Tuesday 30 September 2014

Tagged Under: ,

பிரபல நடிகரின் மனைவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபர்?

By: ram On: 11:38
  • Share The Gag
  • தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. இவர் தமிழ் சினிமாவில் தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

    சமீப காலமாக இவரது மனைவியை யாரோ மர்ம வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அவர்கள் போலிஸாரிடம் புகார் கொடுக்க, விசாரணையில் காவல் துறையினர் ஜாகீர்உசேன்(வயது 27) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.

    சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜாகீர்உசேனும் சினிமா பிரமுகர்தான். நேற்று அவர் மீண்டும், நடிகர் சக்தியின் மனைவியிடம் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

    இதை தொடர்ந்து ஜாகீர்உசேன் மீது, அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார், என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    0 comments:

    Post a Comment