Monday 18 August 2014

Tagged Under: ,

ஷிமோகா அருவி பகுதியில் லிங்கா கிளைமாக்ஸ் படப்பிடிப்பு..!

By: ram On: 19:55
  • Share The Gag

  • ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா பகுதியில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் நடத்துகின்றனர்.

    கிளைமாக்ஸ் காட்சியும் இங்கேயே படமாகிறது. துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் படப்பிடிப்பில் பணியாற்றுகின்றனர். இதனால் அருவி பகுதியில் பெரும் கூட்டத்தை காண முடிகிறது. அவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்க 100 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிக சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு நடக்கிறது.

    நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தங்க அருவி கரையோரம் சேமியானா துணியால் சிறு சிறு குழல்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. படப்பிடிப்பை காண தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அப்பகுதியில் திரள்கிறார்கள். இதனால் 100 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர். இப்படத்தில் ரஜினி இருவேடங்களில் வருகிறார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட திரிஷாவிடம் பேசி வருகின்றனர்.

    0 comments:

    Post a Comment