Tuesday 19 August 2014

Tagged Under: ,

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் வில்லனாகிறார் அர்ஜூன்!

By: ram On: 08:00
  • Share The Gag

  • நடிகர் அர்ஜூன் மீண்டும் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

    நாயகனாக மட்டுமே நடித்து வந்த அர்ஜூன் கடல் படத்தில் மணிரத்னத்துக்காக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் இவருடைய நடிப்பு பேசப்பட்டதால் தொடர்ந்து வில்லனாக நடிக்க கேட்டு வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால், இவர் அதற்கு வளைந்து கொடுக்கவில்லை.

    மாறாக, ‘ஜெய்ஹிந்த்’ இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கியதோடு அதில் நாயகனாகவும் நடித்து வந்தார். தற்போது இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அர்ஜூன் தெலுங்குப் படம் ஒன்றில் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார்.

    இப்படத்தை பிரபல இயக்குனர் திரிவிக்ரம் இயக்குகிறார். அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் வில்லன் நடிகர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாம். அதனால அர்ஜூனைப் போலவே மற்றொரு தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபுவும் வில்லனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

    0 comments:

    Post a Comment