Friday 8 August 2014

Tagged Under: ,

விஜய் அரசியலுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம்! சீமான் அதிரடி!

By: ram On: 08:21
  • Share The Gag

  • ஒருவர் சினிமாவில் நடித்து நல்ல இடத்திற்கு வந்தவுடன் அடுத்த இலக்கு அரசியல் தான். அந்த வகையில் விஜய் நடித்த எல்லா படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்க, அவரின் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

    இதனால் இவருக்கு லேசாக அரசியல் ஆசை வர ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். தற்போது இயக்குனர் மற்றும் நான் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.

    இதில் ‘ஏன் அவரை அரசியலுக்கு வரவேண்டாம் என்று தடுக்கிறீர்கள், என் தம்பி(விஜய்) தமிழ் மண்ணின் மீது அளவுக்கடந்த மதிப்பு வைத்துள்ளார், அதனால் தான் அவர் தமிழர் பிரச்சனைகளில் முதல் ஆளாய் கலந்துக்கொள்கிறார். தம்பி அரசியலில் காலடி எடுத்து வைக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    0 comments:

    Post a Comment