Saturday 30 November 2013

Tagged Under: , , ,

அற்புத பொன்மொழிகள் அவசியம் படிக்கவும்!

By: ram On: 08:30
  • Share The Gag

  • தோல்வியின் அடையாளம் தயக்கம்!
    வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
    துணிந்தவர் தோற்றதில்லை!!
    தயங்கியவர் வென்றதில்லை!!



    எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.



    பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.



    நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.



    முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..



    ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை.



    யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.



    மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.



    பயமில்லாமை தைரியமல்ல. பலநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம்.



    எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.



    நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
     நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
     காளானாய் இராதே!

    0 comments:

    Post a Comment