Tuesday 22 July 2014

Tagged Under: ,

ஜிகிர்தண்டா... சுள்ளான்களின் சண்டை!

By: ram On: 20:28
  • Share The Gag

  • ஜிகிர்தண்டா படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது ஒரு சாதாரண சினிமா வர்த்தக நிகழ்வு என்று யாரும் எண்ணிவிடக் கூடாது என்பதில் படத்தின் ஹீரோ சித்தார்த் குறியாக இருக்கிறார்.

    இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனதால் தன் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்துப் போன லெவலுக்கு அவர் பொங்கித் தீர்த்திருக்கிறார்.

    இன்னொரு பக்கம், நீண்ட வருடங்களுக்குப் பிறகு, சற்று பரவாயில்லை என்ற ரேஞ்சுக்கு வந்துள்ள தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்துக்கு மறைமுகமாக ப்ளாக்பஸ்டர் அந்தஸ்து தருவதில் ஜிகிர்தண்டா தயாரிப்பாளரும் தனுஷின் அடுத்த படத் தயாரிப்பாளருமான கதிரேசன் குறியாக உள்ளார்.

    ஜிகிர்தண்டா... சுள்ளான்களின் சண்டை!

    இதுகுறித்த தனது அறிக்கையில், "வேலையில்லா பட்டதாரி படம் பெரும் வெற்றிப் பெற்றுள்ளதால், அந்தப் படம் கூடுதலாக ஒரு வாரம் போட்டியில்லாமல் ஓடி கோடிகளை அள்ள வசதியாக ஜிகிர்தண்டாவை தள்ளி வெளியிடுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது ஜிகிர்தண்டா பட நாயகன் சித்தார்த்துக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதெப்படி தன்னைக் கேட்காமல் படத்தை தள்ளி வைக்கலாம் என சமூக வலைத் தளங்கள் மற்றும் நண்பர்களிடம் பொங்கி வருகிறார்.

    நான்கு தொடர் தோல்விப் படங்களில் நடித்து வெறுத்துப் போயிருந்த தனுஷ், கிடைத்திருக்கும் ஒரு சுமார் வெற்றியை கண்ணீர் பொங்க கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியிருப்பதும் நல்லதுதான் என்கிறாராம். படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்குமே என்பதுதான் அவர் சந்தோஷத்துக்கு காரணம்!

    0 comments:

    Post a Comment