Friday 8 August 2014

Tagged Under: ,

பைரவி முத்திரை - இதனால் என்ன பயன் வரும்...!

By: ram On: 09:03
  • Share The Gag

  • பைரவ தந்திரம் என்பது சிவன் தனது துணைவியான பார்வதியை, இடது தொடையில் அமர்த்திக் கொண்டு உபதேசித்த கல்வி முறை.

    பயன்கள் :

    கல்விக்கு பயன் அளிக்கவும், உடல் ஆரோக்கியம் தரவும் இம்முத்திரை பயன்படுகிறது. ஸ்வாதிஷ்டான சக்கரத்தை தூண்ட வல்லது இது. நீரிழிவு நோயால் ஏற்படும் அதிக பசி, தாகம் போன்றவை குறையவும், சிறுகுடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம் நன்கு செயல்படவும் இம்முத்திரை பயன்படுகிறது.

    செய்முறை :

    விரிப்பில் அமர்ந்து இடது கையை வலது கையின் மேல் வைப்பது சக்தி அம்சமாகவும். இது பைரவி முத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முத்திரையை படத்தில் உள்ளபடி அடிவயிற்று பகுதிக்கு இணையாக கைகளை வைத்து செய்ய வேண்டும். தினமும் 20 நிமிடம் தொடர்ந்து செய்து வரலாம்.

    0 comments:

    Post a Comment