Tuesday 10 December 2013

Tagged Under:

அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...! கவிதை!

By: ram On: 20:50
  • Share The Gag

  • காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை...

    காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை...

    கையை அறுத்துக்குங்க அதுவும்

     தப்பு இல்லை....

    ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட தப்பில்லை....


    ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க


     தகுதியானவங்களா இருக்கணும்...!



    தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக நீங்க

     உங்களை வருத்திக்கிறதும் காத்திருக்கிறதும்

     முட்டாள் தனம்..

    அந்த முட்டாள் தனத்த ஒரு போதும்

     பண்ணாதிங்க...

    ஒருத்தர்கொருத்தர் அனுசரிச்சு போகலன்னா அந்த

     காதலே அர்த்தமற்றதாகி விடும்.

    அது ஒரு தலை காதலா கூட மாறிடும்.

    பரஸ்பரம் ரெண்டுபேருக்கும் பிடிச்சிருந்தா தான்

     காதல்...

    ஒருத்தங்களுக்குபிடிச்சிருந்தா அது வெறும் நேசம்

     நேசத்தை காதல்ன்னு நினைச்சு நீங்களே குழப்பிங்காதிங்க.

    நேசத்தை காதல்ன்னு நினைச்சு கற்பனை வானில்

     சிறகடிச்சுப் பறக்காம

     நடைமுறைக்கு சாத்தியமானதான்னு எதார்த்தமா சிந்திச்சுப் பாருங்க.

    உங்களை பிடிக்காதவங்களுக்காக உங்கள நீங்கள்

     வருத்தி வாழுறத விட உங்கள பிடிச்சவங்களுக்காக

     உங்க தனித்துவத்தோட வாழ்ந்து பாருங்க

     அதுதான் வாழ்க்கையின் சந்தோஷம்...!

    அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...!

    0 comments:

    Post a Comment