவை, வரவேற்பு தோரண‌ வளைவு, மயில் வண்ண‌ சால்வை. மொத்தத்தில் இயற்கை நமக்குத் தந்த‌ கவிதை, கவிதை.

    இறந்தகாலத்தை நினைத்து கவலைப் படாதே. எதிர்காலத்தை எண்ணி பயப்படாதே. நிகழ்காலமே பொற்காலம். நிகழ்காலத்தை சந்தோஷமாக‌ அனுபவி.

    உற்சாகமாக‌ இருக்கும்போது கடினமான‌ வேலைகளை செய், ஓய்வு எடுக்கும்போது எளிமையான‌ வேலைகளை செய். வாழ்க்கை சுலபமாக‌ இருக்கும்.

    நஷ்டம் வேண்டுமா கோபப்படு. லாபம் வேண்டுமா சமாதானமாக‌ இரு.

    தவறு செய்தால் பயப்படு. மீண்டும் அந்த‌ தவறு நேராமல் பார்த்துக்கொள். அதுவே வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்.

    வழிப்பாட்டைவிட‌ முதன்மையானது, மனிதனை மனிதன் புரிந்துக்கொள்ளுதலும், மதிப்பதும், அன்பு செலுத்துவதும் ஆகும்.

    பசி மனிதனை வென்றுவிடுகிறது.பல‌ தவறுகளுக்கும் பசியே காரணமாகிவிடுகிறது.

    மாற்றம் என்பது வளர்ச்சியின் தொடக்கம். அதுவே வெற்றியின் அறிகுறி.

    பணம் பத்து நன்மை செய்தால், உன் நல்ல‌ குணம் கோடி நன்மை செய்யும்.

    பொறுமை உள்ளவனே பொறுப்புள்ள‌ தலைவனாக‌ வாழ்ந்துக்காட்ட‌ முடியும்.

    பலருக்கு வழிகாட்டியாக‌ வாழ்ந்து காட்டு, அதுவும் ஒரு சாதனைத்தான்.

    இறந்தகால‌ சாதனையாளர்களைவிட‌, நிகழ்கால‌ சாதனையாளர்களை அடையாளம் காட்டு. அது வாழ்க்கைக்கு நம்மிக்கை ஊட்டும்.

    0 comments:

    Post a Comment