Wednesday 24 September 2014

Tagged Under:

நீரழிவு நோயாளிகளுக்கான ஒருஉணவு முறை அளவுகளுடன்

By: ram On: 18:50
  • Share The Gag
  • நீரழிவு நோயானது நமது உடலால் குளுக்கோஸின் அளவைக் கட்டுப் படுத்தமுடியாமால் போவதால் ஏற்படுகிறது. நாம் சரியான நடைமுறைகள் மூலம் குளுக்கோஸின் அளவு அதிகம் ஆகாமல் வைத்துக் கொண்டால் இதனால் ஏற்படும் பாதிப்புக்களை முழுவதுமாக தடுத்து ஆயுசு முழுக்க சுகதேகியாக இருந்து
    விடலாம்.

    வெறுமனே மாத்திரைகள் மூலம் மட்டும் நாம் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்திவிட முடியாது , மாத்திரைகளை விட உணவுக் கட்டுப்பாடே
    முக்கியமானதாகும். நமது நாட்டுக்குப் பொருத்தமான ஒரு உணவு முறையை தருகின்றேன் . இந்த முறையில் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் நீங்களும் சஊகமாக இருக்கலாம்.

    காலை உணவு

    பால் 1/2 கப் ( சீனி சேர்க்காது தேநீர் அல்லது கோப்பியுடன்)
    தானிய வகை (50g) பின் வருபவற்றில் எதாவது ஒன்று
    தோசை அல்லது இட்லி 2
    இடியப்பம் 3
    பிட்டு 2
    பாண் 1/4
    உப்பு மா 1

    பின் காலை

    கதலி வாழைப்பழம் 1

    மதிய உணவு

    சோறு ஒன்றரைக் கப்
    அசைவம் - மீன் 2 துண்டு அல்லது இறைச்சி 1/2 கப் அல்லது முட்டை 1
    பருப்பு 1/2கப்
    தயிர் 1/2 கப் என்பவற்றுடன் ,

    மரக்கறி - விரும்பிய அளவில் உண்ணக்கூடியவை
    கோவா ,சிறு கீரை, தக்காளி, வாழைப் பூ, காய்ப் பப்பாசி, பாகற்காய்,
    வெண்டைக்காய் .

    1/2 கப் மட்டும் உண்ணக் கூடிய மரக்கறி
    அகத்தி,முருங்கக்காய் , முருங்கை இலை, கரட், வெங்காயம்.

    தேநீர் வேளைபால் 1/2 கப்( சீனி சேர்க்காமல்)
    2 சீனி சேர்க்காத பிஸ்கட்(கிறீம் கிறேக்கர்)


    இரவு உணவு

    தானிய வகை -- இடியப்பம், பிட்டு , பாண், உப்பு மா ( மதிய உணவில் கூறிய அளவுகளில்)

    கறி வகை -- மதிய உணவைப் போல

    படுக்கை நேரம் -- பால் 1/2 கப் சீனி சேர்க்காமல்


    வாழைப் பழத்திற்கு பதிலாக உண்ணக் கூடிய பழ வகை

    ஜம்பு 20 , விளம் பழம் 1
    கொய்யா 1 ,புளித்தோடை 1
    பப்பசிப்பழம் 1 துண்டு


    விரும்பிய அளவில் உண்ணக் கூடியவை

    தெளிந்த மரக்கறி சூப்,தக்காளி, எலுமிச்சை,மரக்கறி சலட்,தக்காளி, கோவா, சீனி சேர்க்காத தேநீர் அல்லது coffee, அச்சாறு.

    முற்று முழுதாக தவிர்க்க வேண்டியவை

    சீனி ,சர்க்கரை, ஜாம், பணக்கட்டி, பழரசம்

    1 comments:

    1. வணக்கம்
      யாவரும்அறிய வேண்டிய பதிவு பகிர்வுக்கு நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete