Showing posts with label தொழில்நுட்பம்-புதுசு!. Show all posts
Showing posts with label தொழில்நுட்பம்-புதுசு!. Show all posts

Monday, 3 November 2014

300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்!

By: ram On: 22:28
  • Share The Gag
  •  

    மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது.

    அந்த வரிசையில் டச் ஸ்க்ரீன் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பால் இந்த டெக்னாலஜி வர வைப்பதற்க்கு பதிலாய் வழக்காமான எல் சி டி / பிளாஸ்மா டிவியை 300 ரூபாய் செலவில் டச் ஸ்க்ரீனாய் மாற்ற முடியும் என வாஷிங்டன் பல்கலைகழக ஆராய்ச்சி நிருபித்திருக்கிறது.

    இதில் குப்தா என்னும் இந்தியர் தான் முக்கிய பங்கு. இது மின்காந்த அலையால் நடக்கும் ஒரு அதிசயம். சீக்கிரம் வீட்ல இந்த ரிமோட் சண்டை பிரச்சினைக்கு ஒரு முற்றுபுள்ளி. சீரியல்ல நல்ல நடிக்காத ஆட்களை அறைய முடியுமே – ஐ ஜாலி ஆனா ஃபேஷன் டிவி ஓடும் போது கை கவனம்

    Wednesday, 22 October 2014

    மெமரி கார்டு தன்மை, வகைகள் குறித்த சில தகவல்கள்!

    By: ram On: 01:14
  • Share The Gag

  • செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் நான்கு வகை கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. இதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்....

    எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters). SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

    ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும். எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது.

    இதை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற வகையில் உள்ளது. இதை மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும். எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.

    இதில் நாம் பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க நம்மால் படிக்க அல்லது பார்க்க முடியும். SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமின் படி நாம் இதை பார்மேட் செய்ய வேண்டும் ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம். ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம் இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.

    Sunday, 24 August 2014

    ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்

    By: ram On: 11:35
  • Share The Gag
  • நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு.

    டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்

    காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.

    சிடி ஸ்கேன்

    தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

    உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை போன்றவற்றை கண்டறிய மிகவும் உதவுகிறது.

    கலர் டாப்லர் ஸ்கேன்.

    ரத்த குழாய்கள் வழியாக ஊசி மூலம் மருந்து செலுத்தி குறைபாடுகளை துல்லியமாக கண்டறிய பயன்டுகிறது.

    எக்கோ

    இருதய செயல்பாடுகளை கண்டறிய பயன்படும் கருவி, நுண் அதிர்வுகள் மூலம் இருதய திறனை கண்டறிந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க முடியும்.

    டிரெட் மில் டெஸ்ட்(டிஎம்டி)

    வயதிற்கு ஏற்ப இருதய துடிப்பு செயல்பாடுகளை இதன் மூலம் கண்டறியமுடியும். டிரட்மில் கருவியில் வேகமாக நடக்க வைத்தும், ஒட வைத்தும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் இருதய பலம், பலவீனம் கண்டறிய முடியும்.

    இசிஜி


    இருதய துடிப்பு சீராக இருப்பதை கண்டறிய இது பயன்படுகிறது.

    டிஜிட்டல் இசிஜி

    இருதயத்தின் நான்கு அறைகளில் உள்ள செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறிய முடியும்.



    டிஜிட்டல் எக்ஸ்ரே

    சாதாரண எக்ஸ்-ரே கருவியை விட இது துல்லியமாக உடலின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது.

    மோமோ கிராம்

    பெண்களுக்கு ஏற்படும் மார்பக குறைபாடுகளை கண்டறிய முடியும் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், போன்ற குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

    மாஸ்டர் ஹெல்த செக் அப்

    மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் பல உடற்பகுதிகள் பரிசோதனை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல்வேறு கட்டண விகிதங்களிலும் செய்யப்படுகிறது. உலக இருதய நோய் தினம், நீரிழிவு நோய் தினம், போன்ற சில முக்கிய மருத்துவ தினங்களில் சிறப்பு சலுகை கட்டணங்களில் மாஸ்டர் செக்அப் செய்யும் மருத்துமனைகளும் உண்டு. தேராயமாக 1000 முதல் 5000 வரை முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ரூ10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கட்டணங்களில் சிறப்பு மருத்துவ உடற்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    Monday, 28 July 2014

    சிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்... எளிமையான வழி..!

    By: ram On: 08:00
  • Share The Gag
  •            கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில் இருந்தால், எதனை அழிப்பது, எந்த போல்டரில் வைத்துக் கொள்வது என்பது நமக்கு எரிச்சல் தரும் செயல் தானே. அதிர்ஷ்டவசமாக, நமக்கு சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை நீக்கும் எளிய வழி ஒன்றைத் தருகிறது.

    சிகிளீனர் புரோகிராமினை, நிச்சயமாக அனைவரும் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்திருப்பார்கள். விண்டோஸ் சிஸ்டத்தில், தேவையற்றவற்றை நீக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள இந்த புரோகிராமினை நாம் அனைவரும் பயன்படுத்தலாம். தற்காலிக இண்டர்நெட் பைல்கள், விண்டோஸ் சிஸ்டம் ஏற்படுத்தும் தற்காலிக பைல்கள், லாக் இன் சம்பந்தப்பட்ட பைல்கள், குக்கீஸ் என தற்காலிக பைல்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். இவை எல்லாவற்றையும் தானாக சிகிளீனர் நீக்குகிறது.

    அது மட்டுமின்றி, விண்டோஸ் இயங்கும்போது, இயக்கப்படும் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் விண்டோவில் சிகிளீனர் சரி செய்கிறது. தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்து நீக்க உதவுகிறது. ரெஜிஸ்ட்ரியில் உள்ள தேவையற்றை வரிகளை, குறியீடுகளை நீக்குகிறது. பைல்களை அழிக்கும் போது, அவற்றின் சுவடு தெரியாமல் முழுமையாக அழிக்கிறது. இதன் மூலம் நமக்கு ஹார்ட் டிஸ்க்கில் இடம் கிடைக்கிறது. 



    தற்போது வெளியிடப்பட்டுள்ள சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை இனம் கண்டு நீக்குகிறது. இதனைச் செயல்படுத்த, சிகிளீனர் புரோகிராமினை இயக்கி, டூல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். டூப்ளிகேட் பைல் அறியும் டூலினைப் பெற, இதன் விண்டோவில், File Finder என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். ஏற்கனவே, சில ஆப்ஷன்கள் நமக்காக, சிகிளீனர் இன்ஸ்டால் செய்திடுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும். ஆனால், மிக முக்கியமாக, Ignore என்னும் வகையில், Modified Date under Match By என்பதிலும், File Size Under என்பதிலும், டிக் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். சிஸ்டம் பைல்ஸ் என்று இருக்கும் இடத்தில் Ignore ஆப்ஷனில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பல சிஸ்டம் பைல்கள், இரண்டு டைரக்டரிகளில் அல்லது இரண்டு போல்டர்களில் இருக்க வாய்ப்புண்டு. இவை, நீக்கப்பட்டால், சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்படலாம்.

    இனி, கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்களை எப்படி நீக்கலாம் என்பதனைப் பார்க்கலாம். மாறா நிலையில், சிகிளீனர், அனைத்து ட்ரைவ்களையும் தேர்ந்தெடுத்துக் காட்டும். கம்ப்யூட்டரே, சிகிளீனர் மூலம் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டால், அந்த வேலை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, டூப்ளிகேட் பைல்கள் உள்ள போல்டர்கள் அல்லது ட்ரைவ்கள் எவை என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். 


    போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, பிரவுஸ் பட்டன் கிளிக் செய்து, வழக்கமான முறையில், போல்டர்களையும் பைல்களையும் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த பின்னர், Search பட்டனில் கிளிக் செய்தால், ஸ்கேன் தொடங்கப்படும். ஸ்கேனிங் முடிந்த பின்னர், சிகிளீனர், அது கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைப் பட்டியலிடும். இரண்டு அல்லது அதற்கும் மேலான இடத்தில் உள்ள பைல்கள் தொடர்ச்சியாக இணைத்தே பட்டியலிடப்படும். எந்த பைலை நீக்க வேண்டுமோ, அவற்றை, அதன் அருகே உள்ள செக் பாக்ஸில், டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். சிகிளீனர் மீண்டும் ஒருமுறை, உங்களிடம், நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்களை உறுதியாக நீக்கவா என்றுகேட்கும். சரி என்று சம்மதத்திற்கென கிளிக் செய்தவுடன், டூப்ளிகேட் பைல் நீக்கப்படும்.
    Click Here

    Sunday, 27 July 2014

    டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!

    By: ram On: 09:01
  • Share The Gag

  • டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!

    டேட்டா கேபிள் இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து தகவல்களை(Data) கணினி, டேப்ளட் பிசி, மற்றும் மற்றவகை மொபைல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

    Soft Data Cable

    USB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) ஒன்று உதவுகிறது.

    இந்த அப்ளிகேசனை(software data cable) நீங்கள் இந்த முகவரியிலிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

    Download Link – தரவிறக்கச்சுட்டி

    Install Soft Data Cable ( http://goo.gl/0jbJaz )

    மேற்கண்ட இணைப்பின் வழிச்சென்று உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்போனில் இந்த பயன்பாட்டு மென்பொருளை நிறுவிடுங்கள்.

    அடுத்து அந்த பயன்பாட்டு மென்பொருளை இயக்கி WiFi மூலம் உங்கள் கணினி, டேப்ளட் பிசி, மொபைல் போன்ற சாதனங்களுடன் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலையும் எளிதாக இணைத்துவிடலாம்.

    இதன் மூலம் எந்த ஒரு கம்பி இணைப்பு இல்லாமலேயே, கணினிக்கும், மொபைலுக்கும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் வேண்டிய தகவல்பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

    இந்த அப்ளிகேஷனின் பயன்கள்: (ஆங்கிலத்தில்)

    BENEFITS WITH SOFTWARE DATA CABLE
    The fewer cables to carry the better
    The computer doesn’t need to have drivers it does need installed
    Send photos, music, videos, apps etc. to other phones, tablets or TV anytime, anywhere
    Auto-sync photos and other important files to computer or cloud storage (on a daily, weekly basis to backup data)
    Extend mobile storage space without any cost

    Saturday, 26 July 2014

    தழும்புகளை தலைமறைய செய்ய சூப்பர் டிப்ஸ்!

    By: ram On: 00:11
  • Share The Gag
  •      பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.


    இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.


    எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம்.


    எலுமிச்சை சாறு


    எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.


    பாதாம் எண்ணெய்


    தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

    கற்றாழை



    கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

    பால்


    தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.


    ஆலிவ் ஆயில்


    ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.


    தக்காளி சாறு



    தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

    அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.

    Monday, 6 January 2014

    உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்

    By: ram On: 02:11
  • Share The Gag


  • இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘வைபை’ வசதி கிடைத்து விடும்.

    அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு
    விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.

    ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘வைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

    விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த‘வைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும்.

     அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘வைபை’அறிமுகம் செய்யப்படுகிறது.

    வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது.

    மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘வைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.

    சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘வைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.

    அறிமுகமாகியது LG நிறுவனத்தின் Lifeband

    By: ram On: 01:41
  • Share The Gag

  • ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் கைப்பட்டிகளை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

    இவற்றின் வரிசையில் LG நிறுவனமும் “டச்” தொழில்நுட்பத்தினைக் கொண்ட Lifeband எனும் கைப்பட்டியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

    இதன் மூலம் உடலின் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களையும், உடலிலுள்ள உணவுக் கலோரிகள் தொடர்பான தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Saturday, 4 January 2014

    YouTube வழங்கவுள்ள புதிய வசதி..!

    By: ram On: 19:05
  • Share The Gag



  • உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் YouTube ஆனது நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.

    இவற்றின் தொடர்ச்சியாக 2014ம் ஆண்டில் குறைந்த இணைய வேகத்திலும் வீடியோக்களை பார்த்து மகிழும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.

    4K Streaming எனும் இத்தொழில்நுட்பத்தினை இந்த வருடம் இடம்பெறும் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.

    அதேவேளை தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய Ultra HD 4K எனும் தொழில்நுட்பத்தினையும் YouTube நிறுவனம் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியுள்ளன.

    உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் YouTube ஆனது நாளுக்கு நாள் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக 2014ம் ஆண்டில் குறைந்த இணைய வேகத்திலும் வீடியோக்களை பார்த்து மகிழும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
    4K Streaming எனும் இத்தொழில்நுட்பத்தினை இந்த வருடம் இடம்பெறும் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.
    அதேவேளை தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய Ultra HD 4K எனும் தொழில்நுட்பத்தினையும் YouTube நிறுவனம் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியுள்ளன.
    - See more at: http://viyapu.com/news_detail.php?cid=14717#sthash.1o9nGmuB.dpuf

    Tuesday, 31 December 2013

    புத்தாண்டு உறுதிமொழி: 'பாஸ்வேர்டை மாற்றுவோம்!'

    By: ram On: 18:51
  • Share The Gag


  • புத்தாண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில், இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது.


    புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. என்றாலும், வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது 'பாஸ்வேர்டை மாற்றுவோம்' என்பதுதான்.


    இதைக் காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013-ம் ஆண்டு தொழில்நுட்ப உலகை பொறுத்தவரை பாஸ்வேர்டு விழுப்புணர்வு ஆண்டாக அறியப்படலாம். அந்த அளவுக்கு 2013-ல் பாஸ்வேர்டு திருட்டுகள் நடைபெற்று இருக்கின்றன.


    அடோப் உள்ளிட்ட பல இணைய நிறுவங்களின் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டை தாக்காளர்களால் திருடப்பட்டது பற்றி இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் கூட பேஸ்புக், கூகுள் உடபட பல நிறுவனங்களின் லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகள் தாக்காளர்களின் கைகளின் சிக்கியது பற்றி செய்தி வெளியாகியுள்ளது.


    இப்படி கொத்துக் கொத்தாக பாஸ்வேர்டுகள் களவுபோவது பற்றி நிபுணர்கள் கவலையோடு விவாதித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மேற்கொள்ள முன் வைக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானது பயனாளிகள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும் என்பதுதான். அடிக்கடி மாற்றாவிட்டாலும் பரவாயில்லை, மிகப்பெரிய அளவில் பாஸ்வேர்டு திருட்டு நடைபெற்ற செய்தி வெளியானால், முதலில் பாஸ்வேர்டை மாற்றியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தாக்குதலுக்கு இலக்கான சேவையின் பயனாளி என்றால் இதை நிச்சயம் செய்தாக வேண்டும்.


    பொதுவாகவே ஒரே பாஸ்வேர்டை வைத்திராமல், அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருப்பது இணைய விஷமிகள் அவற்றை எளிதில் யூகித்து கைவரிசை காட்டாமல் இருக்க உதவும் என்கின்றனர். இதை இதுவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது பாஸ்வேர்டு களவு போகும் வேகத்தை பார்த்தால் அலட்சியம் ஆபத்தில் முடியும் என்றே சொல்லத் தோன்றுகிறது.


    எனவே, புத்தாண்டு உறுதி மொழியாக பாஸ்வேர்டு மாற்றத்தை மேற்கொள்ளுங்கள். பாஸ்வேர்டு மாற்றும்போது பாதுகாப்பான பாஸ்வேர்டுக்காக அடிக்கடி வலியுறுத்தப்படும் குறிப்புகளை கவனமாக பின்பற்றுங்கள். அதாவது வழக்கமான பாஸ்வேர்டு மற்றும் எல்லோரும் பின்பற்றும் பாஸ்வேர்டு உத்திகளை தவிர்த்து விடுங்கள். அதோடு ஒரே பாஸ்வேர்டை ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் பயன்படுத்துவதையும் கைவிடுங்கள்.


    பலரும் சுலபமாக இருக்கிறது என்று ஒரு சேவையில் பயன்படுத்தும் பாஸ்வேர்டையே மேலும் பல சேவைகளில் பயன்படுத்துகின்றனர். பல சேவைகள் இமெயில் அல்லது சமூக வலைதள பாஸ்வேர்டையே பயன்படுத்த ஊக்குவிக்கின்றன. இது எளிதாக இருக்கலாம். ஆனால் ஆபத்தானது. குறிப்பிட்ட ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்பட்டால் அதன் மூலம் தாக்காளர்கள் உங்களின் மற்ற சேவைகள் அனைத்துக்குள்ளும் நுழைந்து விடும் அபாயம் இருக்கிறது.


    எனவே பல பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் நிலை இருந்தால் , ஒவ்வொன்றுக்கும் ஒரு பாஸ்வேர்டை உருவாக்கி கொள்வதே நல்லது.


    பாஸ்வேர்டை மாற்றுங்கள். இணையப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்.

    கூகுளில் இந்தாண்டு அதிகமாக தேடப்பட்டோர் பட்டியல் பார்த்தாச்சா?

    By: ram On: 17:17
  • Share The Gag



  • ஆண்டுதோறும் கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப் பட்டோர் பட்டியலை அறிவிப்பது வாடிக்கை. அந்த வகையில் தற்போது http://www.google.com/trends/topcharts  என்னும் இணையத்தில்  இந்தாண்டு யாரெல்லாம் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதை  தெரிந்து  கொள்ளலாம். இந்தப் பட்டியலின்படி இணையதளத்தில் மிக அதிகமாக தேடப்படும் அரசியல் தலைவராக பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இருக்கிறார்.

    கடந்த ஜூலை மாதம் முதல் இவரைப் பற்றி மிக அதிகமானவர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு அடுத்த இடத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிடித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.

    கூகுள் இணையதளத்தில் 2013 -ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார். தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்திற்கு வந்ததற்கு ‘தலைவா’ படப் பிரச்சினைதான் முக்கிய காரணம் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது. ‘தலைவா’ படம் வெளியாகத் தாமத மானதைத் தொடர்ந்து அரசுடன் அவருக்கு பிரச்சினை என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து வலைத்தளங்களிலும் அப்படத்தைப் பற்றியும், விஜய்யைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதோடு பல்வேறு அரசியல் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.அரசியல் சார்ந்த படம், வெடி குண்டு மிரட்டல்கள் என ‘தலைவா’ படத்தைப் பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்டதும் அவரைப் பற்றி இணையதளத்தில் தேட முக்கிய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

    இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகராக சல்மான்கானும், நடிகையாக வழக்கம்போல் காத்ரினா கைஃபும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

    Sunday, 29 December 2013

    செல்போன் சந்தேகங்களுக்கு தீர்வு தரும் செயலி..?

    By: ram On: 22:40
  • Share The Gag



  • செல்போன் என்று வாங்கிவிட்டால் அதன் செயல்பாட்டில் அடிக்கடிசந்தேகங்களும் பிரச்சனைகளும் வரத்தான் செய்யும். அதிலும் ஸ்மார்ட் போன்கள்என்றால் கேட்கவே வேண்டாம். இது போன்ற நேரங்களில் கைகளை பிசைந்து கொண்டும்நிற்க வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பதில் பெறமுடியாமல் அல்லாடவும் வேண்டாம்.


    ஒரே ஒரு குறுஞ்செய்தியில் உங்கள் செல்போன் சார்ந்த பிரச்சனைக்கான தீர்வைஉரிய நிபுணர்களிடம் இருந்து தெரிந்து கொண்டு விடலாம் :டிவைஸ் ஹலெப் செயலிஇந்த நம்பிக்கையை தான் அளிக்கிறது. மும்பையை சேர்ந்த ஹாப்டிக் எனும்நிறுவனத்தால் உருவாகக்ப்பட்டுள்ள செயலி இது. ஆப்பிலின் ஐபோன் மற்றும்ஆண்ட்ய்ராய்டில் செயல்படக்கூடிய இந்த செயலியின் வழியே உங்கள் செல்போன்பிரச்ச்னைகளை குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கலாம். இந்த சந்தேகங்களுக்கானதீர்வுகளை தொடர்புடைய நிபுணர்கள் குறுஞ்செய்தி வழியாகவே வழங்குவார்கள்.


    செல்போன்பயன்பாட்டில் கில்லாடிகளாக இருக்கும் நபர்கள் மற்றும் செல்போன்நிறுவனங்களிலேயே பணியாற்றியவர்களை சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும்நிபுணர்களாக இணைத்து கொண்டிருப்பதாக ஹாப்டிக் சொல்கிறது.


    செல்போனில்நாம் அதிகம் பயன்படுத்துவது குறுஞ்செய்தி வசதியை தான். ஆனாலும் கூடசெல்போனில் ஒரு பிரச்ச்னை என்றால் யாருக்காவது போன் செய்து அல்லாடவேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றி செல்போன் சந்தேகங்களுக்குகுறுஞ்செய்தி வடிவிலேயே எளிதான பதில் பெற உதவும் டிவைஸ் ஹெல்ப் செயலியைமுதலில் உருவாக்கியிருப்பதாக ஹாப்டிக் தனது இணையதளத்தில்குறிப்பிட்டுள்ளது. அடுத்த கட்டமாக செயலி மூலமே அனைத்து தொழில்நுட்பஉதவிகளையும் பெற வைக்கும் திட்டம் இருக்கிறதாம். டிவைஸ் ஹெல்ப் ஆர்ம்பம்தான் என்கிறது ஹாப்டிக்.

    தெரியுமா உங்களுக்கு?

    By: ram On: 21:28
  • Share The Gag




  • 1. குறுந்தகடு(சி.டி) செயல்படும் விதம்:

    சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.


     2. பாராசிடமால் மாத்திரையின் மறுபக்கம்:

    மழை, குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலினால் உடலின் வெப்ப நிலை சராசரிக்கும் மிக அதிகமாகும் போது, "இழுப்பு' போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.காய்ச்சல் வெப்ப நிலையை உடனடியாகக் குறைக்க, பாராசிட்டமால் உதவுகிறது. ஆனால் 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அடிக்கடி பாராசிட்டமால் கொடுத்தால் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என, லண்டனில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 6 வயது குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராயும் போது, அவர்களுக்கு ஒன்றரை வயதுக்குள் அதிகளவில் பாராசிட்டமால் கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, பாராசிட்டமாலைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் நிர்ணயித்த அளவு மட்டுமே தர வேண்டும். பெற்றோர்கள் தன்னிச்சையாக பாராசிட்டமாலை குழந்தை களுக்கு தரக்கூடாது.



     3. கைபேசி தொலைந்தால் கண்டுபிடிக்க:

    ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 



    4.குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள்:


    இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் குழந்தைகளில் 2.5 கோடி பேர் ஏதாவது ஒரு குறையுடன் பிறக்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 11.5 லட்சம் குழந்தைகள் எடைக்குறைவு உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கிறது. இந்தியாவில் 5 சதவிகிதம் பேர் டிஸ்லெக்சியா, ஆட்டிசம் போன்ற அரிய வகையிலான குறைகளுடன் பிறக்கின்றனர்.


    5. 'ஆண்டி பயாடிக்’ மாத்திரை ஆபத்து!:

    'ஆண்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலியிலும், காய்ச்சலிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த வகை என்று தெரியாமல் ஒரே மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம் அதிகமானால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.


    6. அழிவின் விளிம்பில் தேசிய விலங்கு புலி:

    இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, தினமும் ஒரு புலி வீதம் எங்கோ ஒரு மூலையில் கொல்லப்பட்டது. இந்த வனவிலங்கு கழகம் ஒருமுறை கூட, கூடி சிந்திக்காததால் இதை தடுக்க முடியவில்லை. இவற்றின் தோல் சீனர்களின் வீடுகளை அலங்கரிக்கிறது. எலும்புகள் சீன மருந்துவத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன. சீனர்கள் அதிகம் விலை கொடுப்பதால், இந்தியாவில் புலிகளை கொன்று ஏற்றுமதி செய்வது அதிகரித்தது. இப்படி புலிகளின் எண்ணிக்கை மிக குறைந்து போய் கொண்டிருப்பது, இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது. பின் போர் கால அடிப்படையில் புலிகளை காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

    Tuesday, 24 December 2013

    நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் – இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

    By: ram On: 00:12
  • Share The Gag



  • இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவ சவால்களுள் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகின்றது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது முன்னர் கணக்கிடப்பட்ட 87 மில்லியன் என்பதைவிட அதிகமாகும். டைப்-1 என்ற வகை நோய்க் குறைபாடு, உடலில் தேவையான இன்சுலின் சுரக்காதபோது ஏற்படும் ஒன்றாகும். உடலில் உள்ள இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுகோசைக் கரைக்காவிடில் டைப்-2 எனப்படும் நோய்த் தாக்கம் தோன்றும். இது கடுமையான பிரச்சனைகளை உருவாக்கக் கூடியதாகும்.


    இதற்கிடையில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலின் மருந்து இந்த நோய் கண்ட ஏராளமான மக்களுக்கு உயிர் காக்கும் மருந்தாகப் பயன்பட்டு வருகின்றது. ஆயினும், இந்த மருந்தை தினமும் ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் வலி தராத மாத்திரை வடிவத்தில் இந்த மருந்தினைப் பெற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயன்று வந்த இந்திய விஞ்ஞானிகள் தற்போது இன்சுலின் மாத்திரையை உருவாக்கி உள்ளனர். இது, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும், வலி போக்கும் தகவலாகவும் அமைந்துள்ளது.


    பெரும் ஆராய்ச்சிக்குப் பின் பஞ்சாப் , தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள்தான் இந்த இன்சுலினை மாத்திரை வடிவத்தில் உருவாக்கி உள்ளனர். அதிலும் அமெரிக்காவில் இதற்கான ஆய்வை நடத்தி வரும் இவர்கள், முன்னோட்டமாக, இன்சுலின் மாத்திரையை எலிகளுக்கு கொடுத்து சோதனை செய்ததில் அதன் சர்க்கரை அளவு குறைந்து, நல்ல பலனை கொடுத்துள்ளது. இதையடுத்து, மாத்திரை வடிவத்தில் இன்சுலினை தயார் செய்யும் பணி வேக மெடுத்துள்ளது.

    Wednesday, 18 December 2013

    லெனோவா வைப் எக்ஸ் ரூ.25.999 விலையில் அறிமுகம்!

    By: ram On: 20:46
  • Share The Gag



  • லெனோவா தனது முதல் வைப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.25.999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவா வைப் எக்ஸ் இந்த வாரத்திற்குப் பின் கடைகளில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போனில் பிரீமியம் பாலிகார்பனேட் உடற்பாகங்கள் மற்றும் ஒரு மேம்பட்ட மோல்ட், லேசர் என்க்ரேவ்ட் (engraved) 3D டேக்டில் ஃபினிஸ் (tactile finish) கொண்டுள்ளது.

    சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக 6.9mm அளவிடும் சூப்பர் தின் ஃப்ரேம் (thin frame) உள்ளது. இது 121 கிராம் எடையுடையது. லெனோவா வைப் எக்ஸ் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. வைப் எக்ஸ் முனைகளில் கார்னிங் கொரில்லா கண்ணாடி 3, 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் 440ppi பிக்சல் அடர்த்தி உள்ளது.

    போனில் 1.5GHz குவாட் கோர் மீடியா டெக் ( MTK 6589T) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, ரேம் 2GB உள்ளது மற்றும் 16GB உள்ளடிக்கிய சேமிப்பு வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ் இயங்குகின்றது. லெனோவா வைப் எக்ஸ் எல்இடி ப்ளாஷ் மற்றும் பேக் இலுமினேடட்(back illuminated) சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

    வைட் ஆங்கிள் 84 டிகிரி லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இது Wi-Fi, ப்ளூடூத், AGPS மற்றும் 3G இணைப்பு விருப்பங்கள் உள்ளன. வைப் எக்ஸ் 2,000 mAh பேட்டரி ஆதரவு உள்ளது. ஸ்மார்ட்ஃபோனில் வழக்கமான சிம் அளவுக்கு பதிலாக மைக்ரோ சிம் கார்டு துணைபுரிகிறது.  இது 144x74x6.9mm மெஷர்ஸ் உள்ளது.

    லெனோவா வைப் எக்ஸ் முக்கிய குறிப்புகள்:

    1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே,
    440ppi பிக்சல் அடர்த்தி,
    1.5GHz குவாட் கோர் மீடியா டெக் ( MTK 6589T) ப்ராசசர்,
    ரேம் 2GB,
    16GB உள்ளடிக்கிய சேமிப்பு,
     13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற எதிர்கொள்ளும் கேமரா,
    வைட் ஆங்கிள் 84 டிகிரி லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
    Wi-Fi,
    ப்ளூடூத்,
    AGPS,
    3G,
    121 கிராம் எடை,
    ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்,
     2,000 mAh பேட்டரி.

    Tuesday, 17 December 2013

    தமிழ் இல் type செய்ய...!

    By: ram On: 18:43
  • Share The Gag





  • http://www.google.com/inputtools/windows/index.html

    இதனை ஒருமுறை தரவிறக்கி கணினியில்
     பதிந்துகொண்டால் போதுமானது..

    பின் எப்போதும்
     இதனை இயக்க இணைய இணைப்பு அவசியப்படாதுஇதனை நாம் மற்ற எந்த எழுத்து மென்பொருட்களிலும்
     உபயோகிக்கலாம்.

     (எ-கா) MS Word, Notepad etc.,
    இந்த மென்பொருளின் அளவு 1 MB –க்கும்
     குறைவாகும்..

    இதில் எழுத்துப்பிழை என்பது அறவே வராது..


    நாம் தவறாக தட்டச்சு செய்தாலும் அதை சரியான

     வார்த்தையாக மாற்றிகொள்வதே இதன்


     தனிச்சிறப்பாகும்..



    கணினியில் பதிந்தபின் இதனை உபயோகிக்க:

    1) Taskbar-ன் ஏதேனும் ஒரு இடத்தில் 'க்ளிக்'

    செய்து Toolbar-->Language bar

    தேர்வு செய்யவும்..

    2) பின்பு, ALT+SHIFT கீயை ஒரு சேர அழுத்தினால்

     ஆங்கிலம் மற்றும் தமிழில் மாறி மாறி தட்டச்சு செய்யலாம்..

    இந்தியாவும் ஆன்லைன் உளவுதுறையை ஆரம்பிச்சாசில்லே!

    By: ram On: 17:21
  • Share The Gag



  • உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் “நேத்ரா” – ‘Netra’ – a NEtwork TRaffic Analysis என்னும் ஆன்லைன் உளவுத் துறையை துவக்கி உள்ளது என்ற தகவலை பகிங்கர ரகசியமாக தெரிவித்துக் கொள்கிறேன்..


    சமீப காலமாக ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் பாதுக்காப்புக்காக ஒட்டு கேட்பது – டேட்டா இன்டர்செப்ட் செய்வது போன்ற பல விஷயங்களை செய்கின்றன. அந்த வரிசையில் இந்தியா “நேத்ரா” என்னும் ஒரு பிராஜக்ட்ட மூல்ம் India’s Centre for Artificial Intelligence and Robotics (CAIR), Defence Research and Development Organisation (DRDO) laboratory இவர்களின் உதவியோடு ஐ பி எனப்படும் இன்டலஜின்ஸ் பீரொ / இந்தியா டமஸ்டிக் இன்டலிஜன்ஸ் பீரோ / ரா என்னும் மூன்று முக்கிய உளவுத்துறைக்கு தகவல்கள் / கால்கள் / பேச்சுகள் என அனைத்தையும் ஷேர் செய்யும்.


    நேத்ரா என்னும் இந்த டெக்னாலஜி கணனியின் மென் பொருள் போன்றது தான் இதன் மூலம் இந்தியாவில் தீவிரவாதிகள் சிலர் ஸ்கைப் / கூகுள் டாக் / இன்டர்னெட் டெலிஃபோனி மூலம் பேசும் போது சில சொற்களான = “பாம்” – “வெடி” – “குண்டு” போன்ற பல அதி தீவிரவாத வார்த்தை உபயோகபடுத்தப்பட்டால் உடனே அது இவர்களை அலெர்ட் செய்யும்.


    இத்துடன் சிறிய அளவு பறக்கும் டிரொன் நேத்ராவும் உருவாக்கியுள்ளனர். இது 200 மீட்டர் உயரத்தில் 2.5 கிலோமீட்டர் வரை பறந்து கண்காணிக்கும். இதன் மூலம் 1.5 கிலோமீட்டர் ஏரியாவில் நடக்கும் விஷயத்தை பார்க்கவும், பேசுவதை டிரான்ஸ்மீட்டர் மூலம் வயர்லெஸ்ஸில் கிடைக்க வைக்கவும் முடியும்.


    இதற்கிடையில் தமிழர் ஆதித்தன் தலைமையில் 2008 ஆம் ஆண்டு இந்த நேத்ரா பறக்கும் உளவு மெஷினுக்கு அக்னி விருது வழங்கி கவுரவித்தது நினைவிருக்கலாம். அதனால உங்களின் ஒவ்வொரு ஆன்லைனும் இந்தியாவின் ஏதாவது ஒரு உளவுத்துறை கண்காணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைங்கோ.

    வைப்பர்களுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பம -இங்கிலாந்து நிறுவனத்தின் அப்டேட்!

    By: ram On: 17:01
  • Share The Gag



  • இங்கிலாந்து நாட்டில் முன்னணியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மக்லரென் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் பார்முலா-1 போட்டிகளுக்கான சூப்பர் கார்களைத் தயாரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. காரின் முன்புறக்கண்ணாடிகளைத் துடைக்கும் வைப்பர்களுக்குப் பதிலாக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இந்த நிறுவனம் உள்ளது.


    இந்தப் புதிய திட்டத்தில் உயர் அதிர்வெண் அலைகள் மூலம் கண்ணாடிகள் சுத்தம் செய்யப்படும. இந்த சக்தியைப் பயன்படுத்தி கண்ணாடியின் மேல் விழும் குப்பைகள், பூச்சிகள், மண் மற்றும் நீர் முதலியவற்றை சுத்தம் செய்யமுடியும். மேலும்,வைப்பர்களை நீக்குவதன் மூலம் காரை ஓட்டுபவர்களுக்கு வெளிப்புறப்பார்வை தெளிவாகக் கிடைக்கும்.


    இதற்கான மோட்டார்களை நீக்குவதன் மூலம் எரிபொருள் சக்தி அதிகரிக்கும். குளிர்காலத்தில் இந்த வைப்பர்களின் தகடுகள் இறுகி செயல்படாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளும் இந்தப் புதிய முறையில் தோன்றாது என்று மக்லரென் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


    இந்த அதிர்வெண் அலைகள் முறையே பல் மருத்துவத்திலும், கருவிலுள்ள சிசுக்களைக் கண்டறியும் முறையிலும் பயன்படுத்தப்படுகின்றது. மக்லரென் நிறுவனத் தயாரிப்பு கார்களில் இந்தப் புதிய தொழில்நுட்பம் வரும் 2015க்குப் பிறகு அறிமுகப் படுத்தப்படும். அவற்றின் விலை 1,70,000 பவுண்டுகளில் இருந்து 8,70,000 பவுண்டுகள் வரை இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Friday, 13 December 2013

    திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

    By: ram On: 11:26
  • Share The Gag


  • 1. அமைதி

     திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.

    2. அம்மா

     ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

    3. நண்பர்கள்


     பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.

    4. ஆண் ஈகோ


     திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

    5. பணம்


     பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.

    6. சுதந்திரம்


     முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.

    Saturday, 7 December 2013

    ஜிமெயிலில் Handwriting உள்ளீட்டு வசதியை உருவாக்கிக்கொள்வதற்கு...?

    By: ram On: 20:54
  • Share The Gag
  • கூகுள் நிறுவனமானது ஜமெயில் மற்றும் கூகுள் டொக்ஸ் ஆகியவற்றிற்கு தட்டச்சு மூலம் மட்டுமின்றி தற்போது கையால் எழுத்தும் எழுத்துக்களை உள்ளீடு (Input) செய்யும் வசதியை தந்துள்ளது.


    இதன் மூலம் கூகுள் டொக்ஸில் 20 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும், ஜிமெயிலில் 50 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும் உள்ளீடு செய்ய முடியும்.இதனை செயற்படுத்துவதற்கு முதலில் ஜிமெயிலினை ஓப்பன் செய்து, தொடர்ந்து செட்டிங்ஸ் செய்வதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.


    அதில் General பகுதியில் தென்படும் Enable input tools என்பதை தெரிவுசெய்யவும். இந்த ஒப்சன் தென்படைவில்லையாயின் Show all language options இனை தெரிவு செய்யவும்.


    அதன் பின்னர் Input Tools விண்டோ ஒன்று தென்படும், தொடர்ந்து மொழிகளை தேர்வு செய்ய வேண்டும்.


    (குறிப்பு – கையெழுத்து மூலமான மொழிகளை தேர்வு செய்யும் ஒப்சன் பென்சில் ஐகானுடன் காணப்படும்)

    இதன் பின்னர் சேமிக்கவும், இப்போது ஜிமெயில் விண்டோவானது Refresh ஆகும்.


    தொடர்ந்து Handwriting  ஆப்சனை பயன்படுத்துவதற்கு ஆப்பிள் கணினிகளில் Cmd + Shift + K என்ற கீக்களையும், ஏனைய கணினிகளில் Ctrl + Shift + K ஆகிய கீக்களையும் பயன்படுத்த முடியும்.