Tuesday 16 September 2014

Tagged Under: ,

ஐ படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது! 4 வருடங்களுக்கு முன்பே கூறிய ரஜினி

By: ram On: 20:45
  • Share The Gag
  • ஐ படத்தில் விக்ரமின் நடிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. டீசர் பார்த்த ரஜினியே கண்கலங்கி பாராட்டியுள்ளார். இப்படத்தில் விக்ரம் வடசென்னை வாலிபராகவும், மிஸ்டர்.மெட்ராஸ் ஆகவேண்டும் என முயற்சி செய்வாராம்.

    பின் ஒரு கட்டத்தில் அவர் முன்னணி மாடலாக வருவது போல் கதையம்சம் உள்ளது. ஆனால் இதை எந்திரன் படத்தின் ஒரு பேட்டியில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

    இதில் ‘ஷங்கர் என்னிடம் முதலில் கூறிய கதை ஒரு மாடலின் வாழ்க்கையை பற்றியது தான், பின்பு நான் தான் என்ன சார் நானெல்லாம் மாடலாக நடித்தால் சரி வருமா? என்று அதை ஒதுக்கிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

    இதை வைத்து பார்க்கும் போது ஷங்கர் இக்கதையை சுமார் 5 வருடத்திற்கு முன்பே ரெடி செய்துவிட்டார் என்று தெரிகிறது.

    0 comments:

    Post a Comment