Saturday 23 August 2014

Tagged Under: ,

ரோபோ சங்கருக்கு விழுப்புரத்தில் ரசிகர் மன்றம்

By: ram On: 19:54
  • Share The Gag

  • பல குரலில் பேசி தன் நகைச்சுவை நடிப்பின் மூலம் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற கலைமாமணி ரோபோ சங்கருக்கு அவரது ரசிகர்கள் ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளார்கள்.

    ரோபோ சங்கர் பல படங்களில் நடித்தாலும் ‘இதற்கு தானே ஆசைப்பட்ட பாலகுமாரா’ படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

    ‘வாய்மூடி பேசுவோம்’ படத்தில் முழுநீள நகைசுவை நடிகனாக நடித்த இவர் தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்.

    விழுப்புரத்தில் வானவில் என்பவரை தலைவராக கொண்டு ‘காமெடி கிங் ரோபோ சங்கர் நற்பணி மன்றம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள மன்றத்தில் தற்போது 15 பேர் உறுப்பினர்களாகி உள்ளனர்.

    சமீபத்தில் ரோபோ சங்கரின் பிறந்த நாளை கொண்டாடிய இவர்கள் அன்னதானம், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், விளையாட்டு போட்டிகள் என பல விழாக்களை நடத்தி அசத்தினார்கள்.

    விரைவில் மன்றத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த உள்ளனராம். இது குறித்து ரோபோ சங்கர் கூறிய போது தன் பெயரில் மன்றம் தொடங்கி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு சேவை செய்வது புண்ணியம் அதை தன் பெயரில் செய்கிறார்கள் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    0 comments:

    Post a Comment