Wednesday 6 August 2014

Tagged Under: ,

மனைவி கணவரிடம் சொல்ல கூடாத அந்த விஷயங்கள்..?

By: ram On: 17:13
  • Share The Gag

  • பொதுவாக திருமணத்திற்கு பின் கணவனை விட மனைவிகள் தான் அதிகம் பேசுவார்கள். இப்படி இவர்கள் அதிகம் பேசுவதாலேயே வீட்டில் பெரிய பெரிய சண்டைகள், வெடிக்க ஆரம்பிக்கிறது. மேலும் திருமணத்திற்கு பின் பெண்கள் தான் அதிகம் வாக்குவாதம் செய்வதுடன், குறைகளும் சொல்வார்கள்.

    அதுமட்டுமல்லாமல் சில பெண்கள் பேசும் போது, ஒரு கட்டுப்பாடு இல்லாமல் நகைச்சுவையாக பேசுகிறேன் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சரளமாக பேசிவிடுவார்கள். இப்படி எதையும் நினைக்காமல் பேசுவதால் தான் சண்டைகள் வீட்டில் வருகின்றன.

    ஆனால் மனைவிகள் கணவனிடம் எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக்கூடாது என்பதை தெரிந்து பேசி வந்தால், வாழ்க்கையானது இனிமையாக செல்லும். பெரும்பாலான மனைவிகள் கணவனிடம் எதை சொன்னாலும் அதை திரும்ப திரும்ப சொல்லி, நீங்கள் சொன்னதையே மறக்க வைப்பது.

    உதாரணமாக, மாலையில் வேலை முடிந்து வரும் போது மறக்காமல் ஒரு பொருளை வாங்கி வரச் சொன்னால், அதை அவர் வீட்டிற்கு வருவதற்குள் குறைந்தது 50 முறையாவது போன் செய்து சொல்வது. ஆண்களுக்கு வீட்டு வேலையை செய்ய சொன்னால் பிடிக்காது. ஆனால் அவர்களுக்கே தோன்றினால், அவர்கள் எவ்வளவு வேலை வேண்டுமானாலும் செய்வார்கள்.

    ஆனால் விடுமுறை நாட்களில் அவர்களிடம் வீட்டு வேலையை செய்யுமாறு சொல்லக்கூடாது. இதனால் வீட்டில் சண்டைகள் தான் அதிகமாகும். சண்டை வந்தால், அப்போது உடனே உங்களை திருமணம் செய்து நான் பெரிய தவறு செய்துவிட்டேன் என்று எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது.

    இதனால் அவர்களுக்கு உங்கள் மீது வெறுப்பு தான் அதிகரிக்கும். உங்க அம்மா (மாமியார்) என்னை எதிரி போல எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருக்கிறார்" என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் எந்த ஒரு ஆணுக்கும் தன் மனைவி தன் அம்மாவை எதிர்த்து பேசினால் பிடிக்காது.

    0 comments:

    Post a Comment